என் மலர்tooltip icon

    விளையாட்டு

    பயிற்சி ஆட்டத்தின் 2-வது இன்னிங்சில் இந்திய பேட்ஸ்மேன்கள் சொதப்ப, சகா மட்டும் தாக்குப்பிடித்து அரைசதம் அடிக்க, போட்டி டிரா ஆனது.
    இந்தியா - ஆஸ்திரேலியா ஏ அணிகளுக்கு இடையிலான மூன்று நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டம் சிட்னி மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இந்தியா ரகானோ (117 நாட்அவுட்), புஜாரா (54) ஆகியேரின் சிறப்பான ஆட்டத்தால் 9 விக்கெட் இழப்பிற்கு 247 ரன்கள் எடுத்திருந்த நிலையில் முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.

    பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா ஏ அணி 8 விக்கெட் இழப்பிற்கு 286 ரன்கள் எடுத்திருந்தது. இன்று 3-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது. கேமரூன் கிரீன் 125 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்க ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸை 9 விக்கெட் இழப்பிற்கு 306 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது.

    பின்னர் இந்தியா 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்தது. இந்திய பேட்ஸ்மேன்கள் வரிசையாக ஆட்டமிழந்து வெளியேறினார். சகா மட்டும் தாக்குப்பிடித்து 54 ரன்கள் அடிக்க, இந்தியா 189 ரன்னில் சுருண்டது.

    பின்னர் 131 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா ஏ களம் இறங்கியது அந்த அணி 1 விக்கெட் இழப்பிற்கு 52 ரன்கள் எடுத்திருக்கும்போது 3-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதனால் போட்டி டிராவில் முடிந்தது.
    மேத்யூ வடே, மேக்ஸ்வெல் அரைசதம் அடிக்க இந்தியாவுக்கு 187 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலியா.
    இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பந்து வீச்சு தேர்வு செய்தார். ஆஸ்திரேலிய அணியில் ஆரோன் பிஞ்ச் இடம் பிடித்தார்.

    ஆரோன் பிஞ்ச், மேத்யூ வடே ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். கடந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய மேத்யூ வடே இந்த போட்டியிலும் அதிரடியாக விளையாடி ரன்கள் விளாசினார்.

    2-வது ஓவரை வாஷிங்டன் சுந்தர் வீசினார். 4-வது பந்தில் ஆரோன் பிஞ்ச் ரன்ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அடுத்து ஸ்மித் களம் இறங்கினார்.

    மேத்யூ வடே- ஸ்மித் ஜோடி சிறப்பாக விளையாடியது. ஆஸ்திரேலியா 6 ஓவரில் 51 ரன்கள் அடித்தது, 10-வது ஓவரை வாஷிங்டன் சுந்தர் வீசினார். இந்த ஓவரில் ஸ்மித் 24 ரன்கள் எடுத்த நிலையில் க்ளீன் போல்டானர். அப்போது ஆஸ்திரேலியா 9.4 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 79 ரன்கள் அடித்தது.

    3-வது விக்கெட்டுக்கு மேத்யூ வடே உடன் அதிரடி பேட்ஸ்மேன் மேக்ஸ்வெல் ஜோடி சேர்ந்தார். மேத்யூ வடே 34 பந்தில் அரைசதம் அடித்தார். ஆஸ்திரேலியா 11.5 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது. இருவரும் ஆட்டமிழக்காமல் விளையாட ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. 16.5 ஓவரில் 150 ரன்னைக் கடந்தது. மேக்ஸ்வெல் 31 பந்தில் அரைசதம் அடித்தார்.

    19-வது ஓவரை ஷர்துல் தாகூர் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் மேத்யூ வடே ஆட்டமிழந்தார். அவர் 53 பந்தில் 7 பவுண்டரி, 2 சிக்சருடன் 80 ரன்கள் விளாசினார். அப்போது ஆஸ்திரேலியா 69 ரன்கள் எடுத்திருந்தது. 19-வது ஓவரில் ஷர்துல் தாகூர் 7 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

    வாஷிங்டன் சுந்தர்

    கடைசி ஓவரை டி நடராஜன் வீசினார். முதல் பந்தில் மேக்ஸ்வெல் க்ளீன் போல்டானார். அவர் 3 பவுண்டரி, 3 சிக்சருடன் 54 ரன்கள் அடித்தார். இந்த ஓவரில் நடராஜன் 11 ரன்கள் விட்டுக்கொடுத்த ஆஸ்திரேலியா 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் குவித்துள்ளது.

    தீபக் சாஹர் 34 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் (2 விக்கெட்) 34 ரன்களும், டி நடராஜன் (1 விக்கெட்) 33 ரன்களும், சாஹல் 41 ரன்களும், ஷர்துல் தாகூர் (1) 43 ரன்களும் விட்டுக்கொடுத்தனர்.
    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்தியா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
    சிட்னி:

    விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. 

    3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் இந்தியா முதல் 2 ஆட்டத்தில் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியது.

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி சிட்னியில் இன்று பிற்பகல் 1.40 மணிக்கு நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான டாஸ் தற்போது சுண்டப்பட்டது. 

    அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

    இந்திய அணி விவரம்:- 

    ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், விராட் கோலி (கேப்டன்), சஞ்சு சாம்சன், ஸ்ரேயாஸ் அய்யர், ஹர்திக் பாண்ட்யா, யுஸ்வேந்திர சாஹல், வாஷிங்டன் சுந்தர், சர்துல் தாகூர், தீபக் சாஹர், டி.நடராஜன்.

    ஆஸ்திரேலியா அணி விவரம்: 

    ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), மேத்யூ வேட் , டார்சி ஷார்ட், ஸ்டீவன் சுமித், மேக்ஸ்வெல், ஹென்ரிக்ஸ், டெனியல் சாம்ஸ், சீன் அப்போட், மிட்செல் ஸ்வப்சன், அண்டுரூ டை , ஆடம் ஜம்பா
    வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்டில் இரட்டை சதம் அடித்ததன் மூலம் வில்லியம்சன் தர வரிசையில் முன்னேறி கோலியுடன் இணைந்து 2-வது இடத்தை பிடித்துள்ளார்.

    துபாய்:

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) டெஸ்ட் வீரர்களின் தர வரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

    பேட்ஸ்மேன்களில் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ்சுமித் 911 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார்.

    இந்திய அணி கேப்டன் விராட்கோலியும், நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சனும் இணைந்து 2-வது இடத்தில் உள்ளனர். இருவரும் தலா 886 புள்ளிகள் பெற்றுள்ளனர். அவர்களுக்கும் முதல் இடத்தில் இருக்கும் சுமித்துக்கும் இடையே 25 புள்ளிகள் வித்தியாசம் இருக்கிறது.

    வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்டில் இரட்டை சதம் அடித்ததன் மூலம் வில்லியம்சன் தர வரிசையில் முன்னேறி கோலியுடன் இணைந்து 2-வது இடத்தை பிடித்தார். லபுசேன் (ஆஸ்திரேலியா) 827 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும், பாபர் ஆசம் (பாகிஸ்தான்) 797 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும் உள்ளனர்.

    பந்துவீச்சு தரவரிசையில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த கம்மின்ஸ் 904 புள்ளிகளுடன் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளார். நியூசிலாந்தை சேர்ந்த நீல்வாக்னர் 849 புள்ளிகளுடன் 2-வது இடத்தை பிடித்து முன்னேறி உள்ளார்.

    ஸ்டூவர்ட்பிராட் (இங்கிலாந்து) 845 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், சவுத்தி (நியூசிலாந்து) 817 என்ற புள்ளிகளுடன் 4-வது இடத்திலும், ரபடா (தென் ஆப்பிரிக்கா) 802 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும் உள்ளனர்.

    இதில் ஸ்டூவர்ட்பிராட் தரவரிசையில் பின்தங்கியும், ரபடா முன்னேற்றம் அடைந்தும் காணப்பட்டனர்.

    நடராஜன் பந்து வீச்சு என்னை மிகவும் கவர்ந்து விட்டதாக ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பாராட்டி உள்ளார்.

    சிட்னி:

    தமிழகத்தை சேர்ந்த முன்னணி வேகப்பந்து வீரர் டி.நடராஜன். ஐ.பி.எல். போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடிய அவர் தனது சிறப்பான பந்துவீச்சின் மூலம் பிரபலம் ஆனார்.

    ஐ.பி.எல். போட்டியில் நடராஜன் 16 விக்கெட்டுகளை கைப்பற்றினார். கடைசி கட்டத்தில் (டெத் பவுலிங்) சிறப்பாக பந்து வீசக்கூடிய திறமை வாய்ந்த பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்றார். தனது யார்க்கர் பந்துவீச்சு மூலம் பேட்ஸ்மேன்களை திணறடித்தார்.

    தென்ஆப்பிரிக்காவின் அதிரடி பேட்ஸ்மேன் டிவில்லியர்ஸ் அவரது பந்தில் திணறியதை நாம் பார்த்தோம். ஐ.பி.எல். போட்டியில் அபாரமாக பந்து வீசியதால் ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் நடராஜனுக்கு வாய்ப்பு கிடைத்தது. தனது முதல் சர்வதேச போட்டியிலேயே அவர் 2 விக்கெட் கைப்பற்றி முத்திரை பதித்தார்.

    இதேபோல 20 ஓவர் போட்டியில் முதல் 2 ஆட்டத்திலும் அவர் சிறப்பாக பந்துவீசினார். முதல் போட்டியில் 3 விக்கெட்டும், 2-வது ஆட்டத்தில் 2 விக்கெட்டும் வீழ்த்தினார். அதோடு ரன்களை விட்டுக்கொடுக்காமல் மிக நேர்த்தியாக பந்துவீசினார். 2-வது போட்டியில் சிறப்பாக பந்து வீசிய நடராஜன் தான் ஆட்டநாயகன் விருதுக்கு தகுதியானவர் என்று அதிரடியாக விளையாடிய ஹர்த்திக் பாண்ட்யா பெருமிதத்துடன் பாராட்டினார்.

    நடராஜன் - மெக்ராத்

    20 ஓவர் தொடரை கைப்பற்றியது தொடர்பாக நடராஜன் கூறும்போது, ‘இந்தியாவுக்காக பங்கேற்ற முதல் தொடரை வென்றதை என்னால் மறக்க முடியாது. இது என்றுமே சிறப்பானது’ என்றார்.

    இந்தநிலையில் நடராஜனின் பந்து வீச்சை ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீரர் பாராட்டி உள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    நடராஜனின் பந்து வீசும் விதம் என்னை மிகவும் கவர்ந்துள்ளது. இந்த தொடரின் மூலம் இந்திய அணியில் தனக்கென ஒரு இடத்தை நிச்சயம் அவர் நிரப்புவார். அவரது சிறப்பான ஆட்டம் தொடரும்.

    ஆஸ்திரேலிய பயணத்தில் இந்தியாவின் புதியகண்டு பிடிப்பு நடராஜன் ஆவார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    2015-16-ம் ஆண்டு ஆஸ்திரேலிய பயணத்தில் பும்ராவும். 2018-19-ம் ஆண்டு ஆஸ்திரேலிய பயணத்தில் மயங்க் அகர்வாலும் புதிதாக சாதித்தார்கள். அந்த வரிசையில் தற்போதைய பயணத்தில் நடராஜனும் இருப்பதாக கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இன்றைய கடைசி 20 ஓவர் ஆட்டத்தில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சிட்னி:

    விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் இந்தியா முதல் 2 ஆட்டத்தில் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியது.

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி சிட்னியில் இன்று பிற்பகல் நடக்கிறது.

    ஆஸ்திரேலியாவில் இந்திய அணி தற்போது தொடர்ந்து 3 ஆட்டங்களில் வெற்றிபெற்றுள்ளது. கடைசி ஒருநாள் போட்டியிலும் இரண்டு 20 ஓவர் ஆட்டத்திலும் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. இதனால் அந்த அணியை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளும்.

    இந்திய அணி ஆஸ்திரேலியாவை மீண்டும் வீழ்த்தி 3-0 என்ற கணக்கில் ஒயிட் வாஷ் செய்யும் ஆர்வத்தில் உள்ளது. அதற்கு ஏற்ற வகையில் இந்திய வீரர்கள் தொடர்ந்து திறமையை வெளிப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீரரான ஜஸ்பிரித் பும்ரா 20 ஓவர் போட்டியில் விளையாடவில்லை. இதனால் இன்றைய கடைசி ஆட்டத்தில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில் அவர் சிறப்பாக பந்து வீசி 2 விக்கெட்டை வீழ்த்தி இருந்தார்.

    பும்ராவுக்கு வாய்ப்பு கிடைத்தால் தீபக்சாஹர் அல்லது ‌ஷர்துல் தாகூர் நீக்கப்படலாம். இதேபோல மனீஷ்பாண்டேவுக்கு வாய்ப்பு கிடைத்தால் சஞ்சு சாம்சன் கழற்றிவிடப்படலாம்.

    மனீஷ்பாண்டே முதல் 20 ஓவர் போட்டியில் சரியாக ஆடவில்லை. அவரது இடத்தில் இடம்பெற்ற ஸ்ரேயாஷ் அய்யர் 2-வது போட்டியில் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டார். அதேநேரத்தில் சஞ்சு சாம்சன் நல்ல நிலையில் இருப்பதால் அவர் நீக்கப்படுவதற்கான வாய்ப்பு குறைவே.

    சொந்த மண்ணில் 20 ஓவர் தொடரை இழந்ததால் ஆஸ்திரேலிய அணி அதிர்ச்சியில் உள்ளது. அந்த அணி இந்தியாவை வீழ்த்தி ஆறுதல் வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. இதற்காக ஆஸ்திரேலிய வீரர்கள் கடுமையாக போராடுவார்கள்.

    பாரீஸ் நகரில் 2024-ம் ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில் பிரேக்டேன்சிங் நடனம் முதன்முறையாக ஒரு போட்டியாக சேர்க்கப்படுகிறது.
    லாசேன்:

    ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற திட்டமிடப்பட்டு இருந்தன.  இதற்காக வீரர்கள் தயாரான நிலையில் கொரோனா தொற்றால் வரும் 2021ம் ஆண்டு ஜூலை 23-ம் தேதிக்கு ஒலிம்பிக் போட்டிகள் ஒத்தி வைக்கப்படுகின்றன என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பாக் கூறினார்.

    இதற்கடுத்து, பாரீஸ் நகரில் வரும் 2024-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடத்த முடிவாகி உள்ளது. இதில், முதல் முறையாக நடனம் மற்றும் விளையாட்டு ஆகியவற்றை உள்ளடக்கிய பிரேக்டேன்சிங் ஒரு போட்டியாக சேர்க்கப்பட உள்ளது.

    இதற்காக பிரேக்டேன்சிங்கில் சிறந்து விளங்கும் போட்டியாளர்களில் 16 ஆண்கள் மற்றும் 16 பெண்கள் கலந்து கொள்வார்கள். இதனால் ஒலிம்பிக் போட்டியை காண அதிக அளவில் இளைஞர்கள் ஆர்வத்துடன் வருவார்கள் என நம்பிக்கை தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    அடுத்த ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில் ஸ்கேட்போர்டிங், ஸ்போர்ட் கிளைம்பிங் மற்றும் சர்பிங் ஆகிய போட்டிகளும் முதன்முறையாக நடத்தப்படும். இதனை தொடர்ந்து பாரீஸ் ஒலிம்பிக்கிலும் இந்த போட்டிகள் தொடரும் என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி செயல் வாரியம் அறிவித்துள்ளது.
    இந்திய கேப்டன் விராட் கோலி ஆஸ்திரேலிய மண்ணில் 3 வடிவிலான போட்டியிலும் தொடரை வென்று சாதனை படைத்துள்ளார்.
    சிட்னி:

    சிட்னியில் நேற்று முன்தினம் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது 20 ஓவர் போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் தனதாக்கியது. 

    இதன்மூலம் ஆஸ்திரேலிய மண்ணில் 3 வடிவிலான போட்டியிலும் (டெஸ்ட், ஒருநாள், 20 ஓவர்) தொடரை கைப்பற்றிய முதல் இந்திய கேப்டன் என்ற சாதனையை விராட் கோலி படைத்தார்.

    இதற்கு முன்பு, 2018-19-ம் ஆண்டில் விராட் கோலி தலைமையில் இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரை 2-1 என்ற கணக்கிலும், 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரை 2-1 என்ற கணக்கிலும் வென்று இருந்தது. 

    ஒட்டுமொத்தத்தில் இந்த சாதனையை படைத்த 2-வது கேப்டன் விராட் கோலி ஆவார். ஏற்கனவே பாப் டு பிளிசிஸ் தலைமையில் தென்ஆப்பிரிக்க அணி இத்தகைய சாதனையை ஆஸ்திரேலிய மண்ணில் படைத்துள்ளது.
    ஒற்றை சிறுநீரகத்துடன் உலகில் உயர்ந்த நிலையை எட்டிய ஒரு சில அதிர்ஷ்டசாலிகளில் நானும் ஒருவர் என உலக தடகளத்தில் பதக்கம் வென்ற அஞ்சு கூறியுள்ளார்
    கொச்சி:

    2003-ம் ஆண்டு பாரீஸ்சில் நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை அஞ்சு பாபி ஜார்ஜ் நீளம் தாண்டுதலில் வெண்கலப்பதக்கம் வென்று சரித்திரம் படைத்தார். உலக தடகளத்தில் பதக்கம் வென்ற ஒரே இந்திய வீராங்கனையான அஞ்சு 2004-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் 6-வது இடம் பிடித்தார்.

    ஆசிய மற்றும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்று இருக்கும் 43 வயதான அஞ்சு ஒற்றை சிறுநீரகத்துடன் (கிட்னி) இந்த சாதனையை படைத்துள்ளார் என்ற அதிர்ச்சிகரமான தகவலை நேற்று வெளியிட்டு இருக்கிறார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில், ‘நம்பினால் நம்புங்கள், ஒற்றை சிறுநீரகத்துடன் உலகில் உயர்ந்த நிலையை எட்டிய ஒரு சில அதிர்ஷ்டசாலிகளில் நானும் ஒருவர்.

    வலி நிவாரணி மருந்து கூட எனக்கு ஒத்துக்கொள்ளாது. இந்த தடைகளை எல்லாம் தாண்டி தான் தடகள போட்டியில் பங்கேற்றேன். எனது சாதனையை என்னுடைய பயிற்சியாளரின் மேஜிக் என்பதா? அல்லது திறமை என்று சொல்வதா?’ என்று குறிப்பிட்டுள்ளார். அஞ்சுவுக்கு அவரது கணவர் ராபர்ட் பாபி ஜார்ஜ் பயிற்சியாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    இந்தியாவுக்கு எதிராக தொடரை இழந்த போதிலும், கடைசி டி20 போட்டியில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என்று மார்கஸ் ஸ்டோய்னிஸ் தெரிவித்துள்ளார்.
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. கான்பெர்ராவில் நடைபெற்ற முதல் போட்டியிலும், சிட்னியில் நடைபெற்ற 2-வது போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

    சொந்த மண்ணிலேயே தோல்வியை சந்தித்ததால் ஆஸ்திரேலியா நெருக்கடியில் உள்ளது. இந்த நிலையில் நாளை 3-வது மற்றும் கடைசி போட்டி நடக்கிறது. தொடரை இழந்தாலும் கடைசி போட்டியில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என்று ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் மார்கஸ் ஸ்டோய்னிஸ் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மார்கஸ் ஸ்டோய்னிஸ் கூறுகையில் ‘‘ஒவ்வொரு போட்டியும் ஆஸ்திரேலியாவுக்கு முக்கியமானது. தொடரை இழந்தாலும், ஜெயித்தாலும் அதில் இருந்து திரும்புவதற்கு மிகவும் கடினம். எல்லாவற்றையும் கொடுக்க முடியாது.

    இந்திய அணிக்கும், ஆஸ்திரேலியாவுக்கும் இடையில் மிகப்பெரிய அளவில் வித்தியாசம் இல்லை. விளையாட்டின் சிறிய பகுதிகள் எந்த வழியிலும் செல்லாம். பவர்பிளேயில் கூடுதலாக விக்கெட் வீழ்த்த வேண்டும். எங்களுடைய பேட்டிங் சிறப்பாக இருப்பதாக நினைக்கிறேன். அதில் தவறு இல்லை. மைதானத்தில் பாதி வாய்ப்புகளை பெற வேண்டும். அது போட்டியை மாற்றும்’’ என்றார்.
    தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து வீரர்கள், ஓட்டல் ஸ்டாஃப் என கொரோனா தொற்று அதிகரித்ததால் இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
    இங்கிலாந்து அணி 3 டி20, 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக தென்ஆப்பிரிக்கா சென்றுள்ளது. டி20 தொடரில் முதலில் நடைபெற்றது. இந்தத் தொடரை இங்கிலாந்து 3-0 எனக் கைப்பற்றியது.

    அதன்பின் கடந்த 4-ந்தேதியில் இருந்து வரும் 9-ந்தேதி வரை மூன்று ஒருநாள் போட்டிகள் நடைபெறும் வகையில் போட்டி அட்டவணை தயாரிக்கப்பட்டிருந்தது.

    4-ந்தேதி போட்டிக்கு தயாராகுவதற்கு முன் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் 4-ந்தேதி நடைபெற இருந்த போட்டி இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

    2-வது போட்டி நேற்று நடைபெற இருந்தது. ஓட்டல் ஸ்டாஃப்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் நேற்றைய போட்டி ரத்து செய்யப்பட்டது.

    இந்த நிலையில் நாளை மறுநாள் 3-வது போட்டி நடைபெற இருந்தது. மேலும் ஒரு வீரருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த சிக்கலில் போட்டியை நடத்தினால் வீரர்கள் மனதளவில் பாதிக்க வாய்ப்புள்ளதால், இரு நாட்டு கிரிக்கெட் போர்டுகளும் பேச்சுவார்த்தை நடத்தி தொடர ஒத்திவைக்க முடிவு  செய்தது.

    இதனால் தென்ஆப்பிரிக்கா - இங்கிலாந்து இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
    பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் கேப்டன் பதவியை இழந்த ஸ்டீவ் ஸ்மித்திடம், கேப்டன் பதவியை மீண்டும் வழங்கினால் சிறப்பாக செயல்படுவார் என மேத்யூ வடே தெரிவித்துள்ளார்.
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடைபெற்றது. காயம் காரணமாக ஆரோன் பிஞ்ச் விளையாடவில்லை. இதனால் மேத்யூ வடே பகுதி நேர கேப்டனாக பணியாற்றினார்.

    2018-ம் ஆண்டு ஆஸ்திரேலியா அணி தென்ஆப்பிரிக்கா சென்றபோது பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கியது. இதனால் ஸ்டீவ் ஸ்மித் கேப்டன் பதவியை இழந்தார். ஒரு வருடம் தடைக்காலமும், அதன்பின் ஒருவருடம் கேப்டன் பதவிக்கும் தடைவிதித்தது ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டு.

    இதனால் ஸ்டீவ் ஸ்மித் கேப்டன் பதவியை வகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மீண்டும் ஸ்மித்திடம் கேப்டன் பதவியை வழங்கினால் சிறப்பாக செயல்படுவார் என்று மேத்யூ வடே தெரிவித்துள்ளார்.

    ஸ்டீவ் ஸ்மித் குறித்து மேத்யூ வடே கூறுகையில் ‘‘நாம் ஏராளமான சிறந்த கேப்டன்களை பெற்றுள்ளோம். கேப்டன் பொறுப்பு என்னிடம் தரப்பட்டது, ஆனால் நாம் ஸ்மித், ஹென்ரிக்ஸ் ஆகியோரை பெற்றுள்ளோம். இவர்கள் பிக் பாஷ் லீக்கில் கேப்டனாக இருந்தவர்கள். ஏராளமான அனுபவங்கள் கொண்ட வீரர்கள் உள்ளனர். சீனியர் வீரர்களிடையே ஆலோசனைகள் நடைபெறும். அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்றுகிறோம்.

    கேப்டன் வேலை என்னுடையது கிடையாது. பிஞ்ச் எங்களுடைய கேப்டன். அவர் சிறப்பாக விளையாடும்போது நாங்கள் ஒருங்கிணைந்து செயல்படுவோம். ஸ்மித் கேப்டனாக வேண்டும் என கருத்துகள் உள்ளன. அவர் நீண்ட காலமாக கேப்டனாக இருந்துள்ளார். மீண்டும் வாய்ப்பை பெற்றால், சிறப்பாக செயல்படுவார்’’ என்றார்.
    ×