என் மலர்tooltip icon

    விளையாட்டு

    பெண்கள் இரட்டையர் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் மனிகா பத்ரா, அர்ச்சனா கமாத் ஜோடியினர் 11-3, 11-8, 12-10 என்ற நேர் செட் கணக்கில் மெலானி டையாஸ்- அட்ரினா டையாஸ் இணையை வீழ்த்தி சாம்பியன் கோப்பையை தட்டிச் சென்றனர்.
    லாஸ்கோ:

    உலக டேபிள் டென்னிஸ் வாய்ப்புக்கான சர்வதேச போட்டி சுலோவெனியா நாட்டின் லாஸ்கோ நகரில் நடந்தது. இதில் பெண்கள் ஒற்றையர் அரைஇறுதி ஆட்டத்தில் இந்தியாவின் மனிகா பத்ரா, 11-ம் நிலை வீராங்கனையான சீனாவின் வாங் யிடியிடம் மோதினார். விறுவிறுப்பான இந்த மோதலில் வாங் யிடி 11-7, 7-11, 13-11, 10-12, 11-7, 11-5 என்ற செட் கணக்கில் மனிகாவை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். தோல்வி அடைந்த மனிகா வெண்கலப்பதக்கத்துடன் திருப்தி அடைய வேண்டியதாயிற்று.

    இதைத் தொடர்ந்து நேற்று நடந்த பெண்கள் இரட்டையர் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் மனிகா பத்ரா, அர்ச்சனா கமாத் ஜோடியினர் 11-3, 11-8, 12-10 என்ற நேர் செட் கணக்கில் சகோதரிகளான மெலானி டையாஸ்- அட்ரினா டையாஸ் (பியுர்டோ ரிகோ) இணையை வீழ்த்தி சாம்பியன் கோப்பையை தட்டிச் சென்றனர்.
    டி20 போட்டிகளில் ஆப்கானிஸ்தானின் ரஷீத் கான் அதிவேகமாக 100 விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை சமீபத்தில் படைத்தார்.
    சார்ஜா:

    டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பர்-12 சுற்றின் நேற்றைய ஆட்டத்தில் நியூசிலாந்து-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.

    முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 124 ரன்கள் எடுத்தது.

    தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து 18.1 ஓவரில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. இதன்மூலம் நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறியது. 

    இந்த ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான், நியூசிலாந்து வீரர் மார்ட்டின் கப்திலை அவுட்டாக்கினார். இது சர்வதேசம், உள்ளூர், லீக் உள்பட ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட்டில் ரஷித் கானின் 400-வது விக்கெட்டாக (289 ஆட்டம்) அமைந்தது. 

    இந்த மைல்கல்லை அதிவேகமாக எட்டிய பவுலர், மொத்தத்தில் 4-வது வீரர் என்ற சிறப்பை 23 வயதான ரஷித் கான் பெற்றார்.

    டி20 போட்டியில் அதிக விக்கெட் வீழ்த்தியோர் பட்டியலில் முதல் 3 இடங்களில் வெஸ்ட் இண்டீசின் வெயின் பிராவோ (553 விக்கெட்), சுனில் நரைன் (425 விக்கெட்), தென் ஆப்பிரிக்காவின் இம்ரான் தாஹிர் (420 விக்கெட்) ஆகியோர் உள்ளனர்.

    அபுதாபியில் நேற்று நடந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை 8 விக்கெட் வித்தியாசததில் நியூசிலாந்து வீழ்த்தியதால், இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பு பறிபோனது.
    அபுதாபி:

    டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய இடங்களில் நடைபெற்று வருகிறது.

    இந்த போட்டியில் விளையாடும் 12 அணிகளும் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன், ஒரு முறை மோத வேண்டும். 2 பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெறும்.

    இதில் குரூப்-1 பிரிவில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு ஏற்கனவே தகுதி பெற்றுவிட்டன.

    இந்நிலையில், குரூப் 2 பிரிவில் பாகிஸ்தான் அணி தான் விளையாடிய 5 போட்டிகள் அனைத்திலும் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இதனால் அந்த அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றது.

    கேன் வில்லியம்சன்

    நியூசிலாந்து அணி தான் விளையாடிய 5 போட்டிகளில் தலா 4 வெற்றியைப் பெற்று 8 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. இதனால் அந்த அணியும் அரையிறுதி வாய்ப்பை பெற்றுள்ளது.

    ஏற்கனவே, இந்தியா, ஆப்கானிஸ்தான், நமீபியா, ஸ்காட்லாந்து ஆகிய அணிகள் அரையிறுதி வாய்ப்பை இழந்துவிட்டன.

    அபுதாபியில் 10ம் தேதி நடைபெறும் முதல் அரையிறுதியில் இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

    துபாயில் 11ம் தேதி நடைபெறும் இரண்டாவது அரையிறுதியில் பாகிஸ்தான், ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

    டி20 உலக கோப்பையில், தான் விளையாடிய அனைத்துப் போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது.
    சார்ஜா:

    டி20 உலக கோப்பை  கிரிக்கெட் தொடரில் இன்று இரவு சார்ஜாவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான், ஸ்காட்லாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் குவித்தது. பாபர் அசாம் அரை சதம் கடந்து 66 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். சோயப் மாலிக் 18 பந்துகளில் 6 சிக்சர், ஒரு பவுண்டரியுடன் 54 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தார்.

    ஸ்காட்லாந்து தரப்பில் கிறிஸ் கிரீவ்ஸ் 2 விக்கெட் எடுத்தார். ஹம்சா தாகிர், சப்யான் ஷரிப் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். 
    இதையடுத்து, 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஸ்காட்லாந்து அணி களமிறங்கியது. ரிச்சி பெர்ரிங்டன் மட்டும் ஓரளவு தாக்குப் பிடித்து அரை சதம் கடந்தார். அவர் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.

    இறுதியில், ஸ்காட்லாந்து 6 விக்கெட் இழப்புக்கு 117 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் பாகிஸ்தான் 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    டி20 உலகக் கோப்பையில் இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி ஸ்காட்லாந்து அணியின் வெற்றிக்கு 190 ரன்கள் என்ற கடினமான இலக்கு நிர்ணயித்துள்ளது.
    சார்ஜா:

    டி20 உலகக் கோப்பை  கிரிக்கெட் தொடரில் இன்று இரவு சார்ஜாவில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான், ஸ்காட்லாந்து அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. துவக்க வீரர்களாக முகமது ரிஸ்வான், பாபர் ஆசம் களமிறங்கினர். ரிஸ்வான் 15 ரன்களில் வெளியேறினார். பாபர் ஆசம் அதிரடியாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டார்.

    மறுமுனையில் அவருடன் இணைந்த பக்கர் ஜமாம் 8 ரன்களிலும், முகமது ஹபீஸ் 31 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 

    பாபர் ஆசம்

    தொடர்ந்து ஸ்காட்லாந்து பந்துவீச்சாளர்களை திணறடித்த பாபர் ஆசம், அரை சதம் கடந்தார். அவர் 47 பந்துகளில் 5 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 66 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். பந்துகளை சிக்சர்களாக பறக்க விட்ட சோயிப் மாலிக் 18 பந்துகளில் 6 சிக்சர், ஒரு பவுண்டரியுடன் மிக விரைவாக அரை சதம் கடந்தார். 

    இதனால் 20 ஓவர் முடிவில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் குவித்தது. சோயிப் மாலிக் 54 ரன்களுடனும், ஆசிப் அலி 5 ரன்களுடனும்  களத்தில் இருந்தனர். ஸ்காட்லாந்து தரப்பில் கிறிஸ் கிரீவ்ஸ் 2 விக்கெட் எடுத்தார். ஹம்சா தாகிர், சப்யான் ஷரிப் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இதனையடுத்து 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஸ்காட்லாந்து அணி களமிறங்கியது.

    பாகிஸ்தான் அணி இதுவரை விளையாடிய 4 லீக் ஆட்டங்களிலும் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.
    கேப்டன் வில்லியம்சன், விக்கெட் கீப்பர் தேவன் கான்வாய் ஆகியோர் கடைசி வரை களத்தில் நின்று ஆட்டத்தை முடித்து வைத்தனர்.
    அபுதாபி:

    டி20 உலகக் கோப்பை சூப்பர்-12 சுற்றில் இன்றைய ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து அணிகள் மோதின. அபு தாபியில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் எடுத்துள்ளது. நியூசிலாந்து அணி சார்பில் டிம் சவுத்தி 2 விக்கெட்டும், டிரென்ட் பவுல்ட் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து 125 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை எட்டியது. துவக்க வீரர்கள் மார்ட்டின் குப்தில் 28 ரன்களும், டேரில் மிட்செல் 17 ரன்களும் எடுத்தனர். அவர்களைத் தொடர்ந்து கேப்டன் வில்லியம்சன் (40 ரன்- நாட் அவுட்) கீப்பர் தேவன் கான்வாய் (36 ரன் -நாட் அவுட்) ஆகியோர் கடைசி வரை களத்தில் நின்று ஆட்டத்தை முடித்து வைத்தனர். 11 பந்துகள் மீதமிருந்த நிலையில், நியூசிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்தது. இதனால், நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன் அரையிறுதிக்கும் முன்னேறியது.

    இந்த போட்டியில் நியூசிலாந்து தோல்வியடைந்தால் இந்தியா ரன்ரேட் அடிப்படையில் அரையிறுதிக்கு தகுதி பெற வாய்ப்பு இருந்தது. ஆனால் நியூசிலாந்து வெற்றி பெற்றதால் இந்தியாவின் அரையிறுதி கனவு தகர்ந்தது.
    ஐந்தாவது வீரராக களம் இறங்கிய நஜிபுல்லா ஜத்ரன் 48 பந்தில் 73 ரன்கள் விளாச, ஆப்கானிஸ்தான் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் எடுத்துள்ளது.
    டி20 உலக கோப்பையில் நியூசிலாந்து- ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் அபு தாபியில் நடைபெற்று வருகிறது. ஆப்கானிஸ்தான் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி ஹஸ்ரதுல்லா ஜஸாய்- முகமது ஷேசாத் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்.

    ஜஸாய் 2 ரன்னிலும், முகமது ஷேசாத் 4 ரன்னிலும் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த குர்பாஸ் 3 ரன்னில் வெளியேறினார். இதனால் ஆப்கானிஸ்தான் அணி 19 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

    நியூசிலாந்து வீரர்கள்

    4-வது விக்கெட்டுக்கு குல்பதின் நைப் உடன் நஜிபுல்லா ஜத்ரன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. குறிப்பாக ஜத்ரன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 48 பந்தில் 6 பவுண்டரி, 3 சிக்சருடன் 73 ரன்கள் விளாசினார்.

    அவரது அதிரடியால் ஆப்கானிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் எடுத்துள்ளது. நியூசிலாந்து அணி சார்பில் டிம் சவுத்தி 2 விக்கெட்டும், டிரென்ட் பவுல்ட் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
    நியூசிலாந்து தோற்றால் தான் இந்தியா அரை இறுதிக்கான வாய்ப்பில் இருக்க முடியும். அதாவது ஆப்கானிஸ்தானின் வெற்றிக்காக ஒட்டு மொத்த இந்திய ரசிகர்களும் பிரார்த்தனை செய்ய வேண்டிய நிலை உள்ளது.

    அபுதாபி:

    ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்றுவரும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் “குருப்-1” பிரிவில் நேற்றுடன் “லீக்“ ஆட்டங்கள் முடிந்தது.

    இதில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 3 அணிகளும் 4 வெற்றி, ஒரு தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்றன. நிகர ரன்ரேட் அடிப்படையில் இங்கிலாந்து முதலிடத்தையும், ஆஸ்திரேலியா 2-வது இடத்தையும் பிடித்து அரை இறுதிக்கு தகுதி பெற்றன.

    தென் ஆப்பிரிக்கா அதிர்ஷ்டம் இல்லாமல் 3-வது இடத்தை பிடித்து வெளியேறியது. இலங்கை (4 புள்ளி), வெஸ்ட் இண்டீஸ் (2 புள்ளி), வங்காளதேசம் (வெற்றி எதுவும் பெறவில்லை) ஆகிய அணிகள் ஏற்கனவே வெளியேறி இருந்தன.

    குரூப்-2 பிரிவில் பாகிஸ்தான் மட்டுமே தகுதி பெற்றுள்ளது. இந்தப் பிரிவில் இன்று நடைபெறும் ஆட்டங்களில் நியூசிலாந்து- ஆப்கானிஸ்தான் (மாலை 3.30), பாகிஸ்தான்-ஸ்காட்லாந்து (இரவு 7.30) அணிகள் மோதுகின்றன.

    நியூசிலாந்து அணி 3 வெற்றி, ஒரு தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணி ஆப்கானிஸ்தானை வீழ்த்தினால் 8 புள்ளியுடன் அரை இறுதிக்கு தகுதி பெறும்.

    இந்த ஆட்டத்தில் நியூசிலாந்து தோற்றால் தான் இந்தியா அரை இறுதிக்கான வாய்ப்பில் இருக்க முடியும். அதாவது ஆப்கானிஸ்தானின் வெற்றிக்காக ஒட்டு மொத்த இந்திய ரசிகர்களும் பிரார்த்தனை செய்ய வேண்டிய நிலை உள்ளது.

    நியூசிலாந்து வெற்றி பெற்றால் இந்தியா போட்டியில் இருந்து வெளியேற்றப்படும். ஆப்கானிஸ்தான் வென்று, நாளைய ஆட்டத்தில் இந்திய அணி நமீபியாவை வீழ்த்தினால் இந்தியா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய 3 நாடுகளும் 6 புள்ளியுடன் சமநிலையில் இருக்கும். ரன்ரேட் அடிப்படையில் ஒருநாடு முன்னேறும். தற்போது இந்தியாவின் ரன்ரேட் நன்றாக இருக்கிறது.

    ஆப்கானிஸ்தான் அணி நியூசிலாந்தை வீழ்த்துவது என்பது அவ்வளவு எளிது அல்ல. இதனால் நியூசிலாந்து அணியே அரையிறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது‌ . இந்தியா வெளியேற்றப்படும் நிலையில் இருக்கிறது.

    8 புள்ளியுடன் முதல் இடத்தில் இருக்கும் பாகிஸ்தான் அணி ஸ்காட்லாந்தை வீழ்த்தி 5-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

    ஸ்காட்லாந்து அணி பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி கொடுத்து முதல் வெற்றியை பெறும் வேட்கையில் இருக்கிறது.


    அமெரிக்காவை சேர்ந்த பீட் சாம்ராஸ் 6 ஆண்டுகள் நம்பர்-1 இடத்தில் இருந்ததே சாதனையாக இருந்தது. இதை ஜோகோவிச் முறியடித்து புதிய வரலாறு படைத்துள்ளார்.

    பாரீஸ்:

    உலகின் நம்பர்-1 டென்னிஸ் வீரராக ஜோகோவிச் (செர்பியா) திகழ்கிறார். 34 வயதான அவர் 20 கிராண்ட்சிலாம் பட்டங்களை வென்று ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), ரபெல் நடால் (ஸ்பெயின்) ஆகியோருடன் இணைந்து முதல் இடத்தில் உள்ளார்.

    இந்த நிலையில் ஜோகோவிச் புதிய வரலாற்று சாதனை புரிந்துள்ளார். பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் அவர் இறுதி போட்டிக்கு முன்னேறியதன் மூலம் இந்த ஆண்டு இறுதிவரை நம்பர்-1 இடத்தில் நீடிப்பார்.

    அவர் அரை இறுதியில் போலந்தை சேர்ந்த ஹூபர்ட்டை 3-6, 6-0, 7-6 (7-5) என்ற கணக்கில் வீழ்த்தினார்.

    ஜோகோவிச் தொடர்ந்து 348 வாரங்களாக நம்பர்-1 இடத்தில் நீடிக்கிறார். இந்த ஆண்டு இறுதி வரை அவர்தான் நம்பர்-1 இடத்தில் நீடிப்பார். இதன் மூலம் ஜோகோவிச் 7-வது ஆண்டாக நம்பர்-1 இடத்தில் இருக்கிறார்.

    அவர் ஏற்கனவே 2011, 2012, 2014, 2015, 2018, 2020, ஆகிய ஆண்டுகளில் நம்பர்-1 இடத்தில் இருந்தார். தற்போது இந்த ஆண்டிலும் (2021) முதல் வரிசையில் உள்ளார்.

    இதற்கு முன்பு அமெரிக்காவை சேர்ந்த பீட் சாம்ராஸ் 6 ஆண்டுகள் நம்பர்-1 இடத்தில் இருந்ததே சாதனையாக இருந்தது. இதை ஜோகோவிச் முறியடித்து புதிய வரலாறு படைத்துள்ளார். சாம்ராஸ் 1993 முதல் 1998 வரை தொடர்ந்து முதல் இடத்தில் இருந்தார்.

    ரோஜர் பெடரர் தொடர்ந்து 310 வாரங்கள் நம்பர்-1 இடத்தில் இருந்ததை ஜோகோவிச் கடந்த மார்ச் 8- ந் தேதி முறியடித்தார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நடந்த அமெரிக்க ஓபன் இறுதி போட்டியில் அவர் மெட்வதேவிடம் தோற்றார்.

    தற்போது பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் சிறப்பாக ஆடி இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளார்.

    ஜோகோவிச் ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை 9 முறையும், பிரஞ்ச் ஓபன் பட்டத்தை 2 தடவையும், விம்பிள்டனை 6 முறையும், அமெரிக்க ஓபன் பட்டத்தை 3 தடவையும் கைப்பற்றி உள்ளார்.

    வி.வி.எஸ். லட்சுமண் தேசிய கிரிக்கெட் அகடாமியின் தலைவராக பொறுப்பு ஏற்குமாறு கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலி, யெலாளர் ஜெய்ஷா ஆகியோர் வலியுறுத்தி வருகின்றனர்.

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்திரியின் பதவி காலம் உலக கோப்பையுடன் முடிந்தது.

    இதைத் தொடர்ந்து முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இதற்கு முன்பு தேசிய கிரிக்கெட் அகாடமி (என்.சி.ஏ.) தலைவராக இருந்தார்.

    இந்த நிலையில் ராகுல் டிராவிட் தலைமை பயிற்சியாளரானதால் முன்னாள் டெஸ்ட் பேட்ஸ்மேன் வி.வி.எஸ். லட்சுமண் தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக நியமிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

    கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரோடு என்.சி.ஏ. தலைமை நெருக்கமாக செயல்பட்டு வருகிறது.

    இந்த சூழலில் டிராவிட்டும், வி.வி.எஸ்.லட்சுமணும் இணைந்தால் இந்திய அணிக்கு நல்ல வீரர்கள் கிடைப்பார்கள். வலுவான தளம் அமைக்கப்படும். இதனால் வி.வி.எஸ். லட்சுமண் தேசிய கிரிக்கெட் அகடாமியின் தலைவராக பொறுப்பு ஏற்குமாறு கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலி, யெலாளர் ஜெய்ஷா ஆகியோர் வலியுறுத்தி வருகின்றனர்.

    ஆனால் லட்சுமணுக்கு சிறிய வயதில் குழந்தைகள் இருப்பதால் இந்த பதவியை ஏற்க தயக்கம் காட்டி வருகிறார். ஆனாலும் அவரை சம்மதிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருகிறது. லட்சுமணும் ஒப்புக்கொள்வார் என்று கூறப்படுகிறது. இதனால் அவர் என்.சி.ஏ.வின் தலைவராக நியமிக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.

    டெஸ்ட் கிரிக்கெட்டில் வி.வி.எஸ். லட்சுமண்-ராகுல் டிராவிட் ஜோடி பல வெற்றிகளை பெற்றுக்கொடுத்த நிலையில் பயிற்சியாளர் தளத்திலும் இருவரும் சேர உள்ளனர்.

    சார்ஜாவில் நடந்த போட்டியில் இங்கிலாந்தை 10 ரன் வித்தியாசததில் வீழ்த்தினாலும் தென் ஆப்பிரிக்கா அரையிறுதி வாய்ப்பை இழந்து தொடரில் இருந்து வெளியேறியது.
    சார்ஜா:

    டி20 உலக கோப்பை தொடரில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகள் மோதின.

    முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 189 ரன்கள் குவித்தது. இதையடுத்து, 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தது.

    இப்போட்டியின் கடைசி ஓவரை தென் ஆப்பிரிக்கா அணியின் ரபாடா வீசினார். முதல் பந்தில் வோக்ஸ், இரண்டாவது பந்தில் மார்கன், முன்றாவது பந்தில் ஜோர்டான் ஆகியோரை வெளியேற்றினார். இதன்மூலம் ரபாடா ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

    டி20 உலக கோப்பை போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய 4-வது பந்துவீச்சாளர் ரபாடா என்பது குறிப்பிடத்தக்கது.

    ஏற்கனவே, 2007ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவின் பிரெட் லீ, இந்த ஆண்டு டி20 உலக கோப்பையில் அயர்லாந்தின் கர்ட்டிஸ் கேம்பர், இலங்கை அணியின் ஹசரங்கா ஆகியோர் ஹாட்ரிக் விக்கெட் எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    சார்ஜாவில் நேற்று நடந்த போட்டியில் இங்கிலாந்து அணியை 10 ரன்கள் வித்தியாசததில் வீழ்த்தினாலும், தென் ஆப்பிரிக்கா அணி அரையிறுதி வாய்ப்பை இழந்தது.
    அபுதாபி:

    டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய இடங்களில் நடைபெற்று வருகிறது.

    இந்த போட்டியில் விளையாடும் 12 அணிகளும் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன், ஒரு முறை மோத வேண்டும். 2 பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதிபெறும்.

    ஆரோன் பின்ச்

    இதில் குரூப்-1 பிரிவில் உள்ள இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் தாம் விளையாடிய 5 போட்டிகளில் தலா 4 வெற்றியைப் பெற்று 8 புள்ளிகளுடன் சமநிலை வகித்தன.

    ஆனால், ரன்ரேட் அடிப்படையில் இங்கிலாந்து முதலிடத்திலும், ஆஸ்திரேலியா இரண்டாவது இடத்தையும் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறின. 

    ஏற்கனவே, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம் ஆகிய அணிகள் அரையிறுதி வாய்ப்பை இழந்துவிட்டன.

    ×