என் மலர்
விளையாட்டு
- டெஸ்ட் கிரிகெட்டில் விராட் கோலி ஒரே நோக்கம் இந்தியாவை நம்பர் 1 இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதுதான்.
- நாம் டெஸ்ட் கிரிக்கெட் மட்டும் விளையாடப் போவதில்லை.
லீட்ஸ்:
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இந்த தொடரில் அனுபவ வீரர்களான விராட் கோலி, ரோகித் சர்மா இல்லாமல் இந்திய அணி களமிறங்குகிறது.
இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவை நம்பர் 1 இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதுதான் விராட் கோலியின் நோக்கமாக இருந்தது என உமேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
விராட் கோலி டெஸ்ட் கேப்டனானபோது, அவரின் ஒரே நோக்கம் டெஸ்ட் கிரிகெட்டில் இந்தியாவை நம்பர் 1 இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதுதான். நாம் டெஸ்ட் கிரிக்கெட் மட்டும் விளையாடப் போவதில்லை. எங்கு சென்றாலும் வெல்ல வேண்டும். நம்பர் 1 ஆக இருக்க வேண்டும் என அனைத்து வீரர்களிடமும் கூறினார்.
என உமேஷ் யாதவ் கூறினார்.
- இந்திய அணியில் தமிழக வீரர் சாய் சுதர்சன் இடம் பிடித்துள்ளார்.
- இங்கிலாந்து அணி இங்கு 80 டெஸ்டுகளில் ஆடி 37-ல் வெற்றியும், 25-ல் தோல்வியும், 18-ல் டிராவும் சந்தித்துள்ளது.
லீட்ஸ்:
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதன்படி இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் உள்ள ஹெட்டிங்லேயில் இன்று தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இந்திய அணியில் தமிழக வீரர் சாய் சுதர்சன் இடம் பிடித்துள்ளார்.
இது 4-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்குட்பட்ட தொடர் என்பதால் அந்த வகையிலும் இந்த போட்டி முக்கியத்துவம் பெறுகிறது. அதனால் இரு அணியினரும் வெற்றியோடு தொடங்க ஆர்வம் காட்டுகிறார்கள்.
போட்டிக்கான இரு அணி வீரர்கள் வருமாறு:-
இந்தியா:
லோகேஷ் ராகுல், ஜெய்ஸ்வால், சாய் சுதர்சன், சுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பண்ட், கருண் நாயர், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்குர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.
இங்கிலாந்து:
ஜாக் கிராவ்லி, பென் டக்கெட், ஆலி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜாமி சுமித், கிறிஸ் வோக்ஸ், பிரைடன் கார்ஸ், ஜோஷ் டாங்கு, சோயிப் பஷீர்.
- ஜெர்மனியில் ஹாலே ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
- இரண்டாவது சுற்றில் நம்பர் 1 வீரர் சின்னர் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
பெர்லின்:
ஆண்கள் மட்டும் பங்கேற்கும் ஹாலெ ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்து வருகிறது. தற்போது இரண்டாவது சுற்று போட்டிகள் நடந்து வருகிறது.
ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் நம்பர் 1 வீரரும், இத்தாலி வீரருமான ஜானிக் சின்னர் , கஜகஸ்தானின் அலெக்சாண்டர் பப்ளிக் உடன் மோதினார்.
இதில் சின்னர் முதல் செட்டை 6-3 என வென்றார். இதில் சுதாரித்துக் கொண்டு சிறப்பாக ஆடிய பப்ளிக் 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் நம்பர் 1 வீரர் ஜானிக் சின்னர் அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
- இந்திய அணி இங்கிலாந்தில் 5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
- இந்தியா, இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் இன்று தொடங்குகிறது.
லண்டன்:
இந்திய அணி இங்கிலாந்தில் 5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் இன்று தொடங்குகிறது.
இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஒரு கேப்டனாக ஐ.பி.எல். கோப்பையை வெல்வது, இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரை கைப்பற்றுவது - இவற்றில் எது பெரிது என கேட்டால், டெஸ்ட் தொடர் என்றுதான் சொல்வேன்.
ஏனெனில் ஒரு கேப்டனாக அடிக்கடி இங்கிலாந்துக்கு சென்று விளையாட வாய்ப்பு கிடைக்காது. அத்துடன், உங்களது தலைமுறை சிறந்த வீரர்கள் 2-3 சுற்றுப்பயணத்தில் மட்டுமே உங்களுடன் இருப்பார்கள். ஆனால் ஐ.பி.எல். கிரிக்கெட் அப்படி இல்லை. ஆண்டுதோறும் நடக்கிறது. அதில் ஒவ்வொரு சீசனிலும் கோப்பையை வெல்ல வாய்ப்பு கிடைக்கும். எனவே இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா மண்ணில் டெஸ்ட் தொடரை வசப்படுத்துவது, ஐ.பி.எல். கோப்பையை வெல்வதை விட பெரியது, கவுரவமிக்கது என்பதே எனது கருத்து.
தற்போதைய இந்திய அணி போதிய அனுபவம் இல்லாதது என பேசுகிறார்கள். அதன் காரணமாக, எங்கள் மீது அதிக எதிர்பார்ப்பு இல்லை. அதுவே எங்களுக்கு சாதகமான ஒரு அம்சம்தான். எங்களது மூத்த வீரர்கள் கடந்த 10 ஆண்டுகளில் உலகில் எங்கு சென்று விளையாடினாலும் வெற்றி பெற முடியும் என்பதைக் காட்டியிருக்கிறார்கள். அதையே நாங்களும் பின்பற்றுவோம்.
எனது கேப்டன்ஷிப் ஸ்டைல் எந்த மாதிரி இருக்கும் என்று கேட்கிறீர்கள். எனது கேப்டன்ஷிப் அணுகுமுறையை முழுமையாகப் பார்க்க ஆகஸ்டு வரை (கடைசி டெஸ்ட் நடக்கும் வரை) காத்திருங்கள் என தெரிவித்தார்.
- ஜெர்மனியில் பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
- 2வது சுற்றில் அமெரிக்க வீராங்கனை அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
பெர்லின்:
பெண்கள் மட்டும் பங்கேற்கும் பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்து வருகிறது. தற்போது இரண்டாவது சுற்று போட்டிகள் நடந்து வருகிறது. அமெரிக்காவின் கோகோ காப் இரண்டாவது சுற்றுகு நேரடியாக தகுதி பெற்றிருந்தார்.
நேற்று நடந்த ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் அமெரிக்க வீராங்கனையான கோகோ காப், சீனாவின் வாங் ஜின்யு உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய வாங் ஜின்யு 6-3, 6-3 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார். இதன்மூலம் நம்பர் 2 வீராங்கனையான கோகோ காப் அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
- ஜெர்மனியில் ஹாலே ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
- இரண்டாவது சுற்றில் ரஷியாவின் ரூப்லெவ் தோல்வி அடைந்தார்.
பெர்லின்:
ஆண்கள் மட்டும் பங்கேற்கும் ஹாலெ ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்து வருகிறது. தற்போது இரண்டாவது சுற்று போட்டிகள் நடந்து வருகிறது.
ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் ரஷியாவின் ஆண்ட்ரே ரூப்லெவ், அர்ஜெண்டினாவின் தாமஸ் மார்டின் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய தாமஸ் மார்டின் 6-3, 6-7 (4-7), 7-6 (8-6) என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
இதன்மூலம் ரஷியாவின் ரூப்லெவ் அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
- வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 495 ரன்கள் குவித்தது.
- இலங்கை அணியின் அசிதா பெர்னாண்டோ 4 விக்கெட் வீழ்த்தினார்.
காலே:
வங்கதேச அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 வடிவிலான தொடர்களிலும் விளையாட உள்ளது. முதலில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகள் விளையாடுகின்றன.
முதல் டெஸ்ட் போட்டி காலேவில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, வங்கதேச அணி முதலில் களமிறங்கியது. கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ 148 ரன்னும், முஷ்பிகுர் ரஹீம் 163 ரன்னும், லிட்டன் தாஸ் 90 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இறுதியில், வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 495 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இலங்கை அணி சார்பில் அசிதா பெர்னாண்டோ 4 விக்கெட்டும், மிலன் பிரியநாத் ரத்நாயக்க, தரிந்து ரத்நாயக்க தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, இலங்கை அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பதும் நிசங்கா பொறுப்புடன் ஆடி சதம் கடந்தார். இரட்டை சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 187 ரன்னில் அவுட்டானார். தினேஷ் சண்டிமால் அரை சதம் கடந்து 54 ரன்னில் வெளியேறினார்.
ஏஞ்சலோ மேத்யூஸ் 39 ரன்னும், லஹிடு உதரா 29 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இறுதியில், மூன்றாம் நாள் முடிவில் இலங்கை 4 விக்கெட் இழப்புக்கு 368 ரன்கள் எடுத்துள்ளது.
இன்னும் இரு நாட்கள் உள்ள நிலையில் இந்தப் போட்டி டிராவில் முடியவே வாய்ப்பு உள்ளது என ரசிகர்கள் கருதுகின்றனர்.
- டாஸ் வென்ற சேப்பாக் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
- முதலில் பேட் செய்த சேலம் 160 ரன்கள் எடுத்தது.
சேலம்:
டி.என்.பி.எல். தொடரின் 17-வது லீக் போட்டி சேலத்தில் நடைபெற்றது. இதில் சேலம் ஸ்பர்டன்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற சேப்பாக் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய சேலம் ஸ்பர்டன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்தது. கேப்டன் அபிஷேக் 47 ரன்னும், ஹரி நிஷாந்த் 31 ரன்னும், சன்னி சாந்து 30 ரன்னும் எடுத்தனர். விஜய சங்கர் 2 ரன்னில் அவுட்டானார்.
சேப்பாக் அணி சார்பில் பிரேம் குமார் 3 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஆஷிக் 36 பந்தில் 56 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மோகித் ஹரிஹரன் 32 ரன்கள் எடுத்தார். ஜெகதீசன் அரை சதம் கடந்து 50 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இறுதியில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 16.3 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் சேப்பாக் அணி முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. சேப்பாக் அணி தான் ஆடிய 5 போட்டிகளிலும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
- ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல் தொடக்க வீரர்களாக ஆடுவார்கள்.
- 4-வது வரிசையில் கேப்டன் சுப்மன் கில்லும் அதற்கு அடுத்த நிலையில் ரிஷப் பண்ட்டும் விளையாடுவார்கள்.
லீட்ஸ்:
சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது.
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் லீட்சில் உள்ள ஹெடிங்லே மைதானத்தில் நாளை ( 20-ந்தேதி ) தொடங்குகிறது.
விராட் கோலி, ரோகித் சர்மா, அஸ்வின் ஆகியோரின் ஓய்வுக்கு பிறகு இந்தியா விளையாடும் முதல் டெஸ்ட் தொடர் என்பதால் அதிக எதிர் பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. சுப்மன் கில்லின் இளம் அணி வெற்றியுடன் கணக்கை தொடங்குமா? என்று ஆவலுடன் எதிர் பார்க்கப்படுகிறது. இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது சவாலானது.
இந்திய அணி கடைசியாக விளையாடிய 2 டெஸ்ட் தொடரையும் இழந்தது. சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக 3 டெஸ்டிலும் தோற்று ஒயிட் வாஷ் ஆனது. ஆஸ்திரேலியாவில் 5 போட்டி கொண்ட தொடரை 1-3 என்ற கணக்கில் இழந்தது. இதனால் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றுவது அவசியமானது.
தமிழக வீரர் சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது. டெஸ்டில் அறிமுகமாகும் அவர் 3-வது வரிசையில் களம் இறங்கலாம். இது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. கருண் நாயரும் இதற்கான போட்டியில் இருக்கிறார். ஜெய்ஸ்வாலும், கே.எல்.ராகுலும் தொடக்க வீரர்களாக ஆடுவார்கள்.
விராட்கோலியின் இடமான 4-வது வரிசையில் கேப்டன் சுப்மன் கில் விளையாடுவார். அதற்கு அடுத்த நிலையில் ரிஷப் பண்ட், நிதிஷ்குமார் ரெட்டி, ஜடேஜா உள்ளனர். வேகப்பந்து வீச்சில் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா இடம் பெறுவார்கள். ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ் இடையே போட்டி நிலவுகிறது.
பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு பதிலடி கொடுக்கும் ஆர்வத்தில் உள்ளது. அந்த அணி கடந்த ஆண்டு இந்திய மண்ணில் 5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரை 1-4 என்ற கணக்கில் இழந்து இருந்தது.
இங்கிலாந்து அணி கடைசியாக விளையாடிய 2 டெஸ்ட் தொடரை கைப்பற்றி இருந்தது. நியூசிலாந்து 2-1 என்ற கணக்கிலும், ஜிம்பாபேயை 1-0 என்ற கணக்கிலும் தோற்கடித்து இருந்தது.
அந்த அணியில் ஜோரூட், ஹாரி புரூக், ஜேக்கப் பெதல் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும், சோயிப் பஷீர், பிரைடன் கார்ஸ் போன்ற சிறந்த பவுலர்களும் உள்ளனர். கேப்டன் பென்ஸ்டோக்ஸ் ஆல்ரவுண்டர் பணியில் நல்ல நிலையில் இருக்கிறார்.
இந்த டெஸ்ட் இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்ப டுகிறது.
- சேலம் அணியின் கேப்டன் அபிஷேக் 47 ரன்னில் அவுட் ஆனார்.
- சேப்பாக் அணி தரப்பில் பிரேம் குமார் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
சேலம்:
9-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற சேப்பாக் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதன்படி சேலம் அணியின் தொடக்க வீரர்களாக ஹரி நிசாந்த் மற்றும் கேப்டன் அபிஷேக் களமிறங்கினர். இருவரும் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். 31 ரன் எடுத்த நிலையில் நிசாந்த் ஆட்டமிழந்தார்.
அடுத்த வந்த ராஜகோபால் 7, கவின் 1, ராஜேந்திரன் 3, என அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அபிஷேக் 47 ரன்னில் வெளியேறினார்.
இறுதியில் சன்னி சந்த் மற்றும் முகமது ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். சன்னி சந்து 19 பந்தில் 31 ரன்களில் ஆட்டமிழந்தார். முகமது 11 பந்தில் 28 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதனால் சேலம் அணி 20 ஓவர் முடிவில் 154 ரன்கள் எடுத்தது. சேப்பாக் அணி தரப்பில் பிரேம் குமார் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அபிஷேக் அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 47 ரன்னில் ஆட்டமிழந்தார்.
- பெண்கள் மட்டும் பங்கேற்கும் பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்து வருகிறது.
- இந்த ஆட்டத்தில் முதல் செட்டை மார்கெட்டாவும் 2-வது செட்டை டயானாவும் கைப்பற்றினர்.
பெர்லின்:
பெண்கள் மட்டும் பங்கேற்கும் பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய ஆட்டத்தில் செக் நாட்டை சேர்ந்த மார்கெட்டா வோண்ட்ரூசோவாவும் ரஷ்யாவை சேர்ந்த டயானா மாக்சிமோவ்னா ஷ்னைடரும் மோதினர்.
இந்த ஆட்டத்தில் முதல் செட்டை மார்கெட்டாவும் 2-வது செட்டை டயானாவும் கைப்பற்றினர். வெற்றியாளரை தீர்மானிக்கும் 3-வது செட்டை மார்கெட்டா கைப்பற்றினார். இதன்மூலம் 6-3, 3-7, 6-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று மார்கெட்டா காலிறுதிக்கு தகுதி பெற்றார்.
- சுப்மன் கில் இதனை செய்ய வேண்டும், அதனை செய்ய வேண்டும் என பல்வேறு கருத்துகள் வரகிறது.
- இந்த விஷயங்கள் அனைத்தும் சுப்மன் கில்லின் கவனத்தை சிதறடிக்க வாய்ப்பிருக்கிறது.
சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்கவுள்ளது.
இந்நிலையில் சுப்மன் கில் வெளியில் இருந்து வரும் கருத்துகள் குறித்து சிந்திக்காமல், ஆட்டம் குறித்தும் அணியின் திட்டங்கள் குறித்தும் மட்டுமே சிந்திக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
சச்சின் டெண்டுல்கர் பேசியதாவது: சுப்மன் கில்லுக்கு நேரம் வழங்க வேண்டும் என நினைக்கிறேன். அவருக்கு ஆதரவு அளிக்கப்பட வேண்டும். சுப்மன் கில் இதனை செய்ய வேண்டும், அதனை செய்ய வேண்டும் என பல்வேறு கருத்துகள் வரப்போவதை என்னால் உணர முடிகிறது.
இந்த விஷயங்கள் அனைத்தும் சுப்மன் கில்லின் கவனத்தை சிதறடிக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால், சுப்மன் கில் வெளியில் இருந்து வரும் கருத்துகள் குறித்து சிந்திக்காமல், ஆட்டம் குறித்தும் அணியின் திட்டங்கள் குறித்தும் மட்டுமே சிந்திக்க வேண்டும். அணியின் நலனை கருத்தில் கொண்டு சுப்மன் கில் அவரது முடிவுகளை மேற்கொள்ள வேண்டும்.
என்று சச்சின் கூறினார்.






