என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங்.
    • டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது.

    உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியை ஒட்டி சச்சின் டெண்டுல்கர் 2011-ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற ஜெர்சியை விராட் கோலிக்கு பரிசாக வழங்கி உள்ளார்.

    இரண்டாவது உலகக் கோப்பை தொடரில் விளையாடும் முதல் இந்திய வீரர் என்ற பெருமையுடன் விராட் கோலி விளையாடி வருகிறார். 2023 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் விராட் கோலி சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தனது 50-வது சதத்தை அடித்து அசத்தினார். மேலும் சச்சின் டெண்டுல்கரின் 49 சதங்கள் என்ற சாதனையை விராட் கோலி முறியடித்தார்.

    ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கோப்பை வெல்லும் முனைப்பில் களமிறங்கி உள்ள நிலையில், இறுதிப் போட்டியை காண சச்சின் டெண்டுல்கர் உள்பட பல்வேறு முன்னணி வீரர்கள், பிரபலங்கள் என பலரும் மைதானத்திற்கு வந்துள்ளனர். 

    • உலக கோப்பையை வெல்வதற்கான பலப்பரீட்சையில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
    • 20 ஆண்டுகளுக்கு பிறகு பதிலடி கொடுக்கும் வேட்கையில் இந்தியா.

    13-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் இறுதி ஆட்டம் அகமதாபாத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது. உலக கோப்பையை வெல்வதற்கான பலப்பரீட்சையில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

    ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 3-வது முறையாக உலக கோப்பையை வெல்லுமா? என்று கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்.

    இந்திய அணி 2003-ம் ஆண்டு உலக கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றது. அதற்கு 20 ஆண்டுகளுக்கு பிறகு பதிலடி கொடுக்கும் வேட்கையில் இருக்கிறது.

    கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி 6-வது முறையாக உலக கோப்பையை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது.

    இந்நிலையில், பிற்பகல் 1.30 மணிக்கு இறுதிப்போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.

    இதனால், இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்குகிறது.

    • இந்தியா 50 ஓவரில் 240 ரன்கள் எடுத்து ஆல்-அவுட்
    • ஆஸ்திரேலியா 43 ஓவரில் இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் சாம்பியன் பட்டம் வென்றது.

    விராட் கோலி 63 பந்தில் 54 ரன் எடுத்து ஆல்-அவுட்.

    கே.எல். ராகுல் 107 பந்தில் 66 ரன்கள் எடுத்து ஆல்அவுட்.

    மிட்செல் ஸ்டார்க் 10 ஓவரில் 55 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்.

    ஹேசில்வுட் 10 ஓவரில் 60 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்.

    பேட் கம்மின்ஸ் 10 ஓவரில் 34 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்.

    ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் இங்லிஸ் 5 கேட்ச்கள் பிடித்து அசத்தினார்.

    ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் சதம் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார். அவர் 137 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    லபுஷேன் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    பும்ரா 2 விக்கெட்டும், சமி ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் இந்திய அணி சம பலத்துடன் திகழ்கிறது.
    • கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி 6-வது முறையாக உலக கோப்பையை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது.

    13-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் இறுதி ஆட்டம் அகமதாபாத்தில் இன்று பிற்பகல் நடக்கிறது. உலக கோப்பையை வெல்வதற்கான பலப்பரீட்சையில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

    ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 3-வது முறையாக உலக கோப்பையை வெல்லுமா? என்று கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்.

    1983-ம் ஆண்டு கபில்தேவ் தலைமையில் இந்திய அணி உலக கோப்பையை முதல் முறையாக கைப்பற்றியது. 28 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணிக்கு 2-வது உலக கோப்பை டோனி தலைமையில் கிடைத்தது. கபில்தேவ், டோனி வரிசையில் ரோகித் சர்மா 3-வது உலக கோப்பையை பெற்று தரும் வேட்கையில் உள்ளார்.

    இந்த போட்டித் தொடரில் இந்திய அணி மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறது. தான் விளையாடிய அனைத்து ஆட்டத்திலும் வெற்றி பெற்றது. 9 'லீக்' ஆட்டத்திலும் எளிதில் வெற்றி பெற்றது. நியூசிலாந்துக்கு எதிரான அரை இறுதியில் மட்டும் சற்று போராட வேண்டி இருந்தது.

    பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் இந்திய அணி சம பலத்துடன் திகழ்கிறது. விராட் கோலி, கேப்டன் ரோகித் சர்மா சுப்மன்கில், ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல் ஆகியோர் பேட்டிங்கிலும், முகமது ஷமி, பும்ரா, ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ் ஆகியோர் பந்து வீச்சிலும் நல்ல நிலையில் உள்ளனர்.

    இந்திய அணி 2003-ம் ஆண்டு உலக கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றது. அதற்கு 20 ஆண்டுகளுக்கு பிறகு பதிலடி கொடுக்கும் வேட்கையில் இருக்கிறது.

    கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி 6-வது முறையாக உலக கோப்பையை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது.

    ஆலன்பார்டர் தலைமையில் ஆஸ்திரேலிய அணி 1987-ம் ஆண்டு முதல் தடவையாக உலக கோப்பையை கைப்பற்றியது. அதை தொடர்ந்து 1999-ல் ஸ்டீவ் வாக் தலைமையில் 2-வது உலக கோப்பையை வென்றது. ரிக்கி பாண்டிங் தலைமையில் 2003, 2007-ல் உலக கோப்பை கிடைத்தது.

    2015-ம் ஆண்டு மைக்கேல் கிளார்க் தலைமையில் ஆஸ்திரேலியா 5-வது உலக கோப்பையை கைப்பற்றியது. ஆலன் பார்டர், ஸ்டீவ் வாக், ரிக்கி பாண்டிங், மைக்கேல் கிளார்க் ஆகியோர் வரிசையில் தன்னை இணைத்துக் கொள்ளும் வேட்கையில் கம்மின்ஸ் உள்ளார்.

    ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங்கில் டேவிட் வார்னர், மிச்சேல் மார்ஷ், மேக்ஸ்வெல், ஸ்டீவ் சுமித், டிரெவிஸ் ஹெட் ஆகியோரும், பந்து வீச்சில் ஆடம் ஜம்பா, ஸ்டார்க், ஹாசல்வுட் கம்மின்ஸ் ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.

    இறுதிப் போட்டி நடைபெறும் நரேந்திர மோடி ஸ்டேடியம் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாகும். 1 லட்சத்து 32 ஆயிரம் ரசிகர்கள் அமரும் வகையில் இந்த ஸ்டேடியம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இறுதிப்போட்டியை காணும் உற்சாகத்தில் ரசிகர்கள் நள்ளிரவில் இருந்தே அகமதாபாத் மைதானத்தில் குவிய தொடங்கினர். நாட்டின் பல்வேறு நகரத்தில் இருந்து போட்டியை நேரில் காணும் ஆர்வத்தில் ரசிகர்கள் அங்கு குவிந்தனர். அவர்கள் கைகளில் தேசிய கொடியும், இசைக் கருவிகளும் இருந்தன.

    டிக்கெட் கிடைக்காதா? என்ற ஏக்கத்திலும் ஏராளமான ரசிகர்கள் மைதானத்தை சுற்றி வலம் வந்தனர்.

    இறுதிப்போட்டிக்கான டிக்கெட்டுக்கு கடுமையான கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதனால் கள்ள மார்க்கெட்டில் டிக்கெட் விற்பனை ஜோராக இருக்கிறது.

    ஒரு டிக்கெட் ரூ.1.87 லட்சத்துக்கு கள்ள மார்க்கெட்டில் விற்பனையானது. ரூ.32 ஆயிரம் விலையிலான டிக்கெட்டுகள் ரூ.1.87 லட்சத்துக்கு விலை போனது.

    நாடு முழுவதும் கிரிக்கெட் இறுதிப் போட்டியை டெலிவிசனில் பார்க்க பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் உலக கோப்பை கிரிக்கெட் ஜூரம் ஒட்டிக் கொண்டுள்ளது.

    • மெரினா, பெசன்ட் நகரில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
    • இந்திய அணியின் வெற்றிக்காக ரசிகர்கள் சிறப்பு பூஜைகளையும் செய்து வருகிறார்கள்.

    சென்னை:

    உலக கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி கோப்பையை வெல்லுமா? என்று ஒட்டுமொத்த இந்திய மக்களின் இதய துடிப்பும் எகிறிக்கொண்டே இருக்கிறது. அனைத்து ஆட்டங்களிலும் அபார வெற்றியை பெற்று இந்த உலக கோப்பை போட்டியில் அசைக்க முடியாத அணியாக திகழும் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப் போட்டியில் கோப்பையை வென்றே தீர வேண்டும் என்கிற வைராக்கியத்தோடு களம் இறங்குகிறது.

    இந்திய அணியின் வெற்றியை கொண்டாட நாடு முழுவதும் மக்கள் தயாராகி வருகிறார்கள். சென்னையிலும் கிரிக்கெட் போட்டியை ரசிகர்கள் கண்டுகளிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளில் பெரிய திரை அமைக்கப்பட்டு ரசிகர்கள் போட்டியை காண்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    மெரினாவில் விவேகானந்தர் இல்லம் அருகே 38 அடி அகலம், 18 அடி உயரம் கொண்ட பெரிய திரை அமைக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் போட்டி தொடங்குவதற்கு முன்பாக நடைபெறும் லேசர் ஷோ, விமான சாகசம் நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்புவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்திய அணியின் ஆட்டத்தை காண்பதற்கும், வெற்றியை கொண்டாடுவதற்கும் பட்டாசு மற்றும் இனிப்புகளுடன் மெரினாவில் ரசிகர்கள் திரள்கின்றனர். பெண் ரசிகர்களின் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. நடமாடும் கழிவறை வாகனங்களும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. குடிநீர் வசதியும் செய்யப்பட்டிருந்தது.

    இதேபோன்று பெசன்ட் நகர் கடற்கரையிலும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அங்கும் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தோடு திரண்டிருந்தனர். இதுதவிர சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பண்ணை வீடுகளிலும் கிரிக்கெட் போட்டியை காண ரசிகர்கள் திரண்டிருந்தனர். போட்டி முடிந்த பின்னர் ரசிகர்கள் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபடுவதை மனதில் வைத்து பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

    மெரினா, பெசன்ட் நகரில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. இந்திய அணி இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றிவிட்டால் அந்த வெற்றியை இன்னொரு தீபாவளியாகவே விடிய விடிய பட்டாசு வெடித்து கொண்டாட திட்டமிட்டிருப்பதாக வெறித்தனமாக ரசிகர் ஒருவர் தெரிவித்தார்.

    இப்படி நாடு முழுவதும் அதிகரித்துள்ள கிரிக்கெட் ஜூரம் சென்னை போன்ற பெருநகரங்களில் அதிகமாகவே காணப்பட்டது. இந்திய அணியின் வெற்றிக்காக ரசிகர்கள் சிறப்பு பூஜைகளையும் செய்து வருகிறார்கள். இந்திய அணி கோப்பையை வென்று இந்திய மக்களின் மனதையும் வெல்ல வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுதலாக உள்ளது.

    • இந்தியாவுக்காக விளையாடுவது தினமும் இறுதிப் போட்டியில் விளையாடுவது போன்று சிறந்தது.
    • ராகுல் டிராவிட்டின் பங்கு முற்றிலும் மிகப்பெரியது. குறிப்பாக வீரர்களுக்கு பங்கு தெளிவுபடுத்துவதில் சிறந்தவர்.

    உலகக் கோப்பை 2023 இறுதிப் போட்டி குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இறுதிப் போட்டிக்காக இரு அணி வீரர்களும் ஆயத்தமாகி வருகின்றனர்.

    இந்நிலையில், இன்று பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலி அணி கேப்டனும், இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மாவும் பேசினர்.

    அப்போது பேசிய ரோகித் சர்மா," இது உண்மையில் தங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய தருணம். இது இறுதி உந்துதலுக்கான நேரம். ராகுல் டிராவிட்க்காக கோப்பையை வெல்லுவோம்" என கூறினார்.

    மேலும் அவர் கூறியதாவது:-

    உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன்பு, இவ்வாறு போட்டியை விளையாட நான் திட்டமிட்டிருந்தேன். அது நடக்குமோ இல்லையோ என்று யோசிக்கவில்லை. ஆனால், கொஞ்சம் சுதந்திரத்துடன் நான் என்னை வெளிப்படுத்த விரும்பினேன்.

    இங்கிலாந்து ஆட்டத்தின்போதும் எனது அணுகுமுறையை மாற்றிக்கொண்டேன். அதைத்தான் முன்னணி வீரர்கள் செய்வார்கள். நான் என் தந்திரங்களை மாற்றினேன். நான் அங்கு சென்று அமைதியாகவும் எளிதாகவும் இருக்க வேண்டும் என்று நம்புகிறேன். அதற்காக கடினமாக உழைத்தால் நன்றாக இருக்கும். நான் உற்சாகமாகி, அதிக அழுத்தம் கொடுக்க விரும்பவில்லை. இது நான் மட்டுமல்ல, மற்ற வீரர்களும் உடை மாற்றும் அறையில் அப்படிதான் இருப்போம்.

    எங்களுக்கு இது ஒரு மகத்தான சந்தர்ப்பம் என்பதில் சந்தேகமில்லை. நாங்கள் இதுவரை கண்ட கனவு எல்லாம் இங்கே உள்ளது. நான் 50 ஓவர் உலகக் கோப்பைகளைப் பார்த்து வளர்ந்திருக்கிறேன், அதனால் எனக்கு இது மிகப்பெரிய சந்தர்ப்பமாக இருக்கும்.

    உடை மாற்றும் அறையில் சிரிப்பும் இருக்கிறது, கொஞ்சம் பதற்றமான முகங்களும் இருக்கிறது. நான் அதை மறைக்கப் போவதில்லை. ஆனால் அதுதான் விளையாட்டின் அழகு. நான் சொன்னது போல், இந்தியாவுக்காக விளையாடுவது தினமும் இறுதிப் போட்டியில் விளையாடுவது போன்று சிறந்தது. நாங்கள் எங்கள் பயணத்தை ரசித்துவிட்டோம். இப்போது ஒரு இறுதி உந்துதலுக்கான நேரம் இது.

    ராகுல் டிராவிட்டின் பங்கு முற்றிலும் மிகப்பெரியது. குறிப்பாக வீரர்களுக்கு பங்கு தெளிவுபடுத்துவதில் சிறந்தவர். அவர் தனது கிரிக்கெட்டை விளையாடிய விதம் மற்றும் நான் எனது கிரிக்கெட்டை விளையாடுவது மற்றும் சில விஷயங்களை ஒப்புக்கொள்வது, அந்த சுதந்திரத்தை எங்களுக்கு வழங்குவது என அவை அனைத்தும் அவரைப் பற்றி நிறைய கூறுகிறது. இந்திய கிரிக்கெட்டுக்காக அவர் செய்தது மிகப்பெரியது. அவரும் இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்புகிறார். அவருக்காக விளையாடி கோப்பையை வெல்லுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உலகக் கோப்பை 2023 இறுதிப் போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதல்.
    • உலகக் கோப்பை இறுதிப் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது.

    உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நெருங்கும் நிலையில், ரசிகர்கள் உச்சக்கட்ட பரபரப்பில் உள்ளனர். போட்டியின் போது சிறப்பு நிகழ்ச்சிகள், போட்டி நடுவர்கள் யார் யார் என்ற விவரங்கள் என போட்டி குறித்த அறிவிப்புகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன.

    அந்த வரிசையில், போட்டியின் வர்ணனையாளர்கள் குழு பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இந்த குழுவினர் போட்டியின் போது ஆங்கில மொழியில் வர்ணனையில் ஈடுபடுவர். இதில், கிரிக்கெட் வல்லுனர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் என பல்வேறு பிரபலங்கள் இடம்பெற்று உள்ளனர்.

    உலகக் கோப்பை 2023 இறுதிப் போட்டிக்கு காஸ் நாயுடு, ரவி சாஸ்திரி, ரிக்கி பாண்டிங், இயன் ஸ்மித், சஞ்சய் மஞ்ரேக்கர், ஆரோன் ஃபின்ச், நாசர் ஹூசைன், ஹர்ஷா போக்லே, தினேஷ் கார்த்திக், மாத்யூ ஹேடன், இயன் மோர்கன், இயன் பிஷப், ஷேன் வாட்சன், சுனில் கவாஸ்கர் மற்றும் மார்க் ஹோவர்ட் ஆகியோர் வர்ணனை செய்யவுள்ளனர். 

    • இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இறுதிப் போட்டியில் மோதவுள்ளன.
    • இறுதிப் போட்டியை ஒட்டி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

    உலகக் கோப்பை 2023 இறுதிப் போட்டி நாளை நடைபெற இருக்கிறது. அக்டோபர் 11-ம் தேதி உலகக் கோப்பை தொடரின் லீக் போட்டிகள் துவங்கின. ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் ஒரு போட்டியில் விளையாடின. அதன்படி புள்ளிகள் அடிப்படையில், முதல் நான்கு இடங்களை பிடித்த அணிகள் அரையிறுதியில் மோதின.

    அரையிறுதியில் இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இதில் வெற்றி பெற்ற இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் நாளை நடைபெற இருக்கும் இறுதிப் போட்டியில் மோதவுள்ளன. இறுதிப் போட்டியை ஒட்டி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஐ.சி.சி. மற்றும் பி.சி.சி.ஐ. இணைந்து ஏற்பாடுகளை செய்துள்ளன.

    அந்த வகையில், நாளைய போட்டியில் டாஸ் போட்டதும் இந்திய விமானப் படையின் சாகச நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. மதியம் 1.35-க்கு துவங்கும் சாகச நிகழ்ச்சி 1.50 மணி வரை நடைபெற இருக்கிறது. பிறகு, போட்டியின் முதல் இன்னிங்ஸ் தேநீர் இடைவேளையின் போது ஆதித்யா காத்வியின் இசை கச்சேரி நடைபெறுகிறது.

    பின் போட்டியின் முதல் இன்னிங்ஸ் இடைவேளையின் போது ப்ரிதம் சக்ரபோர்த்தி, ஜோனிதா காந்தி, நாகாஷ் அசிஸ், அமித் மிஸ்ரா, ஆகாசா சிங் மற்றும் துஷர் ஜோஷி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்கும் இசை நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. பிறகு 2-வது இன்னிங்ஸ்-இன் தேநீர் இடைவேளையின் போது லேசர் மற்றும் லைட் ஷோ நடைபெறுகிறது.

    • உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் யார் வெற்றி பெறுவார்.
    • மிட்செல் மார்ஷ் அளித்த பதில் வைரல் ஆகி வருகிறது.

    உலகக் கோப்பை 2023 இறுதிப் போட்டி குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இறுதிப் போட்டிக்காக இரு அணி வீரர்களும் ஆயத்தமாகி வருகின்றனர்.

    இந்த நிலையில், உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற கேள்விக்கு ஆஸ்திரேலிய அணி வீரர் மிட்செல் மார்ஷ் கடந்த மே மாதம் வெளியான பாட்காஸ்ட் ஒன்றுக்கு அளித்த பதில் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. அதில், தனது அணி தான் கோப்பையை வெல்லும் என்று அவர் தெரிவித்து இருக்கிறார்.

    இதுதவிர, இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகள் எவ்வளவு ரன்களை அடிக்கும் என்பதையும் அவர் கணித்திருக்கிறார். அதன்படி, ஆஸ்திரேலியா அணி 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 450 ரன்களை குவிக்கும் என்றும் அடுத்து களமிறங்கும் இந்திய அணி வெறும் 65 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி அடையும் என்று தெரிவித்தார். இவரின் இந்த பதில் தொடர்பான மீம்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 

    • இறுதிப் போட்டியில் எந்த இந்திய வீரர் அச்சுறுத்தலாக இருப்பார்.
    • இந்திய அணி அனைத்து தரப்பிலும் பலம் வாய்ந்த ஒன்றாகவே இருக்கிறது.

    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. குஜராத் மாநிலத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்த போட்டி நாளை (நவம்பர் 19) மதியம் நடைபெற இருக்கிறது.

    இந்த நிலையில், போட்டிக்கு முன்பு ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் அளித்த பேட்டியில் பல்வேறு கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை அளித்துள்ளார். அதன் படி, இறுதிப் போட்டியில் எந்த இந்திய வீரர் பெரும் அச்சுறுத்தலாக இருப்பார், இறுதிப் போட்டியில் பிட்ச் எப்படி இருக்கும் என்ற கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.

    அப்போது பேசிய அவர், "இந்திய அணி அனைத்து தரப்பிலும் பலம் வாய்ந்த ஒன்றாகவே இருக்கிறது. ஆனால், தொடரின் சில போட்டிகளில் களமிறங்காமல் அதன் பிறகு சிறப்பாக செயல்பட்ட வீரர் முகமது ஷமி. வலது மற்றும் இடதுகை பேட்ஸ்மன்களுக்கு அவர் சவாலாக விளங்குகிறார். இதே நிலையை இறுதிப் போட்டியிலும் அவர் தொடர்வார், ஆனால் எங்களது வீரர்கள் இந்த களத்தில் அதிகம் விளையாடி உள்ளனர். இதனால் பந்துவீச்சாளர்களை எங்களது பேட்டர்களும் தக்க போட்டியை வழங்கலாம்."

    "அவர்களிடம் ஒவ்வொரு போட்டியிலும் பத்து ஓவர்கள் வரை பந்துவீசக்கூடிய ஐந்து பேர் உள்ளனர். அவர்களது சுழற்பந்துவீச்சாளர்கள் மிடில் ஓவர்களில் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். குல்தீப் யாதவ் மற்றும் ரவீந்திர ஜடேஜா எங்களுக்கு கடுமையான சவாலாக இருப்பர். ஆனால், அவர்கள் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற்று இருப்பதால், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவர்"

    "பிட்ச்-ஐ பொருத்தவரை அது இரு அணிகளுக்கும் ஒரே மாதிரியே இருக்கும். சொந்த நாட்டில், உங்களின் விக்கெட்டில் விளையாடுவதில் சில சாதகமான விஷயங்கள் உள்ளன. ஆனால், நாங்கள் இங்கு அதிக கிரிக்கெட் விளையாடி இருக்கிறோம்," என்று அவர் தெரிவித்தார்.

    • அகமதாபாத் ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு ஏற்றதாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
    • மிகவும் பரபரப்பான இறுதிப்போட்டியை காணும் ஆர்வத்தில் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது . கடந்த மாதம் 5-ந்தேதி அகமதாபாத்தில் தொடங்கிய இந்த போட்டியில் லீக் ஆட்டங்கள் கடந்த 12-ந்தேதி முடிவடைந்தது.

    இதன் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய அணிகள் முறையே முதல் 4 இடங்களை பிடித்து அரைஇறுதிக்கு தகுதி பெற்றன. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, வங்காளதேசம், இலங்கை, நெதர்லாந்து, ஆகிய நாடுகள் 5 முதல் 10-வது இடங்களை பிடித்து வெளியேறின.

    மும்பையில் 15-ந்தேதி நடந்த முதல் அரைஇறுதியில் இந்திய அணி 70 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்தையும், கொல்கத்தாவில் நேற்று முன்தினம் நடந்த 2-வது அரைஇறுதியில் ஆஸ்திரேலியா 3 விக்கெட்டில் தென் ஆப்பிரிக்காவையும் வீழ்த்தின.

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இறுதிப்போட்டி அகமதாபாத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு நடக்கிறது.

    உலக கோப்பையை வெல்லப்போவது இந்தியாவா? ஆஸ்திரேலியாவா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இரு அணிகளும் சமபலத்துடன் திகழ்வதால் இறுதிப்போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும்.

    இந்திய அணி 4-வது முறையாகவும், ஆஸ்திரேலியா 8-வது தடவையாகவும் இறுதிப் போட்டியில் விளை யாடுகிறது. இரு அணிகளும் இறுதிப் போட்டியில் மோதுவது இது 2-வது முறையாகும். 2003-ம் ஆண்டு ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா 125 ரன் வித்தியாசத்தில் வென்றது.

    1983-ம் ஆண்டு கபில்தேவ் தலைமையில் இந்திய அணி முதல் முறையாக உலக கோப்பையை வென்றது. பின்னர் 28 ஆண்டுகளுக்கு பிறகு டோனி தலைமையில் 2-வது தடவையாக உலக கோப்பை 2011-ம் ஆண்டில் கிடைத்தது.

    தற்போது ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 3-வது முறையாக உலக கோப்பையை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது.

    இந்தப் போட்டி தொடரில் இந்திய அணி மிகவும் அபாரமாக ஆடி வருகிறது. தோல்வியை சந்திக்காமல் தான் விளையாடிய 10 ஆட்டத்திலும் வெற்றி பெற்றது. சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இருந்தது.

    இரு அணிகளும் கடைசியாக மோதிய 5 ஒருநாள் போட்டியில் இந்தியா 3-2 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனால் இறுதிப்போட்டியில் நம்பிக்கையுடன் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளும்.

    2003-ம் ஆண்டு இறுதிப் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுக்குமா ? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர் நோக்கி உள்ளனர். ஆஸ்திரேலியா பலம் வாய்ந்தது என்பதால் கடுமையாக போராட வேண்டும். வீரர்கள் அனைவரும் முழு திறமையை வெளிப்படுத்துவது அவசியமாகும்.

    ஆஸ்திரேலியா முதல் 2 ஆட்டத்தில் தோற்ற பிறகு தொடர்ச்சியாக 8 ஆட்டத்தில் வென்று இறுதிப் போட்டிக்கு வந்துள்ளது. இதனால் இந்தியாவுக்கு கடும் சவால் காத்திருக்கிறது.

    சொந்த மண்ணில் ஆடுவது இந்தியாவுக்கு கூடுதல் பலமாகும். அதே நேரத்தில் இறுதிப் போட்டி என்பதால் கூடுதல் நெருக்கடி இருக்கும்.

    அகமதாபாத் ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு ஏற்றதாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இதனால் இந்திய அணியில் மாற்றம் இருக்குமா? என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைத்தால் முகமது சிராஜ் அல்லது சூர்யகுமார் யாதவ் நீக்கப்படலாம். பேட்டிங்குக்கு முக்கியத்துவம் அளித்தால் சிராஜ் கழற்றி விடப்படுவார். ஒருவேளை இஷான் கிஷன் வாய்ப்பை பெற்றால் சூர்யகுமார் யாதவ் இடத்தில் தேர்வு பெறுவார்.

    ஆடுகளத்தின் தன்மையை பொறுத்துதான் மாற்றம் இருக்குமா? என்பது முடிவு செய்யப்படும். இந்த தொடரின் 5-வது போட்டியில் இருந்து இந்திய அணியில் வீரர்கள் மாற்றம் செய்யப்படவில்லை. தொடர்ந்து வெற்றியை பெற்று வரும் அணியில் முக்கியமான இறுதி ஆட்டத்தில் மாற்றம் செய்ய கேப்டன் ரோகித் சர்மாவும் , பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும் விரும்ப மாட்டார்கள்.

    பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் இந்திய அணி சமபலத்துடன் திகழ்கிறது. டாப் 5 பேட்ஸ்மேன்கள் மிகவும் நல்ல நிலையில் உள்ளனர். விராட் கோலி 3 சதம், 5 அரைசதத்துடன் 711 ரன்னும், ரோகித் சர்மா 550 ரன்னும் (1 சதம், 3 அரை சதம்), ஸ்ரேயாஸ் அய்யர் 526 ரன்னும் (2 சதம், 3 அரைசதம்), கே.எல். ராகுல் 386 ரன்னும் (1 சதம், 1 அரைசதம்), சுப்மன்கில் 4 அரை சதத்துடன் 350 ரன்னும் எடுத்துள்ளனர்.

    ரோகித் சர்மா சிறந்த அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவர் 28 சிக்சர்கள் விளாசியுள்ளார். இதேபோல ஸ்ரேயாஸ் அய்யர் 24 சிக்சர் அடித்துள்ளார்.

    பந்துவீச்சில் முகமது ஷமி முதுகெலும்பாக திகழ்கிறார். அரைஇறுதியில் 7 விக்கெட் வீழ்த்தி வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். அவர் 6 ஆட்டத்தில் 23 விக்கெட் கைப்பற்றி இந்த தொடரில் முதல் இடத்தில் உள்ளார். இறுதிப் போட்டியிலும் ஷமி மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.

    பும்ரா 18 விக்கெட்டும், ஜடேஜா, 16 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 15 விக்கெட்டும், முகமது சிராஜ் 13 விக்கெட்டும் கைப்பற்றி உள்ளனர்.

    கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி 6-வது முறையாக உலக கோப்பையை வெல்லும் வேட்கையில் உள்ளது. அந்த அணி 1987, 1999, 2003, 2007, 2015 ஆகிய ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் பெற்று இருந்தது.

    இந்திய அணியிடம் லீக் ஆட்டத்தில் தோற்றதற்கு பதிலடி கொடுக்கும் ஆர்வத்தில் ஆஸ்திரேலியா இருக்கிறது. அந்த அணி பேட்ஸ்மேன்களும், பந்து வீச்சாளர்களும் இந்தியாவுக்கு சவாலாக விளங்குவார்கள்.

    ஆஸ்திரேலியா பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என 3 துறைகளிலும் மிகவும் சிறப்பாக இருக்கிறது. தொடக்க வீரர் டேவிட் வார்னர் 2 சதம், 2 அரை சதத்துடன் 52 8 ரன்னும், மிச்சேல் மார்சல் 2 சதம், 1 அரை சதத்துடன் 426 ரன்னும், லபுஷேன் 304 ரன்னும், ஸ்டீவ் சுமித் 298 ரன்னும் எடுத்துள்ளனர். மேக்ஸ்வெல் சிறந்த அதிரடி பேட்ஸ்மேன் ஆவார். ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இரட்டை சதம் அடித்து சாதித்தார். அவர் 398 ரன்கள் குவித்துள்ளார். இதேபோல டிரெவிஸ் ஹெட்டும் சிறந்த அதிரடி வீரர் ஆவார்.

    வேகப்பந்திலும், சுழற்பந்திலும் ஆஸ்திரேலியா சிறப்பாக இருக்கிறது. சுழற்பந்து வீரரான ஆடம் ஜம்பா 22 விக்கெட் வீழ்த்தி இந்திய போட்டித் தொடரில் 2-வது இடத்தில் உள்ளார்.

    வேகப்பந்து வீச்சாளர்களான ஹாசல்வுட் 14 விக்கெட்டும், ஸ்டார்க், கேப்டன் கம்மின்ஸ் தலா 13 விக்கெட்டும் கைப்பற்றியுள்ளனர்.

    மிகவும் பரபரப்பான இறுதிப்போட்டியை காணும் ஆர்வத்தில் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். அதிரடி, விறுவிறுப்புடன் இறுதிப்போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் புதிய தேர்வு குழு தலைவராக வஹாப் ரியாஸ் நேற்று நியமிக்கப்பட்டார்.
    • இன்ஜமாம் உல்-ஹக் விலகியதைத் தொடர்ந்து 38 வயதான வஹாப் ரியாஸ் இந்த பொறுப்புக்கு வந்துள்ளார்.

    லாகூர்:

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் புதிய தேர்வு குழு தலைவராக முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வஹாப் ரியாஸ் நேற்று நியமிக்கப்பட்டார்.

    இரட்டை ஆதாய சர்ச்சையால் சமீபத்தில் தேர்வு குழு தலைவர் பதவியில் இருந்து இன்ஜமாம் உல்-ஹக் விலகியதைத் தொடர்ந்து 38 வயதான வஹாப் ரியாஸ் இந்த பொறுப்புக்கு வந்துள்ளார்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் தொடரில் ஆடும் பாகிஸ்தான் அணியை தேர்வு செய்வது அவரது முதல் பணியாக இருக்கும்.

    ×