search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விராட் கோலி, ரோகித் சர்மா
    X
    விராட் கோலி, ரோகித் சர்மா

    ரோகித் சர்மா, விராட் கோலி அபாரம்... இந்தியா 224 ரன்கள் குவிப்பு

    கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி, இங்கிலாந்தின் வெற்றிக்கு 225 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது.
    அகமதாபாத்:

    இந்தியா- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையே 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடர் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் முதலாவது மற்றும் 3-வது ஆட்டத்தில் இங்கிலாந்தும், 2-வது, 4-வது ஆட்டத்தில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

    இந்த நிலையில் தொடரை வெல்வது யார்? என்பதை தீர்மானிக்கும் கடைசி 20 ஓவர் போட்டி அகமதாபாத் மைதானத்தில் இன்று நடக்கிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 224 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி ஆட்டமிழக்காமல்  80 ரன்கள் விளாசினார். இதில், 7 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் அடங்கும். ரோகித் சர்மா 34 பந்துகளில் 4 பவுண்டரி, 5 சிக்சர்களுடன் 64 ரன்கள் குவித்தார். சூர்ய குமார் யாதவ் 32 ரன்கள், ஹர்திக் பாண்ட்யா 39 ரன்கள் (நாட் அவுட்) எடுத்தனர்.

    இதையடுத்து 225 ரன்கள் என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது.
    Next Story
    ×