என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்தோனேஷிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: அரைஇறுதியில் பி.வி.சிந்து தோல்வி
Byமாலை மலர்20 Nov 2021 9:26 AM GMT (Updated: 20 Nov 2021 9:26 AM GMT)
இந்த ஆண்டு அகானே யமாகுச்சியிடம் நடைபெற்ற 2 போட்டிகளிலும் சிந்து வெற்றி பெற்றிருந்த நிலையில் இன்றைய போட்டியில் தோல்வி அடைந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார்.
பாலி:
இந்தோனேஷிய மாஸ்டர்ஸ் சூப்பர் 750 பேட்மிண்டன் தொடர் இந்தோனேஷியாவில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில், இன்று நடைபெற்ற முதலாவது அரைஇறுதிப் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து ஜப்பானின் முன்னிலை வீராங்கனையான அகானே யமாகுச்சியை எதிர்கொண்டார்.
ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில் 13-21, 9-21 எனும் நேர் செட் கணக்கில் ஜப்பானின் அகானே யமாகுச்சியிடம் தோல்வியடைந்தார். இந்த தோல்வியின் மூலம், அடுத்த சுற்று போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை சிந்து இழந்துள்ளார்.
இந்த ஆண்டு அவருடன் நடைபெற்ற 2 போட்டிகளிலும் சிந்து வெற்றி பெற்றிருந்த நிலையில் இன்றைய போட்டியில் தோல்வி அடைந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். இதனால் ரசிகர்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்தனர்.
இத்தொடரில், இன்று நடைபெற உள்ள மற்றொரு போட்டியில் இந்தியாவின் சார்பில் கிடாம்பி ஸ்ரீகாந்த், டென்மார்க்கின் ஆண்டர்ஸ் ஆண்டன்சனை எதிர்கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X