என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் : முதல் சுற்றில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் வெற்றி
Byமாலை மலர்14 Oct 2020 8:07 PM GMT (Updated: 14 Oct 2020 8:07 PM GMT)
டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த், இங்கிலாந்து வீரர் டாபி பென்டியை விரட்டியடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார்
ஒடென்ஸ்:
மொத்தம் ரூ.5 கோடி பரிசுத்தொகைக்கான டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டி அங்குள்ள ஒடென்ஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 14-வது இடத்தில் உள்ளவரும், முன்னாள் சாம்பியனுமான இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 21-12, 21-18 என்ற நேர்செட்டில் 52-வது இடத்தில் இருக்கும் இங்கிலாந்து வீரர் டாபி பென்டியை விரட்டியடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
இந்த வெற்றியை பெற அவருக்கு 37 நிமிடமே தேவைப்பட்டது. மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் அஜய் ஜெயராம் 12-21, 14-21 என்ற நேர்செட்டில் டென்மார்க் வீரர் ஆன்டர்ஸ் ஆன்டென்சனிடம் தோல்வி கண்டு வெளியேறினார். இதேபோல் இந்திய வீரரான சுபாங்கர் தேவ் 13-21, 8-21 என்ற நேர்செட்டில் கனடா வீரர் ஜாசன் அந்தோணியிடம் வீழ்ந்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X