என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எம்எஸ் டோனி"

    • எம்.எஸ்.தோனி இன்று தனது 44-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்
    • ICC-யின் மூன்று முக்கிய கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் என்ற பெருமையை தோனி பெற்றார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், உலகின் மிகச் சிறந்த விக்கெட் கீப்பர்களில் ஒருவரான மகேந்திர சிங் தோனி இன்று தனது 44-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் தோனி அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் நிகழ்த்திய சாதனைகள் நாம் ஒருமுறை புரட்டி பார்க்கலாம்.

    தோனி தனது கிரிக்கெட் பயணத்தை பள்ளி அணிகளில் விளையாடுவதன் மூலம் தொடங்கினார். ஆரம்பத்தில் கால்பந்து விளையாட்டில் ஆர்வம் காட்டிய அவர், பின்னர் கிரிக்கெட் பயிற்சியாளர் கேசவ் பானர்ஜியின் ஊக்குவிப்பால் கிரிக்கெட் விளையாட தொடங்கினார்.

    தொடர்ந்து விளையாடிய அவர் முதல் தர கிரிக்கெட்டில் 1999-2000ல் பீகார் அணிக்காக ரஞ்சி டிராபியில் அறிமுகமானார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் அவர் இந்திய அணியில் இடம் பெற்றார்.

    ஒருநாள் கிரிக்கெட்டில் வங்கதேசத்துக்கு எதிராக 2004-ம் ஆண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இலங்கைக்கு எதிராக 2005ம் ஆண்டும், டி20யில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 2006-ம் ஆண்டும் இந்திய அணியில் தோனி அறிமுகமானார்.

    அதனை தொடர்ந்து 2007ல் இந்திய T20 அணியின் கேப்டனாக தோனி நியமிக்கப்பட்டார். 2008 முதல் 2014 வரை டெஸ்ட் அணியையும், 2007 முதல் 2016 வரை ஒருநாள் அணியையும் வழிநடத்தினார்.

    உலக கோப்பை வெற்றிகள்: தோனியின் தலைமையில் 2007 ஆம் ஆண்டு இந்தியா முதல் T20 உலகக் கோப்பையை வென்றது. அதன்பின் 2011 ஆம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி ஒருநாள் உலகக்கோப்பையை வென்றது.

    1983 ஆம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய அணிக்கு பிறகு அதுவும் 28 ஆண்டுகளுக்குப் பிறகு தோனி தலைமையிலான இந்திய அணி ஒருநாள் உலகக்கோப்பையை வென்றது.

    2013 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி வெற்றிக்கு பின்பு ICC-யின் மூன்று முக்கிய கோப்பைகளையும் (T20 உலகக் கோப்பை, ஒருநாள் உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் ட்ராஃபி) வென்ற ஒரே கேப்டன் என்ற பெருமையை தோனி பெற்றார்.

    டெஸ்ட் முதலிடம்: 2009ல் இந்திய டெஸ்ட் அணியை ICC தரவரிசையில் முதலிடத்திற்கு அழைத்துச் சென்றார்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK): 2008 முதல் CSK அணியின் கேப்டனாக இருந்து, அணியை 5 முறை (2010, 2011, 2018, 2021, 2023) சாம்பியனாக்கினார். தோனியின் தலைமை மற்றும் ரசிகர் ஆதரவால் CSK உலகளவில் மிகவும் பிரபலமான IPL அணிகளில் ஒன்றாக உள்ளது.

    விருதுகள் மற்றும் கௌரவங்கள்: பத்ம ஸ்ரீ (2009), பத்ம பூஷண் (2018) , ராஜீவ் காந்தி கேல் ரத்னா (2007-08), ICC ஒருநாள் வீரர் விருது (2008, 2009) ஆகிய விருதுகளை தோனி வென்றுள்ளார்.

    திருமண வாழ்க்கை: தோனி கடந்த 2010 ஆம் ஆண்டு ஜூலை 4ஆம் தேதி சாக்சி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். எம்.எஸ்.தோனி - சாக்சி தம்பதிக்கு ஸிவா என்ற ஒரு மகள் இருக்கிறாள்.

    தனிப்பட்ட விருப்பங்கள்: கிரிக்கெட்டுக்கு அடுத்தபடியாக தோனிக்கு மோட்டார் பைக்குகள் மற்றும் கார்களின் மீது தீவிர ஆர்வம் உள்ளது. இதன் காரணமாக அவர் தனது வீட்டில் நிறைய கார் மற்றும் பைக்குகளை சேகரித்து வைத்துள்ளார்.

    இந்திய கிரிக்கெட்டில் தோனியின் தாக்கம்: தோனி இந்திய கிரிக்கெட்டில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியவர். சிறிய நகரத்தில் பிறந்து, தனது திறமை மற்றும் உழைப்பால் உலகளவில் புகழ் பெற்றார். அவரது அமைதியான தலைமை, முடிவெடுக்கும் திறன் மற்றும் எளிமையான பண்பு இளைஞர்களுக்கு உத்வேகமாக உள்ளது.

    • எம்.எஸ்.தோனி இன்று தனது 44-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
    • அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ்.தோனி இன்று தனது 44-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், தனது பிறந்தநாளை நண்பர்களுடன் கேக் வெட்டி எம்.எஸ்.தோனி கொண்டாடியுள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

    • எம்.எஸ். தோனி இன்று தனது 44-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
    • மகத்துவம் என்பது பிறப்பதில்லை, அது உருவாக்கப்படுகிறது

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி இன்று தனது 44-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

    இந்நிலையில், தோனிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்தது தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதவில், "எம்.எஸ். தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீங்கள் ஒவ்வொரு அசைவிலும் அழுத்தத்தை கவிதையாக மாற்றிய ஒரு அரிய OG

    மகத்துவம் என்பது பிறப்பதில்லை, அது உருவாக்கப்படுகிறது என்பதை நீங்கள் நிரூபித்தீர்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

    • எம்.எஸ். டோனி 90 போட்டிகளில் விளையாடி 6 சதங்கள் அடித்துள்ளார்.
    • ரிஷப் பண்ட் 44 போட்டிகளில் விளையாடி 7 சதம் அடித்துள்ளார்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த டெஸ்டில் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் அபாரமாக விளையாடி சதம் விளாசினார். இது அவருடைய 7ஆவது சர்வதேச டெஸ்ட் சதமாகும்.

    இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதம் விளாசிய இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைத்துள்ளார். முன்னதாக எம்.எஸ். டோனி 6 சதம் அடித்துள்ளார். இதுதான் அதிகபட்ச சாதனையாக இருந்தது.

    எம்.எஸ். டோனி 90 டெஸ்ட் போட்டிகளில் 144 இன்னிங்சில் பேட்டிங் செய்து 4876 ரன்கள் அடித்துள்ளார். 33 அரைசதம் அடித்துள்ளார்.

    ரிஷப் பண்ட் இந்த போட்டிக்கு முன்னதாக 43 போட்டிகளில் 75 இன்னிங்சில் பேட்டிங் செய்து 2948 ரன்கள் அடித்துள்ளார். இதில் 6 சதம், 15 அரைசதம் அடங்கும். தற்போது 7ஆவது சதத்தை பதிவு செய்துள்ளார்.

    • 2011 உலகக்கோப்பையை வெல்ல டோனி அடித்த சிக்சரை எத்தனை முறை பார்த்தோமோ அதேபோல கோலியின் சிக்சரையும் பார்க்கலாம்.
    • டோனியை போல விராட் கோலி பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி வரை நின்று வெற்றியை பெற்றுக்கொடுத்தார்.

    புதுடெல்லி:

    ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 20 ஓவர் உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக விராட் கோலி விளையாடிய அதிரடியான ஆட்டம் மறக்க இயலாத ஒன்றாகும்.

    அவர் 53 பந்தில் 6 பவுண்டரி, 4 சிக்சருடன் 82 ரன் எடுத்து வெற்றிக்கு காரணமாக திகழ்ந்தார்.அவரது இந்த இன்னிங்ஸ் மிகவும் சிறப்பானதாகும்.

    இந்த ஆட்டத்தில் விராட் கோலியின் ஷாட்கள் எல்லாம் அபாரமாக இருந்தது. வேகப்பந்து வீரர் ஹாரிஸ் ரவுப் வீசிய ஆட்டத்தின் 19-வது ஓவரின் 5-வது பந்தில் அவர் அடித்த சிக்சர் மிகவும் அற்புதமாக இருந்தது.

    காலை பின் பக்கமாக (பேக்புட்) கொண்டு சென்று நேராக சிக்சர் அடித்தார்.

    விராட் கோலியின் இந்த சிக்சரை முன்னாள் கேப்டன் கபில்தேவ் வியந்துள்ளார். அவர் 2011 உலகக்கோப்பை இறுதி போட்டியில் இலங்கை வீரர் குலசேகராவின் பந்தில் டோனி அடித்த சிக்சரோடு கோலியின் சிக்சரை ஒப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    கபில்தேவ் 

    கபில்தேவ் 

    மெதுவான பந்தில் நேராக சிக்சர் அடிப்பது மிகவும் கடினமானது. 2011 உலகக்கோப்பையை வெல்ல டோனி அடித்த சிக்சரை எத்தனை முறை பார்த்தோமோ அதேபோல கோலியின் சிக்சரையும் பார்க்கலாம். இந்த சிக்சரை ஆயிரம் முறை பார்க்கலாம்.

    டோனியை போல விராட் கோலி பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி வரை நின்று வெற்றியை பெற்றுக்கொடுத்தார். அந்த சூழ்நிலையில் அணி வெல்ல யாராவது உதவினால் அது விராட் கோலி தான் என்று நாங்கள் விவாதித்தோம். அது போல அவர் அணியை வெற்றி பெற வைத்தார்.

    இவ்வாறு கபில்தேவ் கூறியுள்ளார்.

    இந்திய அணிக்கு உலகக்கோப்பையை முதல் முறையாக பெற்றுக் கொடுத்தவர் கபில்தேவ். அவர் தலைமையிலான அணி 1983-ம் ஆண்டு உலகக்கோப்பையை வென்றது. அதன் பிறகு 28 ஆண்டுகளுக்கு பிறகு டோனி தலைமையில் 2011-ம் ஆண்டு உலகக்கோப்பை கிடைத்தது. டோனி தலைமையில் 2007-ம் ஆண்டு 20 ஓவர் உலகக்கோப்பையும் கிடைத்து இருந்தது.

    இந்திய அணி இதுவரை 3 உலகக்கோப்பையை (1983, 2011-ஒரு நாள் போட்டி, 2007-இருபது ஓவர்) கைப்பற்றி உள்ளது.

    • டோனி உடனான உறவு எனக்கு கிடைத்த வரம்.
    • நாங்கள் ஒருவர் மீது ஒருவர் வைத்துள்ள அன்பும் மரியாதையும் மிகச் சிறந்தது.

    இந்திய அணியின் நட்சத்திர பேட்டர் விராட் கோலி தற்போது நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பையில் மூன்று அரை சதங்களை பதிவு செய்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவர் பாகிஸ்தானுக்கு எதிராக 82 ரன்கள் எடுத்து, இந்தியாவை அசாத்தியமான வெற்றிக்கு வழிநடத்தினார்.

    இருப்பினும், இந்த ஆண்டின் தொடக்கத்தில் கோலி தனது கிரிக்கெட் வாழ்க்கையில் மிகவும் மோசமான நாட்களை சந்தித்தார். கிரிக்கெட்டில் பல சாதனைகள் புரிந்த கோலிக்கு ரன்கள் அடிப்பதே மிகவும் சிரமமாக இருந்தது. இந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பையின் போது, ​​ஜனவரி மாதம் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து நான் விலகியபோது, ​​தனக்கு ஆறுதல் அளித்து மெசேஜ் அனுப்பிய ஒரே நபர் டோனி மட்டுமே என்று கோலி தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் தனது 34-வது பிறந்த நாளை கொண்டாடிய விராட் கோலி டோனி குறித்து பல்வேறு விஷயங்களை மனம் திறந்துள்ளார்.

    விராட் கோலி, நீங்கள் வலுவாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படும் நேரங்களில் தனிப்பட்ட அளவில் வலுவாக உள்ளது போல தோற்றம் கொடுத்துவிட்டால், நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என கேட்க மறந்து விடுவார்கள் என டோனி தனக்கு மேசேஜ் அனுப்பியது என் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என விராட் கோலி கூறினார்.

    மேலும் டோனி உடனான உறவு எனக்கு கிடைத்த வரம் என்றும் என் மீது உண்மையான அக்கறையுடன் என்னை அணுகுபவர் டோனி மட்டுமே, நாங்கள் ஒருவர் மீது ஒருவர் வைத்துள்ள அன்பும் மரியாதையும் மிகச் சிறந்தது என டோனி குறித்து விராட் கோலி மனம் திறந்து உருக்கமாக பேசியுள்ளார்.

    • கடந்த சில நாட்களுக்கு முன் டென்னிஸ் விளையாடிய புகைப்படம் இணையத்தில் வைரலானது.
    • விராட் கோலி தான் குடித்த தண்ணீர் பாட்டிலில் டோனி படத்தை பார்த்து எங்கு பார்த்தாலும் டோனியின் முகம் தான் என தனது இன்ஸ்டாகிராமில் வைத்த ஸ்டோரியும் சமூகவலைதளங்களில் வைரலானது.

    22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் குரூப் ஜி பிரிவு லீக் சுற்றில் நடைபெற்ற ஆட்டத்தில் பிரேசில்- செர்பியா அணிகள் மோதின. முதல் பாதியில் இரு அணி வீரர்களும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இதனால் 0-0 என சமனில் இருந்தது. ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் பிரேசில் வீரர் ரிச்சர்லிசன் 62 மற்றும் 73-வது நிமிடங்களில் ஒரு கோல் அடித்து அசத்தினார்.

    இறுதியில், பிரேசில் அணி 2-0 என்ற கோல் கணக்கில் செர்பியாவை வீழ்த்தியது.இந்த போட்டியில் இந்தியர் ஒருவர் பிரேசில் கால்பந்து ரசிகருடன் இணைந்து சென்னை அணி கேப்டன் டோனியின் ஜெஸியை பிடித்து போஸ் கொடுத்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

    சமீப காலங்களாக டோனி என்ன செய்தாலும் அது புகைப்படமாக மாறி இணையத்தை கலக்கும். கடந்த சில நாட்களுக்கு முன் டென்னிஸ் விளையாடிய புகைப்படம், குடும்பத்துடன் அமர்ந்து உலக கோப்பை கால்பந்து போட்டியை பார்த்த புகைப்படங்களில் இணையத்தில் வைரலானது.

    அது மட்டும் இல்லாமல் இந்திய கிரிக்கெட் அணி வீரர் விராட் கோலி தான் குடித்த தண்ணீர் பாட்டிலில் டோனி படத்தை பார்த்து எங்கு பார்த்தாலும் டோனியின் முகம் தான் என தனது இன்ஸ்டாகிராமில் வைத்த ஸ்டோரியும் சமூகவலைதளங்களில் வைரலானது.

    இந்த நிலையில் கத்தார் கால்பந்து உலக கோப்பை போட்டி வரை டோனிக்கு ரசிகர்கள் இருப்பதற்கு இதுவும் ஒரு சாட்சி என டோனியின் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

    • டோனி தனது ரசிகர் ஒருவருக்கு டி-ஷர்ட்டில் ஆட்டோகிராப் போடும் வீடியோ வைரலாகி வருகிறது.
    • ரசிகரின் முதுகில் (டி-ஷர்ட் பின்புறம்) டோனி ஆட்டோகிராப் போடுகிறார்.

    இந்திய அணியின் முன்னாள் கேப்டன், இந்திய அணிக்கு ஒருநாள் உலகக்கோப்பை, டி20 உலகக்கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய அனைத்து கோப்பைகளையும் வென்று கொடுத்த ஒரே கேப்டன் என்ற சாதனைக்கு சொந்தக்காரர். இவர் கடந்த 2019-ம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பைக்கு பின்னர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். இப்போது அவர் ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.

    இந்த சீசனுக்கான ஐபிஎல் சீசனிலும் சென்னை அணியின் கேப்டனாக டோனி செயல்படுவார் என கூறப்பட்டுள்ளது. தற்போது அவர் ஐபிஎல் மட்டுமே ஆடி வருகிறார். மற்ற நேரங்களில் கிரிக்கெட்டை விட்டு ஒதுங்கி இருந்து தனது நேரத்தை செலவிட்டு வருகிறார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் அவருக்கு இன்னும் ரசிகர்கள் பட்டாலும் ஏராளமாக உள்ளனர். இன்னமும் அவர் ஐபிஎல்லில் களத்தில் இறங்கும் போது அவரது ரசிகர்கள் டோனி...டோனி ...டோனி என்ற சத்தம் எழுப்புவது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு உள்ளது.

    அவருக்கு ரசிகர் பட்டாளம் இன்னமும் ஏராளமாக உள்ளது என்பதை காட்டுகிறது. இந்த சீசன் ஐபிஎல்லுக்கு பின்னர் டோனி அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஓய்வு நேரங்களில் டோனியின் வீடியோக்கள் அவ்வப்போது வைரலாகி வரும்.

    சில நாட்களுக்கு முன்னர் கூட அவர் துபாயில் ஒரு பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது பாண்டியாவுடன் இணைந்து டோனி நடனமாடிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகியது.

    அதேபோல் தற்போது டோனி தனது ரசிகர் ஒருவருக்கு டி-ஷர்ட்டில் ஆட்டோகிராப் போடும் வீடியோ வைரலாகி வருகிறது. ரசிகரின் முதுகில் (டி-ஷர்ட் பின்புறம்) டோனி ஆட்டோகிராப் போடுகிறார். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    • வேறு இடம் இருந்தால் சொல்லுங்கள் நான் அங்கு கையெழுத்து போடுகிறேன்.
    • நான் அவருடைய கையெழுத்துக்கு கீழே உள்ள இடத்திலே போடுகிறேன்.

    ராஞ்சி:

    இந்திய கிரிக்கெட் வீரர் இஷான் கிஷன் தற்போது ரசிகர்களிடையே பிரபலமான வீரராக விளங்கி வருகிறார். ஏற்கனவே ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக விளையாடியதன் மூலம் 15 கோடிக்கு மேல் ஏலம் போய் முன்னணி வீரராக விளங்கி வந்தார். எனினும் இந்திய அளவில் தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு வங்கதேசத்துக்கு எதிராக இஷான் கிசன் சதம் விளாசினார்.

    இதன் மூலம் இளம் வயதில் இரட்டை சதம், அதிவேக இரட்டை சதம் என இரண்டு சாதனைகளுக்கும் சொந்தக்காரராக இஷான் கிஷன் இருக்கிறார். இந்த நிலையில் ரஞ்சிப் போட்டியில் விளையாட வந்த இஷான் கிஷனிடம் ரசிகர் ஒருவர் ஆட்டோகிராப் கேட்டுள்ளார். தனது மொபைல் போன் பின் பகுதியில் கையெழுத்திடுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.


    அப்போது போனை வாங்கி பார்த்த போது தான் இஷான் கிஷனுக்கு தெரிந்தது அதில் டோனியின் கையெழுத்து இருந்தது என்று. உடனே இதனை பார்த்து ஷாக்கான இஷான் கிஷன், அதில் டோனி பாயின் கையெழுத்து இருக்கிறது. என்னை ஏன் அதற்கு மேலே உள்ள இடத்தில் கையெழுத்துப் போட சொல்கிறீர்கள். அதை என்னால் செய்ய முடியாது.

    வேறு இடம் இருந்தால் சொல்லுங்கள் நான் அங்கு கையெழுத்து போடுகிறேன். டோனி கையெழுத்துக்கு மேல் கையெழுத்து போடும் அளவிற்கு நான் இன்னும் வளரவில்லை. நான் அவருடைய கையெழுத்துக்கு கீழே உள்ள இடத்திலே போடுகிறேன். அதுதான் அவருக்கு உரிய மரியாதை என்று இஷான் கிஷன் கூறியுள்ளார்.

    இந்த வீடியோ ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 

    • நீங்கள் போட்டியில் தோற்பது தவறில்லை ஆனால் போராடாமல் தோற்பது அசிங்கமாகும் என்று சரமாரியாக திட்டினார்.
    • நீங்கள் யாராக இருந்தாலும் அடுத்த போட்டியில் இது போன்ற நிலைமையில் வெற்றிக்கு போராடாமல் விளையாடக்கூடாது.

    3 விதமான உலக கோப்பைகளை வென்ற ஒரே கேப்டனாக இருந்தவர் எம்எஸ் டோனி. இவர் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவராக சாதனை படைத்து ஓய்வு பெற்றார். மேலும் பினிஷர்களில் ஒருவராகவும் போற்றப்படுகிறார். மிகச் சிறந்த பினிஷர் என்று ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்களால் போற்றப்படும் அவர் சில தருணங்களில் சொதப்பலாகவும் செயல்பட்டு தோல்விக்கு காரணமாகவும் அமைந்துள்ளார்.

    இந்நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 2 - 1 (3) என்ற கணக்கில் வென்ற இந்திய அடுத்ததாக நடைபெற்ற ஒருநாள் தொடரை 2- 1 (3) என்ற கணக்கில் தோற்றது.

    இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது போட்டியில் 323 ரன்களை துரத்தும் போது டாப் ஆர்டர் சரிந்த நிலையில் களத்தில் நின்ற தோனி 66 பந்துகளில் 133 ரன்கள் தேவைப்பட்ட போது அதிரடி காட்டாமல் 37 (59) ரன்கள் எடுத்து மெதுவாக விளையாடி 47-வது ஓவரில் அவுட்டானது தோல்விக்கு காரணமாக அமைந்தது.

    அதனால் கடுப்பான அப்போதைய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மெதுவாக விளையாடியதற்காக தோனியை மறைமுகமாக திட்டியதாக அப்போதைய பீல்டிங் பயிற்சியாளர் ஆர் ஸ்ரீதர் கூறியுள்ளார்.

    விராட் கோலி, ரவி சாஸ்திரியுடன் பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் 
    விராட் கோலி, ரவி சாஸ்திரியுடன் பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் 

    இது பற்றி தனது சுயசரிதை புத்தகத்தில் அவர் குறிப்பிட்டுள்ளது பின்வருமாறு:-

    விராட் கோலி - சுரேஷ் ரெய்னா ஆகியோர் பேட்டிங் செய்யும் வரை நாங்கள் வெற்றியை நோக்கி நடந்தோம். ஆனால் அதன் பின் விக்கெட்டுகளை இழந்த போது களத்தில் நின்ற டோனிக்கு கடைசி 10 ஓவரில் எதிர்ப்புறம் பேட்ஸ்மேன்கள் இல்லாமல் டெயில் எண்டர்கள் மட்டுமே கைகொடுக்க காத்திருந்தனர்.

    அந்த சமயத்தில் 10 ஓவரில் ஓவருக்கு 13 ரன்ரேட் தேவைப்பட்ட போது 5 - 6 ஓவரில் 20 ரன்கள் மட்டுமே எடுத்தோம். அந்த இன்னிங்சில் தான் டோனியும் ஒருநாள் கிரிக்கெட்டில் 10,000 ரன்கள் கடந்தார். அதற்காக நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தாலும் அவர் இலக்கை சேசிங் செய்வதற்கு கொஞ்சமும் முயற்சிக்கவில்லை.

    அதனால் ரவி சாஸ்திரி கோபமடைந்தார். ஏனெனில் நாங்கள் கொஞ்சமும் எதிரணிக்கு அச்சுறுத்தலை கொடுக்காமல் தோற்றோம். அதைத்தொடர்ந்து நடைபெற்ற 3-வது போட்டிக்கு முன்பாக நடந்த அணி மீட்டிங்கில் நீங்கள் யாராக இருந்தாலும் அடுத்த போட்டியில் இது போன்ற நிலைமையில் வெற்றிக்கு போராடாமல் விளையாடக்கூடாது.

    அப்படி விளையாடினால் அதுவே எனது தலைமையில் அவர்கள் விளையாடும் கடைசி போட்டியாக இருக்கும். நீங்கள் போட்டியில் தோற்பது தவறில்லை ஆனால் போராடாமல் தோற்பது அசிங்கமாகும் என்று சரமாரியாக திட்டினார். அந்த இடத்தில் டோனியும் இருந்தார்.

    அப்போது ரவி சாஸ்திரியின் வார்த்தைகள் மொத்த அணிக்கானது என்றாலும் அவரை டோனி தொடர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அங்குமிங்கும் பார்க்காமல் நேராக ரவி சாஸ்திரியை பார்த்த அவர் அந்த வார்த்தைகளை ஏற்றுக் கொண்டார். ஏனெனில் அது போன்ற நேரங்களில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற வைப்பது அவரது திறமைகளில் ஒன்றாகும்.

    இவ்வாறு அவரது சுயசரிதை புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளது.

    • ஐபிஎல்லில் தனது கடைசி போட்டியை சென்னையில் தான் ஆடுவேன் என உறுதியளித்திருந்தார்.
    • ஐபிஎல்லில் மட்டுமே ஆடிவரும் டோனிக்கு வேறு போட்டிகளில் ஆடும் பயிற்சி இல்லை.

    ஐபிஎல் 16-வது சீசன் வரும் ஏப்ரலில் தொடங்குகிறது. ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணி அதிகபட்சமாக 5 முறை கோப்பையை வென்றுள்ள நிலையில் இதுவரை 4 முறை கோப்பையை வென்ற சிஎஸ்கே அணி, 5வது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது. அதிகமுறை ஃபைனலுக்கு முன்னேறிய, 2 சீசன்களை தவிர மற்ற அனைத்து சீசன்களிலும் பிளே ஆஃபிற்கு முன்னேறிய ஒரே அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளது. அதற்கு முக்கிய காரணமாக இருப்பவர் எம்எஸ் டோனி.

    ஐபிஎல்லில் 234 போட்டிகளில் ஆடி 4978 ரன்களை குவித்துள்ள டோனி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து கடந்த 2020-ம் ஆண்டே ஓய்வுபெற்றுவிட்டார். ஐபிஎல்லில் தனது கடைசி போட்டியை சென்னையில் தான் ஆடுவேன் என உறுதியளித்திருந்தார். இந்த ஆண்டு ஐபிஎல் இந்தியாவில் நடப்பதால், இந்திய மண்ணில் ஐபிஎல் கோப்பையை 5-வது முறையாக ஜெயித்துவிட்டு டோனி ஓய்வுபெறுவார் என எதிர்பார்க்கப்படுவதால், இதுவே அவரது கடைசி ஐபிஎல் சீசனாக இருக்கலாம்.


    இந்நிலையில், 41 வயதான டோனி ஐபிஎல் 16-வது சீசனுக்கான வலைப்பயிற்சியை மற்ற அனைத்து வீரர்களுக்கும் முன்பாகவே தொடங்கிவிட்டார். ஐபிஎல்லில் மட்டுமே ஆடிவரும் டோனிக்கு வேறு போட்டிகளில் ஆடும் பயிற்சி இல்லை என்பதால், முன்கூட்டியே வலைப்பயிற்சியை தொடங்கிவிட்டார். 2 வாரங்களுக்கு முன்பே பயிற்சியை தொடங்கிவிட்ட டோனி, வலைப்பயிற்சியில் பெரிய ஷாட்டுகளை அடித்து ஆடிய வீடியோ வைரலாகிவருகிறது. 

    • டோனி இருக்கும் போது நான் எனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தேன்.
    • நிதானமாக விளையாட வேண்டிய பொறுப்பு என்னிடம் இருக்கிறது.

    இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதிய கடைசி டி20 போட்டியில் இந்தியா 168 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டி20 தொடரை கைப்பற்றியது. ஆட்டநாயகனாக சுப்மன் கில்லும் தொடர் நாயகனாக ஹர்திக் பாண்ட்யாவும் தேர்வு செய்யப்பட்டனர்.

    டோனி இருக்கும் போது சிக்சர் அடிக்க பிடிக்கும். ஆனால் இப்போ பாட்னர்ஷிப் அமைக்க பிடிக்குது என இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் பேசியதாவது:-

    எனக்கு சிக்ஸர்கள் அடிப்பது என்பது மிகவும் பிடிக்கும். ஆனால் எனக்கு பிடிக்கும் என்பதற்காக நான் அதை செய்து கொண்டிருக்க முடியாது. அன்றையநாள் போட்டியில் என்ன தேவை மற்றும் அணியில் எனது ரோல் என்ன என்பதை புரிந்து விளையாடி வருகிறேன்.

    ஒருபுறம் சிக்ஸர்கள் அடிக்க பிடிக்கும் என்றால், மறுபுறம் பார்ட்னர்ஷிப் அமைப்பது பிடிக்கும், அதேபோல் நன்றாக விளையாடி வரும் வீரருக்கு பக்கபலமாக நின்று துணை கொடுப்பதும் பிடிக்கும். மேலும் தற்போது கேப்டனாக விளையாடி வருவதால் இறுதிவரை களத்தில் நின்று அணியின் வீரர்களுக்கு நம்பிக்கையை கொடுத்து வருவதும் பிடித்திருக்கிறது.

    கடந்த காலங்களில் அணியில் டோனி இருந்தார். கீழ் வரிசையில் நிதானம் காட்டுவார். அவர் இருக்கும் தைரியத்தில் நான் எனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சிக்சர்கள் பவுண்டரிகளாக அடித்து வந்தேன். ஆனால் இப்போது அவர் இல்லை. நிதானமாக விளையாட வேண்டிய பொறுப்பு என்னிடம் இருக்கிறது.

    அணியின் கேப்டனாகவும் இருக்கிறேன். ஆகையால் எனக்கு எந்த ரோல் வேண்டும். மற்ற வீரர்களுக்கு எந்த ரோல் கொடுத்தால் அவர்களிடம் இருந்து அதிக ஆற்றலை வெளிக்கொணர முடியும் என்பதை புரிந்து கொண்டு செயல்படுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×