என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • முதல் சூப்பர் ஓவர் போட்டியாக இது மாறியது.
    • தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் 13ஆவது போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 187 ரன்களை குவித்தது.

    கடின இலக்கை துரத்திய ஆப்கானிஸ்தான் அணி 19.4 ஓவர்களில் 187 ரன்களை எடுத்ததால் போட்டி சமனில் முடிந்தது. இதைத் தொடர்ந்து சூப்பர் ஓவரில் மீண்டும் இரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 2026 டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் சூப்பர் ஓவர் போட்டியாக இது மாறியது.

    சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 17 ரன்களை அடித்தது. இதைத் துரத்திய தென் ஆப்பிரிக்கா அணி 1 விக்கெட் இழப்புக்கு 17 ரன்களை சேர்த்தது. இதனால் போட்டி மீண்டும் சமனில் முடிய 2வது சூப்பர் ஓவருக்கு சென்றது. டி20 உலகக் கோப்பை வரலாற்றில் 2 முறை சூப்பர் ஓவர்கள் வீசப்பட்ட போட்டியாக இது மாறியது.

    2வது சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 23 ரன்களை விளாசியது. இதைத் துரத்திய ஆப்கானிஸ்தான் அணி 2 விக்கெட் இழப்புக்கு 19 ரன்களை எடுத்தது. இதனால் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது. 

    • முதல் சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 17 ரன்களை குவித்தது.
    • முதல் சூப்பர் ஓவரில் தென் ஆப்பிரிக்காஅணியும் 17 ரன்கள் அடித்தது

    10-வது டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் கடந்த 7-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.

    இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்தது.

    அதிகபட்சமாக டிகாக் 59 ரன்களும் ரிங்கல்டன் 61 ரன்களும் அடித்து ஆட்டமிழந்தனர். ஆப்கானிஸ்தான் தரப்பில் ஓமர்சாய் 3 விக்கெட்டும் ரஷித்கான் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி ஒருபுறம் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்தாலும் மறுபுறம்அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்து. அதிரடியாக விளையாடிய ரஹ்மானுல்லா குர்பாஸ் 42 பந்துகளில் 84 ரன்கள் அடித்து அவுட்டனார்.

    ஆப்கானிஸ்தான் அணி 19.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் அடித்தது. இதனால் போட்டி சமனில் முடிந்தது.

    இதையடுத்து சூப்பர் ஓவர் நடத்தப்பட்டது. அதில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 17 ரன்களை குவித்தது.

    இதையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா 1 விக்கெட் இழப்பிற்கு 17 ரன்கள் அடித்தது. இதனால் சூப்பர் ஓவரும் டை ஆனது.

    இதையடுத்து 2 ஆவது சூப்பர் ஓவர் நடத்தப்பட்டது. 2 ஆவது சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி விக்கெட் இழப்பின்றி 23 ரன்கள் அடித்தது.

    இதையடுத்து 24 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 18 ரன்கள் மட்டுமே அடித்து தோல்வி அடைந்தது.

    • சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 17 ரன்களை குவித்தது.
    • தென் ஆப்பிரிக்கா 1 விக்கெட் இழப்பிற்கு 17 ரன்கள் அடித்தது.

    10-வது டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் கடந்த 7-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.

    இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்தது.

    அதிகபட்சமாக டிகாக் 59 ரன்களும் ரிங்கல்டன் 61 ரன்களும் அடித்து ஆட்டமிழந்தனர். ஆப்கானிஸ்தான் தரப்பில் ஓமர்சாய் 3 விக்கெட்டும் ரஷித்கான் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி ஒருபுறம் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்தாலும் மறுபுறம்அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்து. அதிரடியாக விளையாடிய ரஹ்மானுல்லா குர்பாஸ் 42 பந்துகளில் 84 ரன்கள் அடித்து அவுட்டனார்.

    ஆப்கானிஸ்தான் அணி 19.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் அடித்தது. இதனால் போட்டி சமனில் முடிந்தது.

    இதையடுத்து சூப்பர் ஓவர் நடத்தப்பட்டது. அதில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 17 ரன்களை குவித்தது.

    இதையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா 1 விக்கெட் இழப்பிற்கு 17 ரன்கள் அடித்தது. இதனால் சூப்பர் ஓவரும் டை ஆனது. இதையடுத்து 2 ஆவது சூப்பர் ஓவர் நடத்தப்பட்டு முடிவு அறிவிக்கப்படும். 

    • தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்தது.
    • அதிரடியாக விளையாடிய ரஹ்மானுல்லா குர்பாஸ் 42 பந்துகளில் 84 ரன்கள் அடித்து அவுட்டனார்.

    10-வது டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் கடந்த 7-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.

    இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்தது.

    அதிகபட்சமாக டிகாக் 59 ரன்களும் ரிங்கல்டன் 61 ரன்களும் அடித்து ஆட்டமிழந்தனர். ஆப்கானிஸ்தான் தரப்பில் ஓமர்சாய் 3 விக்கெட்டும் ரஷித்கான் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி ஒருபுறம் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்தாலும் மறுபுறம்அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்து. அதிரடியாக விளையாடிய ரஹ்மானுல்லா குர்பாஸ் 42 பந்துகளில் 84 ரன்கள் அடித்து அவுட்டனார்.

    ஆப்கானிஸ்தான் அணி 19.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் அடித்தது. இதனால் போட்டி சமனில் முடிந்தது. இதனால் சூப்பர் ஓவர் நடத்தப்பட்டு முடிவு அறிவிக்கப்படும். 

    • இந்திய அணி வங்க தேசத்துக்கு எதிராக 297 ரன் குவித்ததே அதிகபட்ச ஸ்கோராகும்.
    • நமீபியாவை வீழ்த்தி 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் இந்திய அணி இருக்கிறது.

    புதுடெல்லி:

    20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நடப்பு சாம்பியனான இந்தியா ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளது. பாகிஸ்தான், அமெரிக்கா, நமீபியா, நெதர்லாந்து ஆகிய அணிகளும் அந்த பிரிவில் உள்ளன.

    சூர்ய குமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் அமெரிக்காவை 29 ரன் வித்தியாசத்தில் தோற்க டித்தது.

    இந்திய அணி 2-வது ஆட்டத்தில் நமீபியாவை நாளை ( 12-ந் தேதி) எதிர் கொள்கிறது. டெல்லியில் இரவு 7 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது.

    நமீபியாவை வீழ்த்தி 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் இந்திய அணி இருக்கிறது.

    அமெரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் எதிர்பார்த்த அளவுக்கு இந்தியா அதிரடியை வெளிப்படுத்தவில்லை. இதற்கு ஆடுகள தன்மை தான் காரணம் என்று கூறப்பட்டது. நமீபியாவுக்கு எதிராக இந்திய அணி அதிரடியாக விளையாடி ரன் குவிப்பில் புதிய சாதனை படைக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்திய அணி வங்கதேசத்துக்கு எதிராக 297 ரன் குவித்ததே அதிகபட்ச ஸ்கோராகும். இதைத் தாண்டி புதிய சரித்திரம் படைக்க காத்திருக்கிறது.

    கடந்த ஆட்டத்தில் கேப்டன் சூர்ய குமார் யாதவ் ஒருவர் மட்டுமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நமீபியாவுக்கு எதிராக அனைத்து பேட்ஸ்மேன்களும் சிறப்பாக ஆடினால் மட்டுமே சாதிக்க முடியும்.

    உடல் தகுதி இல்லாமல் அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் ஆடிய அதிரடி பேட்ஸ்மேன் அபிஷேக் சர்மா டக்அவுட் ஆனார். நாளைய போட்டியில் அவர் விளையாட வாய்ப்பு இல்லை . அவர் இடம் பெறவில்லை என்றால் இஷான் கிஷனுடன் சஞ்சு சாம்சன் தொடக்க வரிசையில் ஆடுவார்.

    காய்ச்சல் காரணமாக கடந்த போட்டியில் விளையாடாத வேகப்பந்து வீரர் ஜஸ்பிரித் பும்ரா இடம் பெறுகிறார். முகமது சிராஜ் அல்லது அர்ஷ்தீப் நீக்கப்படலாம். மற்றபடி இந்திய அணியில் மாற்றம் எதுவும் இருக்காது. வாஷிங்டன் சுந்தர் முழு உடல் தகுதி பெற்றாலும் 11 பேர் கொண்ட அணியில் இடம் பெறுவதற்கான வாய்ப்பு குறைவே.

    20 ஓவர் போட்டியில் இந்திய அணி நமீபியாவுடன் மோதுவது 2-வது முறையாகும். இதற்கு முன்பு 2021 உலக கோப்பையில் துபாயில் நடந்த ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது.

    நமீபியா அணி முதல் போட்டியில் நெதர்லாந்திடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது.

    முன்னதாக நாளை காலை 11 மணிக்கு பல்லேகலேவில் நடைபெறும் போட்டியில் பி பிரிவில் உள்ள இலங்கை-ஓமன் அணிகள் மோதுகின்றன.

    இலங்கை 2-வது வெற்றி வேட்கையில் உள்ளது. அந்த அணி முதல் ஆட்டத்தில் அயர்லாந்தை வீழ்த்தியது. ஓமன் அணி தொடக்க போட்டியில் ஜிம்பாப்வேயிடம் தோல்வி அடைந்தது.

    மாலை 3 மணிக்கு மும்பையில் நடைபெறும் போட்டியில் சி பிரிவில் உள்ள இத்தாலி- நேபாளம் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் தொடக்க ஆட்டங்களில் தோற்றன. இதனால் முதல் வெற்றியை பெறப்போவது யார்? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    • பிப்ரவரி 15-ம் தேதி இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன.
    • இந்தியாவுடன் மோதுவதை சாதாரண போட்டியைப் போலவே விளையாடுவோம்.

    10-வது டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் கடந்த 7-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், பிப்ரவரி 15-ம் தேதி இந்தியாவுக்கு எதிரான போட்டியை புறக்கணிப்பு செய்வதாக முதலில் அறிவித்த பாகிஸ்தான், தற்போது ஐசிசியிடம் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு சம்மதம் தெரிவித்தது.

    இதையடுத்து இரு அணிகளும் திட்டமிட்டப்படி விளையாடுவது உறுதியாகி உள்ளது. இந்த போட்டியை ரசிகர்கள் முதல் முன்னாள் வீரர்கள் வரை பலரும் எதிர் நோக்கி உள்ளனர்.

    இந்தியா- பாகிஸ்தான் போட்டி பெரிய போட்டி எனவும் இந்த போட்டி ஒருதலைப்பட்சமாக இருக்கும் எனவும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கூறினார்.

    இந்நிலையில் இந்தியாவுடன் மோதுவதை சாதாரண போட்டியைப் போலவே விளையாடுவோம் எனவும் இந்தப் போட்டி ஒருதலைப்பட்சமாக இருக்காது எனவும் பாகிஸ்தான் வீரர் சாஹிப்சாதா கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இது, இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்று நாங்கள் நினைக்க மாட்டோம். அதை ஒரு சாதாரண போட்டியைப் போலவே விளையாடுவோம். இந்தப் போட்டி ஒருதலைப்பட்சமாக இருக்காது.

    என பாகிஸ்தான் வீரர் சாஹிப்சாதா ஃபர்ஹான் கூறினார்.

    • ஆப்கானிஸ்தான் தரப்பில் ஓமர்சாய் 3 விக்கெட்டும் ரஷித்கான் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
    • டிகாக் 59 ரன்னிலும் ரிக்கல்டன் 61 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    10-வது டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் கடந்த 7-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதி வருகிறது.

    இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க வீரர்களாக மார்க்ரம்- டிகாக் களமிறங்கினர். இதில் மார்கரம் 5 ரன்னில் வெளியேறினார்.

    இதனையடுத்து டிகாக்குடன் ரிக்கல்டன் ஜோடி சேர்ந்து ஆப்கானிஸ்தான் அணியின் பந்து வீச்சை பறக்க விட்டனர். அதிரடியாக விளையாடிய இருவரும் அரை சதம் கடந்தனர். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 114 ரன்கள் சேர்த்தது. டிகாக் 59 ரன்னிலும் ரிங்கல்டன் 61 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    13 ஓவரில் 127 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்த தென் ஆப்பிரிக்கா அணி, அதன் பிறகு தடுமாறியது. அடுத்து வந்த ப்ரெவிஸ் 19 பந்துகள் சந்தித்து 23 ரன்களிலும் ஸ்டெப்ஸ் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    இறுதியில் டேவிட் மில்லர், யான்சென் ஜோடி அதிரடியாக விளையாடினர். இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் ஓமர்சாய் 3 விக்கெட்டும் ரஷித்கான் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • இந்திய வீரர்களின் பேட்டில் ரப்பர் பகுதி இணைக்கப்பட்டுள்ளதாக ராஜபக்சே கூறினார்.
    • அவர்கள் பெரிய ஹிட் ஷாட்களை சிறப்பாக விளையாடுவதாகவும் இலங்கையின் முன்னாள் வீரர் பனுகா ராஜபக்சே கூறியிருந்தார்.

    இந்திய வீரர்களின் பேட்டில் ரப்பர் பகுதி இணைக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் தான் அவர்கள் பெரிய ஹிட் ஷாட்களை சிறப்பாக விளையாடுவதாகவும் இலங்கையின் முன்னாள் வீரர் பனுகா ராஜபக்சே கூறியிருந்தார். அவருடைய பேச்சு சர்ச்சையாக மாறியது..

    இந்திய வீரர்கள் பேட்டில் ரப்பர் இருக்கிறது என்று பேசிய கருத்திற்கு எதிராக விமர்சனங்கள் எழுந்த நிலையில், தன்னுடைய பேச்சு தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாக பனுகா ராஜபக்சே விளக்கம் கொடுத்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    நான் பேசியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது, எனது கருத்து முழுக்க பாராட்டுக்குரியது. இந்திய கிரிக்கெட் அதன் உள்கட்டமைப்பு முதல் உபகரணத் தரநிலைகள் வரை நம்பமுடியாத அளவிற்கு முன்னேறியுள்ளது. அவர்களின் பேட் உற்பத்தியாளர்கள் உண்மையிலேயே உலகின் சிறந்த உற்பத்தியாளர்களில் ஒருவர்.

    நான் தெளிவாக இதை விளக்கியிருக்க வேண்டும். இந்திய கிரிக்கெட்டின் மீது எப்போதும் மரியாதையைத் தவிர வேறு எதுவும் இல்லை என ராஜபக்சே கூறியுள்ளார்.

    • அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.
    • பாகிஸ்தான் பந்து வீச்சாளார் உஸ்மான் தாரிக் பந்து வீச்சு பெரிய அளவில் பேசப்பட்டது.

    டி20 உலகக் கோப்பை தொடரின் 12-வது லீக் போட்டியில் பாகிஸ்தான், அமெரிக்கா அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 190 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய அமெரிக்கா அணி 158 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    இந்த போட்டியில் பாகிஸ்தான் பந்து வீச்சாளார் உஸ்மான் தாரிக் பந்து வீச்சு பெரிய அளவில் பேசப்பட்டது. அவரது பந்து வீச்சு ஸ்டைலை ரசிகர்கள் அவரை போலவே செய்து காட்டி கொண்டாடினர்.

    இந்நிலையில் இந்த பந்து வீச்சாளர் குறித்து ஒரு வார்த்தையில் பதிலளிக்க வேண்டுமென சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டுள்ளது. அந்த பதிவுக்கு ஆஸ்திரேலியா அணியின் அதிரடி ஆட்டக்காரர் டிம் டேவிட் அளித்த பதில் வைரலாகி வருகிறது. அதில் சகோதரர் பந்து வீச 500 வருடங்கள் ஆகுது. ஆனாலும் கடைசியில் பந்தை வீசி விடுவார் என கிண்டாலாக பதிவிட்டுள்ளார்.

    டி20 உலகக் கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் அதிரடி ஆட்டக்காரர் டிம் டேவிட் இடம்பெற்றுள்ளார். இருப்பினும், தசைநார் காயம் காரணமாக பிப்ரவரி 11 அன்று நடைபெறும் அயர்லாந்துக்கு எதிரான முதல் போட்டியில் அவர் விளையாடவில்லை எனபது குறிப்பிடத்தக்கது.

     

    • பாகிஸ்தான் அணிக்கு இந்தியாவை வீழ்த்துவது எளிதாக இருக்காது.
    • சில ஆண்டுகளாக இருதரப்பு மோதலில் இந்தியாவின் ஆதிக்கமே அதிகம் இருந்துள்ளது.

    டி20 உலகக் கோப்பையில் இந்தியா உடனான போட்டியை புறக்கணிப்பதாக பாகிஸ்தான் அரசு அறிவித்தது. ஆனால், பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு இது தொடர்பாக ஐசிசி-க்கு அதிகாரப்பூர்வமாக தெரிவிக்காமல் இருந்தது. மறுபுறம், புறக்கணித்தால் கடுமையான நிதி அபராதம் விதிக்கப்படும் என ஐசிசி எச்சரித்தது.

    இதனை தொடர்ந்து பாகிஸ்தான் கிரிகெட் வாரியத் தலைவர் மொசின் நக்வி, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உடன் இதுகுறித்து ஆலோசனை நடத்தினார்.

    இதையடுத்து தனது முடிவை மாற்றிய பாகிஸ்தான் அரசு, டி20 உலகக் கோப்பையில் இந்தியா உடனான போட்டியில் விளையாட தங்கள் கிரிக்கெட் அணிக்கு அனுமதி வழங்கியுள்ளது.

    இந்நிலையில் இந்த உலகக் கோப்பையில் இந்தியா- பாகிஸ்தான் போட்டி மிகப்பெரிய ஆட்டமாக இருக்கும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:-

    இந்த உலகக் கோப்பையில் இது (INDvPAK) மிகப்பெரிய ஆட்டமாக இருக்கும். ஆனால் பாகிஸ்தான் அணிக்கு இந்தியாவை வீழ்த்துவது எளிதாக இருக்காது. ஏனெனில் இந்தியா வலுவாக உள்ளது. சில ஆண்டுகளாக இருதரப்பு மோதலில் இந்தியாவின் ஆதிக்கமே அதிகம் இருந்துள்ளது. இருப்பினும் பாகிஸ்தான் சிறப்பாக விளையாடும் என்று நம்புகிறேன் என சவுரவ் கங்குலி கூறியுள்ளார்.

    • டி20 உலகக் கோப்பையில் இந்தியா- நமீபியா அணிகள் நாளை மோதுகிறது.
    • அபிஷேக் சர்மா டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    டெல்லி:

    டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா அணி மோதிய முதல் போட்டியில் அமெரிக்காவை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதனையடுத்து இந்திய அணி 2-வது லீக் போட்டியில் இன்று நமீபியாவுடன் மோதவுள்ளது.

    இந்நிலையில் இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் அபிஷேக் சர்மாவிற்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இதனால் நாளை நடைபெறும் நமீபியாவுக்கு எதிரான போட்டியில் அவர் பங்கேற்பது சந்தேகம் எனவும், சஞ்சு சாம்சன் ஓப்பனராக களமிறங்க வாய்ப்பு எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பிப்ரவரி 15 அன்று கொழும்பில் நடைபெறவுள்ள பாகிஸ்தானுக்கு எதிரான முக்கியமான போட்டிக்குள் அவர் குணமடைந்து திரும்புவார் என அணி நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

    பிப்ரவரி 8 அன்று பயிற்சியாளர் கம்பீர் தனது வீட்டில் இந்திய அணிக்கு இரவு விருந்து அளித்தார். அப்போது அபிஷேக் சர்மாவுக்கு உடல்நலக் குறைவு (வயிற்றுப் போக்கு மற்றும் காய்ச்சல்) ஏற்பட்டதால், மற்ற வீரர்கள் வெளியேறுவதற்கு முன்பே அவர் முன்கூட்டியே கிளம்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அமீரக கிரிக்கெட் வாரியம் உத்தரவின் பேரில் உடனடியாக நாடு திரும்பினார்.
    • பாகிஸ்தான் வம்சாவளியான 27 வயதான முகமது சோகைப் கடந்த ஆண்டு 20 ஓவர் போட்டியில் அறிமுகமானார்.

    20 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்காக ஐக்கிய அரபு அமீரக அணியில் இடம் பிடித்து இருந்த பேட்ஸ்மேன் முகமது சோகைப். இவர் சென்னையில் நேற்று நடந்த தங்களது முதலாவது லீக் ஆட்டத்துக்கு முன்னதாக ஒழுங்கீன செயல்பாடு காரணமாக அணியில் இருந்து திடீரென விடுவிக்கப்பட்டார்.

    அமீரக கிரிக்கெட் வாரியம் உத்தரவின் பேரில் உடனடியாக நாடு திரும்பினார். வீரர்களின் நடத்தை விதிமுறையை மீறியதாக குற்றம்சாட்டப்பட்டு இருக்கும் அவர் என்ன தவறு செய்தார் என்பது குறித்து எதுவும் தெரிவிக்கப்பட்டவில்லை. பாகிஸ்தான் வம்சாவளியான 27 வயதான முகமது சோகைப் கடந்த ஆண்டு 20 ஓவர் போட்டியில் அறிமுகமானார். அவர் இதுவரை 16 சர்வதேச 20 ஓவர் போட்டியில் ஆடி ஒரு அரைசதம் உள்பட 303 ரன்கள் எடுத்துள்ளார்.

    ×