என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் ருதுராஜ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
    • இந்தப் போட்டியில் வென்றாலோ அல்லது மழையால் ஆட்டம் கைவிடப்பட்டாலோ சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்து விடும்.

    பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் 68-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இந்தப் போட்டியில் வென்றாலோ அல்லது மழையால் ஆட்டம் கைவிடப்பட்டாலோ சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்து விடும்.

    இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் ருதுராஜ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது. 3 ஓவர் முடிவில் 31 ரன்கள் அடித்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இப்போட்டியில் கோலி 9 பந்துகளில் 19 ரன்களும், டு பிளிசிஸ் 9 பந்துகளில் 12 ரன்களும் அடித்து ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.

    இந்நிலையில் மழை நின்றதால் மீண்டும் போட்டி தொடங்கியுள்ளது. ஓவர்கள் குறைக்கப்படமால் 20 ஓவர் போட்டியாகவே மீண்டும் போட்டி தொடங்கியுள்ளது.

    இப்போட்டியில் பெங்களூரு அணி சென்னை அணியை விட குறைவான ரன்ரேட் வைத்துள்ளது. எனவே இன்று நடக்கும் போட்டியில் ஆர்.சி.பி. அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வென்றாலோ அல்லது 18.1 ஓவரில் இலக்கை எட்டி வெற்றியைப் பெற்றாலோ 4-வது இடத்தை பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் ருதுராஜ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
    • இந்தப் போட்டியில் வென்றாலோ அல்லது மழையால் ஆட்டம் கைவிடப்பட்டாலோ சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்து விடும்.

    பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் 68-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இந்தப் போட்டியில் வென்றாலோ அல்லது மழையால் ஆட்டம் கைவிடப்பட்டாலோ சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்து விடும்.

    இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் ருதுராஜ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது. 3 ஓவர் முடிவில் 31 ரன்கள் அடித்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இப்போட்டியில் கோலி 9 பந்துகளில் 19 ரன்களும், டு பிளிசிஸ் 9 பந்துகளில் 12 ரன்களும் அடித்து ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.

    பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியை காண பெண்கள் பிரீமியர் லீக் கோப்பை வென்ற RCB மகளிர் அணியை சேர்ந்த ஸ்மிரிதி மந்தனா, ஷ்ரேயாங்கா பாட்டீல் உள்ளிட்ட பல வீராங்கனைகள் வருகை தந்துள்ளனர்.

    பெங்களூரு அணியின் ஜெர்ஸியில் இருக்கும் புகைப்படங்களை அவர்கள் பகிர்ந்துள்ளனர்.

    • போட்டி மழையால் ஆட்டம் கைவிடப்பட்டால் சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்து விடும்.
    • இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் ருதுராஜ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

    பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் 68-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இந்தப் போட்டியில் வென்றாலோ அல்லது மழையால் ஆட்டம் கைவிடப்பட்டாலோ சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்து விடும்.

    இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் ருதுராஜ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது. 3 ஓவர் முடிவில் 31 ரன்கள் அடித்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இப்போட்டியில் கோலி 9 பந்துகளில் 19 ரன்களும், டு பிளிசிஸ் 9 பந்துகளில் 12 ரன்களும் அடித்து ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.

    இப்போட்டியில் பெங்களூரு அணி சென்னை அணியை விட குறைவான ரன்ரேட் வைத்துள்ளது. எனவே இன்று நடக்கும் போட்டியில் ஆர்.சி.பி. அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வென்றாலோ அல்லது 18.1 ஓவரில் இலக்கை எட்டி வெற்றியைப் பெற்றாலோ 4-வது இடத்தை பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் ருதுராஜ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
    • போட்டி மழையால் ஆட்டம் கைவிடப்பட்டால் சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்து விடும்.

    பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் 68-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இந்தப் போட்டியில் வென்றாலோ அல்லது மழையால் ஆட்டம் கைவிடப்பட்டாலோ சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்து விடும்.

    ஆனால், பெங்களூரு அணி சென்னை அணியை விட குறைவான ரன்ரேட் வைத்துள்ளது. எனவே இன்று நடக்கும் போட்டியில் ஆர்.சி.பி. அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வென்றாலோ அல்லது 18.1 ஓவரில் இலக்கை எட்டி வெற்றியைப் பெற்றாலோ 4-வது இடத்தை பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும்.

    இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் ருதுராஜ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி பெங்களூரு அணி முதலில் பேட்டிங் ஆடி வருகிறது.

    இந்நிலையில், பெங்களூரு அணியின் ஜெர்ஸியில் இருக்கும் புகைப்படத்தை நடிகர் சிவராஜ் குமார் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் இன்னைக்கு ஜெயிக்கிறோம் என்று பதிவிட்டுள்ளார்.

    • சிஎஸ்கே வெற்றி பெற்றால் நேரடியாக பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறும்.
    • ஆர்சிபி வெற்றி பெற்றால் ரன்ரேட் அடிப்படையில் தகுதிபெறும்.

    ஐபிஎல் கிரிக்கெட்டில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடக்கிறது.

    இதற்கான டாஸ் சுண்டப்பட்டது. டு பிளிஸ்சிஸ் டாஸ் சுண்ட, ருதுராஜ் கெய்க்வாட் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றால் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறும். ஆர்சிபி வெற்றி பெற்றால் ரன்ரேட் அடிப்படையில் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறும்.

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி:-

    1. டு பிளிஸ்சிஸ், 2. விராட் கோலி, 3. மேக்ஸ்வெல், 4. ரஜத் படிதர், 5. கேமரூன் க்ரீன், 6. லாம்ரோர், 7. தினேஷ் கார்த்திக், 8. கரண் சர்மா, 9. யாஷ் தயாள், 10. பெர்குசன், 11. முகமது சிராஜ்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி:-

    1. ரச்சின் ரவீந்திரா, 2. கெய்க்வாட், 3. டேரில் மிட்செல், 4. ரகானே, 5. ஜடேஜா, 6. எம்.எஸ். டோனி, 7. சான்ட்னெர், 8. ஷர்துல் தாகூர், 9. தேஷ்பாண்டே, 10. சிமர்ஜீத் சிங், 11. தீக்சனா.

    இம்பேக்ட் மாற்றுவீரர்கள்:-

    சென்னை சூப்பர் கிங்ஸ்:- ஷிவம் துபே, சமீர் ரிஸ்வி, சோலங்கி, ஷாய்க் ரஷீத், முகேஷ் சவுத்ரி.

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:- ஸ்வாப்னில் சிங், அனுஜ் ராவத், சுயாஸ் பிரபுதேசாய், விஜயகுமார் வைசாக், ஹிமான்ஷு சர்மா.

    • நடப்பு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மூன்றாவது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
    • ஐபிஎல் தொடரில் ரூ.20.50 கோடிக்கு பேட் கம்மின்சை ஹைதராபத் அணி ஏலம் எடுத்தது.

    சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் ஹைதராபாத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளி மாணவர்களுடன் கிரிக்கெட் விளையாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    அந்த வீடியோவில் பள்ளி சிறுவன் பந்துவீச பேட் கம்மின்ஸ் பேட்டிங் செய்கிறார். பின்னர் பள்ளி குழந்தைகளுடன் இணைந்து அவர் புகைப்படம் எடுத்துள்ளார்.

    நடப்பு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மூன்றாவது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியாமல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தடுமாறி வந்த நிலையில் புதிதாக கேப்டன் பொறுப்பை ஏற்ற பேட் கம்மின்ஸ் ஹைதராபாத் அணியை பிளே ஆப் சுற்றுக்குள் கொண்டு போயுள்ளார்.

    ஐபிஎல் தொடரில் ரூ.20.50 கோடிக்கு பேட் கம்மின்சை ஹைதராபத் அணி ஏலம் எடுத்தது. ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன 2 ஆவது வீரர் என்ற பெருமையை அப்போது அவர் பெற்றார். ஆனால் இவ்வளவு தொகை கொடுத்து அவரை எடுக்க வேண்டுமா என்ற விமர்சனமும் அப்போது எழுந்தது. ஆனால் அந்த விமர்சனத்தை தவிடுபொடியாக்கி ஹைதராபாத் அணியை பிளே ஆப் சுற்றுக்கு அவர் கொண்டு சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • வலையில் நான் பேட்டிங் செய்ததை பார்த்து ரெய்னா, பயிற்சியாளரிடம் இவரை ஏன் அணியில் சேர்க்கவில்லை என்று கேட்டார்.
    • அணியில் கட்டாயம் இடம் கொடுக்க வேண்டும் என்று பயிற்சியாளரிடம் வலியுறுத்தினார்.

    இந்திய அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்து வருபவர் விராட் கோலி. இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த வீரராக பார்க்கப்படுகிறார். இவர் விளையாடும் விதம் இளம் வீரர்களுக்கு ஒரு பாடமாக அமையும் என்றால் அதில் எந்த சந்தேகமும் இல்லை.

    கிரிக்கெட்டிற்கான ஷாட்ஸ்களை மட்டுமே விளையாடுவார். கவர் திசையில் இவர் ஆடும் டிரைவ் மிகவும் ரசிக்கக் கூடியதாக இருக்கும்.

    இவர் இந்திய அணியில் அறிமுகம் ஆவதற்கு அப்போதைய தேர்வாளரான இருந்த திலீப் வெங்சர்கார்தான் காரணம் என்பதை விராட் கோலி வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார்.

    ஆனால் திலிப் வெங்சர்கார் பார்வையில் தென்படுவதற்கு சுரேஷ் ரெய்னாதான் முக்கிய காரணம். இவரால்தான் நான் தேசிய அணியில் இடம்பிடித்து தொடர்ந்து விளையாட காரணம் எனத் தெரிவித்துள்ளார்.

    ஜியோசினிமாவிற்கு விராட் கோலி அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விராட் கோலி கூறியதாவது:-

    அந்த வருடம் 2008 என நினைக்கிறேன். இது இந்திய அணி போட்டி. ஆஸ்திரேலியாவில் எமர்ஜிங் பிளேயர்ஸ் தொடரில் நாங்கள் விளையாடி கொண்டிருந்தோம். அப்போது இந்த தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. ஏனென்றால், இதில் சிறப்பாக விளையாடினால் இந்திய சீனியர் அணியில் இடம் பிடிக்க முடியும். இதனால் எங்களை போன்ற இளம் வீரர்களுக்கு அது முக்கியமான தொடராக அமைந்தது.

    ஆகவே, ரெய்னா என்னைப் பற்றி கேள்வி பட்டிருக்கலாம் என்பது இன்னும் எனக்கு நினைவில் இருக்கிறது.

    அவர் தொடரின் பாதியில்தான் அணிக்கு வந்தார். முதலில் பத்ரிநாத் கேப்டனாக இருந்தார். ரெய்னா வந்ததும் அவரிடம் கேப்டன் பதவி கொடுக்கப்பட்டது. பிரவீன் ஆம்ரே பயிற்சியாளராக இருந்தார். அவர் என்னை ஆடும் லெவனில் சேர்க்காமல் வெளியில் வைத்திருந்தார்.

    வலைப்பயிற்சியில் என்னுடைய ஆட்டத்தைப் பார்த்த ரெய்னா ஆம்ரேவிடம், என்னை ஏன் விளையாட வைக்கவில்லை என்று கேட்டார். ரகானே தொடக்க வீரராக விளையாடுகிறார். நான் மிடில் ஆர்டரில் களம் இறக்கப்பட்டேன்.

    அணியில் என்னை இறக்குவற்கான இடம் இல்லை என்றார்.

    அப்போது ரெய்னா நான் விளையாட வேண்டும் என்று வற்புறுத்தினார். ஆகவே, பிரவீன் ஆம்ரே எனக்கு போன் செய்து, தொடக்க வீரராக களம் இறங்க சம்மதமா? எனக் கேட்டார்.

    விளையாடுவதற்கு வாய்ப்பு கொடுத்தால், எந்த வரிசையில் களம் இறங்கி பேட்டிங் செய்வேன் என நான் கூறினேன். ஆகவே, நியூசிலாந்து அணிக்கு எதிராக நான் தொடக்க வீரராக களம் இறக்கப்பட்டேன். திலீப் வெங்சர்கார் அந்த நேரம் தேர்வாளராக இருந்தார். நான் நியூசிலாந்துக்கு எதிராக 120 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தேன். எனக்கு மேலும் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று அவர் அப்போதே முடிவு செய்திருக்கலாம்.

    இவ்வாறு விராட் கோலி தெரிவித்தார்.

    அதே ஆண்டில் விராட் கோலி இலங்கை அணிக்கெதிராக ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார்.

    • சாத்விக்- சிராக் ஜோடி 21-11, 21-12 என்ற நேர்செட்டில் வெற்றி பெற்றது.
    • காலிறுதியில் மலேசிய ஜோடியை 21-7, 21-14 என வீழ்த்தியிருந்தது.

    தாய்லாந்து ஓபன் (சூப்பர் 500) பேட்மிண்டன் தொடரில் இந்திய ஆண்கள் ஜோடியான சாத்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி- சிராக் ஷெட்டி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

    அரையிறுதியில் தைவான் ஜோடியை எதிர்கொண்டது. தங்களைவிட குறைவான தரவரிசையில் உள்ள தைவான் ஜோடியை மிகவும் எளிதாக வீழ்த்தியது.

    இந்திய ஜோடியின் ஆட்டத்தை தைவான் ஜோடியால் எதிர்கொள்ள முடியவில்லை. இதனால் சாத்விக்- சிராக் ஜோடி 21-11, 21-12 என்ற நேர்செட் கேமில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

    காலிறுதியில் மலேசிய ஜோடியை 21-7, 21-14 என எளிதில் வீழ்த்தி வெற்றி பெற்றிருந்தது. நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் சீன ஜோடியை எதிர்கொள்கிறது.

    • டோனி இந்தியாவின் எந்த மைதானத்தில் விளையாடினாலும் ரசிகர்கள் பெரிய அளவில் வந்து பார்ப்பார்கள்.
    • நானும் டோனியும் இந்திய அணிக்காக நிறைய முறை பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடியுள்ளோம்.

    பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் 68-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன.

    இந்தப் போட்டியில் வென்றாலோ அல்லது மழையால் ஆட்டம் கைவிடப்பட்டாலோ சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்து விடும்.

    ஆனால், பெங்களூரு அணி சென்னை அணியை விட குறைவான ரன்ரேட் வைத்துள்ளது. எனவே இன்று நடக்கும் போட்டியில் ஆர்.சி.பி. அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வென்றாலோ அல்லது 18.1 ஓவரில் இலக்கை எட்டி வெற்றியைப் பெற்றாலோ 4-வது இடத்தை பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும்.

    இதற்கிடையே, பெங்களூருவில் நடைபெறவுள்ள ஆர்சிபி, சிஎஸ்கே இடையிலான ஆட்டம் மழை காரணமாக பாதிக்கப்பட 90 சதவீத வாய்ப்புகள் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆட்டத்தின் ஓவர்களும் குறைக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.

    இந்த போட்டி குறித்து விராட் கோலி பேசியுள்ளார். அதில், "டோனி இந்தியாவின் எந்த மைதானத்தில் விளையாடினாலும் ரசிகர்கள் பெரிய அளவில் வந்து பார்ப்பார்கள். நானும் அவரும் திரும்பவும் விளையாடுவோமா? ஒருவேளை இதுதான் கடைசிப் போட்டியா? எது நடக்கும் என்று தெரியாது.

    நானும் டோனியும் இந்திய அணிக்காக நிறைய முறை பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடியுள்ளோம். நாங்கள் இருவரும் ஒரே போட்டியில் விளையாடுவது ரசிகர்களுக்கு சிறப்பான சந்தர்ப்பம்" என்று தெரிவித்துள்ளார்.

    42 வயதாகும் டோனி இந்த ஐபிஎல் தொடரோடு ஓய்வு பெற போகிறார் என்பதைத்தான் விராட் கோலி சூசகமாக சொல்கிறாரோ என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    • இங்கிலாந்து வீரர்கள் ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறி வருகின்றனர்.
    • அவர்கள் வெளியேறியது ராஜஸ்தான், ஆர்சிபி, பஞ்சாப் அணிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஐபிஎல் 2024 சீசனின் லீக் சுற்று ஆட்டங்கள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. ஐபிஎல் தொடரில் இங்கிலாந்து அணி வீரர்கள் பலர் இடம் பிடித்திருந்தனர்.

    ஜூன் 1-ந்தேதி டி20 உலகக் கோப்பை தொடர் தொடங்குகிறது. அதற்கு முன் பாகிஸ்தான் அணியுடன் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இதற்காக இங்கிலாந்து அணி வீரர்களை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் திரும்ப அழைத்துள்ளது.

    இதனால் பிளேஆஃப் சுற்றுகளில் இங்கிலாந்து வீரர்கள் யாரும் இடம் பெறமாட்டார்கள். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் பட்லர் சிறப்பாக விளையாடி வந்தார். இரண்டு சதங்கள் விளாசியுள்ளார். ஆர்சிபி அணியில் வில் ஜேக்ஸ் விளையாடி வந்தார். பஞ்சாப் அணியில் சாம் கர்ரன் இடம் பிடித்திருந்தார்.

    தற்போது முக்கியமான கட்டத்தில் இங்கிலாந்து வீரர்கள் வெளியேறுவதால் அணிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும், தற்போதைய கிரிக்கெட் விமர்சகருமான இர்பான் பதான் "விளையாட முடிவு செய்துவிட்டால் தொடர் முழுவதும் விளையாட வேண்டும். இல்லையெனில் ஐபிஎல் போட்டியில் விளையாட வரக்கூடாது" இவ்வாறு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

    • இரண்டு வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே இடம் பெறுவார்கள் என அறிவிப்பு.
    • 13 போட்டிகளில் விளையாடி ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

    பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக ஷிகர் தவான் செயல்பட்டு வந்தார். ஒன்றிரண்டு போட்டிகளுக்குப் பிறகு அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் துணைக் கேப்டனாக இருந்த ஜித்தேஷ் சர்மா கேப்டனாக செயல்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் இங்கிலாந்தைச் சேர்ந்த சாம் கர்ரனை கேப்டனாக பஞ்சாப் அணி நியமித்தது. துணைக் கேப்டனாக ஒருவரை அறிமுகம் செய்துவிட்டு, அவரை கேப்டனாக நியமிக்காமல் மற்றொரு வீரரான சாம் கர்ரனை நியமித்ததற்கு கிரிக்கெட் விமர்சகர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

    சாம் கர்ரன் தலைமையில் பஞ்சாப் அணி கடுமையாக போராடியது. ஆனால் வெற்றியை முழுமையாக பெறவில்லை. கொல்கத்தா அணிக்கெதிராக 262 இலக்கை எட்டி வரலாற்று சாதனைப் படைத்தது. ஆர்சிபி அணிக்கெதிராக கடந்த 9-ந்தேதி தோல்வியடைந்து பிளேஆஃப் சுற்று வாய்ப்பை இழந்தது. இதனால் 12 போட்டிகளில் 4 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று பிளேஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்தது.

    கடந்த புதன்கிழமை நடைபெற்ற ராஜஸ்தான் ராயல் அணிக்கெதிரான போட்டியில் வெற்றி பெற்றது. நாளை கடைசி ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியின்போது பஞ்சாப் அணி கேப்டனாக ஜித்தேஷ் சர்மா செயல்படுவார் என பஞ்சாப் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    மேலும், ரோசோவ் மற்றும் நாதன் எல்லிஸ் ஆகிய இரண்டு வெளிநாட்டு வீரர்கள்தான் இடம் பெறுவார்கள் எனத் தெரிவித்துள்ளது. சாம் கர்ரன் இங்கிலாந்து அணிக்காக விளையாட சொந்த நாடு திரும்பியதாக தெரிகிறது.

    • இந்தியா இடம் பிடித்துள்ள குரூப் ஏ பிரிவில் கனடா இடம் பிடித்துள்ளது.
    • முதல் போட்டியில் அமெரிக்காவை எதிர்கொள்கிறது.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற ஜூன் 1-ந்தேதி தொடங்குகிறது. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் 20 அணிகள் விளையாடுகின்றன.

    இதனால் குட்டி குட்டி அணிகளுக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. குட்டி அணிகளில் ஒன்று கனடா. குரூப் "ஏ" பிரிவில் கனடா இடம் பிடித்துள்ளது. முதல் போட்டியில் அமெரிக்காவுடன் மோதுகிறது. மேலும் அயர்லாந்து, பாகிஸ்தான், இந்தியாவுடன் விளையாட இருக்கிறது.

    இந்த நிலையில் கனடா அணி டி20 போட்டிக்கான ஜெர்சியை அறிமுகம் செய்துள்ளனர். கனடா அணியின் தேசியக்கொடியில் சிகப்பு வண்ணம் காணப்படும். அதை வலியுறுத்தும் வகையில் சிகப்பு நிறத்தில் ஜெர்சி அமைந்துள்ளது.

    ×