என் மலர்
விளையாட்டு
- விராட் கோலி சிக்ஸ் அடித்து சதம் அடித்ததுடன், அணியை வெற்றி பெற வைத்தார்
- உலகக் கோப்பையில் விராட் கோலியின் 3-வது சதம் இதுவாகும்
புனேயில் நடைபெற்ற இந்தியா- வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி சிறப்பாக விளையாடி சதம் விளாசினார். கடைசியில் இந்திய அணிக்கு 20 ரன்கள் தேவை என்ற நிலையில், விராட் கோலி 80 ரன்கள் எடுத்திருந்தார். அதன்பின் கே.எல். ராகுல் ஒருபுறம் நிற்க, அனைத்து ரன்களையும் விராட் கோலி அடித்து சதத்தை தொட்டார்.
சதம் அடித்த அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. அப்போது விராட் கோலி பேசியதாவது:-
ஆட்ட நாயகன் விருதை ஜடேஜாவிடம் இருந்து திருடியதற்காக மன்னிப்பு கேட்கிறேன். அணிக்கு மிகப்பெரிய பங்களிப்பை கொடுக்க விரும்பினேன். உலகக் கோப்பை கிரிக்கெட்டில் சில அரைசதங்கள் அடித்துள்ளேன். ஆனால், அவற்றை சதமாக மாற்ற முடியாமல் போனது. நான் கடந்த சில வருடங்களாக அணிக்கு செய்து வரும் பணியின் தொடர்ச்சியாக, கடைசி வரை களத்தில் நின்று போட்டியை முடித்து வைக்க விரும்பினேன்.
ஆடுகளம் பேட்டிங் செய்ய சிறப்பாக இருந்தது. எனது ஆட்டத்தை விளையாட அனுமதித்தது. தேவைப்படும் போதெல்லாம் பவுண்டரிகள் அடிக்க, பீல்டர்களுக்கு இடையில் பந்தை அடிப்பதற்கு, விரைவாக ரன்கள் அடிக்க முடிந்தது.
வீரர்கள் அறையில் சிறந்த சூழ்நிலை நிலவி வருகிறது. ஒரு குழுவாக ஒருவரையொருவர் சிறப்பாக நேசிக்கிறோம். அதை நீங்கள் ஆடுகளத்தில் பார்ப்பீர்கள். இது நீண்ட நாள் நடைபெறும் தொடர். வீரர்கள் ஆடுகளத்தில் இதுபோன்று சிறப்பாக விளையாட, வீரர்கள் அறையில் சில உத்வேகம் தேவை. சொந்த மண்ணில், ரசிகர்கள் முன் விளையாடுவதை சிறந்த உணர்வு. இதை நாங்கள் அதிக அளவில் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம்.
வங்காளதேசம் அணி வீரர்கள் சிறப்பாக விளையாடிய நேரத்தில் ஜடேஜா சிறப்பாக பந்து வீசி 10 ஓவரில் 38 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ரன்ரேட் அடிப்படையில் நியூசிலாந்து முதல் இடத்தை பிடித்துள்ளது
- தென்ஆப்பிரிக்கா 3-வது இடத்திலும், பாகிஸ்தான் 4-வது இடத்திலும் உள்ளன
50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் தலா நான்கு போட்டிகளில் விளையாடி தோல்வியை சந்திக்காமல் உள்ளன.
இரு அணிகளுக்குமிடையில் புள்ளிகள் பட்டியலில் கடும் போட்டி நிலவி வருகிறது. தலா மூன்று போட்டிகள் முடிவில் இந்தியா முதலிடம் வகித்தது. சென்னையில் நடைபெற்ற ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நியூசிலாந்து வெற்றி பெற்று முதல் இடம் பிடித்தது.
நேற்று வங்காளதேசம் அணியை வீழ்த்தியதன் மூலம் இந்தியா 4 வெற்றிகளுடன் முதல் இடம் பிடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரன்ரேட் அடிப்படையில் நியூசிலாந்து முதலிடம் வகிக்கிறது. நியூசிலாந்து 1.923 ரன்ரேட் உடன் முதலிடத்தில் உள்ளது. இந்தியா 1.659 ரன்ரேட் உடன் 2-வது இடத்தில் உள்ளது.
வரும் போட்டிகளில் இந்தியா அதிக ரன்ரேட் அடிப்படையில் வெற்றி பெற்றால் அல்லது நியூசிலாந்து தோல்வியை சந்திக்கும் நிலை ஏற்பட்டால் இந்தியா முதல் இடத்தை பிடிக்கும்.
தென்ஆப்பிரிக்கா 3 போட்டிகளில் 2-ல் வெற்றி பெற்று ரன்ரேட் அடிப்படையில் 3-வது இடத்தை பிடித்துள்ளது. பாகிஸ்தான் 3 போட்டிகளில் 2-ல் வெற்றி பெற்று ரன்ரேட் அடிப்படையில் 4-வது இடத்தை பிடித்துள்ளது.
இங்கிலாந்து 5-வது இடத்தையும், ஆஸ்திரேலியா 6-வது இடத்தையும் பிடித்துள்ளது. வங்காளதேசம், நெதர்லாந்து, ஆப்கானிஸ்தான், இலங்கை அணிகள் முறையே 7 முதல் 10-வது இடங்களை பிடித்துள்ளன.
- கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
- இந்திய அணி தொடர்ச்சியாக 4 வெற்றிகளை பதிவுசெய்து புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
புதுடெல்லி:
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெற்ற 17-வது லீக்கில் முன்னாள் சாம்பியன் இந்திய அணி, வங்காளதேசத்துடன் மோதின. இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பேட்டிங்கை தேர்வுசெய்தது. அதன்படி அந்த அணி முதலில் பேட்டிங் செய்து 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 256 ரன்கள் எடுத்தது. பின்னர் 257 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி பேட்டிங் செய்தது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 88 ரன்கள் குவித்தது. அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சுப்மன் கில் அரைசதம் அடித்து 53 ரன்களில் அவுட்டானார். அடுத்து வந்த ஸ்ரேயஸ் ஐயர் 19 ரன்கள் எடுத்து அவுட்டானார். அடுத்து களமிறங்கிய விராட் கோலி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுபுறம் அவருக்கு கே.எல்.ராகுல் பக்கபலமாக இருந்தார். கடைசியில் சிக்சர் அடித்து தனது சதத்தை பூர்த்தி செய்ததுடன், ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்துவைத்தார் விராட் கோலி.
முடிவில் இந்திய அணி 41.3 ஓவர்களில் வெற்றி இலக்கை கடந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. விராட் கோலி 103 ரன்களுடனும், கே.எல்.ராகுல் 34 ரன்களும் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தனர். இந்திய அணி, உலகக்கோப்பை தொடரில் தொடர்ச்சியாக 4 வெற்றிகளை பதிவுசெய்து புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. தொடர்ந்து இந்திய அணி, தனது அடுத்த லீக் ஆட்டத்தில் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ள நியூசிலாந்து அணியுடன் வரும் ஞாயிற்றுக்கிழமை மோதுகிறது.
இந்நிலையில் வங்காளதேசத்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், "மற்றொரு விதிவிலக்கான போட்டி..! வங்கதேசத்துக்கு எதிரான அபார வெற்றியால் எங்கள் கிரிக்கெட் அணிக்கு பெருமை. உலகக் கோப்பையில் தற்போது எங்கள் அணி சிறப்பான பார்மில் உள்ளது. அடுத்த போட்டிக்கு வாழ்த்துக்கள்" என்று அதில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
- ஜடேஜா, சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
- இந்திய கேப்டன் ரோகித் ஷர்மா 48 ரன்களை எடுத்தார்.
உலகக் கோப்பை 2023 தொடரில் இந்தியா மற்றும் வங்காளதேசம் அணிகள் இடையேயான போட்டி புனேவில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேசம் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
வங்காளதேசம் அணிக்கு துவக்க வீரர்களாக களமிறங்கிய தன்சித் ஹாசன் மற்றும் லிட்டன் தாஸ் ஜோடி சிறப்பான துவக்கம் கொடுத்தது. இருவரும் முறையே 51 மற்றும் 66 ரன்களை குவித்து ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய நஜ்முல் ஹூசைன் மற்றும் மெஹிடி ஹாசன் முறையே 8 மற்றும் 3 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தனர்.
போட்டி முடிவில் வங்காளதேசம் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 256 ரன்களை குவித்தது. இந்தியா சார்பில் சிறப்பாக பந்துவீசிய ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஷர்துல் தாக்கூர் மற்றும் குல்தீப் யாதவ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இந்திய அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் ரோகித் ஷர்மா மற்றும் சுப்மன் கில் நல்ல துவக்கம் கொடுத்தனர். இருவரும் முறையே 48 மற்றும் 53 ரன்களை குவித்தனர். அடுத்து களமிறங்கிய விராட் கோலி நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தார். இவருடன் விளையாடிய ஸ்ரேயாஸ் அய்யர் 19 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த கே.எல். ராகுல் பொறுப்பாக ஆடினார். இதன் காரணமாக இந்திய அணி 41.3 ஓவர்கள் முடிவில் 261 ரன்களை குவித்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. விராட் கோலி 97 பந்துகளில் 103 ரன்களை அடிக்க, கே.எல். ராகுல் 34 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
- முஷ்ஃபிகுர் ரஹிம் 38 ரன்களை குவித்து பெவிலியன் திரும்பினார்.
- ஜடேஜா, சிராஜ், பும்ரா தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
உலகக் கோப்பை 2023 தொடரில் இந்தியா மற்றும் வங்காளதேசம் அணிகள் இடையேயான போட்டி புனேவில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேசம் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
வங்காளதேசம் அணிக்கு துவக்க வீரர்களாக களமிறங்கிய தன்சித் ஹாசன் மற்றும் லிட்டன் தாஸ் ஜோடி சிறப்பான துவக்கம் கொடுத்தது. இருவரும் முறையே 51 மற்றும் 66 ரன்களை குவித்து ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய நஜ்முல் ஹூசைன் மற்றும் மெஹிடி ஹாசன் முறையே 8 மற்றும் 3 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தனர்.

இவர்களை தொடர்ந்து வந்த தௌஹித் 16 ரன்களில் ஆட்டமிழந்தார். இவருடன் ஆடி வந்த முஷ்ஃபிகுர் ரஹிம் 38 ரன்களை குவித்து பெவிலியன் திரும்பினார். மஹ்மதுல்லா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர் 36 பந்துகளில் 46 ரன்களை குவித்தார். போட்டி முடிவில் வங்காளதேசம் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 256 ரன்களை குவித்தது.
இந்தியா சார்பில் சிறப்பாக பந்துவீசிய ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஷர்துல் தாக்கூர் மற்றும் குல்தீப் யாதவ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
- விராட் கோலி சதம், சுப்மன் கில் அரைசதம்
- 41.3 ஓவரில் இந்தியா சேஸிங் செய்தது
உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா- வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான போட்டி புனேயில் நடைபெற்றது. டாஸ் வென்று பேட்டிங் செய்த வங்காளதேசம் 256 ரன்கள் அடித்தது. பின்னர் இந்தியா 3 விக்கெட்டை மட்டுமே இழந்து சேஸிங் செய்தது.
- மும்பை- புனே நெடுஞ்சாலையில் அதிவேகமாக காரில் வந்துள்ளார்
- ஆன்லைன் மூலம் அபராதம் ரசீது அனுப்பப்பட்டுள்ளது
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக ரோகித் சர்மா உள்ளார். இவரது தலைமையில் இந்திய அணி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இந்தியா கடந்த 14-ந்தேதி அகமதாபாத்தில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இன்று மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே நகரில் வங்காளதேசத்தை எதிர்கொள்கிறது. இரண்டு போட்டிக்கும் இடையில் சுமார் நான்கு நாட்கள் இடைவெளி இருந்ததால் ரோகித் சர்மா சொந்த வேலை காரணமாக மும்பை சென்றதாக தெரிகிறது.
நேற்று மீண்டும் அணியுடன் இணைய சொகுசு காரில் வந்துள்ளார். அவர் மும்பை- புனே எக்ஸ்பிரஸ்வே சாலையில் மின்னல் வேகத்தில் வந்துள்ளார். இந்த சாலையில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் 200 கி.மீ. வேகத்தையும் தாண்டி, 215 கி.மீ. வேகத்தில் அவரது கார் வந்துள்ளது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து அவரது வாகனம், போக்குவரத்து விதிமுறையை மீறியதற்கான மூன்று அபராத ரசீதை பெற்றுள்ளது. மைதானத்தில் எவ்வளவு வேகத்தையும் காட்டலாம். ஆனால், சாலையில் வேகத்தை காட்டினால் அபராதம்தான் மிஞ்சும்.
ரோகித் சர்மா சென்றது லாம்போர்கினி உருஸ் சொகுசு கார். இந்த வாகனத்தின் நம்பர் 264 ஆகும்.
- பேட்ஸ்மேன்கள் ஸ்லெட்ஜிங்கை விரும்புவார்கள்
- விராட் கோலி என்னை ஸ்லெட்ஜிங் செய்ய முயற்சிப்பார்
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இந்தியா- வங்காளதேசம் அணிகள் புனே நகரில் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டி மதியம் 2 மணிக்கு நடக்கிறது. மூன்று வெற்றிகளை பதிவு செய்துள்ள இந்தியா, இந்த போட்டியில் எளிதில் வெற்றி பெற வாய்ப்புள்ளது. இருந்தபோதிலும், வங்காளதேச அணியை எளிதாக எடுத்துக் கொள்ளாது.
இந்தியாவுக்கு எதிராக விளையாடும்போது வங்காளதேச அணியினர் அதிக உத்வேகத்துடன் விளையாடுவார்கள். இதனால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
இந்த நிலையில் விராட் கோலி குறித்து வங்காளதேச அணியின் முன்னணி பேட்ஸ்மேனான முஷ்பிகுர் ரஹிம் கூறியதாவது:-
சர்வதேச அளவில் சில பேட்ஸ்மேன்கள் ஸ்லெட்ஜிங்கை விரும்புவார்கள். ஏனென்றால், அது அவர்களுக்கு உந்துதலாக இருக்கும். ஆகவே, நான் ஒருபோதும் விராட் கோலியை ஸ்லெட்ஜிங் செய்யமாட்டேன். ஏனென்றால் அவர் உந்துதல் பெற்றுவிடுவார். எங்களுடைய பந்து வீச்சாளர்களிடம், எவ்வளவு விரைவாக வீழ்த்த முடியுமோ, அவ்வளவு விரைவாக அவரை வீழ்த்துமாறு கூறுவேன்.
விராட் கோலியை எதிர்த்து நான் விளையாடும் போதெல்லாம், நான் பேட்டிங் செய்ய செல்லும்போது அவர் என்னை ஸ்லெட்ஜிங் செய்ய முயற்சிப்பார். ஏனென்றால், அவர் உண்மையிலேயே ஒரு போட்டியாளர். ஒரு போட்டியை கூட இழக்க விரும்பமாட்டார். அவருக்கும் எனக்கும் இடையிலான மோதல், இந்தியாவையும் எதிர்த்து விளையாடும் சவால் ஆகியவற்றை நான் மிகவும் விரும்புவேன்.
இவ்வாறு ரஹிம் தெரிவித்துள்ளார்.
- நியூசிலாந்து அணி 149 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
- நியூசிலாந்து அணி அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
உலகக் கோப்பை 2023 லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு போட்டியிலும் நம்ப முடியாத சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. லீக் தொடரில் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 288 ரன்களை குவித்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 34.4 ஓவர்களில் வெறும் 139 ரன்களை மட்டுமே எடுத்து, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் காரணமாக நியூசிலாந்து அணி 149 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இன்றைய வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி உலகக் கோப்பை 2023 புள்ளி பட்டியலில் இந்தியாவை இரண்டாவது இடத்திற்கு தள்ளி முதலிடத்திற்கு முன்னேறி இருக்கிறது. இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடி இருக்கும் நியூசிலாந்து அணி, இவை அனைத்திலும் வெற்றி பெற்று 8 புள்ளிகளை பெற்றுள்ளது. இதன் காரணமாக நியூசிலாந்து அணி தற்போது முதலிடத்திற்கு முன்னேறி இருக்கிறது. நியூசிலாந்து அணியின் நெட் ரன்ரேட் தற்போது 1.923 ஆக இருக்கிறது.
மூன்று போட்டிகளில் விளையாடி இருக்கும் இந்திய அணி அனைத்திலும் வெற்றி பெற்று, 6 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்திய அணியின் நெட் ரன் ரேட் 1.821 ஆக இருக்கிறது. இந்தியாவுக்கு அடுத்த இடத்தில் தென் ஆப்பிரிக்கா அணி மூன்றாவது இடத்திலும், பாகிஸ்தான் அணி நான்காவது இடத்திலும் உள்ளன.
தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகள் தலா 4 புள்ளிகளை பெற்றுள்ளன. இவைகளின் நெட் ரன் ரேட் முறையே 1.385 மற்றும் -0.137 ஆக இருக்கிறது. புள்ளி பட்டியலில் இங்கிலாந்து அணி 5-வது இடத்தில் உள்ளது. வங்காளதேசம், ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை போன்ற அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
- சிறப்பாக ஆடிய வில் யங் அரை சதம் விளாசினார்.
- நவீன் உல் ஹக், அஸ்மத்துல்லா உமர்சாய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 16-வது லீக் போட்டியில் நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி நியூசிலாந்து அணி தொடக்க ஆட்டக்காரர்களாக கான்வே -வில் யங் களமிறங்கினர். கான்வே 20 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த ரச்சின் ரவீந்திரா மற்றும் வில் யங் ஜோடி நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர். சிறப்பாக ஆடிய வில் யங் அரை சதம் விளாசினார்.
நிதானமாக விளையாடிய ரச்சின் 32 ரன்னில் ஆட்டமிழந்தார். அவர் அவுட் ஆன சிறிது நேரத்திலேயே வில் யங் வெளியேறினார். அதே ஓவரில் மிட்செல் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். அப்போது அணியின் ஸ்கோர் 4 விக்கெட்டுகளை இழந்து 110 ரன்கள் சேர்த்திருந்தது.
போட்டி முடிவில் நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 288 ரன்கள் குவித்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் நவீன் உல் ஹக், அஸ்மத்துல்லா உமர்சாய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணிக்கு சுமாரான துவக்கமே கிடைத்தது. அந்த அணியின் குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் முறையே 11 மற்றும் 14 ரன்களில் பெவிலியன் திரும்பினர். அடுத்து வந்த ரகமத் ஷா பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர் 62 பந்துகளில் 36 ரன்களை எடுத்த போது ஆட்டமிழந்தார்.
கேப்டன் ஹஷ்மதுள்ளா 8 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரை தொடர்ந்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதன் காரணமாக ஆப்கானிஸ்தான் அணி 34.4 ஓவர்கள் முடிவில் 139 ரன்களை எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் காரணமாக நியூசிலாந்து அணி 149 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
நியூசிலாந்து அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய சான்ட்னர் மற்றும் ஃபெர்குசன் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். டிரெண்ட் போல்ட் இரண்டு விக்கெட்டுகளையும், மேட் ஹென்ரி, ரச்சின் ரவீந்திரா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
- பாகிஸ்தானை இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது
- வங்க தேச போட்டியில் எளிதாக இந்தியா வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது
ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலக கோப்பை 2023க்கான போட்டி தொடர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இப்போட்டி தொடரில் கடந்த அக்டோபர் 14 சனிக்கிழமை அன்று இந்திய பாகிஸ்தான அணிகளுக்கு இடையே அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் போட்டி நடைபெற்றது.
மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பாகிஸ்தான் அணியை இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
இந்திய வெற்றியால் ஏமாற்றம் அடைந்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்தியாவிற்கும் வங்காள தேசத்திற்கும் இடையே நாளை மகாராஷ்டிரா மாநில புனேயில் இத்தொடருக்கான போட்டி நடைபெற உள்ளது.
இப்போட்டியில் இந்தியா எளிதாக வெற்றி பெறும் என பலரும் கணிக்கின்றனர்.
இந்நிலையில், இப்போட்டி குறித்து பாகிஸ்தானை சேர்ந்த நடிகை செஹர் ஷின்வாரி (Sehar Shinwari) கூறியுள்ள கருத்து சர்ச்சையை கிளப்பி உள்ளது.
தனது அதிகாரபூர்வ எக்ஸ் வலைதளத்தில் அந்த நடிகை தெரிவித்திருப்பதாவது:
இந்தியாவிடம் பாகிஸ்தானுக்கு ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி தரும் விதமாக இந்தியாவை நாளைய போட்டியில் வங்காள தேச சகோதரர்கள் வென்று காட்ட வேண்டும். எங்களுக்காக அவர்கள் வெற்றி பெற்றால், நான் அந்நாட்டின் தலைநகர் டாகாவிற்கே சென்று, அந்த அணியை சேர்ந்த வீரர் ஒருவருடன் 'டேட்டிங்' செய்ய தயார்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
இதற்கு இந்திய ரசிகர்களிடையே கிண்டலான விமர்சனங்கள் கிளம்பியுள்ளது. பாகிஸ்தானை வென்ற இந்தியா இதுவரை இத்தொடரில் ஆடிய 3 போட்டிகளில், மூன்றிலும் வெற்றியை தக்க வைத்து கொண்டுள்ளது.
ஒரு இந்திய கிரிக்கெட் ஆர்வலர் நடிகை செஹர் முன்னர் பதிவிட்டிருந்த "அக்டோபர் 14 அன்று இந்தியா வென்றால் அந்நாட்டை குறித்து பேசுவதை நிறுத்தி கொள்வேன்" என குறிப்பிட்டிருந்ததை நினைவுபடுத்தி இனிமேல் இது போல் பேச வேண்டாம் என கூறியுள்ளார். அவர் கருத்திற்கு பல பயனர்கள் ஆதரவு கருத்துக்களை கூறி வருகின்றனர்.
நாளை நடைபெறவுள்ள போட்டி கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் ஆவலை தூண்டியுள்ளது.
- நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 288 ரன்கள் குவித்தது.
- ஆப்கானிஸ்தான் தரப்பில் நவீன் உல் ஹக், அஸ்மத்துல்லா உமர்சாய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய 16-வது லீக் போட்டியில் நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி நியூசிலாந்து அணி தொடக்க ஆட்டக்காரர்களாக கான்வே -வில் யங் களமிறங்கினர். கான்வே 20 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த ரச்சின் ரவீந்திரா மற்றும் வில் யங் ஜோடி நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர். சிறப்பாக ஆடிய வில் யங் அரை சதம் விளாசினார்.
நிதானமாக விளையாடிய ரச்சின் 32 ரன்னில் ஆட்டமிழந்தார். அவர் அவுட் ஆன சிறிது நேரத்திலேயே வில் யங் வெளியேறினார். அதே ஓவரில் மிட்செல் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். அப்போது அணியின் ஸ்கோர் 4 விக்கெட்டுகளை இழந்து 110 ரன்கள் சேர்த்திருந்தது.
இந்த நிலையில் கேப்டன் லாதம் மற்றும் பிலிப்ஸ் ஜோசி நங்கூரம் நின்று அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இருவரும் அரை சதம் அடித்து அசத்தினர். லாதம் 68 ரன்னிலும் பிலிப்ஸ் 71 ரன்னில் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர்.
இறுதியில் நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 288 ரன்கள் குவித்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் நவீன் உல் ஹக், அஸ்மத்துல்லா உமர்சாய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.






