என் மலர்

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கொரோனாவால் கடும் கட்டுப்பாடுகள் - கடைசி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடக்குமா?

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பிரிஸ்பேனில் கொரோனா வைரஸ் பரவல் இருப்பதாகவும், அங்கு இந்திய அணி செல்ல தயக்கம் காட்டுவதாகவும் பிரிஸ்பேனில் டெஸ்ட் போட்டி நடைபெறுமா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.

    இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 15-ந் தேதி பிரிஸ்பேனில் தொடங்குகிறது. பிரிஸ்பேனில் கொரோனா வைரஸ் தடுப்பு விதிமுறைகள் கடுமையாக அமல்படுத்தப்பட்டு உள்ளன.

    இந்திய அணி வீரர்கள், கொரோனா தடுப்பு நெறிமுறைகள் கடைப்பிடித்தால் மட்டுமே பிரிஸ்பேனுக்கு வரலாம். இல்லையென்றால் இங்கு வர வேண்டாம் என்று குயின்ஸ்லாந்து மாகாண அரசு தெரிவித்துள்ளது.

    இதனால் இந்திய அணி பிரிஸ்பேனுக்கு சென்று விளையாட தயக்கம் காட்டுவதாக தெரிகிறது. இதற்கிடையே இந்திய கிரிக்கெட் வாரியம், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துக்கு எழுதிய கடித்தத்தில், பிரிஸ்பேனில் டெஸ்ட் போட்டி நடத்த வேண்டுமானால் கொரோனா தடுப்பு நடைமுறை கெடுபிடிகளை தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்து உள்ளது.

    இந்த நிலையில் புதிதாக கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இன்று முதல் 3 நாட்களுக்கு பிரிஸ் பேனில் மேலும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக குயின்ஸ்லாந்து மாகாண அரசு அறிவித்துள்ளது.

    அங்கு ஓட்டல் ஒன்றில் ஊழியர்களுக்கு புதிய வகை கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து குயின்ஸ்லாந்து மாகாண மந்திரி அனாஸ்டாசியா கூறியதாவது:-

    இது நம்ப முடியாத அளவுக்கு தீவிரமானது. கிரேட்டர் பிரிஸ்பேன் பகுதியை ஒரு ஹாட்ஸ்பாட் என்று நாங்கள் அறிவிக்கிறோம்’ என்றார்.

    தற்போது சிட்னியில் நடந்து வரும் 3-வது டெஸ்ட் முடிந்த பிறகு இரு அணிகளும் பிரிஸ்பேனுக்கு 12-ந் தேதி புறப்படும் வகையில் பயணம் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது.

    ஆனால் தற்போது பிரிஸ்பேனில் கொரோனா வைரஸ் பரவல் இருப்பதாகவும், அங்கு இந்திய அணி செல்ல தயக்கம் காட்டுவதாகவும் பிரிஸ்பேனில் டெஸ்ட் போட்டி நடைபெறுமா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.

    கொரோனா தடுப்பு நெறிமுறைகளை தளர்த்த வாய்ப்பில்லை. ஒருவேளை கடைசி டெஸ்ட் போட்டியை பிரிஸ்பேனில் நடத்த முடியாத பட்சத்தில் தற்போது 3-வது டெஸ்ட் நடக்கும் சிட்னியிலேயே நடத்தப்பட லாம் என்று கூறப்படுகிறது.

    Next Story
    ×