என் மலர்
விளையாட்டு

துபாய்:
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) டெஸ்ட் வீரர்களின் தர வரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.
பேட்ஸ்மேன்களில் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ்சுமித் 911 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார்.
இந்திய அணி கேப்டன் விராட்கோலியும், நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சனும் இணைந்து 2-வது இடத்தில் உள்ளனர். இருவரும் தலா 886 புள்ளிகள் பெற்றுள்ளனர். அவர்களுக்கும் முதல் இடத்தில் இருக்கும் சுமித்துக்கும் இடையே 25 புள்ளிகள் வித்தியாசம் இருக்கிறது.
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்டில் இரட்டை சதம் அடித்ததன் மூலம் வில்லியம்சன் தர வரிசையில் முன்னேறி கோலியுடன் இணைந்து 2-வது இடத்தை பிடித்தார். லபுசேன் (ஆஸ்திரேலியா) 827 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும், பாபர் ஆசம் (பாகிஸ்தான்) 797 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும் உள்ளனர்.
பந்துவீச்சு தரவரிசையில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த கம்மின்ஸ் 904 புள்ளிகளுடன் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளார். நியூசிலாந்தை சேர்ந்த நீல்வாக்னர் 849 புள்ளிகளுடன் 2-வது இடத்தை பிடித்து முன்னேறி உள்ளார்.
ஸ்டூவர்ட்பிராட் (இங்கிலாந்து) 845 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், சவுத்தி (நியூசிலாந்து) 817 என்ற புள்ளிகளுடன் 4-வது இடத்திலும், ரபடா (தென் ஆப்பிரிக்கா) 802 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும் உள்ளனர்.
இதில் ஸ்டூவர்ட்பிராட் தரவரிசையில் பின்தங்கியும், ரபடா முன்னேற்றம் அடைந்தும் காணப்பட்டனர்.
சிட்னி:
தமிழகத்தை சேர்ந்த முன்னணி வேகப்பந்து வீரர் டி.நடராஜன். ஐ.பி.எல். போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடிய அவர் தனது சிறப்பான பந்துவீச்சின் மூலம் பிரபலம் ஆனார்.
ஐ.பி.எல். போட்டியில் நடராஜன் 16 விக்கெட்டுகளை கைப்பற்றினார். கடைசி கட்டத்தில் (டெத் பவுலிங்) சிறப்பாக பந்து வீசக்கூடிய திறமை வாய்ந்த பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்றார். தனது யார்க்கர் பந்துவீச்சு மூலம் பேட்ஸ்மேன்களை திணறடித்தார்.
தென்ஆப்பிரிக்காவின் அதிரடி பேட்ஸ்மேன் டிவில்லியர்ஸ் அவரது பந்தில் திணறியதை நாம் பார்த்தோம். ஐ.பி.எல். போட்டியில் அபாரமாக பந்து வீசியதால் ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் நடராஜனுக்கு வாய்ப்பு கிடைத்தது. தனது முதல் சர்வதேச போட்டியிலேயே அவர் 2 விக்கெட் கைப்பற்றி முத்திரை பதித்தார்.
இதேபோல 20 ஓவர் போட்டியில் முதல் 2 ஆட்டத்திலும் அவர் சிறப்பாக பந்துவீசினார். முதல் போட்டியில் 3 விக்கெட்டும், 2-வது ஆட்டத்தில் 2 விக்கெட்டும் வீழ்த்தினார். அதோடு ரன்களை விட்டுக்கொடுக்காமல் மிக நேர்த்தியாக பந்துவீசினார். 2-வது போட்டியில் சிறப்பாக பந்து வீசிய நடராஜன் தான் ஆட்டநாயகன் விருதுக்கு தகுதியானவர் என்று அதிரடியாக விளையாடிய ஹர்த்திக் பாண்ட்யா பெருமிதத்துடன் பாராட்டினார்.

20 ஓவர் தொடரை கைப்பற்றியது தொடர்பாக நடராஜன் கூறும்போது, ‘இந்தியாவுக்காக பங்கேற்ற முதல் தொடரை வென்றதை என்னால் மறக்க முடியாது. இது என்றுமே சிறப்பானது’ என்றார்.
இந்தநிலையில் நடராஜனின் பந்து வீச்சை ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீரர் பாராட்டி உள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-
நடராஜனின் பந்து வீசும் விதம் என்னை மிகவும் கவர்ந்துள்ளது. இந்த தொடரின் மூலம் இந்திய அணியில் தனக்கென ஒரு இடத்தை நிச்சயம் அவர் நிரப்புவார். அவரது சிறப்பான ஆட்டம் தொடரும்.
ஆஸ்திரேலிய பயணத்தில் இந்தியாவின் புதியகண்டு பிடிப்பு நடராஜன் ஆவார்.
இவ்வாறு அவர் கூறினார்.
2015-16-ம் ஆண்டு ஆஸ்திரேலிய பயணத்தில் பும்ராவும். 2018-19-ம் ஆண்டு ஆஸ்திரேலிய பயணத்தில் மயங்க் அகர்வாலும் புதிதாக சாதித்தார்கள். அந்த வரிசையில் தற்போதைய பயணத்தில் நடராஜனும் இருப்பதாக கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
சிட்னி:
விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகள் இடையேயான 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் இந்தியா முதல் 2 ஆட்டத்தில் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியது.
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி சிட்னியில் இன்று பிற்பகல் நடக்கிறது.
ஆஸ்திரேலியாவில் இந்திய அணி தற்போது தொடர்ந்து 3 ஆட்டங்களில் வெற்றிபெற்றுள்ளது. கடைசி ஒருநாள் போட்டியிலும் இரண்டு 20 ஓவர் ஆட்டத்திலும் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. இதனால் அந்த அணியை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளும்.
இந்திய அணி ஆஸ்திரேலியாவை மீண்டும் வீழ்த்தி 3-0 என்ற கணக்கில் ஒயிட் வாஷ் செய்யும் ஆர்வத்தில் உள்ளது. அதற்கு ஏற்ற வகையில் இந்திய வீரர்கள் தொடர்ந்து திறமையை வெளிப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீரரான ஜஸ்பிரித் பும்ரா 20 ஓவர் போட்டியில் விளையாடவில்லை. இதனால் இன்றைய கடைசி ஆட்டத்தில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில் அவர் சிறப்பாக பந்து வீசி 2 விக்கெட்டை வீழ்த்தி இருந்தார்.
பும்ராவுக்கு வாய்ப்பு கிடைத்தால் தீபக்சாஹர் அல்லது ஷர்துல் தாகூர் நீக்கப்படலாம். இதேபோல மனீஷ்பாண்டேவுக்கு வாய்ப்பு கிடைத்தால் சஞ்சு சாம்சன் கழற்றிவிடப்படலாம்.
மனீஷ்பாண்டே முதல் 20 ஓவர் போட்டியில் சரியாக ஆடவில்லை. அவரது இடத்தில் இடம்பெற்ற ஸ்ரேயாஷ் அய்யர் 2-வது போட்டியில் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டார். அதேநேரத்தில் சஞ்சு சாம்சன் நல்ல நிலையில் இருப்பதால் அவர் நீக்கப்படுவதற்கான வாய்ப்பு குறைவே.
சொந்த மண்ணில் 20 ஓவர் தொடரை இழந்ததால் ஆஸ்திரேலிய அணி அதிர்ச்சியில் உள்ளது. அந்த அணி இந்தியாவை வீழ்த்தி ஆறுதல் வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. இதற்காக ஆஸ்திரேலிய வீரர்கள் கடுமையாக போராடுவார்கள்.
2003-ம் ஆண்டு பாரீஸ்சில் நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை அஞ்சு பாபி ஜார்ஜ் நீளம் தாண்டுதலில் வெண்கலப்பதக்கம் வென்று சரித்திரம் படைத்தார். உலக தடகளத்தில் பதக்கம் வென்ற ஒரே இந்திய வீராங்கனையான அஞ்சு 2004-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் 6-வது இடம் பிடித்தார்.






