search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பந்தை பவுண்டரிக்கு விளாசும் ஸ்மித்
    X
    பந்தை பவுண்டரிக்கு விளாசும் ஸ்மித்

    131 ரன்கள் குவித்து அணியை சரிவில் இருந்து மீட்ட ஸ்மித்- ஆஸ்திரேலியா 338 ரன்களில் ஆல் அவுட்

    சிட்னியில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 338 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
    சிட்னி:

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி சிட்னியில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலிய அணி, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 166 ரன்களை எடுத்திருந்தது. ஸ்மித் 31 ரன்களிலும் லபுசேன் 67 ரன்களிலும் களத்தில் இருந்தனர். 

    இந்நிலையில் இன்று இரண்டாவது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஒருபுறம் விக்கெட் வீழ்ந்தாலும், மறுபுறம் நிலைத்து நின்ற ஸ்மித் சதம் கடந்து அசத்தினார். கடைசி வரை களத்தில் இருந்த அவர் 131 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரன் அவுட் ஆனார். இதன்மூலம் ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 338 ரன்கள் எடுத்தது.

    இந்தியா தரப்பில், ஜடேஜா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பும்ரா, சைனி தலா 2 விக்கெட், சிராஜ் ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

    இதையடுத்து இந்திய அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. துவக்க வீரர்களாக ரோகித் சர்மா, ஷுப்மான் கில் களமிறங்கி நிதானமாக விளையாடினர்.
    Next Story
    ×