என் மலர்tooltip icon

    விளையாட்டு

    தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க வீரர் ரீசா 8 பந்துகளில் 2 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். குயின்டன் டி காக் 27 பந்துகளில் 34 ரன்னில் வெளியேறினார்.


    20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. சூப்பர் 12 சுற்றின் குரூப் 1 பிரிவில் தற்போது நடைபெறும் வரும் 39-வது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியும் இங்கிலாந்து அணியும் விளையாடி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    இதனையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க வீரர் ரீசா 8 பந்துகளில் 2 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். குயின்டன் டி காக்  27 பந்துகளில் 34 ரன்னில் வெளியேறினார்.

    பின்னர் களமிறங்கிய ராசி வான் டெர் டுசன் - ஐடன் மார்க்ரம் ஜோடி சிறப்பாக ஆடி இருவரும் அரை சதம் அடித்தனர். இதில் ராசி வான் டெர் டுசன் 60 பந்துகளில் 94 ரன்கள் எடுத்துள்ளார்.  அந்த அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்கள் எடுத்தது.
    டி20 உலக கோப்பை போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியா வீரர்கள் டேவிட் வார்னர், மிட்செல் மார்ஸ் அரை சதம் அடித்து அசத்தினர்.
    அபுதாபி:

    டி20 உலக கோப்பை போட்டியின் இன்றைய ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. 

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் எடுத்திருந்தது. 

    158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர், பிஞ்ச் களமிறங்கினர். 3-வது ஓவரில் பிஞ்ச் 9 ரன்னில் போல்ட் என்ற முறையில் அவுட் ஆனார். 

    இதனையடுத்து டேவிட் வார்னர் - மிட்செல் மார்ஸ் ஜோடி சிறப்பாக ஆடி இருவரும் அரை சதம் அடித்தனர். 1 ரன் எடுத்தால் வெற்றி பெரும் நிலையில் கெய்ல் பந்து வீச்சில் மிட்செல் மார்ஸ் 53 ரன்னில் ஹோல்டரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 16.2 ஓவரில் ஆஸ்திரேலியா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிறப்பாக விளையாடிய டேவிட் வார்னர் 56 பந்துகளில் 89 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
    டி20 உலக கோப்பை போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியா வீரர் ஹசில்வுட் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
    அபுதாபி:

    20- ஓவர் உலக கோப்பை தொடரின் இன்று நடைபெறும் 38-வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியும் வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோதின.  இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. 

    இதனையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி தொடக்கத்தில் அதிரடியாக விளையாடியது. 2.1 ஓவரில் 30 ரன்கள் எடுத்த வெஸ்ட் இண்டீஸ் அணி 35 ரன்கள் எடுப்பதற்குள் (கெய்ல் 15, பூரன் 4, ரோஸ்டன் 0) 3 விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தது. சீரான இடைவேளியில் விக்கெட்டுகளை இழந்த அந்த அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் எடுத்தது. 

    அதிகபட்சமாக பொல்லார்ட் 44 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா அணி தரப்பில் ஹசில்வுட் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
    தங்கப் பதக்கத்துக்கான சுற்றில் பாகெர், ஈரானின் ஜாவத் பாரோகி ஜோடி, பிரெஞ்சு-ரஷிய ஜோடியை 16-8 என்ற புள்ளிக் கணக்கில் வென்றது.
    ரோக்லா: 

    போலந்து நாட்டின் ரோக்லா நகரில் ஐஎஸ்எஸ்எப் தலைவர் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா சார்பில் 7 பேர் பங்கேற்றுள்ளனர்.

    இன்று நடைபெற்ற 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிக்கான போட்டியில் இந்தியாவின் மனு பாகெர், ஈரானின் ஜாவத் பாரோகி இணைந்து  தங்கம் வென்று சாதனை படைத்தனர். தங்கப் பதக்கத்துக்கான சுற்றில் இந்த ஜோடி, பிரெஞ்சு-ரஷிய ஜோடியை 16-8 என்ற புள்ளிக் கணக்கில் வென்றது.

    இந்த பிரிவில் மற்றொரு இந்திய வீரர் அபிஷேக் வர்மா-உக்ரைன் வீராங்கனை ஒலேனாவுடன் இணைந்து பங்கேற்றார். இந்த ஜோடி 6வது இடத்தைப் பிடித்தது. சவுரப் சவுத்ரி-ஹெய்டி ஜோடி 7வது இடத்தை பிடித்தது. யாஷாஸ்வினி தேஸ்வால் ஜோடி 10வது இடத்திற்கு பின்தங்கியது.
    நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்க வேண்டும் என்று முன்னாள் தொடக்க அதிரடி ஆட்டக்காரர் ஷேவாக் வலியுறுத்தி உள்ளார்.

    புதுடெல்லி:

    நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஓவர் மற்றும் 2 டெஸ்டில் விளையாடுகிறது. 20 ஓவர் போட்டிகள் வருகிற 17, 19 மற்றும் 21-ந் தேதியில் நடக்கிறது.

    முதல் டெஸ்ட் வருகிற 25-ந் தேதியும், 2-வது டெஸ்ட் டிசம்பர் 3-ந் தேதியும் தொடங்குகிறது.

    இந்த நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்க வேண்டும் என்று முன்னாள் தொடக்க அதிரடி ஆட்டக்காரர் ஷேவாக் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு அணியை இப்போதே தயார் செய்ய வேண்டும். தற்போது உள்ள வீரர்களில் ராகுல், இஷான் கி‌ஷன், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் அடுத்த உலக கோப்பையில் ஆட வேண்டும். ருதுராஜ் கெய்க்வாட், ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும்.

    எனவே நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். உள்ளூரில் விளையாடுவதால் வீரர்களுக்கு சில அனுபவங்கள் கிடைக்கும். அதற்கு ஏற்ற வகையில் அணியை தயார் செய்ய வேண்டும்.

    சில வீரர்கள் 6 மாதங்களுக்கு மேலாக குடும்பத்தை விட்டு இருக்கிறார்கள். இதனால் சில சமயம் ஓய்வு தேவைப்படுகிறது. எனவே சீனியர் வீரர்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு ஷேவாக் கூறியுள்ளார்.

    கடந்த 3 ஆண்டுகளாக இந்திய அணி உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறது என ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார்.

    துபாய்:

    20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இந்திய அணி ஸ்காட்லாந்தை வீழ்த்தி 2-வது வெற்றியை பெற்றது.

    துபாயில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய ஸ்காட்லாந்து அணி 17.4 ஓவர்களில் 85 ரன்னில் சுருண்டது.

    தொடக்க வீரர் ஜார்ஜ்மன்சே அதிகபட்சமாக 24 ரன்னும், மைக்கேல் லெஸ்க் 21 ரன்னும் எடுத்தனர். முகமது ‌ஷமி, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அபாரமாக பந்துவீசி 15 ரன் கொடுத்து தலா 3 விக்கெட் வீழ்த்தினார்கள். பும்ராவுக்கு 2 விக்கெட்டும், அஸ்வினுக்கு ஒரு விக்கெட்டும் கிடைத்தது.

    பின்னர் விளையாடிய இந்திய அணி 81 பந்துகள் எஞ்சிய நிலையில் 86 ரன் இலக்கை எடுத்தது. இந்தியா 6.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 89 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    லோகேஷ் ராகுல் 19 பந்தில் 50 ரன்னும் (6 பவுண்டரி, 3 சிக்சர்), ரோகித் சர்மா 16 பந்தில் 30 ரன்னும் (5 பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்தனர்.

    இந்திய அணி பெற்ற 2-வது வெற்றி இதுவாகும். ஏற்கனவே ஆப்கானிஸ்தானை 66 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்து இருந்தது. இந்திய அணி 4 ஆட்டத்தில் 2 வெற்றி, 2 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் உள்ளது. முதல் 2 ஆட்டத்தில் பாகிஸ்தான் (10 விக்கெட்), நியூசிலாந்து (8 விக்கெட்) தோற்று இருந்தது.

    இந்திய அணி கடைசி லீக் ஆட்டத்தில் நமீபியாவை வருகிற 8-ந் தேதி எதிர்கொள்கிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றாலும், இந்திய அணி அரை இறுதியில் நுழைவதற்கான வாய்ப்பு குறைவே.

    ஆப்கானிஸ்தானுக்கு எதிரான நாளைய ஆட்டத்தில் நியூசிலாந்து தோற்றால் மட்டுமே இந்திய அணிக்கு வாய்ப்பு கிடைக்கும். குரூப்-2 பிரிவில் பாகிஸ்தான் அரை இறுதிக்கு ஏற்கனவே தகுதி பெற்றது. 2-வது நாடாக நியூசிலாந்து தகுதி பெற அதிக வாய்ப்பு உள்ளது.

    இந்த நிலையில் ஒரு சில ஆட்டங்களின் மோசமான நிலையை வைத்து இந்திய அணியை தவறாக மதிப்பிட வேண்டாம் என்று ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார். நேற்றைய ஆட்டத்தில் ஆட்ட நாயகன் விருது பெற்ற அவர் இது தொடர்பாக கூறியதாவது:-

    கடந்த 3 ஆண்டுகளாக இந்திய அணி உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறது. அந்த அணிதான் தற்போது ஒன்று அல்லது 2 ஆட்டங்களில் மோசமான நிலையை வெளிப்படுத்தி உள்ளது.

    இதை வைத்துக்கொண்டு இந்திய அணியை தவறாக மதிப்பிட வேண்டாம். அதில் எந்தவித நியாயமும் இல்லை.

    20 ஓவர் கிரிக்கெட்டில் எந்த அணிக்கும் ஒருசில ஆட்டங்கள் மோசமாக அமையலாம். ஆனால் அந்த தோல்விகளை பற்றி அதிகம் சிந்திக்க முடியாது. அடுத்த ஆட்டத்திற்கான வாய்ப்புகள் குறித்து யோசித்து முன்னேறி செல்ல வேண்டும்.

    நான் வழக்கமாக எப்படி பந்து வீசுகிறேனோ அதுபோல்தான் ஸ்காட்லாந்துக்கு எதிராகவும் பந்து வீசினேன். எனது திட்டத்தில் எந்த மாறுதலும் இல்லை. மிடில் ஓவர்களில் விக்கெட்டுகளை கைப்பற்றுவதே எனது பங்களிப்பாகும்.

    இந்த தொடரில் முதலில் பேட்டிங் செய்வதற்கும், 2-வது பேட்டிங் செய்வதற்கும் வேறுபாடு இருக்கிறது. பனித்துளியால் பந்துவீச்சு தன்மையில் மாற்றம் ஏற்படுகிறது. இதனால் டாஸ் வெல்வது முக்கியமானதாகும்.

    இவ்வாறு ஜடேஜா கூறினார்.

    நியூசிலாந்து அணி ஆப்கானிஸ்தானை வீழத்தினால் என்ன செய்வீர்கள் என்று அவரிடம் ஒரு நிருபர் கேட்டார். அப்படி நிகழ்ந்தால் நாங்கள் பேக்கை தூக்கிக்கொண்டு வீட்டுக்கு போவோம். அப்புறம் என்ன மிச்சம் என்று சிரித்தபடி ஜடேஜா பதில் அளித்தார். 

    டி20 உலக கோப்பை போட்டியில் வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா அணிகள் வெற்றி பெற்றால், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

    அபுதாபி:

    20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய இடங்களில் நடைபெற்று வருகிறது.

    இந்த போட்டியில் விளையாடும் 12 அணிகளும் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன், ஒரு முறை மோத வேண்டும். 2 பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதிபெறும்.

    இதுவரை குரூப்-2 பிரிவில் இருந்து பாகிஸ்தான் மட்டுமே அரை இறுதிக்கு தகுதிபெற்று உள்ளது. இன்று 2 ஆட்டங்கள் நடக்கிறது. இதில் குரூப்-1 பிரிவில் உள்ள ஆஸ்திரேலியா- வெஸ்ட் இண்டீஸ் (மாலை 3.30), இங்கிலாந்து- தென் ஆப்பிரிக்கா (இரவு 7.30) அணிகள் மோதுகின்றன.

    இந்த பிரிவில் இங்கிலாந்து 8 புள்ளியுடன் முதல் இடத்தில் உள்ளது. அந்த அணி இன்றைய ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தினால் 10 புள்ளியுடன் முதல் இடத்தை பிடித்து அரை இறுதிக்கு தகுதிபெறும்.

    ஒருவேளை அந்த அணி தென்ஆப்பிரிக்காவிடம் தோற்றாலும் வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் அந்த அணி ரன் ரேட்டில் நல்ல நிலையில் உள்ளது. மிகவும் மோசமாக தோற்றால் மட்டுமே அந்த அணி வாய்ப்பை இழக்கும் நிலை ஏற்படும்.

    ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா அணிகள் 3 வெற்றி, ஒரு தோல்வியுடன் தலா 6 புள்ளிகள் பெற்றுள்ளன. இன்றைய ஆட்டங்களில் இரு அணிகளும் வெற்றிபெறும் போது 8 புள்ளியை பெறும். அப்போது 3 நாடுகளும் (இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா) சம நிலையை பெறும்.

    ரன் ரேட் அடிப்படையில் 2 நாடுகள் அரைஇறுதிக்கு முன்னேறும். இதில் இங்கிலாந்து முன்னிலையில் உள்ளது. தென் ஆப்பிரிக்காவை விட தற்போது ஆஸ்திரேலியா ரன் ரேட்டில் சிறப்பான நிலையில் உள்ளது.

    வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று, இங்கிலாந்திடம் தென் ஆப்பிரிக்கா தோற்றால் இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.

    வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா அணிகள் வெற்றி பெற்றால், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா அரைஇறுதிக்கு தகுதி பெறும். வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து அணிகள் வெற்றி பெற்றால் இங்கிலாந்து முதல் அணியாக தகுதி பெறும். 2-வது இடத்திற்கு ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா இடையே போட்டி நிலவும். ரன் ரேட்டில் முன்னிலை பெறும் அணி தகுதி பெறும்.

    இந்த பிரிவில் இலங்கை (4 புள்ளி), வெஸ்ட் இண்டீஸ் (2 புள்ளி), வங்காளதேசம் (வெற்றி எதுவும் பெறவில்லை) அணிகள் ஏற்கனவே அரை இறுதிக்கு வாய்ப்பை இழந்துவிட்டன.

    ஹைலோ ஓபன் பேட்மிண்டன் காலிறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் லக்சயா சென் தாய்லாந்து முன்னணி வீரர் குன்லாவத்தை வீழ்த்தினார்.
    சார்புரூக்கன்:

    ஜெர்மனியில் நடைபெற்று வரும் ஹைலோ ஓபன் பேட்மிண்டன் சூப்பர் 500 போட்டியில் இந்தியாவின் இளம் வீரர் லக்சயா சென் அரையிறுதிக்கு முன்னேறினார். நேற்று இரவு நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் தாய்லாந்து முன்னணி வீரர் குன்லாவத்தை 21-18 12-21 21-19 என்ற செட்கணக்கில் வீழ்த்தினார்.

    உலக தரவரிசையில் 21ம் இடத்தில் இருக்கும் லக்சயா, இனி அரையிறுதியில் சிங்கப்பூரைச் சேர்ந்த லோ கீன் யீவை எதிர்கொள்கிறார். 

    இந்த போட்டித் தொடர், இதற்கு முன்பு சார்லோர்லக்ஸ் ஓபன் என அழைக்கப்பட்டது. கடந்த 2019ம் ஆண்டு இந்திய வீரர் லக்சயா சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
    கே.எல். ராகுல், ரோகித் சர்மா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த, ஸ்காட்லாந்துக்கு எதிரான 86 இலக்கை 6.3 ஓவரில் எட்டி இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
    டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12, குரூப்-2 லீக் ஆட்டத்தில் இந்தியா- ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டம் துபாயில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து இந்தியாவின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 85 ரன்னில் சுருண்டது. இந்த அணி சார்பில் முகமது ஷமி, ஜடேஜா தலா 3 விக்கெட்டும், பும்ரா 2 விக்கெடும் வீழ்த்தினர்.

    பின்னர் 86 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் இந்திய அணி களம் இறங்கியது. 7.1 ஓவரில் இலக்கை எட்டினால், இந்தியாவின் ரன்ரேட் அதிக அளவில் உயரும் என்ற நிலை இருந்ததால் ரோகித் சர்மா மற்றும் கே.எல். ராகுல் ஆகியோர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

    முதல் ஓவரில் ரோகித் சர்மா 1 பவுண்டரி அடிக்க 8 ரன்கள் கிடைத்தது. 2-வது ஓவரில் கே.எல். ராகுல் 2 பவுண்டரி விரட்ட 15 ரன்கள் கிடைத்தது. 3-வது ஓவரில் ரோகித் சர்மா ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸ் அடிக்க, கே.எல். ராகுல் ஒரு பவுண்டரி அடித்தார். இந்த ஓவரில் 16 ரன்கள் கிடைத்தது.

    4-வது ஓவரில் ரோகித் சர்மா ஒரு இமாலய சிக்ஸ் விளாசியதுடன், இரண்டு பவுண்டரிகள் அடித்தார். இந்த ஓவரில் 14 ரன்கள் கிடைக்க, இந்தியா 3.5 ஓவரில் 50 ரன்னைக் கடந்தது.

    5-வது ஓவரில் கே.எல். ராகுல் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸ் விளாசினார். ரோகித் சர்மா ஒரு பவுண்டரி அடித்த நிலையில் கடைசி பந்தில் எல்.பி.டபிள்யூ மூலம் வெளியேறினார். அவர் 16 பந்தில் 5 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 30 ரன்கள் சேர்த்தார். இந்தியா 5 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 70 ரன்கள் எடுத்திருந்தது.

    6-வது ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸ் அடித்த கே.எல். ராகுல் 4-வது பந்தில் ஒரு ரன் எடுத்து 18 பந்தில் அரைசதம் அடித்தார். இந்த ஓவரின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார்.

    7-வது ஓவன் 3-வது பந்தை சூர்யகுமார் யாதவ் சிக்சருக்கு தூக்க இந்தியா 6.3 ஓவரில் 2 விக்கெட்டை மட்டும் இழந்து 89 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
    ஸ்காட்லாந்து அணிக்கெதிராக இந்திய பந்து வீச்சாளர்கள் ஜடேஜா, முகமது ஷமி அபாரமாக பந்து வீசி தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
    20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 66 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி வெற்றது.

    இந்நிலையில் இந்திய அணி இன்று தனது 4-வது லீக் ஆட்டத்தில் ஸ்காட்லாந்துடன் விளையாடி வருகிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார். கடந்த மூன்று போட்டிகளில் தொடர்ந்து டாஸ் தோற்ற விராட் கோலி இன்று டாஸ் வென்றார்.

    ஸ்காட்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய வீரர்களின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் ஸ்காட்லாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. தொடக்க வீரர் முன்சே 19 பந்தில் 24 ரன்கள் எடுத்து முகமது ஷமி பந்தில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர் கைல் கோயேட்ஜர் 1 ரன்னில் பும்ரா பந்தில் ஆட்டமிழந்தார்.

    மிடில் ஆர்டர் ஓவரில் ஜடேஜா அபாரமாக பந்து வீசி 15 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார். 17-வது ஓவரை ஷமி வீசினார். இந்த ஓவரில் ஒரு ரன்அவுட் உள்பட மூன்று விக்கெட்டுகளை ஸ்காட்லாந்து இழந்தது.

    ஜடேஜா

    பும்ரா அடுத்த ஓவரை வீசினார். இந்த ஓவரின் 4-வது பந்தில் மார்க் வாட் க்ளீன் போல்டாக ஸ்காட்லாந்து 17.4 ஓவரில் 85 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

    இந்திய அணி தரப்பில் ஜடேஜா 4 ஓவரில் 15 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார். ஷமி 3 ஓவரில் 15 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார். பும்ரா 2 விக்கெட்டும், அஸ்வின் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
    பிலிப்ஸ், நீஷம் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த நியூசிலாந்து அணி 163 ரன்கள் குவித்ததால் நமீபியாவுக்கு எதிராக வெற்றி பெற்றது.
    டி20 உலக கோப்பையில் ஷார்ஜாவில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ‘சூப்பர் 12’ குரூப் 2-ல் இடம் பிடித்துள்ள நியூசிலாந்து- நமீபியா அணிகள் மோதின.

    டாஸ் வென்ற நமீபியா பந்து வீச்சை தேர்வு செய்தது. சேஸிங் செய்யும் அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருந்து வருவதால், நமீபியா வெற்றி பெற்று இந்தியாவிற்கு ஒரு சாதகமான பாதையை அமைத்து கொடுக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

    நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் 4 ஓவரில் அந்த அணி 30 ரன்கள் அடித்தது. அதன்பின் தடுமாறியது. 10 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 62 ரன்கள் எடுத்திருந்தது. 16 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 96 ரன்களே அடித்தது. 

    17-வது ஓவரில் இருந்து ஜேம்ஸ் நீசம், கிளென் பிலிப்ஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் ஆட்டம் நமீபியாவிடம் இருந்து விலகிச் சென்றது.

    17-வது ஓவரில் நியூசிலாந்து 14 ரன்களும், 18-வது ஓவரில் 21 ரன்களும், 19-வது ஓவரில் 14 ரன்களும், கடைசி ஓவரில் 18 ரன்களும் விளாசியது. கடைசி நான்கு ஓவரில் 67 ரன்கள் குவித்தது. இதனால் நியூசிலாந்து 20 ஓவரில் 4 விக்கடெ் இழப்பிற்கு 163 ரன்கள் அடித்து விட்டது. இதனால் நமீபியா ஜெயிக்க வாய்ப்பில்லை என இந்திய ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    அதேபோல் நமீபியா அணி 164 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது. அந்த அணியால் 20 ஓவரில் 111 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் நியூசிலாந்து 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நமீபியா விக்கெட்டுகளை இழக்கவில்லை என்றாலும், அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. நமீபியா அணியின் தொடக்க வீரர் லிங்கன் 25 ரன்களும், ஸ்டீபன் பார்ட் 21 ரன்களும், விக்கெட் கீப்பர் க்ரீன் 23 ரன்களும், டேவிட் வீஸ் 16 ரன்களும் சேர்த்தனர்.

    நியூசிலாந்து அணியில் டிம் சவுத்தி, டிரென்ட் பவுல்ட் தலா 2 விக்கெட்டும், மிட்செல் சான்ட்னெர், நீஷம், இஷ் சோதி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
    டி20 உலக கோப்பை போட்டியில் ஸ்காட்லாந்து அணிக்கு எதிராக டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
    துபாய்:

    20 ஓவர் உலக கோப்பை போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 66 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி வெற்றது. 

    இந்நிலையில் இந்திய அணி இன்று தனது 4-வது லீக் ஆட்டத்தில் ஸ்காட்லாந்துடன் மோதுகிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    இந்திய அணி வீரர்கள் விவரம்:-

    1. லோகேஷ் ராகுல் 2. ரோகித் சர்மா 3. சூர்யகுமார் யாதவ் 4. விராட் கோலி 5. முகமது சமி 6. ரி‌ஷப் பண்ட் 7. ஹர்த்திக் பாண்ட்யா, 8. ஜடேஜா 9. வருன் சக்கரவர்த்தி 10. அஸ்வின் 11. பும்ரா.

    ஸ்காட்லாந்து அணி வீரர்கள் விவரம்:- 

    ஜார்ஜ் முன்சி, கைல் கோட்ஸர், மேத்யூ கிராஸ், ரிச்சி பெரிங்டன், கலம் மேக்லியோட், மைக்கேல் லீஸ்க், கிறிஸ் க்ரீவ்ஸ், மார்க் வாட், சஃப்யான் ஷெரீப், அலஸ்டெய்ர் எவன்ஸ், பிராட்லி வீல்

    ×