என் மலர்tooltip icon

    விளையாட்டு

    இந்த ஆண்டு அகானே யமாகுச்சியிடம் நடைபெற்ற 2 போட்டிகளிலும் சிந்து வெற்றி பெற்றிருந்த நிலையில் இன்றைய போட்டியில் தோல்வி அடைந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார்.
    பாலி:

    இந்தோனேஷிய மாஸ்டர்ஸ் சூப்பர் 750 பேட்மிண்டன் தொடர் இந்தோனேஷியாவில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில்,  இன்று நடைபெற்ற முதலாவது அரைஇறுதிப் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து ஜப்பானின் முன்னிலை வீராங்கனையான அகானே யமாகுச்சியை எதிர்கொண்டார்.

    ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில் 13-21, 9-21 எனும் நேர் செட் கணக்கில் ஜப்பானின்  அகானே யமாகுச்சியிடம் தோல்வியடைந்தார். இந்த தோல்வியின் மூலம், அடுத்த சுற்று போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை சிந்து இழந்துள்ளார்.

    இந்த ஆண்டு அவருடன் நடைபெற்ற 2 போட்டிகளிலும் சிந்து வெற்றி பெற்றிருந்த நிலையில் இன்றைய போட்டியில் தோல்வி அடைந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். இதனால் ரசிகர்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்தனர்.

    இத்தொடரில், இன்று நடைபெற உள்ள மற்றொரு போட்டியில் இந்தியாவின் சார்பில் கிடாம்பி ஸ்ரீகாந்த், டென்மார்க்கின் ஆண்டர்ஸ் ஆண்டன்சனை எதிர்கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    ஒரு விக்கெட் கைப்பற்றினால் நியூசிலாந்தின் பேட்டிங் வரிசையை உடைத்து விடலாம் என்று பந்துவீச்சாளர்களிடம் கூறியதாக கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

    ராஞ்சி:

    நியூசிலாந்துக்கு எதிரான 2-வது 20 ஓவர் போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

    ராஞ்சியில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய நியூசிலாந்து 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 153 ரன் எடுத்தது. இதனால் இந்தியாவுக்கு 154 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

    பிலிப்ஸ் 21 பந்தில் 34 ரன்னும் (ஒரு பவுண்டரி, 3 சிக்சர்), கப்தில் 15 பந்தில் 31 ரன்னும் (3 பவுண்டரி, 2 சிக்சர்), மிச்சேல் 28 பந்தில் 31 ரன்னும் (3 பவுண்டரி) எடுத்தனர்.

    ஹர்சல் படேல் 2 விக்கெட்டும், புவனேஸ்வர் குமார், தீபக் சாஹர், அக்‌ஷர் படேல், அஸ்வின் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    பின்னர் ஆடிய இந்தியா 16 பந்து எஞ்சி இருந்த நிலையில் இலக்கை எடுத்தது. இந்திய அணி 17.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 155 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    லோகேஷ் ராகுல் 49 பந்தில் 65 ரன்னும் (6 பவுண்டரி , 2 சிக்சர்), கேப்டன் ரோகித் சர்மா 36 பந்தில் 55 ரன்னும் (1 பவுண்டரி, 5 சிக்சர்) எடுத்தனர். இருவரும் தொடக்க விக்கெட்டுக்கு 13.2 ஓவரில் 117 ரன் எடுத்தனர். ரி‌ஷப் பண்ட் அடுத்தடுத்து 2 சிக்சர் அடித்து அணியை வெற்றிபெற வைத்தார். சவுத்தி 3 விக்கெட் கைப்பற்றினார்.

    இந்த வெற்றி மூலம் இந்தியா 2-0 இந்த கணக்கில் தொடரை கைப்பற்றியது. ஏற்கனவே ஜெய்ப்பூரில் நடந்த முதல் ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. ரோகித் சர்மா-ராகுல் டிராவிட் கூட்டணி தங்களது முதல் தொடரிலேயே வென்று முத்திரை பதித்தது.

    வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:-

    ஒட்டுமொத்த வீரர்களின் கூட்டு முயற்சி மிகவும் சிறப்பாக இருந்தது. இந்த ஆடுகளத்தில் விளையாடுவது எளிதானது அல்ல. ஆனால் நாங்கள் எங்களை பயன்படுத்திய விதம் சிறப்பாக இருந்தது.

    நியூசிலாந்து அணியின் தரமான பேட்டிங் வரிசையால் நெருக்கடி இருந்தது. ஒரு விக்கெட் கைப்பற்றினால் பேட்டிங் வரிசையை உடைத்து விடலாம் என்று பந்துவீச்சாளர்களிடம் கூறினேன்.

    அஸ்வின், அக்‌ஷர் படேல் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. எங்களது சுழற்பந்து வீரர்களின் தரம் எங்களுக்கு தெரியும். அவர்களுக்கு சுதந்திரம் கொடுப்பதுதான் எனக்கு முக்கியம்.

    தற்போதுள்ள இளம் வீரர்களை கொண்ட அணி ஆடி வருகிறது. அவர்கள் நிறைய போட்டிகளில் ஆடவில்லை. ஹர்சல் படேல் பலமுறை முதல்தர போட்டிகளில் சிறப்பாக பந்துவீசி உள்ளார். இதே மாதிரி இந்த போட்டியிலும் தனது திட்டத்தை செயல்படுத்தினார். அவர் என்ன செய்ய விரும்புகிறார் என்பது அவருக்கு தெரியும். அவர் மிகவும் திறமையான பந்துவீச்சாளர் ஆவார்.

    இவ்வாறு ரோகித் சர்மா கூறியுள்ளார்.

    இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி கொல்கத்தாவில் நாளை நடக்கிறது.

    ஆஸ்திரேலிய டெஸ்ட் கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் கம்மின்ஸ் தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டன் டிம் பெய்ன் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். சக பெண் ஊழியருக்கு பாலியல் ரீதியில் தகவல் அனுப்பிய புகாரில் அவர் பதவி விலகி உள்ளார்.

    4 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்வுக்காக டிம் பெய்ன் கேப்டன் பதவியை தற்போது இழந்துள்ளார். அவர் குறித்த தகவல்கள் வெளியானதால் இது இந்த முடிவை எடுத்துள்ளார்.

    ஆசஸ் டெஸ்ட் தொடர் தொடங்கவுள்ள நிலையில் டிம் பெய்ன் பதவி விலகி உள்ளதால் புதிய கேப்டனை தேர்வு செய்ய வேண்டிய நிலை ஆஸ்திரேலியாவுக்கு ஏற்பட்டுள்ளது.

    ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் மோதும் ஆ‌ஷஸ் டெஸ்ட் தொடர் மிகவும் முக்கியத்துவம் பெற்றது. முதல் போட்டி வருகிற 8-ந் தேதி பிரிஸ்பனில் தொடங்குகிறது.

    மொத்தம் 5 டெஸ்ட் போட்டிகள் நடைபெறுகிறது. ஜனவரி 18-ந் தேதியுடன் டெஸ்ட் தொடர் முடிவடைகிறது.

    ஆஸ்திரேலிய டெஸ்ட் கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் கம்மின்ஸ் தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் வீரர்கள் மார்க் டெய்லர், டென்னிஸ் லில்லி, ஸ்டீவ்வாக் ஆகியோர் அவரை வெகுவாக பாராட்டி இருந்தனர்.

    இதனால் டிம் பெய்ன் இடத்தில் கம்மின்ஸ் கேப்டன் ஆகிறார். 28 வயதான அவர் ஏற்கனவே துணை கேப்டனாக பணிபுரிந்து உள்ளார். இன்னும் சில தினங்களில் ஆஸ்திரேலிய தேர்வுகுழு புதிய கேப்டனை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 110 டி20 போட்டிகளில் விளையாடி 3,141 ரன்கள் சேர்த்து மூன்றாவது இடத்தில் உள்ளார்.
    ராஞ்சி:

    டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, 87 போட்டிகளில் விளையாடி 3,227 ரன்கள் எடுத்து முதலிடம் வகித்தார். இதில் 29 அரை சதங்கள் அடங்கும்.

    இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் நியூசிலாந்து தொடக்க ஆட்டக்காரர் மார்ட்டின் கப்தில் 31 ரன்னில் அவுட்டானார். அவர் டி20 கிரிக்கெட்டில் 107 போட்டிகளில் விளையாடி 3,248 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 2 சதம், 19 அரை சதங்கள் அடங்கும். இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் விராட் கோலியை முந்தி கப்தில் முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.

    வங்காளதேசத்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் பாகிஸ்தானின் ஹைதர் அலி, ஷோயப் மாலிக் ஆகியோர் டக் அவுட்டாகினர்.
    டாக்கா:

    பாகிஸ்தான் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

    இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நேற்று டாக்காவில் நடைபெற்றது. டாஸ் வென்ற வங்காளதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    முதலில் பேட் செய்த வங்காளதேசம் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் எடுத்தது. ஹோசைன் 36 ரன்னும், மெஹிதி ஹசன் 30 ரன்னும் எடுத்தனர்.

    பாகிஸ்தான் சார்பில் ஹசன் அலி 3 விக்கெட்டும், முகமது வசீம் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. ஆனால் வங்காளதேசம் அணியினரின் சிறப்பாக பந்து வீசினர். இதனால் பாகிஸ்தான் 96 ரன்னுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்து திணறியது.  பகர் சமான், குல்தீஷ் ஷா தலா 34 ரன்கள் எடுத்து அவுட்டாகினர்.

    இறுதியில், பாகிஸ்தான் அணி 19.2 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஷபாப் கான் 21 ரன்னும், முகமது நவாஸ் 18 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். இதன்மூலம் டி20 தொடரில் 1-0 என பாகிஸ்தான் முன்னிலை வகிக்கிறது. ஆட்டநாயகன் விருது ஹசன் அலிக்கு வழங்கப்பட்டது.

    இந்திய தொடக்க ஜோடி 13.2 ஓவரில் 117 ரன்கள் குவிக்க, 154 இலக்கை எளிதாக எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
    இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் கிளென் பிலிப்ஸ் அதிகபட்சமாக 21 பந்தில் 34 ரன்கள் சேர்த்தார். டேரில் மிட்செல் 28 பந்தில் 31 ரன்கள் அடித்தார். இந்திய அணி சார்பில் அறிமுக வீரர் ஹர்சல் பட்டேல் 2 விக்கெட் வீழ்த்தினார்.

    பின்னர் 154 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா சேஸிங்கை தொடங்கியது. தொடக்க வீரர்களாக களம் இறங்கிய கே.எல். ராகுல், ரோகித் சர்மா ஆகியோர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 13.2 ஓவரில் 117 ரன்கள் குவித்தது. கேல்.எல். ராகல் 46 பந்தில் 6 பவுண்டரி, 2 சிக்சருடன் 65 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ரோகித் சர்மா 36 பந்தில் 1 பவுண்டரி, 5 சிக்சருடன் 55 ரன்கள் அடித்து வெளியேறினார். அப்போது இந்தியா 15.2 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்திருந்தது.

    3-வது விக்கெட்டுக்கு வெங்கடேஷ் அய்யருடன் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். அவர் வந்த வேகத்தில் 2 பந்தில் 1 ரன் எடுத்து சவுத்தி பந்தில் ஆட்டமிழந்தார்.

    ரோகித் சர்மா

    4-வது விக்கெட்டுக்கு வெங்கடேஷ் அய்யர் உடன் ரிஷாப் பண்ட் ஜோடி சேர்ந்தார். 18-வது ஓவரின் முதல் இரண்டு பந்துகளையும்  ரிஷாப் பண்ட் இமாலய சிக்ஸ்ருக்கு தூக்க, இந்தியா 17.2 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    அத்துடன் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை கைப்பற்றி 2-0 என முன்னிலையில் உள்ளது. ரிஷாப் பண்ட் 6 பந்தில் 12 ரன்களும், வெங்கடேஷ் அய்யர் 11 பந்தில் 12 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
    இந்தியாவின் ஐந்து பந்து வீச்சாளர்களும் விக்கெட் வீழ்த்த, நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் சிறப்பான தொடக்கத்தை சரியாக பயன்படுத்த தவறினர்.
    இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் முகமது சிராஜ் நீக்கப்பட்டு ஹர்ஷல் பட்டேல் சேர்க்கப்பட்டார்.

    நியூசிலாந்து அணியின் மார்ட்டின் கப்தில், டேரில் மிட்செல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை புவனேஷ்வர் குமார் வீசினார். முதல் இரண்டு பந்துகளையும் அடுத்தடுத்து பவுண்டரிக்கு விரட்டி ரன் கணக்கை தொடங்கி வைத்தார் மார்ட்டின் கப்தில். கடைசி பந்தில் மேலும் ஒரு பவுண்டரி அடிக்க, நியூசிலாந்து அணிக்கு முதல் ஓவரில் 14 ரன்கள் கிடைத்தது.

    2-வது ஓவரில் 10 ரன்கள் அடித்தது. இதனால் 3-வது ஓவரிலேயே ரோகித் சர்மா சுழற்பந்து வீச்சை கொண்டு வந்தார். அந்த ஓவரில் நியூசிலாந்து 5 ரன்கள் அடித்தாலும், புவனேஷ்வர் குமார் வீசிய 4-வது ஓவரில் 13 ரன்கள் அடித்தது. அடுத்த ஓவரை தீபக் சாஹர் வீசினார். இந்த ஓவரில் முதல் பந்தை சிக்சருக்கு தூக்கிய கப்தில், அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். நியூசிலாந்து அணி முதல் விக்கெட்டுக்கு 4.2 ஓவரில் 48 ரன்கள் குவித்தது.

    அடுத்து வந்த சாப்மேன் 17 பந்தில் 21 ரன்கள் எடுத்து வெளியேறினார். மறுமுனையில் விளையாடிய மிட்செல் 28 பந்தில் 31 ரன்கள் எடுத்து வெளியேறினார். அதன்பின் நியூசிலாந்து அணியால் அதிரடியாக விளையாட முடியவில்லை. கிளென் பிலிப்ஸ் மட்டும் 21 பந்தில் 34 ரன்கள் சேர்த்தார்.

    அஸ்வின்

    இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் சேர்த்தது நியூசிலாந்து. இந்திய அணியில் அறிமுகமான ஹர்ஷல் பட்டேல் 4 ஓவரில் 25 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார்.

    புவனேஷ்வர் (39 ரன்), தீபக் சாஹர் (42 ரன்), அக்சார் பட்டேல் (26 ரன்), அஸ்வின் (19 ரன்) ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
    முகமது சிராஜ் காயம் காரணமாக இடம் பெறாத நிலையில், ஐ.பி.எல். தொடரில் அசத்திய ஹர்ஷல் பட்டேலுக்கு அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது.
    இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் நடக்கிறது. இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

    இந்திய அணியில் முகமது சிராஜ் நீக்கப்பட்டு ஹர்ஷல் பட்டேல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த போட்டியில் வெற்றி பெற்றால், மூன்று போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 2-0 எனக் கைப்பற்றும்.

    இந்திய அணி விவரம்:

    1. கே.எல். ராகுல், 2, ரோகித் சர்மா, 3. சூர்யகுமார் யாதவ், 4. ரிஷாப் பண்ட், 5. ஷ்ரேயாஸ் அய்யர், 6. வெங்கடேஷ் அய்யர், 7. அக்சார் பட்டேல், 8. அஸ்வின், 9. புவனேஷ்வர் குமார், 10. தீபக் சாஹர், 11. ஹர்சல் பட்டேல்.

    நியூசிலாந்து அணி விவரம்:

    1. மார்ட்டின் கப்தில், 2. டேரில் மிட்செல், 3. மார்க் சாப்மேன், 4. கிளென் பிலிப்ஸ், 5. டிம் செய்பெர்ட், 6. ஜேம்ஸ் நீஷம், 7. இஷ் சோதி, 8. மிட்செல் சான்ட்னர், 9. டிம் சவுத்தி, 10. ஆடம் மில்னே, 11. டிரென்ட் பவுல்ட்.
    நான் சந்தித்ததிலேயே இந்த காலகட்டத்தில் மிகவும் சிறந்த வீரரும், உத்வேகம் தரக்கூடிய வீரரும் டிவில்லியர்ஸ்தான் என இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.
    தென் ஆப்பிரிக்கா அணியின் அதிரடி பேட்ஸ்மேனான ஏபி டிவில்லியர்ஸ் இன்று அனைத்து வித கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவரது ஓய்வுக்கு ஆர்பிசி அணியின் முன்னாள் கேப்டனும் இந்திய அணியின் கேப்டனுமான விராட் கோலி டுவிட் செய்துள்ளார்.

    டிவில்லியர்ஸ் ஓய்வு குறித்து விராட் கோலி கூறியதாவது:- உங்கள் ஓய்வு என் இதயத்தை புண்படுத்தியது. இந்த காலகட்டத்தில் நான் சந்தித்ததிலேயே மிகவும் சிறந்த வீரரும், உத்வேகம் தரக்கூடிய வீரரும் டிவில்லியர்ஸ் தான். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக நீங்கள் வழங்கிய பங்களிப்பை நினைத்து நீங்கள் பெருமைப்படலாம். நமது பந்தம் விளையாட்டிற்கு அப்பாற்பட்டது. இது தொடரும். ஐ லவ் யூ டிவில்லியர்ஸ் என விராட் கோலி பதிவிட்டுள்ளார்.

    விராட் கோலியின் பதிவிற்கு ஏபி டிவில்லியர்ஸ் லவ் யூ டு ப்ரோ என பதிலளித்துள்ளார்.

    ஏபி டி வில்லியர்ஸ் 145 போட்டிகளில் 41.10 சராசரியுடன் 4522 ரன்கள் எடுத்து ஆர்சிபி அணியின் அதிக ரன்கள் எடுத்தவர் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். விராட் கோலி 6707 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார்.
    தென்னாப்பிரிக்காவிலும், இந்தியாவிலும், நான் விளையாடிய எல்லா இடங்களிலும் எனக்கு கொடுத்த ஆதரவிற்கு நான் நன்றியுடன் இருக்கிறேன் என டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
    தென் ஆப்பிரிக்கா:

    தென் ஆப்பிரிக்காவின் கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவரான ஏபி டிவில்லியர்ஸ் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலுமிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை அவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 'எனது பெற்றோர்கள், சகோதரர்கள், எனது மனைவி டேனியல்லே மற்றும் எனது குழந்தைகள் செய்த தியாகங்கள் இல்லாமல் எதுவும் சாத்தியமில்லை என்பதை நான் அறிவேன். எங்கள் வாழ்க்கையின் அடுத்த அத்தியாயத்தை முதலிடத்தில் வைக்கக் காத்திருக்கிறேன்.

    நான் பயணித்த அதே பாதையில் பயணித்த என்னுடைய அணியினருக்கும், ஒவ்வொரு எதிரணியினருக்கும், ஒவ்வொரு பயிற்சியாளருக்கும், ஒவ்வொரு பிசியோ தெரபிஸ்ட் மற்றும் ஒவ்வொரு ஊழியர்களுக்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன், மேலும் தென்னாப்பிரிக்காவிலும், இந்தியாவிலும், நான் விளையாடிய எல்லா இடங்களிலும் எனக்கு கொடுத்த ஆதரவிற்கு நான் நன்றியுடன் இருக்கிறேன்.

    கிரிக்கெட் என்னிடம் மிகவும் அன்பாக இருந்தது. டைட்டனுக்காக, அல்லது புரோட்டீசுக்காக, அல்லது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்காக அல்லது உலகம் முழுவதும் விளையாடினாலும், கிரிக்கெட் எனக்கு கற்பனை செய்ய முடியாத அனுபவங்களையும் வாய்ப்புகளையும் கொடுத்துள்ளது, அதற்கு நான் எப்போதும் நன்றியுடன் இருப்பேன்.

    இது ஒரு நம்பமுடியாத பயணம், ஆனால் நான் அனைத்து கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். எனது சகோதரர்களுடன் வீட்டிற்கு பின்புறம் விளையாடியதிலிருந்து, நான் முழு மகிழ்ச்சியுடனும், கட்டுக்கடங்காத உற்சாகத்துடனும் விளையாடி இருக்கிறேன். இப்போது, 37 வயதில், அந்தச் சுடர் அவ்வளவு பிரகாசமாக எரிவதில்லை.' என்று தெரிவித்துள்ளார்.
    துருக்கி வீராங்கனை நெஸ்லிகனுடன் இதுவரை நேருக்கு நேர் மோதிய 4 போட்டிகளிலும் சிந்து வெற்றி பெற்றுள்ளார்.
    பாலி:

    இந்தோனேசிய மாஸ்டர்ஸ் சூப்பர்-750 பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து (வயது 26) அரையிறுதிக்கு முன்னேறினார். இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில், பி.வி.சிந்து, துருக்கி வீராங்கனை நெஸ்லிகன் யிஜித்தை எதிர்கொண்டார்.

    துவக்கம் முதலே ஆட்டத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த சிந்து, 35 நிமிடங்களில் 21-13, 21-10 என்ற நேர்செட்களில் வெற்றி பெற்றார். நெஸ்லிகனும் சிந்துவும் இதுவரை 4 முறை நேருக்கு நேர் மோதி உள்ளனர். இதில் 4 போட்டிகளிலும் சிந்து வெற்றி பெற்றுள்ளார். கடந்த மாதம் டென்மார்க் ஓபனிலும் நெஸ்லிகனை வீழ்த்தினார்.

    இந்தோனேசிய மாஸ்டர்ஸ் தொடரில் இதுவரை எளிதாக வெற்றி பெற்ற பி.வி.சிந்துவுக்கு அரையிறுதியில் கடும் சவால் காத்திருக்கிறது. ஜப்பான் வீராங்கனை அகானே யமகுச்சி அல்லது தாய்லாந்து வீராங்கனை சோச்சுவாங்குடன் மோதுவார்.
    பாலியல் முறைகேடு சம்பவத்தினால் தான் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக டிம் பெய்ன் தெரிவித்துள்ளார்.
    ஆஸ்திரேலியா:

    2017 ஆம் ஆண்டு நடந்த டெஸ்ட் போட்டியின் போது பந்தை சேதப்படுத்திய காரணத்திற்காக அப்போதைய ஆஸ்திரேலிய டெஸ்ட் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தின் பதவி பறிக்கப்பட்டு டிம் பெயினிடம் வழங்கப்பட்டது. அப்போது இருந்து ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பராக டிம் பெயின் செயல்பட்டு வருகிறார்.

    இந்த நிலையில் மீண்டும்  ஒரு முறை ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் புகாரில் சிக்கி தனது கேப்டன் பதவியை  ராஜினாமா செய்துள்ளார். 

    சக பெண் ஊழியருக்கு தவறான குறுஞ்செய்திகளை அனுப்பியதாக டிம் பெயின் மீது பாலியல் புகார் எழுந்தது. இந்த நிலையில் இன்று காலை தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்வதாக  டிம் பெயின் அறிவித்துள்ளார்.

    இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இந்த தொடருக்கு இன்னும் ஒரு மாதம் கூட இல்லாத நிலையில் டிம் பெயின் இந்த முடிவை அறிவித்துள்ளார்.

    இது குறித்து டிம் பெயின் கூறியதாவது :

    ஏறக்குறைய நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நான் அப்போதைய பெண் சக ஊழியருக்கு குறுஞ்செய்தி அனுப்பி இருந்தேன். இந்த தனிப்பட்ட உரைப் பரிமாற்றம் பொது வெளியில்  வரப் போகிறது என்பதை நான் சமீபத்தில் அறிந்தேன்.ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருப்பதற்கான தரத்தை 2017 ஆம் ஆண்டு நான் செய்த அந்த செயல்கள் பாதிக்கின்றன.

    எனது மனைவிக்கும், எனது குடும்பத்தினருக்கும், மற்ற தரப்பினருக்கும் நான் ஏற்படுத்திய காயம் மற்றும் வலிக்காக ஆழ்ந்த வருந்துகிறேன். ஏதேனும் சேதம் ஏற்பட்டால் வருந்துகிறேன். இது எங்கள் விளையாட்டின் நற்பெயரைக் கெடுக்கும். மேலும் நான் கேப்டன் பதவியில் இருந்து விலகுவது சரியான முடிவு என்று நான் நம்புகிறேன்.

    ஆஷஸ் தொடருக்கு முன்னால் அணிக்கு விரும்பத்தகாத இடையூறாக மாறுவதை நான் விரும்பவில்லை. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டனாக எனது பங்கை நான் விரும்பி செய்துள்ளேன். ஆஸ்திரேலிய  டெஸ்ட் அணியை வழிநடத்தியது எனது விளையாட்டு வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய பாக்கியம்.

    எனது அணியினரின் ஆதரவிற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன், நாங்கள் ஒன்றாகச் சாதித்ததில் பெருமைப்படுகிறேன். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் உறுதியான உறுப்பினராக எப்போதும்  நான் இருப்பேன். அடுத்து வரும் ஆஷஸ் சுற்றுப்பயணத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன் .

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 
    ×