search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தவான், ஷ்ரேயாஸ் அய்யர்
    X
    தவான், ஷ்ரேயாஸ் அய்யர்

    ராஜஸ்தான் ராயல்ஸ்-க்கு 162 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது டெல்லி கேப்பிட்டல்ஸ்

    ஷிகர் தவான் மற்றும் ஷ்ரேயாஸ் அய்யர் அரைசதம் அடிக்க ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 162 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது டெல்லி கேப்பிட்டல்ஸ்.
    துபாயில் நடைபெற இருக்கும் ஐபிஎல் 30-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார்.

    அதன்படி பிரித்வி ஷா, ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை ஆர்சர் வீசினார். முதல் பந்தில் பிரித்வி ஷா க்ளீன் போல்டானார்.

    அடுத்து வந்த ரகானே 2 ரன்னில் ஏமாற்றம் அளித்தார். 3-வது விக்கெட்டுக்கு தவான் உடன் ஷ்ரேயாஸ் அய்யர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குறிப்பாக தவான் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 33 பந்தில் 57 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்.

    ஷ்ரேயாஸ் அய்யர் 53 ரன்கள் எடுத்து வெளியேறினார். இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 85 ரன்கள் குவித்தது. மார்கஸ் ஸ்டாய்னிஸ் 18 ரன்களும், அலேக்ஸ் கேரி 14 ரன்களும் அடிக்க டெல்லி கேப்பிட்டல்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் அடித்துள்ளது.

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பில் ஆர்சர் 4 ஓவரில் 19 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார்.
    Next Story
    ×