search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    புரோ கபடி லீக் போட்டி: பெங்களூர் அணியை வீழ்த்தியது பெங்கால் வாரியர்ஸ்
    X

    புரோ கபடி லீக் போட்டி: பெங்களூர் அணியை வீழ்த்தியது பெங்கால் வாரியர்ஸ்

    • பெங்கால் அணி தனது முதல் ஆட்டத்திலேயே வெற்றி பெற்று முத்திரை பதித்தது.
    • பெங்களூர் அணி 2-வது தோல்வியை தழுவியது.

    அகமதாபாத்:

    10-வது புரோ கபடி லீக் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் புனேரி பால்டன் 37-33 என்ற கணக்கில் முன்னாள் சாம்பியன் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்சை தோற்கடித்தது.

    மற்றொரு ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ்-பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின. பரபரப்பான இந்த ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் 32-30 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது. பெங்கால் அணி தனது முதல் ஆட்டத்திலேயே வெற்றி பெற்று முத்திரை பதித்தது. பெங்களூர் அணி 2-வது தோல்வியை தழுவியது.

    இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ்- மும்பை அணிகள் மோது கின்றன. குஜராத் அணி ஹாட்ரிக் வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அணி முதல் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்சை 38-22 என்ற கணக்கிலும், 2-வது போட்டியில் 34-31 என்ற கணக்கில் பெங்களூரையும் தோற்கடித்து இருந்தது.

    மும்பை அணி முதல் ஆட்டத்தில் 34-31 என்ற கணக்கில் உ.பி. யோதாவை தோற்கடித்தது. அந்த அணி 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் இருக்கிறது. இரு அணிகளும் வெற்றிக் காக கடுமையாக போராடும் என்பதால் இந்த ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×