என் மலர்tooltip icon

    விளையாட்டு

    இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணியின் கேப்டன் கோலி அதிகபட்சமாக 80 ரன்கள் விளாசினார்.
    அகமதாபாத்:

    இந்தியா- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையே 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடியது. இதில், முதலாவது மற்றும் 3-வது ஆட்டத்தில் இங்கிலாந்தும், 2-வது, 4-வது ஆட்டத்தில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தது.

    இந்த நிலையில் தொடரை வெல்வது யார்? என்பதை தீர்மானிக்கும் கடைசி 20 ஓவர் போட்டி அகமதாபாத் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. துவக்க வீரர் ரோகித் சர்மா, கேப்டன் கோலி இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் 20 ஓவர் முடிவில் இந்தியா 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 224 ரன்கள் குவித்தது. 

    அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி ஆட்டமிழக்காமல்  80 ரன்கள் விளாசினார். ரோகித் சர்மா 64 ரன்கள் குவித்தார். சூர்ய குமார் யாதவ் 32 ரன்கள், ஹர்திக் பாண்ட்யா 39 ரன்கள் (நாட் அவுட்) எடுத்தனர்.

    இதையடுத்து 225 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் ஓவரிலேயே தடுமாறியது. துவக்க வீரர் ஜேசன் ராய் ரன் எதுவும் எடுக்காமல் புவனேஷ்வர் குமாரிடம் விக்கெட்டை பறிகொடுத்தார். அதன்பின்னர் ஜோஸ்பட்லர்-டேவிட் மாலன் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

    அதிரடியாக ஆடிய ஜோஸ் பட்லர் 34 பந்துகளில் 52 ரன்கள் குவித்தார். இதேபோல் டேவிட் மாலன், 46 பந்துகளில் 68 ரன்கள் விளாசி நம்பிக்கை அளித்தார். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் நிலைக்காததால் ரன்ரேட் வெகுவாக சரிந்தது. 20 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்களே எடுத்தது. இதனால் இந்தியா 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன் 5 போட்டிகள் கொண்ட தொடரை 3-2 என கைப்பற்றியது.

    இந்த போட்டியில், இந்தியா தரப்பில் புவனேஸ்வர் குமார்  2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அவர் துவக்க வீரர்கள் இருவரையும் வெளியேற்றினார். ஷர்துல் தாக்கூர் ஒரே ஒவரில் 2 முக்கிய விக்கெட்டுகள் உள்ளிட்ட 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இது ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. தமிழக வீரர் நடராஜன், ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் ஒரு விக்கெட் எடுத்தனர்.
    போட்டியின் துவக்கம் முதலே தாய்லாந்து வீராங்கனையின் வேகத்திற்கு ஈடுகொடுத்து விளையாட முடியாமல் சிந்து தடுமாறினார்.
    பர்மிங்காம்:

    ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டியில், நடப்பு உலக சாம்பியனும், இந்தியாவின் நட்சத்திர வீராங்கனையுமான பி.வி.சிந்து, மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் தாய்லாந்து வீராங்கனை போன்பவி சோச்சுவாங்கை இன்று எதிர்கொண்டார். இப்போட்டியின் துவக்கம் முதலே தாய்லாந்து வீராங்கனையின் வேகத்திற்கு ஈடுகொடுத்து விளையாட முடியாமல் தடுமாறினார்.

    இறுதியில் 17-21, 9-21 என்ற நேர்செட்களில் சிந்து தோல்வியடைந்தார். 43 நிமிடங்களில் போட்டியை முடித்து வெற்றி பெற்ற போன்பவி, இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

    கடந்த 2018ல் நடந்த ஆல் இங்கிலாந்து போட்டியிலும் பி.வி.சிந்து அரையிறுதியில் தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் சாதனை படைத்த தேஸ்வால் மற்றும் பாகெர் இருவரும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்
    புதுடெல்லி:

    உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை யாஷாஸ்வினி சிங் தேஸ்வால் (வயது 23) தங்கம் வென்று சாதனை படைத்தார். 

    இந்த போட்டியில் இந்தியாவிற்கு கிடைத்த முதல் தங்கப் பதக்கம் இதுவாகம். 8 பேர் பங்கேற்ற இறுதிச்சுற்றில், தேஸ்வால் 238.8 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தார். 

    மற்றொரு இந்திய வீராங்கனை மனு பாகெர் 236.7 புள்ளிகளுடன் இரண்டாம் இடம்பிடித்து, வெள்ளிப் பதக்கம் வென்றார். பெலாரஸ் நாட்டின் விக்டோரியா 215.9 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கம் வென்றார். இறுதிச்சுற்றுக்குள் நுழைந்த மற்றொரு இந்திய வீராங்கனைகள் ஸ்ரீ நிவேதா 4வது இடத்தை பிடித்தார். 

    ஆண்கள் பிரிவில் பதக்கம் வென்றவர்கள்

    10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் சாதனை படைத்த தேஸ்வால் மற்றும் பாகெர் இருவரும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் சவுத்ரி வெள்ளிப் பதக்கமும், அபிஷேக் வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
    கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி, இங்கிலாந்தின் வெற்றிக்கு 225 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது.
    அகமதாபாத்:

    இந்தியா- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையே 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடர் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் முதலாவது மற்றும் 3-வது ஆட்டத்தில் இங்கிலாந்தும், 2-வது, 4-வது ஆட்டத்தில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

    இந்த நிலையில் தொடரை வெல்வது யார்? என்பதை தீர்மானிக்கும் கடைசி 20 ஓவர் போட்டி அகமதாபாத் மைதானத்தில் இன்று நடக்கிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 224 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி ஆட்டமிழக்காமல்  80 ரன்கள் விளாசினார். இதில், 7 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் அடங்கும். ரோகித் சர்மா 34 பந்துகளில் 4 பவுண்டரி, 5 சிக்சர்களுடன் 64 ரன்கள் குவித்தார். சூர்ய குமார் யாதவ் 32 ரன்கள், ஹர்திக் பாண்ட்யா 39 ரன்கள் (நாட் அவுட்) எடுத்தனர்.

    இதையடுத்து 225 ரன்கள் என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது.
    ஒலிம்பிக் போட்டிக்காக வெளிநாடுகளைச் சேர்ந்த ரசிகர்கள் வாங்கிய டிக்கெட் கட்டணத்தை திருப்பிக் கொடுப்பதாக போட்டி அமைப்பாளர்கள் கூறி உள்ளனர்.
    டோக்கியோ:

    ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் ஜூலை 23ம் தேதி முதல் ஆகஸ்ட் 8ம் தேதிவரை ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் செய்யப்பட்டுவருகின்றன. போட்டிகளுக்கான டிக்கெட்டுகளும் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 

    இந்நிலையில், உலகின் பல்வேறு நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியிருப்பதால், ஜப்பான் ஒலிம்பிக் போட்டியைக் காண வெளிநாட்டு பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி, ஜப்பான் அரசு, சர்வதேச பாராலிம்பிக் கமிட்டி மற்றும் உள்ளூர் போட்டி அமைப்பாளர்கள் காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தியபோது இந்த முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது.

    ஒலிம்பிக் போட்டிக்காக வெளிநாடுகளைச் சேர்ந்த ரசிகர்களுக்காக 10 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது. டிக்கெட் கட்டணத்தை திருப்பிக் கொடுப்பதாக போட்டி அமைப்பாளர்கள் கூறி உள்ளனர். 

    இதேபோல் உள்நாட்டு ரசிகர்களுக்காக 44.5 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. போட்டி நடைபெறும் மைதானங்களில் உள்நாட்டு பார்வையாளர்களின் எண்ணிக்கை தொடர்பான அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
    இந்திய அணிக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.
    அகமதாபாத்:

    இந்தியா- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையே 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடர் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் முதலாவது, 3-வது ஆட்டத்தில் இங்கிலாந்தும், 2-வது, 4-வது ஆட்டத்தில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலை வகிக்கிறது. 

    இந்த நிலையில் இவ்விரு அணிகளில் தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 5-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி இதே மைதானத்தில் இன்று நடக்கிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டத்தில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.

    போட்டிக்கான இரு அணிகளின் வீரர்கள்:

    இ்ந்தியா: ரோகித் சர்மா, விராட் கோலி (கேப்டன்), ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷாப் பண்ட், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர்குமார், ஷர்துல் தாகூர். ராகுல் சாஹர். நடராஜன்.

    இங்கிலாந்து: ஜாசன் ராய், ஜோஸ் பட்லர், டேவிட் மலான், ஜானி பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ், மோர்கன் (கேப்டன்), சாம் கர்ரன், கிறிஸ் ஜோர்டான், ஜோப்ரா ஆர்ச்சர், அடில் ரஷித், வுட்.
    வங்காளதேச அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    டுனிடின்:

    வங்காளதேச கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் ஆட்டத்தில் விளையாடுவதற்காக நியூசிலாந்து சென்றுள்ளது.

    நியூசிலாந்து-வங்காளதேச அணிகள் மோதிய முதல் ஒரு நாள் போட்டி டுனிடினில் இன்று நடந்தது.

    முதலில் விளையாடிய வங்காளதேசம் அணி நியூசிலாந்து வீரர்களின் அபார பந்து வீச்சால் 41.5 ஓவர்களில் 131 ரன்னில் சுருண்டது. மகமதுல்லா அதிகபட்சமாக 27 ரன் எடுத்தார். போல்ட் 4 விக்கெட்டும், ஜேம்ஸ் நீசம், சாண்ட்னெர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் விளையாடிய நியூசிலாந்து அணி 21.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 132 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    நிக்கோலஸ் 49 ரன்னும் (அவுட் இல்லை), மார்ட்டின் கத்தில் 19 பந்தில் 38 ரன்னும் (3 பவுன்டரி, 4 சிக்சர்) எடுத்தனர்.

    இந்த வெற்றி மூலம் நியூசிலாந்து 3 போட்டி கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 2-வது ஆட்டம் வருகிற 23-ம் தேதி கிறிஸ்ட் சர்ச்சில் நடக்கிறது.

    பெடரேசன் கோப்பை தடகள போட்டியில் திருச்சியை சேர்ந்த தனலட்சுமி 2 பதக்கம் பெற்று சாதனை புரிந்தார். இதையொட்டி அவரை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டி உள்ளார்.

    சென்னை:

    பெடரேசன் கோப்பை தடகள போட்டியில் திருச்சியை சேர்ந்த தனலட்சுமி 2 பதக்கம் பெற்று சாதனை புரிந்தார். இதையொட்டி அவரை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டி உள்ளார்.

    இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    விளையாட்டு வானில் மீண்டும் ஒரு தமிழக நட்சத்திரம். தடகளப் போட்டிகளில் சாதனை மங்கையாக விளங்கும திருச்சியை சேர்ந்த தனலட்சுமிக்கு வாழ்த்துக்கள். மின்னலென ஓடும் அவரது சாதனை சிறகுகள் அவரை மேலும் பல உயரங்களுக்கு அழைத்துச் செல்லட்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இந்திய அணி ஏற்கனவே டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது. தற்போது 20 ஓவர் தொடரையும் வெல்லும் ஆர்வத்துடன் உள்ளது.

    அகமதாபாத்:

    இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி உலகின் மிகப்பெரிய ஸ்டேடியமான அகமதாபாத்தில் இன்று நடக்கிறது.

    இரவு 7 மணிக்கு நடை பெறும் இந்த ஆட்டம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவி‌ஷனில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    இரு அணிகளும் தலா 2 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளன. இந்தியா 2-வது போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்திலும், 4-வது ஆட்டத்தில் 8 ரன்னிலும் வெற்றிபெற்றது.முதல் மற்றும் 3-வது போட்டியில் இங்கிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

    இதனால் தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இன்றைய ஆட்டத்தில் வெல்லும் அணி தொடரை கைப்பற்றும். இங்கிலாந்தை மீண்டும் வீழ்த்தி இந்தியா தொடரை வெல்லுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆட்டம் 20 ஓவர் உலக கோப்பைக்கான முன்னோட்டமாக இருக்கும்.

    இந்திய அணி ஏற்கனவே டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது. தற்போது 20 ஓவர் தொடரையும் வெல்லும் ஆர்வத்துடன் உள்ளது.

    தொடக்க ஆட்டக்காரரான லோகேஷ் ராகுல் இந்த தொடரில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. அவரது ஆட்டம் மிகவும் மோசமாக இருந்தது. இதனால் இன்றைய ஆட்டத்தில் அவர் நீக்கப்பட்டால், இஷான் கி‌ஷன் இடம்பெறுவார். ராகுல் நீக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாக கருதப்படுகிறது.

    கேப்டன் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஷ் அய்யர் ஆகியோர் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர். நடராஜனுக்கு வாய்ப்பு கிடைத்தால் மற்றொரு தமிழக வீரரான வாஷிங்டன் சுந்தர் கழற்றி விடப்படலாம்.

    கடந்த போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுத்து தொடரை வெல்லும் ஆர்வத்தில் மார்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி இருக்கிறது.

    டெஸ்ட் தொடரை இழந்ததால் 20 ஓவர் தொடரை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என்ற நிலையில் அந்த அணி உள்ளது. இங்கிலாந்து அணியில் 20 ஓவர் போட்டிக்கேற்ற சிறந்த பேட்ஸ்மேன்களும், பந்து வீச்சாளர்களும் உள்ளனர்.

    இரு அணிகளும் இன்று மோதுவது 19-வது போட்டியாகும். இதுவரை நடந்த 18 ஆட்டத்தில் இரு அணிகளும் தலா 9-ல் வெற்றிபெற்றுள்ளன.

    புதுமுக வீரர்களான வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா, ஆல்-ரவுண்டர் குர்ணல் பாண்ட்யா ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    மும்பை:

    இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. 4 ஆட்டம் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இரு அணிகள் மோதும் 20 ஓவர் போட்டித் தொடர் (5 ஆட்டம்) நாளையுடன் முடிகிறது.

    அடுத்து இந்தியா-இங்கிலாந்து அணிகள் மூன்று ஆட்டம் கொண்ட ஒரு நாள் போட்டித்தொடரில் விளையாடுகின்றன. இந்த போட்டிகள் அனைத்தும் புனேவில் நடக்கின்றன. முதல் போட்டி வருகிற 23-ந்தேதியும், 2-வது போட்டி 26-ந்தேதியும், 3-வது மற்றும் கடைசி போட்டி 28-ந்தேதியும் நடக்கிறது.

    இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடருக்கான 18 பேர் கொண்ட இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதில் புதுமுக வீரர்களான வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா, ஆல்-ரவுண்டர் குர்ணல் பாண்ட்யாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    அதேபோல் சூர்யகுமார் யாதவும் இடம்பெற்றுள்ளார். தமிழகத்தை சேர்ந்த டி.நடராஜன், வாஷிங்டன் சுந்தர் ஆகியோரும் அணியில் உள்ளனர். இருவரும் இதுவரை ஒரேயொரு ஒரு நாள் போட்டியில் விளையாடி உள்ளனர்.

    2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வாஷிங்டன் சுந்தர் இலங்கைக்கு எதிராகவும், 2020-ம் ஆண்டு டிசம்பரில் டி.நடராஜன் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் அறிமுகமானார்கள்.

    திருமணத்துக்காக விடுமுறையில் சென்றுள்ள வேகப்பந்து வீச்சாளர் பும்ரா இடம்பெறவில்லை.

    ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் காயத்தால் விலகிய வேகப்பந்து வீச்சாளர் முகமது ‌ஷமி, ஜடேஜா ஆகியோர் தேர்வு செய்யப்படவில்லை.

    இந்திய அணி வருமாறு:- விராட்கோலி (கேப்டன்), ரோகித்சர்மா (துணை கேப்டன்) ஷிகர் தவான், சுப்மன்கில், ஸ்ரேயாஸ் அய்யர், சூர்யகுமார் யாதவ், ஹர்திக்பாண்ட்யா, ரி‌ஷப் பண்ட், லோகேஷ் ராகுல், சாகல், குல்தீப் யாதவ், குர்ணல் பாண்ட்யா, வாஷிங்டன் சுந்தர், டி.நடராஜன், புவனேஸ்வர் குமார், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ‌ஷர்துல் தாகூர்.

    அரியானா மாநிலத்தில் இளம் மல்யுத்த வீராங்கனை ரித்திகா போகத் மரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    சண்டிகர்:

    ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த போகத் சகோதரிகளான கீதா போகத் மற்றும் பபிதா போகத் இந்தியாவுக்காக சர்வதேச அளவில் மல்யுத்த விளையாட்டில் பதக்கங்களை குவித்து வருகின்றனர். இந்நிலையில், போகத் சகோதரிகளின் ஒன்றுவிட்ட சகோதரியும், இளம் மல்யுத்த வீராங்கனையுமான ரித்திகா போகத் (வயது 17) கடந்த திங்கட்கிழமை இரவு மரணம் அடைந்தார். 

    அரியானா மாநிலம் சார்கி தாத்ரி மாவட்டத்தில் உள்ள தனது மாமாவின் வீட்டில் கடந்த 4 ஆண்டுகளாக தங்கியிருந்து பயிற்சி பெற்று வந்த ரித்திகா, மல்யுத்த போட்டி தொடரின் இறுதி போட்டியில் தோல்வியை தழுவிய நிலையில் மரணமடைந்துள்ளார். அவர் தங்கியிருந்த வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் அவரது சடலம் மீட்கப்பட்டது. இந்த தகவலை அரியானா போலீசார் நேற்று அறிவித்தனர். 

    ரித்திகா போகத் மரணம் குறித்து அரியானா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலைக்கான காரணம், போட்டியில் அடைந்த தோல்வியாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரித்து வருவதாக சார்கி தாத்ரி மாவட்ட எஸ்பி ராம் சிங் பிஷோனி தெரிவித்துள்ளார்.  

    ரித்திகா போகத் மறைவுக்கு முன்னாள் மத்திய மந்திரி வி.கே.சிங் மற்றும் விளையாட்டு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். 
    நேற்றைய ஆட்டத்தில் 3-வது வீரராக களம் இறக்கப்பட்ட அவர் சிறப்பாக விளையாடி முத்திரை பதித்தார். சர்வதேச கிரிக்கெட்டில் தனது முதல் பந்திலேயே சிக்சர் அடித்து அசத்தினார்.

    அகமதாபாத்:

    அகமதாபாத்தில் நேற்று நடந்த நான்காவது 20 ஓவர் போட்டியில் இங்கிலாந்தை தோற்கடித்து இந்தியா த்ரில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 185 ரன் எடுத்தது.

    சூர்யகுமார் யாதவ் 31 பந்தில் 57 ரன் எடுத்தார். இதில் 6 பவுண்டரி, 3 சிக்சர் அடங்கும். இது அவருக்கு 2-வது போட்டி ஆகும். அறிமுக போட்டியில் சூர்ய குமார் யாதவ் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை.

    நேற்றைய ஆட்டத்தில் 3-வது வீரராக களம் இறக்கப்பட்ட அவர் சிறப்பாக விளையாடி முத்திரை பதித்தார். சர்வதேச கிரிக்கெட்டில் தனது முதல் பந்திலேயே சிக்சர் அடித்து அசத்தினார்.

    பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட் சரிந்தது. கடைசி ஓவரில் இங்கிலாந்து வெற்றிக்கு 23 ரன் தேவைப்பட்டது. ‌ஷர்துல் தாகூர் வீசிய அந்த ஓவரில் 14 ரன் எடுக்கப்பட்டது. ஒரு விக்கெட்டும் வீழ்ந்தது.

    இங்கிலாந்து 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 177 ரன் எடுத்தது. ஆனால் இந்தியா 8 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்தியா தரப்பில் ‌ஷர்துல் தாகூர் 3 விக்கெட்டும், ஹர்திக் பாண்ட்யா, ராகுல் சாகர் தலா 2 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

    வெற்றி குறித்து கேப்டன் வீராட்கோலி கூறியதாவது:-

    ஒரு சிறந்த அணிக்கு எதிராக கடினமான ஆட்டமாக இருந்தது. பனிப்பொழிவு மிகப்பெரிய அளவில் இருந்தது. 180 ரன்னுக்கு மேல் எடுக்க வேண்டும் என்று எதிர்பார்த்தோம்.

    சூர்யகுமார் பற்றி குறிப்பாக சொல்ல வேண்டும். 3-வது வீரராக களம் வந்து விளையாடுவது எளிதானதல்ல. அதேபோல் முதல் பந்திலேயே சிக்சர் அடித்து தொடங்கியதை கண்டு நாங்கள் திகைத்து போனோம். அவர் தனது அதிகாரத்தை முத்திரையாக குத்தினார்.

    இந்த இளம் வீரர்கள் அணிக்குள் வந்து தங்களது வாய்ப்புகளை பற்றிக் கொள்கிறார்கள். நீங்கள் உங்களின் தரத்தை உயர்வாக அமைத்து உள்ளீர்கள். ஹர்த்திக் பாண்ட்யா பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×