என் மலர்
விளையாட்டு
- லண்டன் ஓவல் மைதானத்தில் இந்திய வீரர்கள் தீவிர பயிற்சி மேற்கொண்டனர்.
- ஆடுகளத்தை பார்வையிட்டபோது, வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்தியா- இங்கிலாந்து இடையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் நான்கு டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில் இங்கிலாந்து 2-1 எனத் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.
5ஆவது மற்றும் கடைசி போட்டி வருகிற 31ஆம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கியது. இந்திய அணி வீரர்கள் இன்று காலை ஓவல் மைதானத்தில் தீவிர வலைப் பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது ஆடுகளத்தை இந்திய அணி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் பார்வைிட்டதாக தெரிகிறது. அப்போது ஆடுகளம் பாராமரிப்பாளர் ஆட்சேபனை தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பாக புகார் அளிப்போம் எனத் தெரிவித்துள்ளார்.
இது கம்பீருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளார். ஆடுகளம் பராமரிப்பாளரிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நீங்கள் யாரிடமும் சென்று புகார் அளியுங்கள். ஆனால், என்ன செய்ய வேண்டும் என்பதை எங்களிடம் நீங்கள் சொல்ல முடியாது என கம்பீர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
- ஒன்று அல்லது இரண்டு போட்டிகளில் சரியாக விளையாடவில்லை என்றால் எனது மகன் அணியில் இருந்து நீக்கப்படுகிறார்.
- வேறு எந்த இந்திய கிரிக்கெட் வீரருக்கும் இந்த மாதிரியான அணுகுமுறை பின்பற்றப்பட்டிருக்கிறதா?
இந்தியா- இங்கிலாந்து இடையிலான 4ஆவது டெஸ்ட் மான்செஸ்டரில் நடைபெற்றது. இதில் வாஷிங்டன் சுந்தர் (101 நாட்அவுட்), ஜடேஜா (107 நாட்அவுட்) ஆகியோர் சிறப்பாக விளையாடி சதம் அடித்ததால் இந்தியா டெஸ்ட் போட்டியை டிரா செய்தது. இதனால் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 1-2 என பின்தங்கிய நிலையில் உள்ளது. தொடரை இழக்கவில்லை. கடைசி போட்டியில் வெற்றி பெற்றால் தொடரை சமன் செய்ய முடியும்.
இந்த நிலையில் எனது மகன் சிறப்பாக விளையாடிய போதிலும், தொடர்ச்சியாக வாய்ப்பு வழங்கப்படவில்லை என வாஷிங்டன் சுந்தரின் தந்தை தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பாக வாஷிங்டன் சுந்தர் தந்தை கூறியதாவது:-
வாஷிங்டன் சுந்தர் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடி வருகிறார். எனினும், மக்கள் அவரை தவிர்க்கவும், அவருடைய ஆட்டத்திறனையும் தவிர்க்க முனைகிறார்கள். மற்ற வீரர்கள் தொடர்ந்து வாய்ப்பு பெறுகிறார்கள். எனது மகனுக்கு மட்டும் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கவில்லை. மான்செஸ்டர் டெஸ்ட் 2ஆவது இன்னிங்சில் 5ஆவது வீரராக களம் இறங்கியது போல் தொடர்ந்து அதே இடத்தில் களம் இறக்கப்பட வேண்டும். தொடர்ந்து ஐந்து முதல் 10 வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டுக்கு என் மகன் தேர்வு செய்யப்படாதது வியப்பளிக்கிறது.
ஒன்று அல்லது இரண்டு போட்டிகளில் சரியாக விளையாடவில்லை என்றால் எனது மகன் அணியில் இருந்து நீக்கப்படுகிறார். இது நியாயமானது அல்ல. 2021 ஆம் ஆண்டு சென்னையில் இங்கிலாந்துக்கு எதிராக அதிகமாக டர்ன் ஆகக்கூடிய ஆடுகளத்தில் ஆட்டமிழக்காமல் 85 ரன்கள் அடித்தார். அகமதாபாத் டெஸ்டில் ஆட்டமிழக்காமல் 96 ரன்கள் அடித்தார். அந்த இரண்டையும் சதமாக மாற்றியிருந்தாலும் நீக்கப்பட்டிப்பார்.
வேறு எந்த இந்திய கிரிக்கெட் வீரருக்கும் இந்த மாதிரியான அணுகுமுறை பின்பற்றப்பட்டிருக்கிறதா? இதற்கெல்லாம் பிறகு அவர் மிகவும் வலிமையானவராக மாறிவிட்டார், அதன் விளைவாகத்தான் இப்போது மக்கள் இந்த செயல்திறனைப் பார்க்கிறார்கள்.
இவ்வாறு வாஷிங்டன் சுந்தர் தந்தை தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
வாஷிங்டன் சுந்தர் 2017ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். 25 வயதாகும் அவர் 12 டெஸ்ட், 23 ஒருநாள் மற்றும் 54 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
- கனடா ஓபன் டென்னிஸ் தொடர் டொரண்டோ நகரில் நடந்து வருகிறது.
- ஜப்பானின் நவோமி ஒசாகா முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.
டொரன்டோ:
முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி டொரண்டோ நகரில் நடைபெற்று வருகிறது.
பெண்கள் ஒற்றையரில் இன்று நடைபெற்ற முதல் சுற்றில் ஜப்பானின் நவோமி ஒசாகா, கனடாவின் அரினா அர்செனால்ட் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய ஒசாகா 6-4, 6-2 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் கிரீஸ் வீராங்கனை மரியா சக்காரி 6-2, 3-6, 7-5 என்ற செட் கணக்கில் கனடாவின் கார்சன் பிரான்ஸ்டைனை வீழ்த்தினார். இரண்டாவது சுற்றில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலாவை சந்திக்கிறார்.
- திவ்யா கிராண்ட் மாஸ்டர் அந்தஸ்தையும் பெற்றார்.
- இந்தியாவின் 88-வது கிராண்ட் மாஸ்டர் திவ்யா ஆவார்.
ஜார்ஜியாவில் நடைபெற்ற உலக கோப்பை செஸ் போட்டியில் இந்திய வீராங்கனை திவ்யா தேஷ் முக் பட்டம் பெற்றார். அவர் இறுதிப்போட்டியில் சக நாட்டைச் சேர்ந்த கோனேரு ஹம்பியை தோற்கடித்தார்.
இதன் மூலம் உலக கோப்பை செஸ் போட்டி யில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்றை அவர் பெற்றார்.
இருவரும் மோதிய கூடுதல் 2 ஆட்டமும் 'டிரா' ஆனது. நேற்று நடந்த டை பிரேக்கரில் 75-வது காய் நகர்த்தலுக்கு பிறகு திவ்யா தேஷ்முக் வென்று சாம்பியன் ஆனார். 19 வயதான அவர் மராட்டிய மாநிலம் நாக்பூரை சேர்ந்தவர் ஆவார். அவருக்கு ரூ.43.24 லட்சம் பரிசு தொகை கிடைத்தது. 2-வது இடத்தை பிடித்த ஆந்திராவை சேர்ந்த ஹம்பிக்கு ரூ.30.26 லட்சம் வழங்கப்பட்டது.
உலக கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் திவ்யா கிராண்ட் மாஸ்டர் அந்தஸ்தையும் பெற்றார். இதன் மூலம் ஹம்பி, ஹரிதா, வைஷாலி ஆகிய வீராங்கனைகள் வரிசையில் அவர் இணைந்தார். இந்தியாவின் 88-வது கிராண்ட் மாஸ்டர் திவ்யா ஆவார்.
இந்தப் போட்டியில் முதல் 2 இடங்களை பிடித்த திவ்யாவும், ஹம்பியும் கேண்டிடேட்ஸ் போட்டிக்கு தகுதி பெற்றனர்.
உலக கோப்பை செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றது குறித்து திவ்யா தேஷ்முக் நிருபர்களிடம் கூறியதாவது:-
வெற்றி பெறுவதற்கு அதிக நேரம் தேவைப்பட்டது. இந்த போட்டிக்காக என்னை நன்றாக தயார் படுத்தி கொண்டேன். இது முக்கிய பங்கு வகித்தது. இந்த போட்டி தொடங்குவதற்கு முன்பு நான் பட்டம் வெல்வேன் என்று எதிர்பார்க்கவில்லை. பலம் வாய்ந்த வீராங்கனைகளுடன் மோதினேன்.
உலக தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள ஹம்பியை வீழ்த்தி பட்டம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. நான் அவரை மிகவும் மதிக்கிறேன். அவர் சிறந்த வீராங்கனையாவார். அவரிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன். அவருக்கு எதிரான இந்த இறுதிப் போட்டியில் எனக்கு அதிர்ஷ்டம் இருந்தது.
இந்த வழக்குமுறையில் தான் நான் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை பெற வேண்டும் என்ற விதி இருந்துள்ளது. இதற்கு முன்னர் ஒரு ஜி.எம். நார்ம்ஸ் கூட என்னி டம் இல்லை. இப்போது நான் கிராண்ட் மாஸ்டர்.
நான் இன்னும் நிறைய சாதிக்க வேண்டும். எனது சாதனை பயணம் தொடரும். இது வெறும் தொடக்கம் என்று நான் நம்புகிறேன்.
இவ்வாறு திவ்யா தேஷ் முக் கூறியுள்ளார்.
- 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் கடைசி போட்டி இன்று நடைபெற்றது.
- 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 5 - 0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றியது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆஸ்திரேலிய அணி தொடரை கைப்பற்றியது.
5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் கடைசி போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 19.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 170 ரன்கள் அடித்தது.
இதனையடுத்து 171 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 17 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது.
இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 5 - 0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றியது.
தங்களது சொந்த மண்ணில் முதலில் விளையாடிய 3 டெஸ்ட், அடுத்து விளையாடிய 5 டி20 என அனைத்திலும் வெஸ்ட் இண்டீஸ் அணி படுதோல்வி அடைந்துள்ளது.
- 4-வது டெஸ்ட் போட்டியின் போது ரிஷப் பண்ட் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக பாதியில் வெளியேறினார்.
- ஸ்கேன் செய்து பார்த்ததில் அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது தெரிய வந்தது.
மான்செஸ்டர்:
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் 3 போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 4-வது போட்டி மான்செஸ்டரில் நடைபெற்றது. இந்த போட்டி டிராவில் முடிந்தது.
இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் வருகிற 31-ந் தேதி தொடங்குகிறது.
முன்னதாக மான்செஸ்டரில் நடைபெற்ற 4-வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தின்போது இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக பாதியில் வெளியேறினார். ஸ்கேன் செய்து பார்த்ததில் அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது தெரிய வந்தது.
இருப்பினும் 2-வது நாளில் இந்திய அணி விக்கெட்டுகளை இழந்தபோது வலியை பொருட்படுத்தாமல் மீண்டும் களத்திற்கு வந்து அரைசதம் அடித்து அசத்தினார். இதனால் ரிஷப் பண்டை பல முன்னாள் வீரர்கள் பாராட்டினர்.
இருப்பினும் அவரால் இங்கிலாந்துக்கு 5-வது போட்டியில் விளையாட முடியாது. அதன் காரணமாக அந்த போட்டியிலிருந்து அவர் விலகியுள்ளார். இவருக்கு பதிலாக தமிழக வீரர் ஜெகதீசன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் காலில் ஏற்பட்டுள்ள காயம் குறித்து ரிஷப் பண்ட் தனது எக்ஸ் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். அதில், "எனக்கு கிடைத்த அன்பையும், வாழ்த்துகளையும் நினைத்து மகிழ்ச்சியாக உள்ளது. இது ஒரு உண்மையான பலத்தை அளித்துள்ளது. தற்போது எனது காலில் ஏற்பட்டுள்ள எலும்பு முறிவுக்காக ஓய்வில் இருக்கிறேன்.
என்னுடைய காயம் குணமடைந்து வருகிறது. இருந்தாலும் பொறுமையுடன் இருந்து முழு உடற்தகுதி பெறும் வரை காத்திருப்பேன். நாட்டிற்காக விளையாடுவது எப்போதும் என் வாழ்க்கையின் பெருமைமிக்க தருணமாகும். மீண்டும் களத்திற்கு வர காத்திருக்க முடியவில்லை.
என்று பதிவிட்டுள்ளார்.
- இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
- 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் வருகிற 31-ந் தேதி தொடங்குகிறது.
லண்டன்:
சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இதில் 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் தொடரில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் (4-வது போட்டி டிரா) முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் வருகிற 31-ந் தேதி தொடங்குகிறது.
இந்நிலையில் இந்த போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான அந்த அணியில் ஆல் ரவுண்டர் ஜேமி ஓவர்டன் சேர்க்கப்பட்டுள்ளார். மற்றபடி 4-வது போட்டிக்கான அணியில் இடம்பெற்றிருந்த வீரர்களே தொடருகின்றனர்.
இங்கிலாந்து அணி விவரம்:-
பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜோப்ரா ஆர்ச்சர், கஸ் அட்கின்சன், ஜேக்கப் பெத்தேல், ஹாரி புரூக், பிரைடன் கார்ஸ், ஜாக் கிராலி, லியாம் டாசன், பென் டக்கெட், ஜேமி ஓவர்டன், ஓலி போப், ஜோ ரூட், ஜேமி ஸ்மித், ஜோஷ் டோங், கிறிஸ் வோக்ஸ்.
- வாஷிங்டன் சுந்தர் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் இணைந்து அற்புதமான பார்ட்னர்ஷிப்பை உருவாக்கினர்.
- இங்கிலாந்தில் இந்த அணி சிறப்பாக செயல்படுவதைப் பார்ப்பதற்கு பெருமையாக உள்ளது.
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 358 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டான நிலையில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 669 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இதையடுத்து 311 ரன்கள் பின் தங்கிய நிலையில் இந்திய அணி 2-வது இன்னிங்சைத் தொடங்கியது.
இதில் இந்திய அணி வீரர்கள் கேப்டன் சுப்மன் கில், ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சதமடித்தும், கேஎல் ராகுல் 90 ரன்களையும் சேர்த்தன் மூலம் கடைசி நாள் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 425 ரன்களைச் சேர்த்தது.
இப்போட்டியின் கடைசி நாள் இறுதிவரையிலும் முடிவு எட்டப்படாததன் காரணமாக இங்கிலாந்து- இந்தியா அணிகளுக்கு இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.
அதிலும் குறிப்பாக இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை திணறவைத்தனர். இதன் மூலம் ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருவருக்கும் பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்துகளும், பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.
இந்நிலையில் ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோரது பார்ட்னர்ஷிப்பை இந்திய அணியின் முன்னாள் வீரர் ஷிகர் தவான் பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து ஷிகர் தவான் கூறியதாவது:-
வாஷிங்டன் சுந்தர் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் இணைந்து அற்புதமான பார்ட்னர்ஷிப்பை உருவாக்கினர். அதேபோல் கேப்டன் சுப்மன் கில்லும் அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இங்கிலாந்தில் இந்த அணி சிறப்பாக செயல்படுவதைப் பார்ப்பதற்கு பெருமையாக உள்ளது.
என்று பதிவிட்டுள்ளார்.
- இந்த இரண்டு வீரர்களும் சதம் அடிக்கத் தகுதியானவர்கள். அதனால் அவர்கள் அதைச் செய்தார்கள்.
- போட்டியை முடித்து ஆடுகளத்தை விட்டுச் செல்வார்களா?
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய 4-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியின் முடிவில் இந்திய அணி போட்டியை டிரா செய்யும் நிலைக்கு கொண்டு சென்றது. அப்போது, வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஜடேஜா பேட்டிங் செய்து வந்தனர். ரவீந்திர ஜடேஜா 90 ரன்களுடனும், வாஷிங்டன் சுந்தர் 85 ரன்களுடனும் இருந்தபோது, இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் போட்டியை டிரா செய்து கொள்ளலாம் என அழைத்தார்.
அப்போது 14 ஓவர்கள் மீதமிருந்தன. அந்தச் சூழ்நிலையில் எந்த ஒரு அணியாலும் வெற்றி பெற முடியாது என்பதால், ஸ்டோக்ஸ் அந்த முடிவை எடுத்தார். அதே சமயம், சதத்தை நெருங்கிக் கொண்டிருந்த ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் போட்டியை முடித்துக்கொள்ள விரும்பவில்லை. இருவரும் சிறப்பாக பேட்டிங் செய்த நிலையில், அதை சதமாக மாற்ற நினைத்தனர். அதனால், பென் ஸ்டோக்ஸ் விடுத்த அழைப்பிற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்தனர்.
இதன் காரணமாக, போட்டி முடிந்தவுடன் பென் ஸ்டோக்ஸ் ஜடேஜாவுக்குக் கை குலுக்க மறுத்தார். இந்த விவகாரம் கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் ஒருவர் 90 ரன்கள் எடுத்திருக்கும்போதும், மற்றொருவர் 85 ரன்கள் எடுத்திருக்கும்போதும் போட்டியை முடிக்கலாமா? அவர்கள் சதம் அடிக்கத் தகுதி இல்லாதவர்களா? என இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
இங்கிலாந்து வீரர்களும் 90 ரன்கள் மற்றும் 85 ரன்கள் எடுத்து ஆடிக்கொண்டிருக்கும்போது போட்டியை முடித்து ஆடுகளத்தை விட்டுச் செல்வார்களா? ஒருவர் தனது முதல் டெஸ்ட் சதத்தை அடிக்கும் வாய்ப்பில் இருக்கும்போது அதை நாம் அனுமதிக்க வேண்டாமா? இங்கிலாந்து அணி இப்படித்தான் விளையாடும் என்றால் அது அவர்கள் விருப்பம். ஆனால், இந்த இரண்டு வீரர்களும் சதம் அடிக்கத் தகுதியானவர்கள். அதனால் அவர்கள் அதைச் செய்தார்கள்.
என்று கவுதம் கம்பீர் கூறினார்.
- இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் நாள் முழுவதும் இந்திய பந்து வீச்சாளர்களை எதிர்கொண்டு விளையாடினார்கள்.
- ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் பந்துகளை சந்தித்து ரன்கள் சேர்த்தனர்.
இந்தியா- இங்கிலாந்து இடையிலான 4ஆவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டர் டிராஃபோர்டில் நடைபெற்றது. கடைசி நாளான நேற்று ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் அபாரமாக விளையாடினர். இதனால் போட்டி டிரா நோக்கி சென்று கொண்டிருந்தது. போட்டி முடிவடைவதற்கு சுமார் ஒரு மணி நேரம் இருக்கும்போது ஜடேஜா 89 ரன்களிலும், வாஷிங்டன் சுந்தர் 80 ரன்களிலும் இருந்தனர்.
அப்போது இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ், போட்டியை முடித்துக் கொள்ளலாம் எனக்கூறி ஜடேஜா உடன் கைக்குலுக்க விரும்பினார். ஆனால் ஜடேஜா மறுத்துவிட்டார். இதனால் சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சதம் அடித்த பின்னர், போட்டியை முடித்துக் கொள்ள சம்மதம் தெரிவித்தனர். முன்னணி வீரர்கள் காயம் அடைய வாய்ப்புள்ளதால், இந்த முடிவை எடுத்ததாக பென் ஸ்டோக்ஸ் தெரிவித்தார்.
இங்கிலாந்து வீரர்கள் இந்தியாவின் முடிவால் விரக்தியடைந்தனர். இந்த நிலையில் டிரா விவகாரத்தில் இங்கிலாந்தின் செயலை இரட்டை நிலை என்று அஸ்வின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அஸ்வின் கூறியதாவது:-
இரட்டை நிலை என்பதை நீங்கள் கேட்டிருக்கிறீர்களா?. இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் நாள் முழுவதும் இந்திய பந்து வீச்சாளர்களை எதிர்கொண்டு விளையாடினார்கள். ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் பந்துகளை சந்தித்து ரன்கள் சேர்த்தனர். திடீரென அவர்கள் இருவரும் சதத்தை நெருங்கும்போது, நீங்கள் போட்டியை முடித்துக் கொள்ள விரும்புகிறீர்கள். அவர்கள் ஏன் அதை செய்ய வேண்டும்?.
இந்திய வீரர்கள் இங்கிலாந்து பந்து வீச்சாளர்களை காலையில் இருந்து எதிர்ககொண்டு, போட்டியை டிராவுக்கு எடுத்துச் சென்றனர். இருவரும் கடினமாக விளையாடியிருக்கிறார்கள். அப்படி விளையாடியவர்களை, சதம் அடிக்காமல் போகச் சொல்கிறீர்களா?.
நான் கேப்டனாக இருந்திருந்தால், 15 ஓவர் முழுமையாக விளையாட சொல்லியிருப்பேன். பென் ஸ்டோக்ஸ், ஜடேஜாவிடம் பார்ட்-டைம் பந்து வீச்சாளரான ஹார் ப்ரூக்கிற்கு எதிராக சேதம் அடிக்கப் போகிறீர்களா? என கிண்டலாக சொல்லியுள்ளார்.
அவர்கள் சதம் அடிக்க வேண்டும். நீங்கள் ஸ்டீவ் ஹார்மிசன், பிளின்டாப் உள்பட எந்த பந்து வீச்சாளரையும் கொண்டு வாருங்கள். அவர்கள் எதிர்ப்பு சொல்ல மாட்டார்கள். ஹாரி ப்ரூக்கை அழைத்தது நீங்கள். அவர்கள் அல்ல.
இவை டெஸ்ட் ரன்கள், ஒரு சதம் கணக்கில் சேர்கிறது. பரிசாக அல்ல, வாஷிங்டன் அதற்கு தகுதியானவர், ஜடேஜா அதற்கு தகுதியானவர்.
இரண்டு காரணங்கள் இருந்தன: ஒன்று நீங்கள் உங்கள் பந்து வீச்சாளர்களை சோர்வடையச் செய்ய விரும்பவில்லை. சரி. இரண்டாவது நீங்கள் விரக்தியடைந்தீர்கள், 'நான் மகிழ்ச்சியாக இல்லை என்றால், நீங்களும் மகிழ்ச்சியாக இருக்கக்கூடாது'. இப்போது கிரிக்கெட் இப்படித்தான் செயல்படுகிறது.
இவ்வாறு அஸ்வின் தெரிவித்துள்ளார்.
- பெண்கள் செஸ் உலகக் கோப்பையை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை திவ்யா படைத்துள்ளார்.
- வெற்றியாளரை தீர்மானிக்க டைபிரேக்கர் முறை கடைப்பிடிக்கப்பட்டது.
பதுமி:
3-வது 'பிடே' பெண்கள் உலகக் கோப்பை செஸ் போட்டி ஜார்ஜியாவில் உள்ள பதுமி நகரில் நடந்து வருகிறது. இதன் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனைகள் கோனெரு ஹம்பி- திவ்யா தேஷ்முக் ஆகியோர் மோதினர்.
இதில் கிளாசிக்கல் அடிப்படையில் நடந்த முதல் ஆட்டம் டிரா ஆனது. இந்த நிலையில் கிளாசிக் முறையிலான 2-வது ஆட்டம் நேற்று நடந்தது. இதில் வெள்ளைநிற காய்களுடன் ஆடிய ஹம்பி 34-வது நகர்த்தலில் திவ்யாவுடன் 'டிரா' செய்தார். இதனால் இருவருக்கும் தலா ½ புள்ளி கிடைத்தது. இரண்டு ஆட்டங்கள் முடிவில் இருவரும் தலா ஒரு புள்ளியுடன் சமநிலை வகிப்பதால், வெற்றியாளரை தீர்மானிக்க டைபிரேக்கர் முறை கடைப்பிடிக்கப்பட்டது.
இதில் திவ்யா வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். இதன்மூலம் பெண்கள் செஸ் உலகக் கோப்பையை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை திவ்யா படைத்துள்ளார்.
திவ்யாவை எதிர்த்து விளையாடிய கோனெரு ஹம்பி, 2-ம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.
- கடைசி டெஸ்டில் ரிஷப் பண்ட் காயம் காரணமாக விலகியதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
- அவருக்கு பதிலாக தமிழ்நாட்டைச் சேர்ந்த நாராயண் ஜெகதீசன் இந்திய டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகளைக் கொண்ட ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நான்று போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜூலை 31-ம் தேதி லண்டனில் உள்ள கெனிங்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்த போட்டியில் இந்திய அணியின் துணைக்கேப்டனும், விக்கெட் கீப்பருமான ரிஷப் பண்ட் காயம் காரணமாக விலகியதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் அவருக்கு பதிலாக தமிழ்நாட்டைச் சேர்ந்த நாராயண் ஜெகதீசன் இந்திய டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இந்த தொடரை 2-2 என சமன் செய்ய வெற்றி பெற வேண்டும் என்று சக வீரர்களுக்கு ரிஷப் பந்த் ஆலோனை வழங்கியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
தனிப்பட்ட இலக்கைப் பற்றி சிந்திப்பதற்குப் பதிலாக, எங்கள் அணியை வெற்றிபெறச் செய்ய அல்லது அணியை முன்னோக்கி நகர்த்த என்ன தேவைப்பட்டாலும் அதை செய்ய நான் தயாராக இருக்கிறேன். மேலும் அவர்கள் எனக்கு ஆதரவளித்த விதம் ஆச்சரியமாக இருந்தது. மேலும் எங்கள் அணி அழுத்தத்தில் இருந்தது. ஆனால் முழு நாடும் ஒரே காரணத்திற்காக உங்கள் பின்னால் நிற்கும்போது, அதற்காக நீங்கள் உங்களின் முழு முயற்சியையும் வழங்க வேண்டும்.
என் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில் நான் எவ்வளவு பெருமைப்படுகிறேன் என்ற உணர்ச்சியை விளக்குவது மிகவும் கடினம். என் அணிக்கு நான் சொல்லப்போகும் ஒரே செய்தி, வெற்றி பெறுவோம் நண்பர்களே. நாட்டுக்காக இதைச் செய்வோம்.
என்று கூறியுள்ளார்.






