என் மலர்
விளையாட்டு
- கரோலினா மரின் முதல் செட்டை 21-14 என எளிதில் வென்றார்.
- 2வது செட்டில் 10-8 முன்னிலை பெற்றபோது மூட்டுவலியால் அவதிப்பட்டார்.
பாரீஸ்:
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இந்நிலையில், பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டியில் ஸ்பெயின் வீராங்கனையான கரோலினா மரின், சீன வீராங்கனை ஹி பிங்ஜியாவுடன் மோதினார்.
இதில் கரோலினா மரின் முதல் செட்டை 21-14 என எளிதில் வென்றார். 2வது செட்டில் 10-8 முன்னிலை பெற்றிருந்தபோது மூட்டு வலியால் கடும் அவதிப்பட்டார். இதையடுத்து கண்ணீர் விட்டு கதறி அழுதார்.
இதையடுத்து, கரோலினா மரின் போட்டியில் இருந்து விலகினார். இதன்மூலம் ஹி பிங்ஜியாவ் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
- பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதியில் சீன வீராங்கனை வென்றார்.
- குரோசியா வீராங்கனை வெகிக் தோல்வி அடைந்தார்.
பாரீஸ்:
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இந்நிலையில், டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் சீனா வீரங்கனை குயின்வென் ஜெங், குரோசியா வீராங்கனை வெகிக்குடன் மோதினார்.
இதில் ஜெங் 6-2, 6-3 என்ற நேர் செட்களில் எளிதில் வென்று தங்கப்பதக்கம் வென்று அசத்தினார். குரோசிய வீராங்கனை வெகிக் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
- இந்திய அணி 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
- முதல் ஒருநாள் போட்டி எந்த அணிக்கும் வெற்றி தோல்வியின்றி டையில் முடிந்தது.
கொழும்பு:
இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் சென்று 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டி டையில் முடிந்தது.
இந்நிலையில், இலங்கை-இந்திய் அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது.
டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. அதன்படி, அந்த அணி முதலில் களமிறங்குகிறது.
- இன்ஸ்டாகிராம் தளத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
- இந்திய அணி வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்கினார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஜொகிந்தர் சர்மா, எம்எஸ் டோனியை சந்தித்துள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு டோனியை சந்தித்த தருணங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் தளத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
இது தொடர்பான பதிவில் அவர், "நீண்ட காலத்திற்கு பிறகு உங்களை சந்தித்தது அருமையாக இருந்தது. 12 ஆண்டுகளுக்கு பின் உங்களை சந்தித்த மகிழ்ச்சி இன்று வித்தியாசமாக இருந்தது," என குறிப்பிட்டுள்ளார்.
2007 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணிக்காக கடைசி ஓவரை வீசிய ஜொகிந்தர் சர்மா, அதில் 12 ரன்களை தடுத்து நிறுத்தி இந்திய அணி வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக விளங்கினார்.
பாாகிஸ்தானுக்கு எதிரான அந்த போட்டியின் கடைசி ஓவரில் முதல் பந்தை மிஸ்பா உல் ஹக் சிக்சருக்கு பறக்க விட்ட போதிலும், ஓவரின் மற்ற பந்துகளை சிறப்பாக வீசிய ஜொகிந்தர் சர்மா ரன்களை கட்டுப்படுத்தி அசத்தினார்.
தற்போது ஜொகிந்தர் சர்மா மற்றும் எம்எஸ் டோனி சந்தித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
- 1996-ம் ஆண்டில் இருந்துதான் செயின்ட் லுசியா ஒலிம்பிக்கில் பங்கேற்று வருகிறது.
- 1988 சியோல் ஒலிம்பிக்குக்கு பிறகு தற்போது தான் ஜமைக்கா முதல் 3 இடங்களை பிடிக்க தவறியது.
பாரீஸ்:
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.
உலகின் அதிகவேக வீராங்கனை யார்? என்பதை நிர்ணயம் செய்யும் மகளிர் 100 மீட்டர் ஓட்டம் இந்திய நேரப்படி நள்ளிரவு 12.50 மணிக்கு நடைபெற்றது. தகுதி சுற்று மற்றும் அரைஇறுதி மூலம் 'டாப் 8' வீராங்கனைகள் இதில் பங்கேற்றனர்.
முன்னணி வீராங்கனைகளில் ஒருவரான ஷெல்வி ஆன்பிரேசர் பிரைஸ் (ஓமைக்கா) அரை இறுதியில் திடீரென விலகினார்.
இதில் யாருமே எதிர்பார்க்காதவாறு அமெரிக்கா, ஜமைக்காவுக்கு அதிர்ச்சி தரும் வகையில் செயின்ட் லூசியா வீராங்கனை ஜூலியன் ஆல்பிரட் வெற்றி பெற்றார். அவர் பந்தய தூரத்தை 10.72 வினாடியில் கடந்து முதல் இடத்தை பிடித்து தங்கம் வென்றார். தீவு நாடான செயின்ட் லூசியாவுக்கு ஒலிம்பிக்கில் முதல் முறையாக பதக்கம் கிடைத்துள்ளது. அந்த பெருமை ஜூலியன் ஆல்பிரட்டை சாரும்.
1996-ம் ஆண்டில் இருந்துதான் செயின்ட் லுசியா ஒலிம்பிக்கில் பங்கேற்று வருகிறது.
அமெரிக்காவை சேர்ந்த ஷகாரி ரிச்சர்ட்சன் 10.87 வினாடியில் கடந்து வெள்ளிப் பதக்கமும், மெலிசா ஜெபர்சன் 10.92 வினாடியில் கடந்து வெண்கலப் பதக்கமும் பெற்றனர்.
1988 சியோல் ஒலிம்பிக்குக்கு பிறகு தற்போது தான் ஜமைக்கா முதல் 3 இடங்களை பிடிக்க தவறியது. அந்நாட்டை சேர்ந்த டியா கிளைடனால் 7-வது இடத்தையே பிடிக்க முடிந்தது.
4x400 மீட்டர் கலப்பு ஓட்டத்தில் நெதர்லாந்து தங்கம் வென்றது. அந்த அணி வீரர், வீராங்கனைகள் பந்தய தூரத்தை 3 நிமிடம் 7.43 வினாடியில் கடந்து அமெரிக்காவுக்கு அதிர்ச்சி கொடுத்தனர். தகுதி சுற்றில் புதிய உலக சாதனை படைத்த அெமரிக்காவில் 2-வது இடத்தையே பிடிக்க முடிந்தது. அந்த அணி 3 நிமிடம் 07.74 வினாடியில் கடந்து வெள்ளிப்பதக்கம் பெற்றது. இங்கிலாந்து அணி 3 நிமிடம் 08.01 வினாடியில் கடந்து வெண்கல பதக்கத்தை கைப்பற்றியது.
பெண்களுக்காகன டிரிபிள் ஜம்ப் பந்தயத்தில் டொமினிக்சன் வீராங்கனை தியா லபோனட் 15.02 மீட்டர் தூரம் தாண்டி தங்கம் வென்றார்.
ஜமைக்காவை சேர்ந்த நிக்கெட்ஸ் 14.87 மீட்டர் தூரம் தாண்டி வெள்ளிப் பதக்கமும், அமெரிக்க வீராங்கனை ஜாஸ்மின் மூர் 14.67 மீட்டர் தூரம் தாண்டி வெண்கல பதக்கமும் பெற்றனர்.
ஆண்களுக்கான குண்டு எறிதலில் அமெரிக்க வீரர் ரியான் கிரவுசர் 22.90 மீட்டர் தூரம் எறிந்து தங்கம் வென்றார். மற்றொரு அமெரிக்க வீரர் ஜோ கோவாஸ் 22.15 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கமும், ஜமைக்காவை சேர்ந்த கேம்பெல் வெண்கல பதக்கமும் பெற்றனர்.
ஆண்களுக்கான டெகத் லான் போட்டியில் நார்வே வீரர் மார்க்ஸ் ரூத் 8796 புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கம் வென்றார். ஜெர்மனியை சேர்ந்த லியோ நியூ கெபூர் வெள்ளிப் பதக்கமும் (8748 புள்ளிகள்), கிரினிடா வீரர் லின்டன் விக்டர் வெண்கல பதக்கத்தையும் (8711 புள்ளிகள்) கைப்பற்றினார்.
டெகத்லான் என்பது 100 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், உயரம் தாண்டுதல், 400 மீட்டர் ஓட்டம், 110 மீட்டர் தாண்டுதல் ஓட்டம், வட்டு எறிதல், போல் வால்ட், ஈட்டி எறிந்து, 1,500 மீட்டர் ஓட்டம் ஆகிய 10 விளையாட்டுகளை உள்ளடக்கியதாகும்.
- 1980 மாஸ்கோ ஒலிம்பிக்கில் இந்திய மகளிர் ஆக்கி அணியும் 4-வது இடத்தை பிடித்து இருந்தது.
- தீரஜ்- அங்கிதா பகத் ஜோடி வெண்கலப் பதக்கத்தை தவற விட்டு 4-வது இடத்தை பிடித்து இருந்தது.
பாரீஸ் ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதலில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் 3-வது பதக்கத்தை நூலிழையில் தவற விட்டார். 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் அவர் 4-வது இடத்தை பிடித்தார் மனு பாக்கர் 10 மீட்டர் ஏர்பிஸ்டல் பிரிவிலும், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் சரப்ஜோத் சிங்குடன் இணைந்தார். வெண்கல பதக்கம் பெற்றார்.
இந்த ஒலிம்பிக்கில் மனுபாக்கருக்கு முன்பு அர்ஜூன் பபுதா நூலிழையில் வெண்கல பதக்கத்தை தவற விட்டு இருந்தார். துப்பாக்கி சுடுதலில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் அவர் 4-வது இடத்தை பிடித்தார்.
மேலும் நேற்று முன்தினம் லப்பு அணிகள் வில்வித்தை பிரிவில் தீரஜ்- அங்கிதா பகத் ஜோடி வெண்கலப் பதக்கத்தை தவற விட்டு 4-வது இடத்தை பிடித்து இருந்தது.
கடந்த காலங்களில் 1960 ரோம் ஒலிம்பிக்கில் மில்கா சிங் (400 மீட்டர் ஓட்டம்), 1984 சியோல் ஒலிம்பிக்கில் பி.டி.உஷா (400 மீட்டர் தடை தாண்டுதல் ஓட்டம்), 2004 ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் குஞ்சராணி தேவி (பளு தூக்குதல்), லியாண்டர் பெயஸ்-மகேஷ் பூபதி ( டென்னிஸ் இரட்டையர்) ஜோடி ஆகியோர் 4-வது இடத்தை பிடித்து வெண்கல பதக்கத்தை தவற விட்டு இருந்தனர்.
அணிகள் பிரிவில் 1956 மெல்போர்ன் ஒலிம்பிக்கில் இந்திய கால்பந்து அணியும், 1980 மாஸ்கோ ஒலிம்பிக்கில் இந்திய மகளிர் ஆக்கி அணியும் 4-வது இடத்தை பிடித்து இருந்தது.
- லெடெக்கி 2012 ஒலிம்பிக்கில் இருந்து பங்கேற்று வருகிறார்.
- ஒட்டு மொத்தமாக 14 பதக்கம் பெற்று 3-வது இடத்தில் இருக்கிறார்.
பாரீஸ் ஒலிம்பிக்கில் நள்ளிரவில் நடந்த பெண்களுக்கான 800 மீட்டர் பிரீஸ்டைல் நீச்சலில் அமெரிக்க வீராங்கனை கேட்டி லெடெக்கி 8 நிமிடம் 11.04 வினாடியில் கடந்து தங்கம் வென்றார். இந்த ஒலிம்பிக்கில் அவர் பெற்ற 2-வது தங்கமாகும். ஒட்டு மொத்தமாக ஒலிம்பிக்கில் அவர் 9 தங்கம் வென்று முத்திரை பதித்துள்ளார்.
இதன் மூலம் லாரிசா (சோவியத் யூனியன், ஜிம்னாஸ்டிக்), பாவோ நூர்மி (பின்லாந்து, தடகளம்), மார்க் பிஸ் (அமெரிக்கா, நீச்சல்), கார்ல் லீவிஸ் (அமெரிக்கா, தடகளம்), டிரெசல் (அமெரிக்கா, நீச்சல்) ஆகியோருடன் லெடெக்கி இணைந்தார். இவர்கள் 9 தங்கம் வென்று இருந்தனர்.
லெடெக்கி 2012 ஒலிம்பிக்கில் இருந்து பங்கேற்று வருகிறார். அவர் ஒட்டு மொத்தமாக 14 பதக்கம் பெற்று 3-வது இடத்தில் இருக்கிறார்.
- ஹாக்கியில் லீக் போட்டிகள் முடிவடைந்து காலிறுதி போட்டிகள் நடைபெறவுள்ளன.
- காலிறுதி போட்டிகளில் இந்தியா இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.
பாரீஸ்:
பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் ஆடவர் ஹாக்கி அணியில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்றன. ஹாக்கியில் லீக் போட்டிகள் முடிவடைந்து காலிறுதி போட்டிகள் நடைபெறவுள்ளன.
இதில் ஆச்சரியப்படக்கூடிய விஷயம் என்னவென்றால், டோக்கியோ 2020 ஒலிம்பிக்கின் ஹாக்கி ஆடவர் பிரிவில் காலிறுதியில் போட்டியிட்ட அதே அணிகள்தான் பாரிஸ் ஒலிம்பிக்கில் ஹாக்கி ஆடவர் பிரிவில் காலிறுதி போட்டியில் மோதுவுள்ளன.
காலிறுதி போட்டிகளில் இந்தியா இங்கிலாந்தையும், ஜெர்மனி அர்ஜென்டினாவையும், பெல்ஜியம் ஸ்பெயினையும், நெதர்லாந்து ஆஸ்திரேலியாவையும் எதிர்கொள்ள உள்ளது.
2020 டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக்கில் இங்கிலாந்தை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.
- டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் கேத்தரினா மற்றும் மச்சாக் ஜோடி தங்கம் வென்றது
- தங்கம் வென்றதும் ஒருவரையொருவர் கட்டியணைத்து முத்தமிட்டுக் கொண்டனர்.
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இந்நிலையில், டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவின் இறுதிப் போட்டியில் செக் குடியரசின் கேத்தரினா மற்றும் மச்சாக் ஜோடி 6-2, 5-7, 10-8 என்ற செட் கணக்கில் சீனாவில் வாங் சின்யு மற்றும் ஜாங் ஜிசென் ஜோடியை தோற்கடித்து தங்கம் வென்றனர்.
தங்கம் வென்றதும் ஒருவரையொருவர் கட்டியணைத்து முத்தமிட்டுக் கொண்டனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
2021 ஆம் ஆண்டு முதல் கேத்தரினாவும் மச்சாக்கும் காதலித்து வந்தனர். பாரிஸ் ஒலிம்பிக் தொடங்குவதற்கு சில வாரங்கள் முன்பு அவர்கள் இருவரும் பிரேக் அப் செய்து கொண்டனர். பிரேக் அப் செய்திருந்தபோதும் நாட்டுக்காக கலப்பு இரட்டையர் பிரிவில் விளையாட இருவரும் சம்மதித்தனர்.
பிரேக் அப் செய்து கொண்ட காதல் ஜோடி ஒலிம்பிக்கில் தங்கம் வென்று முத்தமிட்டுக் கொண்டது இணையத்தில் பேசுபொருளானது.
தங்கம் வென்ற பின்பு பேசிய கேத்தரினா, " நீங்கள் குழப்பம் அடைவதை பார்க்க நாங்கள் விரும்புகிறோம். எங்களின் தனிப்பட்ட வாழ்க்கையை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை" என்று சிரித்தபடியே தெரிவித்தார்.
இதனையடுத்து தங்களின் உறவு குறித்து பேசிய மச்சாக், "டாப் சீக்ரெட்" என்று கிண்டலாக தெரிவித்தார்.
- அரையிறுதி போட்டியில் தாய்லாந்தின் ஜான்ஜேம் சுவானாபெங்கை கெலிஃப் எதிர்கொள்கிறார்.
- சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி இமேன் கெலிஃப்க்கு ஆதரவாக குரல் கொடுத்தது.
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இந்நிலையில், மகளிர் குத்துச்சண்டை 66 கிலோ பிரிவின் காலிறுதிப் போட்டியில் ஹங்கேரி வீராங்கனை லூகா ஹமோரியை வீழ்த்தி பதக்கத்தை உறுதி செய்தார் அல்ஜீரியா வீராங்கனை இமேன் கெலிஃப்
ஆகஸ்ட் 7ஆம் தேதி நடைபெறும் அரையிறுதி போட்டியில் தாய்லாந்தின் ஜான்ஜேம் சுவானாபெங்கை கெலிஃப் எதிர்கொள்கிறார்.
குத்துச்சண்டையில் அரையிறுதிப் போட்டியில் தோற்பவர்களுக்கும் வெண்கலப் பதக்கம் வழங்கப்படும் நிலையில், இமானே கெலிஃப் பதக்கம் வெல்வது உறுதி ஆகியுள்ளது.
குத்துச்சண்டை லீக் சுற்றில் இமானே கெலிஃப் ஒரு 'ஆண்' என குற்றம் சாட்டி இத்தாலிய வீராங்கனை ஏஞ்சலா கேரினி போட்டியில் இருந்து விலகியது பெரும் சர்ச்சையானது.
இதனையடுத்து இந்த குற்றச்சாட்டு தொடர்பாக இத்தாலி வீராங்கனை ஏஞ்சலா கரினி மன்னிப்பு கோரியுள்ளார். "இந்தச் சர்ச்சை அனைத்தும் என்னை வருத்தமடையச் செய்கிறது. எனக்கு எதிராக விளையாடிய இமானே கெலிஃப்பை நினைத்து நான் வருந்துகிறேன். நான் இமானே கெலிஃப்பிடமும் மற்ற அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
- தடியூன்றி தாண்டுதல் போட்டியில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஆன்டனி அம்மிரட்டி பங்கேற்றார்.
- இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகியுள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இந்நிலையில், தடியூன்றி தாண்டுதல் போட்டியில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஆன்டனி அம்மிரட்டி பங்கேற்றார். அப்போது மேலே மாட்டப்பட்டிருந்த குச்சியில் அவரது அந்தரங்க உறுப்பு அடிபட்டு தடுமாறி அவர் கீழே விழுந்தார். இதன் மூலம் இப்போட்டியில் 12 ஆவது இடம் பிடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை அவர் இழந்து விட்டார்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வரலாகியுள்ளது. ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றிருந்தால் கூட அவர் இந்த அளவிற்கு புகழ் பெற்றிருக்க மாட்டார் என்று இந்த வீடியோவை பகிர்ந்து நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.
2016 ரியோ ஒலிம்பிக்கில் ஜப்பான் வீரர் ஹிரோகி ஒகிதாவும் இதே போன்று அடிபட்டு கீழே விழுந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- லவ்லினா (இந்தியா)-லி கியான் (சீனா) (பெண்களுக்கான 75 கிலோ கால்இறுதி), மாலை 3.02 மணி.
- இந்தியா-இங்கிலாந்து (ஆண்கள் கால்இறுதி ஆட்டம்), பகல் 1 30 மணி.
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியது. இதில் இந்தியாவை சேர்ந்த 117 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இன்று இந்திய வீர்ரகள் பங்கேற்கும் போட்டிகள் இந்திய நேரப்படி:
துப்பாக்கி சுடுதல்:-
விஜய்வீர் சித்து, அனிஷ் (ஆண்கள் 25 மீட்டர் ரேபிட் பயர் பிஸ்டல் தகுதி சுற்று), பகல் 12 30 மணி. மகேஸ்வரி சவுகான், ரைஜா தில்லான் (பெண்களுக்கான ஸ்கீட் தகுதி சுற்று 2-வது நாள்), பகல் 1 மணி.
கோல்ப்:-
ஷூபாங்கர் ஷர்மா, ககன்ஜீத் புல்லார் (ஆண்கள் பிரிவின் 4-வது சுற்று), பகல் 12 30 மணி.
ஆக்கி:-
இந்தியா-இங்கிலாந்து (ஆண்கள் கால்இறுதி ஆட்டம்), பகல் 1 30 மணி.
தடகளம்:-
பாருல் சவுத்ரி (பெண்களுக்கான 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள் சேஸ் முதல் சுற்று), பகல் 1.35 மணி, ஜெஸ்வின் ஆல்ட்ரின் (ஆண்கள் நீளம் தாண்டுதல் தகுதி சுற்று), பிற்பகல் 2 30 மணி.
குத்துச்சண்டை:-
லவ்லினா (இந்தியா)-லி கியான் (சீனா) (பெண்களுக்கான 75 கிலோ கால்இறுதி), மாலை 3.02 மணி.
பேட்மிண்டன்:-
லக்ஷயா சென் (இந்தியா)-விக்டர் ஆக்சல்சென் (டென்மார்க்) (ஆண்கள் ஒற்றையர் அரைஇறுதி), மாலை 3 30 மணி.
பாய்மரப்படகு:-
விஷ்ணு சரவணன் (ஆண்கள் டிங்கி 7-வது மற்றும் 8-வது பந்தயம்), மாலை 3.35 மணி, நேத்ரா குமணன் (பெண்கள் டிங்கி 7-வது, 8-வது பந்தயம்), மாலை 6.05 மணி.






