என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
First-ல் யார் முதல்ல வர்ராங்க என்பது முக்கியமல்ல: மீண்டும் சிம்பு வசனத்தை பேசவைத்த மும்பை இந்தியன்ஸ்
Byமாலை மலர்10 April 2021 5:34 AM GMT
ஐந்து முறை ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ், 2013-ல் இருந்து தொடர்ந்து முதல் போட்டியில் வெற்றிபெற முடியாத நிலையில் உள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடும் 8 அணிகளில் மும்பை இந்தியன்ஸ் அணி தலைசிறந்த அணியாக உள்ளது. அந்த அணி ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
சீசன் தொடங்கும்போது அந்த அணி சிறப்பாக விளையாடாது. சீசன் செல்ல செல்ல விஸ்வரூபம் எடுக்கும். வாழ்வா? சாவா? என வந்தால் நெருக்கடியை சமாளித்து வெற்றி வாகை சூடும்.
ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் 2013-ல் இருந்து முதல் போட்டியை வென்றது கிடையாது. நேற்று ஆர்சிபி-க்கு எதிராக வெற்றி பெற்று அந்த மோசமான சாதனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நேற்றும் தோல்வியடைந்து மோசமான சாதனையை தொடர்கிறது.
2013-ல் ஆர்சிபி, 2014-ல் கொல்கத்தா, 2015-ல் கொல்கத்தா, 2016-ல் ஆர்பிஎஸ், 2017-ல் ஆர்பிஎஸ், 2018-ல் சிஎஸ்கே, 2019-ல் டெல்லி கேப்பிட்டல்ஸ், 2020-ல் சிஎஸ்கே, தற்போது ஆர்சிபி அணிக்கு எதிராக தோல்வியடைந்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X