என் மலர்
விளையாட்டு
7-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி கோவாவில் நடந்து வருகிறது. இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் 51-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் எப்.சி. - நார்த்ஈஸ்ட் யுனைடெட் எப்.சி. அணிகள் மோதுகின்றன. ஐதராபாத் அணி 9 ஆட்டத்தில் 3 வெற்றி, 3 தோல்வி, 3 ‘டிரா’வுடன் 12 புள்ளிகள் பெற்று 6-வது இடத்தில் உள்ளது. அந்த அணி 4-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.
நார்த்ஈஸ்ட் யுனைடெட் அணி 9 ஆட்டத்தில் 2 வெற்றி, 2 தோல்வியை பெற்றுள்ளது. 5 ஆட்டம் ‘டிரா’வில் முடிந்தது. அந்த அணி 11 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் உள்ளது. ஐதராபாத் அணியில் அரிதானே சான்டனா (ஸ்பெயின்) 5 கோலும், ஹாலிக்சரன் நர்சரி (இந்தியா) 3 கோலும் அடித்து நட்சத்திர வீரர்களாக உள்ளார். நார்த் ஈஸ்ட் அணியில் குலேசி அப்பியா (இங்கிலாந்து) 3 கோல் அடித்துள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 15-ந் தேதி பிரிஸ்பேனில் தொடங்குகிறது. பிரிஸ்பேனில் கொரோனா வைரஸ் தடுப்பு விதிமுறைகள் கடுமையாக அமல்படுத்தப்பட்டு உள்ளன.
இந்திய அணி வீரர்கள், கொரோனா தடுப்பு நெறிமுறைகள் கடைப்பிடித்தால் மட்டுமே பிரிஸ்பேனுக்கு வரலாம். இல்லையென்றால் இங்கு வர வேண்டாம் என்று குயின்ஸ்லாந்து மாகாண அரசு தெரிவித்துள்ளது.
இதனால் இந்திய அணி பிரிஸ்பேனுக்கு சென்று விளையாட தயக்கம் காட்டுவதாக தெரிகிறது. இதற்கிடையே இந்திய கிரிக்கெட் வாரியம், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துக்கு எழுதிய கடித்தத்தில், பிரிஸ்பேனில் டெஸ்ட் போட்டி நடத்த வேண்டுமானால் கொரோனா தடுப்பு நடைமுறை கெடுபிடிகளை தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்து உள்ளது.
இந்த நிலையில் புதிதாக கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இன்று முதல் 3 நாட்களுக்கு பிரிஸ் பேனில் மேலும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக குயின்ஸ்லாந்து மாகாண அரசு அறிவித்துள்ளது.
அங்கு ஓட்டல் ஒன்றில் ஊழியர்களுக்கு புதிய வகை கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து குயின்ஸ்லாந்து மாகாண மந்திரி அனாஸ்டாசியா கூறியதாவது:-
இது நம்ப முடியாத அளவுக்கு தீவிரமானது. கிரேட்டர் பிரிஸ்பேன் பகுதியை ஒரு ஹாட்ஸ்பாட் என்று நாங்கள் அறிவிக்கிறோம்’ என்றார்.
தற்போது சிட்னியில் நடந்து வரும் 3-வது டெஸ்ட் முடிந்த பிறகு இரு அணிகளும் பிரிஸ்பேனுக்கு 12-ந் தேதி புறப்படும் வகையில் பயணம் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது.
ஆனால் தற்போது பிரிஸ்பேனில் கொரோனா வைரஸ் பரவல் இருப்பதாகவும், அங்கு இந்திய அணி செல்ல தயக்கம் காட்டுவதாகவும் பிரிஸ்பேனில் டெஸ்ட் போட்டி நடைபெறுமா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.
கொரோனா தடுப்பு நெறிமுறைகளை தளர்த்த வாய்ப்பில்லை. ஒருவேளை கடைசி டெஸ்ட் போட்டியை பிரிஸ்பேனில் நடத்த முடியாத பட்சத்தில் தற்போது 3-வது டெஸ்ட் நடக்கும் சிட்னியிலேயே நடத்தப்பட லாம் என்று கூறப்படுகிறது.
ஹீதர் நைட் தலைமையிலான இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணி வருகிற அக்டோபர் மாதத்தில் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. இங்கிலாந்து-பாகிஸ்தான் பெண்கள் அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி அக்டோபர் 14-ந் தேதியும், 2-வது 20 ஓவர் போட்டி 15-ந் தேதியும் நடக்கிறது.
முதலாவது ஒருநாள் போட்டி அக்டோபர் 18-ந் தேதியும், 2-வது ஆட்டம் 20-ந் தேதியும், 3-வது மற்றும் கடைசி போட்டி 22-ந் தேதியும் நடைபெறுகிறது. அனைத்து ஆட்டங்களும் கராச்சியில் உள்ள தேசிய ஸ்டேடியத்தில் அரங்கேறுகிறது. இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணி, பாகிஸ்தானில் பயணம் செய்து விளையாட இருப்பது இதுவே முதல்முறையாகும். இதே நேரத்தில் இங்கிலாந்து ஆண்கள் கிரிக்கெட் அணியும், பாகிஸ்தான் சென்று இரண்டு 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது.
இந்த போட்டிகள் பெண்கள் 20 ஓவர் போட்டி நடைபெறும் அக்டோபர் 14, 15 ஆகிய தேதிகளில் அதே மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இங்கிலாந்து ஆண்கள் கிரிக்கெட் அணி 2005-ம் ஆண்டுக்கு பிறகு முதல் தடவையாக பாகிஸ்தான் செல்ல இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி.(கவுகாத்தி)-ஐதராபாத் எப்.சி. அணிகள் சந்திக்கின்றன.

Very touching #siraj during national anthem 3rd Test match. 🙏👍 #TestCricket @imVkohli #INDvsAUSTestpic.twitter.com/6nMgYzYw25
— HP (@heman_12) January 6, 2021
Even if there's little or no crowd to cheer you on, no better motivation than playing for India. As a legend once said "You don't play for the crowd, you play for the country." 🇮🇳 #AUSvINDpic.twitter.com/qAwIyiUrSI
— Wasim Jaffer (@WasimJaffer14) January 7, 2021
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் அணியின் 3 நிலைக்கும் (டெஸ்ட், ஒருநாள் போட்டி, 20 ஓவர்) கேப்டனாக விராட் கோலி செயல்படுகிறார். உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனான அவர், விளம்பர வருமானம் மூலம் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கிறார்.
இந்தநிலையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) ஸ்பான்சர் நிறுவனத்தில் விராட் கோலி முதலீடு செய்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
பெங்களூரை தலைமை இடமாக கொண்டு கேலக்டஸ் பன்வேர் டெக்னாலஜி நிறுவனம் செயல்படுகிறது. ஆன்லைன் விளையாட்டு செயலியான மொபைல் பிரீமியர் லீக் இந்த நிறுவனத்துக்கு சொந்தமானது. இதில் விராட் கோலி, விளம்பர தூதராகவும் இருக்கிறார். மேலும் அந்த நிறுவனத்தில் முதலீடும் செய்துள்ளார்.
இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. விராட் கோலி 2019-ம் ஆண்டு பிப்ரவரியில் இருந்து அந்த நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கிறார். இந்த தகவல் தற்போதுதான் வெளியாகி இருக்கிறது.
இந்த விவகாரம் தொடர்பாக கிரிக்கெட் வாரியம் விராட் கோலியிடம் விளக்கம் கேட்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கராச்சி:
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. இரண்டு டெஸ்டிலும் தோற்று ஒயிட்வாஷ் ஆனது.
நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் மிகவும் மோசமாக விளையாடிய பாகிஸ்தான் வீரர்களை அந்நாட்டு முன்னாள் வேகப்பந்து வீரர் சோயிப் அக்தர் கடுமையாக சாடியுள்ளார்.இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எந்த மாதிரியான கொள்கையை வெளிப்படுத்துகிறதோ அதுபோன்ற கிரிக்கெட்டை தான் பார்க்க முடியும். பாகிஸ்தான் அணியில் சராசரியான வீரர்கள் தான் இருக்கிறார்கள்.
பாகிஸ்தான் வீரர்கள் பள்ளி மாணவர்கள் மாதிரி தான் விளையாடுகிறார்கள். பாகிஸ்தான் அணி எப்போது டெஸ்டில் விளையாடுகிறதோ அப்போது எல்லாம் அவர்களது சாயம் வெளுத்துவிடுகிறது. கிரிக்கெட் வாரியமும் பள்ளியில் விளையாடும் வீரர்களை போன்றவர்களை தான் அணியில் வைத்துள்ளது.
இனியாவது கிரிக்கெட்டின் முன்னேற்றம் குறித்து அவர்கள் சிந்திக்க வேண்டும். ஆனால் எப்போது மாறப்போகிறார்கள் என்று தெரியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
கொல்கத்தா:
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி. சி.ஐ.) தலைவரான சவுரவ் கங்குலிக்கு கடந்த 2-ந்தேதி லேசான மாரடைப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து கொல்கத்தாவில் உள்ள உட்லான்ஸ் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் இதயத்துக்கு செல்லும் ரத்தக்குழாயில் 3 அடைப்புகள் இருந்தது தெரியவந்தது.
இதில் ஒரு அடைப்பு ஆஞ்சியோ பிளாஸ்டி மூலம் நீக்கப்பட்டது. மற்ற அடைப்புகள் நீக்குவது குறித்து பின்னர் முடிவு செய்யப்படுகிறது. இதன் பிறகு கங்குலி நல்ல நிலையில் இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் மருத்துவமனையில் இருந்து கங்குலி இன்று டிஸ்சார்ஜ் ஆனார். ஆஸ்பத்திரியில் இருந்து வெளியே வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நான் மிகவும் நலமாக இருக்கிறேன். மருத்துவமனையில் எனக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், நர்சுகள் மற்றும் ஒவ்வொருவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
48 வயதான கங்குலி தனியார் வாகனத்தில் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு சென்றார். வீட்டில் அவர் தினசரி கண்காணிப்பில் இருப்பார் என்று அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.






