என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
2-வது டி20 கிரிக்கெட்: இந்தியாவுக்கு 154 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது நியூசிலாந்து
Byமாலை மலர்19 Nov 2021 3:38 PM GMT
இந்தியாவின் ஐந்து பந்து வீச்சாளர்களும் விக்கெட் வீழ்த்த, நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் சிறப்பான தொடக்கத்தை சரியாக பயன்படுத்த தவறினர்.
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் முகமது சிராஜ் நீக்கப்பட்டு ஹர்ஷல் பட்டேல் சேர்க்கப்பட்டார்.
நியூசிலாந்து அணியின் மார்ட்டின் கப்தில், டேரில் மிட்செல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை புவனேஷ்வர் குமார் வீசினார். முதல் இரண்டு பந்துகளையும் அடுத்தடுத்து பவுண்டரிக்கு விரட்டி ரன் கணக்கை தொடங்கி வைத்தார் மார்ட்டின் கப்தில். கடைசி பந்தில் மேலும் ஒரு பவுண்டரி அடிக்க, நியூசிலாந்து அணிக்கு முதல் ஓவரில் 14 ரன்கள் கிடைத்தது.
2-வது ஓவரில் 10 ரன்கள் அடித்தது. இதனால் 3-வது ஓவரிலேயே ரோகித் சர்மா சுழற்பந்து வீச்சை கொண்டு வந்தார். அந்த ஓவரில் நியூசிலாந்து 5 ரன்கள் அடித்தாலும், புவனேஷ்வர் குமார் வீசிய 4-வது ஓவரில் 13 ரன்கள் அடித்தது. அடுத்த ஓவரை தீபக் சாஹர் வீசினார். இந்த ஓவரில் முதல் பந்தை சிக்சருக்கு தூக்கிய கப்தில், அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். நியூசிலாந்து அணி முதல் விக்கெட்டுக்கு 4.2 ஓவரில் 48 ரன்கள் குவித்தது.
அடுத்து வந்த சாப்மேன் 17 பந்தில் 21 ரன்கள் எடுத்து வெளியேறினார். மறுமுனையில் விளையாடிய மிட்செல் 28 பந்தில் 31 ரன்கள் எடுத்து வெளியேறினார். அதன்பின் நியூசிலாந்து அணியால் அதிரடியாக விளையாட முடியவில்லை. கிளென் பிலிப்ஸ் மட்டும் 21 பந்தில் 34 ரன்கள் சேர்த்தார்.
இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் சேர்த்தது நியூசிலாந்து. இந்திய அணியில் அறிமுகமான ஹர்ஷல் பட்டேல் 4 ஓவரில் 25 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார்.
புவனேஷ்வர் (39 ரன்), தீபக் சாஹர் (42 ரன்), அக்சார் பட்டேல் (26 ரன்), அஸ்வின் (19 ரன்) ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X