என் மலர்tooltip icon

    விளையாட்டு

    டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த், இங்கிலாந்து வீரர் டாபி பென்டியை விரட்டியடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார்
    ஒடென்ஸ்:

    மொத்தம் ரூ.5 கோடி பரிசுத்தொகைக்கான டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டி அங்குள்ள ஒடென்ஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 14-வது இடத்தில் உள்ளவரும், முன்னாள் சாம்பியனுமான இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 21-12, 21-18 என்ற நேர்செட்டில் 52-வது இடத்தில் இருக்கும் இங்கிலாந்து வீரர் டாபி பென்டியை விரட்டியடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    இந்த வெற்றியை பெற அவருக்கு 37 நிமிடமே தேவைப்பட்டது. மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் அஜய் ஜெயராம் 12-21, 14-21 என்ற நேர்செட்டில் டென்மார்க் வீரர் ஆன்டர்ஸ் ஆன்டென்சனிடம் தோல்வி கண்டு வெளியேறினார். இதேபோல் இந்திய வீரரான சுபாங்கர் தேவ் 13-21, 8-21 என்ற நேர்செட்டில் கனடா வீரர் ஜாசன் அந்தோணியிடம் வீழ்ந்தார்.
    உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்றில் பிரேசில் வீரர் நெய்மார் பெனால்டி வாய்ப்பை கோலாக்கிய கடைசி நிமிடத்தில் 3-வது கோல் அடித்து ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்தார்.
    லிமா:

    உலக கோப்பை கால்பந்து போட்டி 2022-ம் ஆண்டு கத்தாரில் நடக்கிறது. இதற்கான தென்அமெரிக்க கண்டத்துக்கான தகுதி சுற்று போட்டியில் 10 அணிகள் பங்கேற்றுள்ளன. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் உலக கோப்பை போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும்.

    நேற்று முன்தினம் பெரு தலைநகர் லிமாவில் நடந்த ஒரு ஆட்டத்தில் 5 முறை உலக சாம்பியனான பிரேசில் அணி, பெருவை சந்தித்தது. 6-வது நிமிடத்திலேயே பெரு வீரர் ஆந்த்ரே கரில்லோ கோல் அடித்து அதிர்ச்சி அளித்தார். இதன் பின்னர் 28-வது நிமிடத்தில் கிடைத்த ‘பெனால்டி’ வாய்ப்பில் பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மார் கோல் அடித்து சமனுக்கு கொண்டு வந்தார். 59-வது நிமிடத்தில் பெரு வீரர் ரெனட்டோ டாபியா கோல் போட மறுபடியும் அந்த அணி முன்னிலை பெற்றது. 64-வது நிமிடத்தில் பிரேசில் வீரர் ரிச்சர்லிசன் பந்தை வலைக்குள் திணித்தார். தொடர்ந்து 83-வது நிமிடத்தில் மீண்டும் ஒரு பெனால்டி வாய்ப்பை கோலாக்கிய நெய்மார் கடைசி நிமிடத்தில் 3-வது கோல் அடித்து ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்தார். முடிவில் பிரேசில் 4-2 என்ற கோல் கணக்கில் பெருவை வீழ்த்தி 2-வது வெற்றியை பதிவு செய்தது. 28 வயதான நெய்மார் இதுவரை 64 சர்வதேச கோல்கள் (103 ஆட்டம்) அடித்துள்ளார். பிரேசில் அணிக்காக அதிக கோல் அடித்தவர்களின் வரிசையில் 2-வது இடத்தில் இருந்த ரொனால்டோவை (62 கோல்) பின்னுக்கு தள்ளினார். முதலிடத்தில் உள்ள பீலேவையும் (77 கோல்) விரைவில் முந்தி விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மற்றொரு ஆட்டத்தில் லயோனல் மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா 2-1 என்ற கோல் கணக்கில் பொலிவியாவை தோற்கடித்து 2-வது வெற்றியை பெற்றது. இதில் ஒரு கட்டத்தில் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்த நிலையில் அர்ஜென்டினா மாற்று ஆட்டக்காரர் ஜோகுவைன் கோரியா 79-வது நிமிடத்தில் கோல் அடித்து வெற்றியை உறுதி செய்தார். இன்னொரு ஆட்டத்தில் ஈகுவடார் அணி 4-2 என்ற கோல் கணக்கில் முன்னாள் சாம்பியன் உருகுவேக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தது.
    ஐபிஎல் கிரிக்கெட்டின் இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி கேப்பிட்டல்ஸ் திரில் வெற்றி பெற்றது.
    துபாய்:

    ஐபிஎல் கிரிக்கெட்டில் இன்று நடைபெற்ற 30-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

    அதன்படி பிரித்வி ஷா, ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை ஆர்சர் வீசினார். முதல் பந்தில் பிரித்வி ஷா க்ளீன் போல்டானார்.

    அடுத்து வந்த ரகானே 2 ரன்னில் ஏமாற்றம் அளித்தார். 3-வது விக்கெட்டுக்கு தவான் உடன் ஷ்ரேயாஸ் அய்யர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குறிப்பாக தவான் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 33 பந்தில் 57 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்.

    ஷ்ரேயாஸ் அய்யர் 53 ரன்கள் எடுத்து வெளியேறினார். இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 85 ரன்கள் குவித்தது.
     
    மார்கஸ் ஸ்டாய்னிஸ் 18 ரன்களும், அலேக்ஸ் கேரி 14 ரன்களும் அடிக்க டெல்லி கேப்பிட்டல்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் அடித்துள்ளது.

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பில் ஆர்சர் 4 ஓவரில் 19 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜோஸ் பட்லர் ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். 

    தொடக்கம் முதலே இரு வீரர்களும் அதிரடியாக ஆடினர். 9 பந்துகளை சந்திது 1 சிக்சர் 3 பவுண்டரிகள் உள்பட 22 ரன்கள் குவித்த பட்லர் நோர்ட்ஜீ பந்து வீச்சில் அவுட் ஆனார். 

    அடுத்து வந்த கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 4 பந்துகளில் 1 ரன் எடுத்திருந்த நிலையில் அஸ்வின் பந்து வீச்சில் வெளியேறினார். அடுத்து வந்த சஞ்சுவ் சாம்சங்குடன் இணைந்த பென் ஸ்டோக்ஸ் அணியின் ஸ்கோரை மெல்ல உயர்த்தினார். 35 பந்துகளில் 41 ரன்கள் எடுத்திருந்த பென் ஸ்டோக்ஸ் துஷார் பந்து வீச்சில் வெளியேறினார்.

    அடுத்து வந்த ராபின் உத்தப்பா, சஞ்சுவ் சாம்சங்குடன் சேர்ந்து அதிரடியாக விளையாடினார். 18 பந்துகளை சந்தித்த சஞ்சுவ் சாம்சங் 2 சிக்சர் உள்பட 25 ரன்னிலும், 27 பந்துகளை சந்தித்த உத்தப்பா 1 சிக்சர், 3 பவுண்டரி உள்பட 32 ரன் குவித்து வெளியேறினார். 

    பின்னர் வந்த வீரர்கள் இறுதி கட்டத்தில் அதிரடியாக விளையாடாததால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த ராஜஸ்தான் 148 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    18 பந்துகளை சந்தித்து 14 ரன்கள் எடுத்திருந்த ராகுல் தேவாட்டியா கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இதனால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி திரில் வெற்றி பெற்றது.
    ஷிகர் தவான் மற்றும் ஷ்ரேயாஸ் அய்யர் அரைசதம் அடிக்க ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 162 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது டெல்லி கேப்பிட்டல்ஸ்.
    துபாயில் நடைபெற இருக்கும் ஐபிஎல் 30-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார்.

    அதன்படி பிரித்வி ஷா, ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை ஆர்சர் வீசினார். முதல் பந்தில் பிரித்வி ஷா க்ளீன் போல்டானார்.

    அடுத்து வந்த ரகானே 2 ரன்னில் ஏமாற்றம் அளித்தார். 3-வது விக்கெட்டுக்கு தவான் உடன் ஷ்ரேயாஸ் அய்யர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குறிப்பாக தவான் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 33 பந்தில் 57 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்.

    ஷ்ரேயாஸ் அய்யர் 53 ரன்கள் எடுத்து வெளியேறினார். இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 85 ரன்கள் குவித்தது. மார்கஸ் ஸ்டாய்னிஸ் 18 ரன்களும், அலேக்ஸ் கேரி 14 ரன்களும் அடிக்க டெல்லி கேப்பிட்டல்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் அடித்துள்ளது.

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பில் ஆர்சர் 4 ஓவரில் 19 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார்.
    துபாயில் நடைபெறும் ஐபிஎல் 30-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக டெல்லி கேப்பிட்டல்ஸ் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
    துபாயில் நடைபெற இருக்கும் ஐபிஎல் 30-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

    டெல்லி அணியில் ஹர்ஷல் பட்டேல் நீக்கப்பட்டு துஷார் தேஷ்பாண்டே சேர்க்கப்பட்டுள்ளார். 

    டெல்லி அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. பிரித்வி ஷா, 2. தவான், 3. அன்ரிச் நோர்ஜே, 4. ரகானே, 5. ஷ்ரேயாஸ் அய்யர், 6. மார்கஸ் ஸ்டெய்னிஸ், 7. அலேக்ஸ் கேரி, 8. அக்சார் பட்டேல், 9. அஸ்வின், 10, துஷார் தேஷ்பாண்டே, 11. ரபடா.

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:

    1. பென் ஸ்டோக்ஸ், 2 பட்லர், 3. ஸ்மித், 4. சஞ்சு சாம்சன், 5. ராபின் உத்தப்பா, 6. ரியான் பராக், 7. ராகுல் டெவாட்டியா, 8. ஜாஃப்ரா ஆர்சர், 9. ஷ்ரேயாஸ் கோபால், 10. உனத்கட், 11. கார்த்திக் தியாகி.
    2010 சீசனில் சென்னை அணி முதல் பாதி தொடரில் படுபதாளத்தில் இருந்து, பின்னர் வீறுகொண்டு எழுந்து சாம்பியன் பட்டத்தை வென்றது.
    பிளே ஆஃப்ஸ சுற்று என்றாலே அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கட்டாயம் இடமுண்டு. ஆனால் இந்த முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆட்டத்தில் வேகம் இல்லை.

    சீசனின் பாதி ஆட்டம் முடிந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 போட்டிகளில் இரண்டில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது.

    இதனால் ஒருபக்கம் ரசிகர்கள் துவண்டு கிடக்கும் நிலையில், மறுபக்கம் சென்னை அணி இதற்கு முந்தைய சீசனில் எப்படியெல்லாம் கம்பேக் கொடுத்தது என்பதை குறித்து ஆராய ரசிகர்கள் தொடங்கிவிட்டனர்.

    அப்படி ஆராய்ந்ததில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2010-ல் பாதி தொடரில் எப்படி இருந்ததோ, அதே நிலையில் அப்படியே உள்ளது. அதுமட்டுமல்ல முதல் இடத்தை பிடித்திருந்த அணியும் தற்போது முதல் இடத்தை பிடித்துள்ளது.

    2010 சீசனுக்கும் 2020 சீசனுக்கும் அப்படியே ஒற்றுமை உள்ளது என்பதால் இந்த முறை சிஎஸ்கே-விற்குத்தான் கோப்பை என அதீத நம்பிக்கையில் உள்ளனர்.

    2010 சீசன் சென்னை அணிக்கு 3-வது தொடர். 2020 இரண்டு கால தடைக்குப்பின் 3-வது தொடர். 2010-ல் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 7 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று பாயின்ட் டேபிளில் கடைசி இடத்தை பிடித்திருந்தது. தற்போதும் பஞ்சாப் அணி கடைசி இடத்தை பிடித்துள்ளது.

    2010-ல் இரண்டு அணிகள் 6 புள்ளிகள் பெற்றிருந்தன. தற்போது ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளும் பெற்றுள்ளன.

    இரண்டு வெற்றிகளும் வெளி மைதானத்தில் கிடைத்ததுதான். தற்போதும் அதேபோல் கிடைத்து்ளளது. 2010-ல் மும்பை இந்தியன்ஸ் முதலிடத்தில் இருந்தது. தற்போதும் மும்பை இந்தியன்ஸ் அணிதான் முதல் இடத்தில் உள்ளது.

    2010-ல் 2-வது பாதி சீசனில் வீறுகொண்டு எழுந்து 7 போட்டிகளில் ஐந்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. பின்னர் அரையிறுதி, இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று முதல் சாம்பியன் பட்டத்தை வென்றது.

    இதை வைத்து பாரக்கும்போது சென்னை அணிக்கு வாய்ப்பு இருக்கிறது ரசிகர்கள் நம்பிக்கையில் உள்ளனர். 8-வது போட்டியில் ஐதராபாத் அணியை சிஎஸ்கே வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
    சன்ரைசர்ஸ் ஐதராபாத், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் தலா மூன்று வெற்றிகள் பெற்ற போதிலும், சென்னை அணி 6-வது இடத்திலேயே உள்ளது.
    ஐபிஎல் லீக்கில் நேற்று நடைபெற்ற  ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 4-வது வெற்றிக்காக ஐதராபாத் அணியும், 3-வது வெற்றிக்காக சென்னையும் பலப்பரீட்சை நடத்தின.

    சென்னை அணி 20 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் கிடைத்த 2 புள்ளிகள் மூலம் 8 போட்டிகளில் 3-ல் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் 6-வது இடத்தை பிடித்துள்ளது. சன்ரைசர்ஸ் ஐதராபாத்தும் 3 புள்ளிகள்தான் பெற்றுள்ளது. இருந்தாலும் நெட் ரன்ரேட் அடிப்படையில் சன்ரைசர்ஸ் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது.

    ராஜஸ்தான் அணி மூன்று வெற்றி பெற்றிருந்தாலும் 7-வது இடத்திற்கு பின்தங்கியுள்ளது. மும்பை இந்தியன்ஸ் 7 போட்டிகளில் ஐந்தில் வெற்றி பெற்று முதலிடத்தில் உள்ளது. டெல்லி கேப்பிட்டல்ஸ் 5 வெற்றிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது. ஆர்சிபி-யும் ஐந்து வெற்றிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 4 வெற்றிகளுடன் 4-வது இடத்தில் உள்ளது.

    இந்த வருடம் முதல் நான்கு இடங்களை பிடிக்க ரன்ரேட் மிக முக்கிய பங்கு வகிக்கும் எனத் தெரிகிறது,
    தல டோனி ஏழு பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்க, ஒவ்வொருவரும் தங்களுடைய திறமையை நிரூபிக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி வாகை சூடியது.
    ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் ஏழு போட்டிகளில் இரண்டில் மட்டுமே வெற்றி பெற்று தரவரிசையில் 7-வது இடத்தை பிடித்து துவண்டு இருந்தது சிஎஸ்கே.

    7-வது போட்டியில் தோல்வியடைந்த பின்னர், தலைக்கு மேல் வெள்ளம் போனபின் ஜான் போனால் என்ன? முழம் போனால் என்ன? என்ற பழமொழிக்கு ஏற்ப வருகிறதை பார்ப்போம் என்று தல டோனி கூறினார்.

    ஆடுகளங்கள் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் நிலையில், சிஎஸ்கே பந்து வீச்சாளர்கள் டெத் ஓவரில் சொதப்புவதால் கடந்த போட்டியில் விளையாடிய ஜெகதீசனை நீக்கி விட்டு பியூஷ் சாவ்லாவை அணிக்குள் கொண்டு வந்தார்.

    இதனால் தீபக் சாஹர், சாம் கர்ரன், வெயின் பிராவோ, ஷர்துல் தாகூர், கரண் சர்மா, சாவ்லா, ஜடேஜா என ஏழு பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கினார்.

    இந்த காம்பினேசனை வைத்துக் கொண்டு சேஸிங் செய்ய கடினமாக இருக்கும் என்பது டோனிக்குத் தெரியும். இருந்தாலும் ஒரு கை பார்த்து விடுவோம் என களம் இறங்கினார்.

    டாஸ் சிஎஸ்கேவுக்கு சாதகமாக விழ, அப்பாடா.... என பெருமூச்சு விட்டார். டோனி. கண்ணை மூடிக்கொண்டு பேட்டிங்  தேர்வு செய்தார்.

    பேட்ஸ்மேன்களிடம் எப்படியாவது 160 ரன்களை தாண்டிவிட வேண்டும் என திட்டமிட்டார். இதற்காக யாரும் எதிர்பார்க்காத வகையில் நம்ம சுட்டிப்பையன் சாம் கர்ரனை டு பிளிஸ்சிஸ் உடன் தொடக்க ஜோடியா களம் இறக்கினார்.

    தன்னுடைய வேலை வரனும், அடிக்கனும், செல்லனும் என்பதை புரிந்து கொண்ட சாம் கர்ரன் 21 பந்தில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன் 31 ரன்கள் அடித்தார். ஆனால் டு பிளிஸ்சிஸ் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

    35 ரன்னுக்கு 2 விக்கெட் என்ற நிலையில் வாட்சனுடன் அம்பதி ராயுடு ஜோடி சேர்ந்தார். இருவரும் இன்னிங்சை மெதுவாக நகர்த்தினர். இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஸ்கோரும் ஓவருக்கு 6 ரன்கள் என்றபடியே வந்து கொண்டிருந்தது. 6.4 ஓவரில் 50 ரன்னைத் தொட்டது.

    வாட்சன் - அம்பதி ராயுடு ஜோடி 45 பந்தில் 50 ரன்களை எடுத்தது. இதனால் சென்னை அணி 13.4 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது.

    மிடில் ஆர்டர் பணி முடிந்து அதிரடியை தொடக்க நினைத்த வாடச்ன் 42 ரன்னிலும், அம்பதி ராயுடு 41 ரன்னிலும் வெளியேறினர்.

    வாட்சன் ஆட்டமிழக்கும்போது சிஎஸ்கே 16.2 ஓவரில் 120 ரன்கள் எடுத்திருந்தது. டெத் ஓவரில் எம்எஸ் டோனி, ஜடேஜா என்ன செய்யப் போகிறார்கள் என்று நினைக்கையில், டோனி இமாலய சிக்சருடன் 21 ரன்கள் அடித்தார்.

    ஜடாஜா அதிரடியாக விளையாடி 10 பந்தில் 25 ரன்கள் விளாசினார். இதனால் டெத் ஓவரில் 58 ரன்கள் குவிக்க சிஎஸ்கே 167 ரன்கள் சேர்த்தது. இது கட்டுப்படுத்தக் கூடிய ஸ்கோர் என்பதால் சிஎஸ்கே-வுக்கு நம்பிக்கை வந்தது.

    அடுத்து ஐதராபாத் களம் இறங்கியது. தொடக்க வீரர்களான டேவிட் வார்னர், பேர்ஸ்டோவை சாய்த்து விட்டால் வெற்றிக்கனியை பறித்து விடலாம் என்ற நோக்கத்தில் களம் இறங்கியது சிஎஸ்கே.

    அவர்கள் நினைத்தது போல் நம்ம சுட்டிப்பையனின் 2-வது ஓவரில் நடந்தது. வார்னனை 9 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேற்றினார். அடுத்து வந்த மணிஷ் பாண்டேவை இதே ஓவரின் கடைசி பந்தில் வெயின் பிராவோ மின்னல் வேகத்தில் ரன்அவுட் ஆக்க, 4 ஓவரில் 27 ரன்னுக்குள் 2 விக்கெட்  வீழ்ந்தது. இதனால் கால்வாசி போட்டி சென்னை கைக்குள் வந்தது.

    அடுத்து பேர்ஸ்டோவ் உடன் கேன் வில்லியம்சன் ஜோடி சேர்ந்தார். ஜடேஜா, கரண் சர்மா, பியூஷ் சாவ்லா, ஷர்துல் தாகூர் மிடில் ஓவரில் அசத்தினர்.

    ஜடேஜா பேர்ஸ்டோவை 23 ரன்னில் வெளியேற்றினார். அப்போது சென்னை பக்கம் பாதியளவு போட்டி திரும்பியது. அதன்பின் முழு சுமையையும் கேன் வில்லியம்சன் சுமந்தார். அவரால் டபுள்ஸ், சிங்கிள் அடிக்க முடிந்ததே தவிர பவர் ஹிட்டர் போன்று அதிரடி ஆட்டத்திற்கு சிஎஸ்கே பவுலர்கள் இடம் கொடுக்க முடியவில்லை.

    டெத் ஓவரில் ஐதராபாத் அணிக்கு 59 ரன்கள் தேவைப்பட்டது. 17-வது ஓவரை பிராவோ வீசினார். இந்த ஓவரில் 13 ரன்கள் விட்டுக்கொடுத்தாலும் விஜய் சங்கர் (12) வெளியேற்றினார்.

    18 பந்தில் 46 ரன்கள் இருந்த நிலையில், கரண் சர்மா வீசினார். முதல் பந்தில் கேன் வில்லியம்சன் பவுண்டரி அடிக்க ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் அடுத்த பந்தில் வில்லியம்சனை தூக்கினார் கரண் சர்மா. அவர் 57 ரன்னில் அடித்து வெளியேறினார். அடுத்து வந்த ரஷித் கான் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி நதீம் ஒரு பவுண்டரி அடிக்க 19 ரன்கள் விட்டுக்கொடுத்தது.

    இதனால் கடைசி இரண்டு ஓவரில் 27 ரன்களே தேவைப்பட்டது. ஷர்துல் தாகூர் அந்த ஓவரை அட்டகாசமாக வீசி ரஷித் கானை அவுட்டாக்கி 5 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். அப்போது போட்டி சென்னை கைக்கு முழுவதுமாக திரும்பியது. கடைசி ஓவரில் பிராவோ ஒரு ரன் மட்டுமே விட்டுக்கொடுக்க 20 ரன்னில் வெற்றி வாகை சூடியது சென்னை சூப்பர் கிங்ஸ்.

    ஜடேஜா 10 பந்தில் 25 ரன்களும், சாம் கர்ரன் ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டும், டெத் ஓவுரில் ஷர்துல் தாகூர் மற்றும் பிராவாவோயின் சிறப்பான பந்து வீச்சு, சிஎஸ்கேவின் அட்டகாசமான பீல்டிங் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
    டிவில்லியர்ஸ் ஓய்வுக்கு குட்பை சொல்லிவிட்டு, சர்வதேச போட்டிகளில் விளையாட வேண்டும் என்று இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி அழைப்பு விடுத்துள்ளார்.

    மும்பை:

    உலகின் சிறந்த அதிரடி பேட்ஸ்மேன்களில் ஒருவர் டிவில்லியர்ஸ். தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த இவர் 2018-ல் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்தார்.

    36 வயதான டிவில்லியர்ஸ் ஐ.பி.எல். போட்டியில் பெங்களூர் அணியில் விளையாடி வருகிறார். கொல்கத்தாவுக்கு எதிராக நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில் அவர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    33 பந்தில் 5 பவுண்டரி, 6 சிக்சர்களுடன் 73 ரன் எடுத்தார். பந்து வீச்சுக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் அவர் ஒருவரால் மட்டுமே அதிரடியாக ஆட முடிந்தது. அவரது ஆட்டத்தை கேப்டன் வீராட் கோலி பாராட்டி இருந்தார்.

    இந்த நிலையில் டிவில்லியர்ஸ் ஓய்வுக்கு குட்பை சொல்லிவிட்டு, சர்வதேச போட்டிகளில் விளையாட வேண்டும் என்று இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி அழைப்பு விடுத்துள்ளார்.

    கொல்கத்தாவுக்கு எதிராக டிவில்லியர்சின் ஆட்டம் அற்புதமாகவும், அதிசயமாகவும் இருந்தது. இதை பார்க்கும்போது கனவா? நினைவா? என்று எண்ண தோன்றியது.

    இதனால் நீங்கள் (டிவில்லியர்ஸ்) ஓய்வுக்கு குட்பை சொல்லிவிட்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிக்கு விளையாட வாருங்கள்.

    இவ்வாறு ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

    சாம்கரண் தங்கள் அணியின் முழுமையான கிரிக்கெட் வீரர் என்று கேப்டன் டோனி தெரிவித்துள்ளார்.
    துபாய்:

    ஐ.பி.எல். போட்டியில் ஐதராபாத்துக்கு பதிலடி கொடுத்து சென்னை அணி 3-வது வெற்றியை பெற்றது.

    துபாயில் நடந்த 29-வது லீக் ஆட்டத்தில் முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 167 ரன் எடுத்தது.

    வாட்சன் 38 பந்தில் 42 ரன்னும் (1 பவுண்டரி, 3 சிக்சர்), அம்பதி ராயுடு 34 பந்தில் 41 ரன்னும் (3 பவுண்டரி, 2 சிக்சர்), சாம் கரண் 22 பந்தில் 31 ரன்னும் (3 பவுண்டரி, 2 சிக்சர்), ஐடேஜா 10 பந்தில் 25 ரன்னும் (3 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர்.

    சந்தீப் சர்மா, கலீல் அகமது, தமிழக வீரர் டி. நடராஜன் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினார்கள்

    பின்னர் ஆடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 147 ரன் எடுத்தது. இதனால் சென்னை அணி 20 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    வில்லியம்சன் அதிகபட்சமாக 39 பந்தில் 57 ரன் (7 பவுண்டரி) எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டம் இழந்தனர். கரண் சர்மா, பிராவோ தலா 2 விக்கெட்டும், சாம் கரண், ஜடேஜா ‌ஷர்துல் தாகூர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெற்ற 3-வது வெற்றி இதுவாகும். இந்த வெற்றியின் மூலம் ஏற்கனவே ஐதராபாத்திடம் தோற்றதற்கு பதிலடி கொடுத்தது.

    வெற்றி குறித்து சென்னை அணி கேப்டன் டோனி கூறியதாவது:-

    நெருங்கி வந்து இந்த வெற்றியை பெற்றுள்ளது சிறப்பானது. பேட்ஸ்மேன்கள் தங்களது பணியை சிறப்பாக செய்தனர். இந்த ஆடுகளத்தில் 168 ரன் இலக்கு போதுமானதா என்பது முதல் 6 ஓவரை பொறுத்துதான் இருக்கிறது. எங்களது வேகப்பந்து வீரர்கள் அபாரமாக பந்து வீசினார்கள்.

    இதேபோல சுழற்பந்து வீரர்களும் தங்களது பணியை சிறப்பாக செய்தனர். எங்களுக்கு எதிராக ஐதராபாத் அணி பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடமாட்டார்கள் என்றுதான் கூடுதலாக ஒரு சுழற்பந்து வீரரை பயன்படுத்தினோம்.

    சாம்கரண் எங்கள் அணியின் முழுமையான கிரிக்கெட் வீரர் ஆவார். அவர் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டார்.

    இவ்வாறு டோனி கூறியுள்ளார்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றி தொடர்ந்து நீடித்தால் மட்டுமே பிளே-ஆப் சுற்று வாய்ப்பை பெற முடியும்.

    சி.எஸ்.கே. 9-வது ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்சை வருகிற 17-ந் தேதி சார்ஜாவில் சந்திக்க உள்ளது. ஐதராபாத் அணி அடுத்த போட்டியில் கொல்கத்தாவை 18-ந் தேதி எதிர்கொள்கிறது.
    டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி அடுத்த ஆண்டு (2021) ஜூன் மாதம் லண்டனில் நடத்தப்படும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) அறிவித்துள்ளது.
    துபாய்:

    உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டி 9 அணிகள் இடையே நடந்து வருகிறது. குறிப்பிட்ட டெஸ்ட் தொடர்கள் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு அதன் முடிவுக்கு ஏற்ப புள்ளிகள் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு அணிகளும் 6 தொடர்களில் விளையாட வேண்டும். இதுவரை 4 தொடர்களில் ஆடியுள்ள இந்திய அணி 360 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ஆஸ்திரேலியா 296 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், இங்கிலாந்து 292 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளன.

    கொரோனா அச்சத்தால் பல போட்டிகள் ரத்து செய்யப்பட்டும், சில தொடர்கள் தள்ளிவைக்கப்பட்டும் உள்ளன. இதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியை ஒத்திபோட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டன. ஆனால் திட்டமிட்டபடி அடுத்த ஆண்டு (2021) ஜூன் மாதம் லண்டனில் இறுதிப்போட்டி நடத்தப்படும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) அறிவித்துள்ளது. இது குறித்து ஐ.சி.சி. செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‘டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியை திட்டமிட்டபடி நடத்துவதை நோக்கி பயணிக்கிறோம். எப்படி புள்ளிகளை பகிர்வது, தள்ளிவைக்கப்பட்ட போட்டிகளை நடத்துவது குறித்து விரைவில் தெளிவான அறிவிப்பு வெளியிடப்படும்’ என்றார்.
    நடாலின் பிரெஞ்ச் ஓபன் சாதனையை உலகில் யாராலும் முறியடிக்க முடியாது என்று முன்னாள் நம்பர் ஒன் வீரரும், ஒலிம்பிக் சாம்பியனுமான ஆன்டி முர்ரே கூறியுள்ளார்.
    லண்டன்:

    பாரீசில் நடந்த ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால், நம்பர் ஒன் வீரர் செர்பியாவின் ஜோகோவிச்சை தோற்கடித்து 13-வது முறையாக சாம்பியன் பட்டத்தை உச்சிமுகர்ந்து சரித்திரம் படைத்தார். அத்துடன் அதிக கிராண்ட்ஸ்லாம் வென்ற சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரரின் சாதனையையும் (20 கிராண்ட்ஸ்லாம்) நடால் சமன் செய்தார்.

    இந்த நிலையில் அவரது சாதனை குறித்து முன்னாள் நம்பர் ஒன் வீரரும், ஒலிம்பிக் சாம்பியனுமான ஆன்டி முர்ரே (இங்கிலாந்து) அளித்த ஒரு பேட்டியில், ‘நடாலின் பிரெஞ்ச் ஓபன் சாதனையை உலகில் யாராலும் முறியடிக்க முடியாது என்று கருதுகிறேன். விளையாட்டு உலகில் மிகச்சிறந்த சாதனைகளில் இதுவும் ஒன்று. அமெரிக்க ஜாம்பவான் பீட் சாம்ப்ராஸ் ஒட்டுமொத்தத்தில் (4 வகையான கிராண்ட்ஸ்லாம் போட்டியை சேர்த்து) 14 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று இருக்கிறார். ஆனால் நடாலோ ஒரே கிராண்ட்ஸ்லாம் சாம்பியன்ஷிப் போட்டியிலேயே அவரை விட இன்னும் ஒன்று தான் பின்தங்கி உள்ளார். உண்மையிலேயே இது நம்ப முடியாத ஒன்று. நடாலின் சாதனையை யாராலும் நெருங்க கூட முடியாது. நடாலும், ஜோகோவிச்சும் தொடர்ந்து உடல்தகுதியுடன் இருந்து ஒரே வயதில் ஓய்வு பெற்றால் அதிக கிராண்ட்ஸ்லாம் வெல்வதில் அவர்களிடையே தான் போட்டி இருக்கும்’ என்றார்.

    சர்வதேச களத்தில் 34 வயதான நடாலுக்கு போட்டியாக உள்ள 39 வயதான பெடரர் 20 கிராண்ட்ஸ்லாமும், 33 வயதான ஜோகோவிச் 17 கிராண்ட்ஸ்லாமும் கைப்பற்றி உள்ளனர். அதே சமயம் இவர்கள் பிரெஞ்ச் ஓபனை ஒரே ஒரு முறை மட்டுமே வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
    ×