search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய கேப்டன் விராட் கோலி.- இங்கிலாந்து கேப்டன் மோர்கன்
    X
    இந்திய கேப்டன் விராட் கோலி.- இங்கிலாந்து கேப்டன் மோர்கன்

    கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சு தேர்வு - ராகுலுக்கு பதில் நடராஜன் சேர்ப்பு

    இந்திய அணிக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.
    அகமதாபாத்:

    இந்தியா- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையே 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடர் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் முதலாவது, 3-வது ஆட்டத்தில் இங்கிலாந்தும், 2-வது, 4-வது ஆட்டத்தில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலை வகிக்கிறது. 

    இந்த நிலையில் இவ்விரு அணிகளில் தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 5-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி இதே மைதானத்தில் இன்று நடக்கிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டத்தில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.

    போட்டிக்கான இரு அணிகளின் வீரர்கள்:

    இ்ந்தியா: ரோகித் சர்மா, விராட் கோலி (கேப்டன்), ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷாப் பண்ட், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர்குமார், ஷர்துல் தாகூர். ராகுல் சாஹர். நடராஜன்.

    இங்கிலாந்து: ஜாசன் ராய், ஜோஸ் பட்லர், டேவிட் மலான், ஜானி பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ், மோர்கன் (கேப்டன்), சாம் கர்ரன், கிறிஸ் ஜோர்டான், ஜோப்ரா ஆர்ச்சர், அடில் ரஷித், வுட்.
    Next Story
    ×