என் மலர்tooltip icon

    விளையாட்டு

    முதல் ஆட்டத்தில் வெற்றி பெறுவதைவிட கோப்பையை வெல்வதுதான் முக்கியமானது என மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார்.

    சென்னை:

    ஐ.பி.எல். தொடக்க ஆட்டத்தில் பெங்களூர் அணி நடப்பு சாம்பியன் மும்பையை வீழ்த்தியது.

    14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நேற்று தொடங்கியது. மே மாதம் 30-ந் தேதி வரை இந்த போட்டி 6 நகரங்களில் நடத்தப்படுகிறது.

    சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று நடந்த தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதியது.

    இதில் பெங்களூர் அணி வெற்றிபெற்றது. ஆட்டத்தின் கடைசி பந்தில் அந்த அணிக்கு வெற்றி கிடைத்தது.

    பெங்களூர் அணியின் வெற்றிக்கு வேகப்பந்து வீரர் ஹர்‌ஷல் படேல், பேட்ஸ்மேன் டிவில்லியர்ஸ் காரணமாக இருந்தனர்.

    முதலில் விளையாடிய மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. கிறிஸ்லின் அதிகபட்சமாக 35 பந்தில் 49 ரன்னும் (4 பவுண்டரி, 3 சிக்சர்) சூர்யகுமார் யாதவ் 23 பந்தில் 31 ரன்னும் (4 பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்தனர். ஹர்‌ஷல் படேல் 27 ரன் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார்.

    பின்னர் விளையாடிய பெங்களூர் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 160 ரன் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    டிவில்லியர்ஸ் 27 பந்தில் 48 ரன்னும் (4 பவுண்டரி, 2 சிக்சர்), மேக்ஸ்வெல் 28 பந்தில் 39 ரன்னும் (3 பவுண்டரி, 2 சிக்சர்), கேப்டன் விராட் கோலி 29 பந்தில் 33 ரன்னும் எடுத்தனர். பும்ரா, ஜேன்சன் தலா 2 விக்கெட் கைப்பற்றினார்கள்.

    இந்த வெற்றி குறித்து பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி கூறியதாவது:-

    வீரர்களின் கூட்டு முயற்சியால் இந்த வெற்றி கிடைத்தது. 4-வது வீரர் வரிசைக்கு மேக்ஸ்வெல் பொறுத்தமானவர். அவர் ஆட்டத்தின் வேகத்தையும், தன்மையையும் மாற்றக் கூடியவர். அவர் உத்வேகம் அளிக்கக்கூடிய பேட்ஸ்மேன் ஆவார்.

    முதல் போட்டியிலேயே வெற்றிபெற்றது முக்கியமானது. ஏனென்றால் மும்பை அணி மிகவும் வலுவான அணியாகும். டிவில்லியர்ஸ் எப்போதுமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடியவர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தோல்வி குறித்து மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:-

    முதல் ஆட்டத்தில் வெற்றி பெறுவதைவிட கோப்பையை வெல்வதுதான் முக்கியமானது. நாங்கள் கடுமையாக போராடிதான் தோற்றோம். 20 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம்.

    நாங்கள் சில தவறுகளை செய்தோம். டிவில்லியர்ஸ் சிறப்பாக விளையாடி ஆட்டத்தின் போக்கை மாற்றிவிட்டார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பெங்களூர் அணி 2-வது ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை 14-ந் தேதி எதிர்கொள்கிறது. மும்பை அணி அடுத்த ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்சை 13-ந் தேதி சந்திக்கிறது. இந்த 2 ஆட்டங்களும் சென்னையில் நடக்கிறது. 

    சேப்பாக்கம் மைதானம் என்றாலே வேப்பங்காயாக கசக்கும் ஆர்சிபி அணிக்கு, நேற்று வெற்றி கிடைத்துள்ளது.
    ஐபிஎல் 2021 டி20 கிரிக்கெட் திருவிழா நேற்று தொடங்கியது. கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக போட்டிகள் அனைத்தும் ஆறு மைதானங்களில் மட்டுமே நடக்கிறது.

    எந்த அணியும் அதனுடைய சொந்த மைதானத்தில் விளையாடவில்லை. பொதுவான மைதானத்தில் விளையாடுகிறது. 

    ஆர்சிபி முதல் மூன்று போட்டிகளில் சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடும் வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. முதல் மூன்று போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகளை எதிர்கொள்ள வேண்டும்.

    ஆர்சிபி-க்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி என்றாலே வேப்பங்காய்தான். ஆம்... அந்த அணி நேற்றைய போட்டிக்கு முன் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடைசியாக விளையாடிய ஏழு போட்டிகளில் ஒரு முறை மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. 

    2008-ல் அனில் கும்ப்ளே தலைமையிலான அணி சிஎஸ்கே-வை 14 ரன்னில் வீழ்த்தியிருந்தது, அதன்பின் வெற்றி பெற்றதே கிடையாது. முதல் மூன்று போட்டிகளில் விளையாட வேண்டும் என்பதால், ஆர்சிபி ரசிகர்கள் கலக்கம் அடைந்தனர்.

    ஆர்சிபி அணி வீரர்கள்

    ஆனால் நேற்று மும்பை இந்தியன்ஸ் அணியை கடைசி பந்தில் வீழ்த்தி ஆர்சிபி வெற்றி பெற்றது. இதன்மூலம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

    ஆர்சிபி வருகிற 14-ந்தேதி ஐதராபாத்தையும், 18-ந்தேதி கொல்கத்த நைட் ரைடர்ஸ் அணியையும் எதிர்கொள்கிறது.
    ஐந்து முறை ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ், 2013-ல் இருந்து தொடர்ந்து முதல் போட்டியில் வெற்றிபெற முடியாத நிலையில் உள்ளது.
    ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடும் 8 அணிகளில் மும்பை இந்தியன்ஸ் அணி தலைசிறந்த அணியாக உள்ளது. அந்த அணி ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

    சீசன் தொடங்கும்போது அந்த அணி சிறப்பாக விளையாடாது. சீசன் செல்ல செல்ல விஸ்வரூபம் எடுக்கும். வாழ்வா? சாவா? என வந்தால் நெருக்கடியை சமாளித்து வெற்றி வாகை சூடும்.

    ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் 2013-ல் இருந்து முதல் போட்டியை வென்றது கிடையாது. நேற்று ஆர்சிபி-க்கு எதிராக வெற்றி பெற்று அந்த மோசமான சாதனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நேற்றும் தோல்வியடைந்து மோசமான சாதனையை தொடர்கிறது.

    ஆர்சிபி அணி

    2013-ல் ஆர்சிபி, 2014-ல் கொல்கத்தா, 2015-ல் கொல்கத்தா, 2016-ல் ஆர்பிஎஸ், 2017-ல் ஆர்பிஎஸ், 2018-ல் சிஎஸ்கே, 2019-ல் டெல்லி கேப்பிட்டல்ஸ், 2020-ல் சிஎஸ்கே, தற்போது ஆர்சிபி அணிக்கு எதிராக தோல்வியடைந்துள்ளது.
    சிஎஸ்கே முதல் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை மும்பை வான்கவே மைதானத்தில் எதிர்கொள்கிறது.
    ஏப்ரல் 6-ந்தேதி ஓட்டுப் போட்டுவிட்டு தேர்தலுக்கு முடிவுக்காக சுமார் ஒருமாதம் காத்திருக்கும் தமிழக கிரிக்கெட்  ரசிகர்களை, தேர்தலில் யார் ஜெயிப்பா? யார் ஆட்சியமைப்பா? என்பதை பற்றி யோசிக்க விடாமல், Mint-ஐ just ரிலாக்ஸா வைக்கவும், விசில் போடவும் வந்து விட்டது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா.

    கொரோனா தொற்றால் ஆறு மைதானங்களில் மட்டுமே போட்டி நடைபெறுவதால் சிஎஸ்கே அணிக்கு சேப்பாக்கத்தில் எந்த போட்டியும் இல்லாதது ரசிகர்களுக்கு சற்று வருத்தமே.

    சிஎஸ்கே முதல் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை மும்பை வான்கவே மைதானத்தில் எதிர்கொள்கிறது. 

    இரு அணிகளும் நேருக்குநேர் மோதியதை வைத்து பார்த்தால் சிஎஸ்கே கையே ஓங்கியிருக்கிறது. 25 முறை மோதியதில் 8 முறை சிஎஸ்கேவுக்கு வெற்றி.

    ஆனால் கடந்த சீசனில் பிளே-ஆப்ஸ் சுற்றுக்கு முன்னேற முடியாத பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டது. டெல்லிக்கு எதிரான 2 போட்டியிலும் சிஎஸ்கே-வுக்கு அடியே விழுந்தது.

    Daddy Army -யான சிஎஸ்கேவில் வாட்சன், ஹர்பஜன் சிங், கேதர் ஜாதவ் வெளியேறிவிட்டனர். இதனால் இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.

    கடந்த சீசனில் ருத்துராஜ் கெய்க்வாட் கடைசியாக நடைபெற்ற 3 ஆட்டங்களிலும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதங்கள் விளாசினார். அதனால் அவர் தொடக்க வீரர் இடத்தை கெட்டியாக பிடித்துக் கொள்வார். அவருடன் டு பிளிஸ்சிஸ் தொடக்க வீரராக களம் இறங்குவாரா? அல்லது உத்தப்பா களம் இறங்குவாரா? எனப் பார்க்க வேண்டும். கரெக்ட்-ஆன ஓபனிங் காம்பினேசனோடு முதல் போட்டியில் களம் இறங்க டோனி விரும்புவார்.

    சிஎஸ்கேவுக்காக கடந்த சீசனில் 449 ரன்கள் அடித்து முதலிடம் பிடித்த டு பிளிஸ்சிஸ் பேட்டிங், பீல்டிங்கில் அசத்தக்கூடியவர். அம்பதி ராயுடன் அவருக்கு அடுத்த இடத்தில் உள்ளார்.

    சின்ன தல ரெய்னா மீண்டும் அணிக்கு திரும்பியது மிகப்பெரிய பலம். மிடில் ஆர்டரின் ஆணி வேர். 

    7 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்ட மொயீன் அலி, 9.25 கோடி ரூபாய்க்கு எடுத்த கிருஷ்ணப்பா கவுதமை தல டோனி எவ்வாறு பயன்படுத்துகிறார் என்பதை பார்க்க வேண்டும்.

    சுரேஷ் ரெய்னா-எம்எஸ் டோனி

    பேட்டிங்கில் ருத்து ராஜ், உத்தப்பா, அம்பதி ராயுடு, ரெய்னா, எம்எஸ் டோனி, ஜடேஜா ஆகியோர் வலுவாக உள்ளனர். 

    ஜடேஜா, கிருஷ்ணப்பா கவுதம், மொயீன் அலி, இம்ரான் தஹிர் சாய் கிஷோர், மிட்செல் சான்ட்னர் என சுழற்பந்து வீச்சாளர்களுக்கும் பஞ்சமில்லை. 

    தீபக் சாஹர், ஷர்துல் தாகூர், பிராவோ, சாம் கர்ரன் ஆகியோர் உள்ளனர். இந்த நான்கு பேரால் பேட்டிங்கும் செய்ய முடியும். இது சிஎஸ்கே-வுக்கு கூடுதல் பலம்.

    டு பிளிஸ்சிஸ், பிராவோ, சாம் கர்ரன், மொயீன் அலி, இம்ரான் தஹிர் ஆகியோரில் எந்த நான்கு பேருடன், எந்த காம்பினேசனோடு தல டோனி களம் இறங்குகிறார் எனப் பார்க்க வேண்டும்.

    சென்னை அணி வீரர்கள்

    எப்படியிருந்தாலும் வெற்றியோடு தொடரை தொடங்க வேண்டும் என சிஎஸ்கே களம் இறங்கும் என்பதில் சந்தேகமில்லை.

    டெல்லி கேப்பிட்டல்ஸ் கடந்த முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறிய நம்பிக்கையுடன் களம் இறங்கும். கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் காயத்தால் விளையாடாதது அந்த அணிக்கு பின்னடைவு என்றாலும், சூப்பர் டூப்பர் பாஃர்மில் உள்ள ரிஷப் பண்ட் கேப்டன் பதவியுடன் களம் இறங்குவது அந்த அணிக்கு பலம்.

    பிரித்வி ஷா, தவான், ரகானே. ஹெட்மையர், ஸ்டீவ் ஸ்மித், ரகானே, மார்கஸ் ஸ்டோய்னிஸ், ரிஷப் பண்ட் என பேட்டிங் வலுவாக உள்ளது. சுழற்பந்து வீச்சில் அஷ்வின், மிஸ்ரா, அக்சார் பட்டேல் உள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அக்சார் முதல் சில போட்டிகளில் விளையாட வாய்ப்பில்லை.

    வேகப்பந்து வீச்சில் இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், ரபடா, கிறிஸ் வோக்ஸ், அன்ரிச் நோர்ஜே, டாம் கர்ரன் என சர்வதேச வீரர்களை கொண்டுள்ளது.

    கடந்த முறை ரிஷப் காயத்தால் ஒன்றிரண்டு போட்டியில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டபோது காம்பினேசன் மாறியது. அப்போது ஹெட்மையர் அணியில் இடம் பிடிக்க முடியாமல் போனது. அதுபோன்ற சிக்கல்களை தீர்த்துவிட்டால் டெல்லி கேப்பிட்டல்ஸ் ஏறுமுகத்தில் செல்லும் என்பதில் சந்தேகமில்லை.

    போட்டி நடைபெறும் மும்பை வான்கடே மைதானம் சேஸிங் செய்வதற்கு சாதகமாக இருக்கும். இதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பந்து வீசும்.

    முதலில் பேட்டிங் செய்யும் அணி 190 ரன்களுக்கு மேல் குவித்தால் வெற்றியை எதிர்பார்க்கலாம்.
    ஐசிசியின் ஜனவரி மாத வீரராக ரிஷப் பண்ட், பிப்ரவரி மாத வீரராக அஷ்வினும் தேர்வு செய்யப்பட்டனர். ஐசிசி அறிமுகப்படுத்திய நிலையில் முதல் இரு மாதங்களும் இந்திய வீரர்களே விருதுகளை கைப்பற்றியுள்ளனர்.
    ஐ.சி.சி. ஒவ்வொரு மாதத்தில் நடைபெறும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனையை தேர்வு செய்து விருது வழங்கி கவுரவிக்கிறது.

    இதன்படி, மார்ச் மாதத்துக்கான சிறந்த வீரருக்கான விருது பட்டியலில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார், ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான், ஜிம்பாப்வே கேப்டன் சீன் வில்லியம்ஸ் ஆகியோரும், சிறந்த வீராங்கனைக்கான விருது பட்டியலில் இந்திய வீராங்கனைகள் ராஜேஸ்வரி கெய்க்வாட், பூனம் ரவுத், தென்ஆப்பிரிக்கா வீராங்கனை லிசல் லீ ஆகியோரும் இடம் பிடித்துள்ளனர்.

    இதில் இருந்து விருதுக்குரிய ஒரு வீரர், வீராங்கனையை முன்னாள் வீரர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோர் அடங்கிய ஐ.சி.சி. வாக்கு அகாடமி மற்றும் ரசிகர்கள் வாக்களித்து தேர்வு செய்வார்கள்.
    டிவில்லியர்ஸ் அதிரடி காட்ட, விராட் கோலி 33 ரன்களும், மேக்ஸ்வெல் 39 ரன்களும் அடிக்க பெங்களூரு அணி முதல் வெற்றியை ருசித்தது.
    சென்னை:

    ஐபிஎல் 2021 சீசனின் முதல் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. ரோகித் சர்மா 19 ரன்னில் ரன் அவுட்டானார். சிறப்பாக பேட்டிங் செய்து கொண்டிருந்த சூர்யகுமார் யாதவ் 23 பந்தில் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கிறிஸ் லின் 35 பந்தில் 4 பவுண்டரி, 3 சிக்சருடன் 49 ரன்கள் எடுத்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அடுத்து வந்த ஹர்திக் பாண்ட்யா 13 ரன்னும், இஷான் கிஷன் 28 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    இறுதியில், மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 159 ரன்கள் அடித்தது.

    பெங்களூரு அணி சார்பில் ஹர்ஷல் பட்டேல் சிறப்பாக பந்து வீசி 4 ஓவரில் 27 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் சாய்த்தார்.

    இதையடுத்து,160 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆர்சிபி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக வாஷிங்டன் சுந்தர், விராட் கோலி இறங்கினர்.

    விராட் கோலி

    சுந்தர் 10 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய படிதார் 8 ரன்னில் ஏமாற்றினார். தொடர்ந்து இறங்கிய அனுபவ வீரர் மேக்ஸ்வெல்லும், விராட் கோலியும் 52 ரன்கள் ஜோடி சேர்த்தனர்.

    அணியின் எண்ணிக்கை 98 ஆக இருக்கும்போது விராட் கோலி 33 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்த சில நிமிடங்களில் மேக்ஸ்வெல் 39 ரன்னில் வெளியேறினார்.  

    தொடர்ந்து இறங்கிய டி வில்லியர்ஸ் முதலில் நிதானமாக ஆடினார். அதன்பின் அதிரடி காட்டி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

    இறுதியில் ஆர்சிபி அணி 8 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்து, 2 விக்கெட் வித்தியாசத்தில் நடப்பு தொடரின் முதல் வெற்றியைப் பதிவு செய்தது.
    கிறிஸ் லின் 49 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 31 ரன்களும், இஷான் கிஷன் 28 ரனகளும் அடிக்க, ஹர்ஷல் பட்டேல் 5 விக்கெட் வீழ்த்தினார்.
    ஐபிஎல் 2021 சீசனின் முதல் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. ரோகித் சர்மா, கிறிஸ் லின் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். மும்பை அணி 4 ஓவரில் 24 ரன்கள் எடுத்திருக்கும்போது ரோகித் சர்மா ரன்அவுட்டாகி வெளியேறினார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருன் கிறிஸ் லின்னும் வாணவேடிக்கை நிகழ்த்தினார். இதனால் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஸ்கோர் வேகமெடுத்தது.

    சிறப்பாக பேட்டிங் செய்து கொண்டிருந்ததத சூர்யகுமார் யாதவ் 23 பந்தில் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கிறிஸ் லின் 35 பந்தில் 4 பவுண்டரி, 3 சிக்சருடன் 49 ரன்கள் எடுத்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.

    சூர்யகுமார் ஆட்டமிழக்கும்போது மும்பை இந்தியன்ஸ் 94 ரன்களும், கிறிஸ் லின் ஆட்டமிழக்கும்போது 12.5 ஓவரில் 105 ரன்களும் எடுத்திருந்தது.

    அடுத்து வந்த ஹர்திக் பாண்ட்யா 10 பந்தில் 13 ரன்கள் அடித்தார். மும்பை இந்தியன்ஸ் 16 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்திருந்தது.

    18-வது ஓவரின் 4-வது பந்தில் இஷான் கிஷன் 19 பந்தில் 28 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். 19-வது ஓவரை ஜேமிசன் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் விராட் கோலி எளிதான கேட்சை விட்டார். ஜேமிசன் இந்த ஓவரில் 12 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.

    அடுத்த ஓவரை ஹர்ஷல் பட்டேல் வீசினார். முதல் பந்தில் குருணால் பாண்ட்யா 7 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்த பந்தில் பொல்லார்டை வீழ்த்தினார். 4-வது பந்தில் ஜான்சனை க்ளீன் போல்டாக்கினார்.

    ஹர்ஷல் பட்டேல்

    இந்த ஓவரில் ஒரு ரன் மட்டுமே விட்டுக்கொடுக்க மும்பை இந்தியன்ஸ் 9 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் அடித்தது. ஹர்ஷல் பட்டேல் சிறப்பாக பந்து வீசி 4 ஓவரில் 27 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் சாய்த்தார்.

    பின்னர் 160 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆர்சிபி பேட்டிங் செய்து வருகிறது.
    மும்பை இந்தியன்ஸ் அணிக்காக முதன்முறையாக கிறிஸ் லின், மார்கோ ஜான்சென் ஆகியோர் அறிமுகம் ஆகியுள்ளனர்
    ஐபிஎல் 2021 சீசன் டி20 கிரிக்கெட்டின் முதல் போட்டி இன்று 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றனர். இதற்கான டாஸ் சுண்டப்பட்டத்தில் ஆர்சிபி கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

    மும்பை இந்தியன்ஸ் அணி:-

    1. ரோகித் சர்மா, 2. கிறிஸ் லின், 3. சூர்யகுமார் யாதவ், 4. இஷான் கிஷன், 5. ஹர்திக் பாண்ட்யா, 6. பொல்லார்டு, 7. குருணால் பாண்ட்யா, 8. ராகுல் சாஹர், 9. மார்கோ ஜான்சென், 10. டிரென்ட் போல்ட், 11. பும்ரா.

    ஆர்சிபி அணி:

    1. விராட் கோலி, 2. ராஜத் படிதார், 3. ஏபிடி, 4. மேக்ஸ்வெல், 5. டேனில் கிறிஸ்டியன், 6. வாஷிங்டன் சுந்தர், 7. கைல் ஜேமிசன், 8. ஹர்ஷல் பட்டேல், 9. முகமது சிராஜ், 10, ஷாபாஸ் அகமது. 11. சாஹல்.
    இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் மீண்டும் கிரிக்கெட்டுக்கு திரும்பியது மகிழ்ச்சி அளிக்கிறது என டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.
    ஐபிஎல் கிரிக்கெட்டில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் சிறப்பாக விளையாடும் அணிகளில் ஒன்று. அந்த அணியின் கேப்டன் டேவிட் வார்னர் அணியை சிறப்பாக வழிநடத்திச் செல்கிறார். பந்து வீச்சில புவி, ரஷித் கான், நடராஜன் ஆகியோர் அசத்துகிறார்கள்.

    புவனேஷ்வர் குமார் கடந்த சீசனில் நான்கு போட்டிகளில் விளையாடிய நிலையில் காயத்தால் வெளியேறினார். அதன்பின் இங்கிலாந்துக்கு எதிரான சர்வதேச டி20 மற்றும் ஒருநாள் தொடரில் களம் இறங்கினார். இரண்டு தொடரிலும் சிறப்பாக விளையாடினார்.

    புவனேஷ்வர் குமார் மீண்டும் கிரிக்கெட்டிற்கு திரும்பியது சிறப்பானது என டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து டேவிட் வார்னர் கூறுகையில் ‘‘எங்கள் அணி மிகவும் பேலன்ஸ் ஆனது. ஆடும் லெவன் அணியில் சில வீரர்களை தேர்வு செய்வதில் தலைவர் உள்ளது. இருந்தாலும் அது சிறந்ததுதான்.

    புவி மீண்டும் கிரிக்கெட்டுக்கு திரும்பியதுது சிறப்பானது. இங்கிலாந்துக்கு எதிராக சிறப்பாக பந்து வீசினர். தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பந்து வீச்சு குழுவ பெற்றுள்ளோம். அதேபோல் அனல்பறக்கும் பேட்டிங் வைத்துள்ளோம்.

    புவி

    முதல் 8 முதல் 9 போட்டிகளை சென்னை மற்றும் டெல்லியில் விளையாடுகிறோம். இரண்டு ஆடுகளங்களும் ஸ்லோவாக இருக்கும். அதற்கு ஏற்றபடி விளையாடுவோம்’’ என்றார்.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத் 11-ந்தேதி முதல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
    சென்னையில் நளை மறுநாள் மார்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

    சென்னை:

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 3-வது லீக் ஆட்டம் நாளை மறுநாள் சென்னையில் நடக்கிறது. இதில் மார்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

    இப்போட்டிக்காக கொல்கத்தா அணி வீரர்கள் சென்னைக்கு வந்தடைந்தனர். அவர்கள் நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நாளை மும்பையில் நடக்கும் 2-வது லீக் ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரி‌ஷப்பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதுகின்றன.

    மும்பை:

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நாளை மும்பையில் நடக்கும் 2-வது லீக் ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரி‌ஷப்பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதுகின்றன.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங்கில் டுபிளசிஸ், சுரேஷ் ரெய்னா, அம்பதிராய்டு, ருதுராஜ் கெய்க்வாட், டோனி ஆகியோர் உள்ளனர்.

    ஆல்-ரவுண்டரில் ஜடேஜா, சாம் கர்ரன், கிருஷ்ணப்பா கவுதம், பந்துவீச்சில் தீபக் சாகர், ‌ஷர்துல் தாகூர், இம்ரான் தாகிர், கரண் சர்மா, நிகிடி ஆகியோர் உள்ளனர்.

    அணிக்கு புதுவரவாக புஜாரா, ராபின் உத்தப்பா, கிருஷ்ணப்பா கவுதம், மொய்ன் அலி ஆகியோர் வந்துள்ளார்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றியுடன் ஆட்டத்தை தொடங்குமா என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 7-வது இடத்தை பிடித்து முதல் முறையாக அடுத்த சுற்றுக்கு முன்னேறவில்லை. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய சூழ்நிலையில் உள்ளது.

    அதற்கு ஏற்றாற்போல் சென்னை அணி வீரர்கள் விளையாடுவார்களா என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இளம் மற்றும் அனுபவ வீரர்கள் உள்ளனர்.

    அந்த அணியில் ஷிகர் தவான், ரகானே, ஸ்டீபன் சுமித், பிரித்விஷா, அஸ்வின், ஸ்டோனிஸ், சாம் பில்லிங்ஸ், நார்ஜே, ரபடா, சுமித் மிஸ்ரா, உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா, கிறிஸ் வோக்ஸ் ஆகிய வீரர்கள் உள்ளனர்.

    டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர், இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தோள் பட்டையில் காயம் அடைந்ததால் ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகினார். இதனால் புதிய கேப்டனாக இளம் வீரர் ரி‌ஷப்பண்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.

    அந்த அணியும் வெற்றியுடன் போட்டி தொடரை தொடங்கும் முனைப்பில் இருக்கிறது.

    சென்னை அணியில் உள்ள அனுபவ வீரர்களுக்கும் டெல்லி அணியில் உள்ள இளம் வீரர்களுக்கும் போட்டியாக இது இருக்கும். இந்த ஆட்டம் நாளை இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

    சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் முதல் ஆட்டத்தில் விராட்கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்- ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    சென்னை:

    14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் 20 ஓவர் போட்டி தொடர் இன்று தொடங்கி மே 30-ந்தேதி வரை நடக்கிறது.

    8 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடர் சென்னை, பெங்களூர், மும்பை, அகமதாபாத், கொல்கத்தா, டெல்லி ஆகிய நகரங்களில் நடக்கிறது.

    பொதுவாக ஒவ்வொரு அணியும் உள்ளூர் மைதானத்தில் 7 லீக் ஆட்டங்களில் மோதும். இது அந்த அணிக்கு சாதகமாக அமையும். ஆனால் இந்த சீசனில் எந்த அணிக்கும் அதன் உள்ளூர் மைதானத்தில் போட்டிகள் இல்லை.

    கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக போட்டிகள் நடத்தப்படும் இடங்கள் குறைக்கப்பட்டு உள்ளன.

    அதே போல் போட்டியை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதியில்லை.

    சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் முதல் ஆட்டத்தில் விராட்கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்- ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இதற்காக இரு அணி வீரர்களும் கடும் பயிற்சியில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    நாங்கள விளையாடுவதை ரசிகர்கள் நேரில் பார்ப்பதை தவற விடுவார்கள் என்பதை உண்மையில் நான் புரிந்து கொள்கிறேன். ஆனால் நல்ல வி‌ஷயம் என்ன வென்றால் நாங்கள் இந்தியாவுக்கு திரும்பி வந்துள்ளோம்.

    மேலும் ஒரு நேர்மறையான வி‌ஷயம் என்னவென்றால் உள்ளூரில் விளையாடும் சாதகம் இல்லாமல் இருப்பது. உள்ளூர் மைதானங்களில் விளையாடாதது கூட நல்லதுதான். ஒவ்வொரு அணியும் பொதுவான இடங்களில் விளையாடுகின்றன.

    இதல் உங்கள் அணியின் வலிமை உண்மையில் வெளிப்படும். கடந்த ஐ.பி.எல். மிகவும் போட்டி நிறைந்ததாக இருந்தது. கடைசி மூன்று அல்லது நான்கு ஆட்டங்கள் வரை அனைத்து அணியும் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறுவதை கணக்கிட்டு கொண்டிருந்தன. இந்த போட்டி தொடவது மிகவும் சிறந்தது என்று நான் கருதுகிறேன். இந்த முறையும் போட்டி தொடர் சவாலாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×