என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஐ லவ் யூ ஏபிடி - உணர்ச்சி பொங்க விடை கொடுத்த விராட் கோலி
Byமாலை மலர்19 Nov 2021 11:32 AM GMT (Updated: 19 Nov 2021 11:33 AM GMT)
நான் சந்தித்ததிலேயே இந்த காலகட்டத்தில் மிகவும் சிறந்த வீரரும், உத்வேகம் தரக்கூடிய வீரரும் டிவில்லியர்ஸ்தான் என இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.
தென் ஆப்பிரிக்கா அணியின் அதிரடி பேட்ஸ்மேனான ஏபி டிவில்லியர்ஸ் இன்று அனைத்து வித கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவரது ஓய்வுக்கு ஆர்பிசி அணியின் முன்னாள் கேப்டனும் இந்திய அணியின் கேப்டனுமான விராட் கோலி டுவிட் செய்துள்ளார்.
டிவில்லியர்ஸ் ஓய்வு குறித்து விராட் கோலி கூறியதாவது:- உங்கள் ஓய்வு என் இதயத்தை புண்படுத்தியது. இந்த காலகட்டத்தில் நான் சந்தித்ததிலேயே மிகவும் சிறந்த வீரரும், உத்வேகம் தரக்கூடிய வீரரும் டிவில்லியர்ஸ் தான். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக நீங்கள் வழங்கிய பங்களிப்பை நினைத்து நீங்கள் பெருமைப்படலாம். நமது பந்தம் விளையாட்டிற்கு அப்பாற்பட்டது. இது தொடரும். ஐ லவ் யூ டிவில்லியர்ஸ் என விராட் கோலி பதிவிட்டுள்ளார்.
விராட் கோலியின் பதிவிற்கு ஏபி டிவில்லியர்ஸ் லவ் யூ டு ப்ரோ என பதிலளித்துள்ளார்.
ஏபி டி வில்லியர்ஸ் 145 போட்டிகளில் 41.10 சராசரியுடன் 4522 ரன்கள் எடுத்து ஆர்சிபி அணியின் அதிக ரன்கள் எடுத்தவர் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். விராட் கோலி 6707 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X