என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவிற்கு முதல் தங்கம்
Byமாலை மலர்20 March 2021 4:24 PM GMT (Updated: 21 March 2021 11:06 AM GMT)
10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் சாதனை படைத்த தேஸ்வால் மற்றும் பாகெர் இருவரும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்
புதுடெல்லி:
உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை யாஷாஸ்வினி சிங் தேஸ்வால் (வயது 23) தங்கம் வென்று சாதனை படைத்தார்.
இந்த போட்டியில் இந்தியாவிற்கு கிடைத்த முதல் தங்கப் பதக்கம் இதுவாகம். 8 பேர் பங்கேற்ற இறுதிச்சுற்றில், தேஸ்வால் 238.8 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தார்.
மற்றொரு இந்திய வீராங்கனை மனு பாகெர் 236.7 புள்ளிகளுடன் இரண்டாம் இடம்பிடித்து, வெள்ளிப் பதக்கம் வென்றார். பெலாரஸ் நாட்டின் விக்டோரியா 215.9 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கம் வென்றார். இறுதிச்சுற்றுக்குள் நுழைந்த மற்றொரு இந்திய வீராங்கனைகள் ஸ்ரீ நிவேதா 4வது இடத்தை பிடித்தார்.
10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் சாதனை படைத்த தேஸ்வால் மற்றும் பாகெர் இருவரும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் சவுத்ரி வெள்ளிப் பதக்கமும், அபிஷேக் வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X