என் மலர்tooltip icon

    இந்தியா

    • இந்திய உதவியுடன் கட்டப்பட்ட 1,020 மெ.வா. நீர்மின் நிலையத்தை பூடான் மன்னர் ஜிம்கே கேசருடன் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
    • பூடான் மன்னருடன் இருநாட்டு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பிரதமர் மோடி பேச்சு நடத்துகிறார்.

    பிரதமர் மோடி 2 நாள் பயணமாக டெல்லியில் இருந்து விமானம் மூலமாக பூடான் நாட்டிற்கு புறப்பட்டார்.

    இந்தியா - பூடான் நாடுகளுக்கு இடையிலான உறவை மேம்படுத்தும் வகையில் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

    இந்திய உதவியுடன் கட்டப்பட்ட 1,020 மெ.வா. நீர்மின் நிலையத்தை பூடான் மன்னர் ஜிம்கே கேசருடன் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.

    பூடான் மன்னர் ஜிக்மே கேசர் வாங்சுக்குடன் இருநாட்டு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பிரதமர் மோடி பேச்சு நடத்துகிறார்.

    பூடானின் முன்னாள் மன்னரும், தற்போதைய மன்னரின் தந்தையுமான ஜிக்மே வாங்சுக்கின் 70-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

    • ஹோட்டல்களில் இரவு முழுவதும் போலீசார் சோதனை நடத்தினர்.
    • ஹோட்டல் பதிவேடுகளையும் போலீசார் சரிபார்த்தனர்.

    டெல்லி செங்கோட்டை அருகே நேற்று மாலை கார் வெடித்து சிதறி 10 பேர் பலியானார்கள். மேலும் படுகாயமடைந்த 24 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இச்சம்பவத்தை தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கை உஷார்படுத்தப்பட்டுள்ளது.

    ரெயில், பேருந்து நிலையங்கள், விமான நிலையங்கள், மத வழிபாட்டுதளங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    இதனிடையே, டெல்லியில் நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக, சதி செயலாக இருக்கக்கூடும் என சந்தேகம் எழுந்த நிலையில் உபா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து பஹர்கஞ்ச், தர்யாகஞ்ச் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஹோட்டல்களில் இரவு முழுவதும் போலீசார் சோதனை நடத்தினர். ஹோட்டல் பதிவேடுகளையும் போலீசார் சரிபார்த்தனர். அப்போது, சந்தேகப்படும்படியான 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளதாக போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 



    • உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள கோவில்களுக்கு உச்சபட்ச பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • டெல்லியில் நடந்த பயங்கர சம்பவம் குறித்து விசாரிக்க என்.ஐ.ஏ. களம் இறங்கியுள்ளது.

    டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரெயில் நிலையம் அருகே நேற்று மாலை ஒரு கார் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்துச்சிதறி, தீப்பிழம்பாக மாறியது. அருகில் இருந்த 4 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வாகனங்களும் தீப்பிடித்து எரிந்தன.

    கார் வெடித்து சிதறியதில் அதன் பாகங்கள் சுமார் 300 அடி உயரத்துக்கு தூக்கி வீசப்பட்டது. இந்த சம்பவத்தில் பலர் காயம் அடைந்தனர்.

    இந்த பயங்கர சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 24 பேர் பலத்த காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    அந்த பகுதி முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருக்கிறது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

    டெல்லியில் நடந்த பயங்கர சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள கோவில்களுக்கு உச்சபட்ச பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    எல்லையோர மாநிலங்களில் பாதுகாப்பு படையினர் தங்களது கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர். சென்னை, மும்பை, டெல்லி உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் கடுமையான சோதனைக்கு பிறகே பயணிகள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

    இன்று 2-ம் கட்ட தேர்தல் நடைபெறும் பீகார் மாநிலத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    டெல்லியில் நடந்த பயங்கர சம்பவம் குறித்து விசாரிக்க என்.ஐ.ஏ. களம் இறங்கியுள்ளது. தடயவியல் நிபுணர்களும் தங்களது விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    கார் வெடிப்பு சம்பவம் எதிர்பாராமல் நடந்ததா அல்லது வேறு ஏதேனும் நாசவேலையா என்ற கோணத்திலும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

    இந்நிலையில் டெல்லி கார் வெடிப்பு சம்பவம் நடைபெற்ற இடத்தில் நேற்றிரவு தடயவியல் துணை அதிகாரிகள் ஆய்வு செய்த நிலையில் இன்று மீண்டும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்து வருகின்றனர்.

    • கார் வெடிப்பு சம்பவம் பயங்கரவாத சதிச்செயலாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை தீவிரப்பட்டுள்ளது.
    • இச்சம்பவத்திற்கு பாகிஸ்தானின் பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பிற்கு தொடர்பா? எனவும் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    டெல்லி செங்கோட்டை அருகே நேற்று மாலை கார் வெடித்து சிதறி 10 பேர் பலியானார்கள். இதனையடுத்து நாடு முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கை உஷார்படுத்தப்பட்டுள்ளது.

    இதனிடையே, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தனது அமைச்சக அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபடுகிறார். இந்த ஆலோசனை கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

    நாடு முழுவதும் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இதனிடையே, கார் வெடிப்பு சம்பவம் பயங்கரவாத சதிச்செயலாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை தீவிரப்பட்டுள்ளது. மேலும் இச்சம்பவத்திற்கு பாகிஸ்தானின் பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பிற்கு தொடர்பா? எனவும் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    • வாக்குப்பதிவு தொடங்கியது முதல் வாக்காளர்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
    • தாங்களாகவே வாக்களிப்பது மட்டுமல்லாமல், மற்றவர்களையும் அவ்வாறு செய்ய ஊக்குவிக்க வேண்டும்.

    பீகார் சட்டசபை தேர்தலுக்கான இரண்டாம் மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. வாக்குப்பதிவு நடைபெறும் 122 தொகுதிகளில் 136 பெண்கள் உட்பட 1,302 போட்டியிட்டுள்ளனர்.

    வாக்குப்பதிவு தொடங்கியது முதல் வாக்காளர்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் பிரதமர் மோடி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    பீகார் சட்டமன்றத் தேர்தலில் இன்று இரண்டாவது மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அனைத்து வாக்காளர்களும் ஆர்வத்துடன் பங்கேற்று புதிய வாக்களிப்பு சாதனையைப் படைக்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். குறிப்பாக முதல் முறையாக வாக்களிக்கும் எனது இளம் நண்பர்கள், தாங்களாகவே வாக்களிப்பது மட்டுமல்லாமல், மற்றவர்களையும் அவ்வாறு செய்ய ஊக்குவிக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார். 

    • முதல் கட்டமாக 121 தொகுதிகளுக்கு கடந்த 6-ந்தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
    • வாக்குகள் வருகிற 14-ந்தேதி எண்ணப்படுகிறது.

    பீகார் சட்டசபை தேர்தலுக்கான இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. 243 தொகுதிகள் கொண்ட பீகார் சட்டமன்ற தேர்தலில் முதல் கட்டமாக 121 தொகுதிகளுக்கு கடந்த 6-ந்தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து மீதமுள்ள 122 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.

    வாக்குப்பதிவு தொடங்கியது முதல் வாக்காளர்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

    இன்று நடைபெறும் இரண்டாம்கட்ட தேர்தலில் 136 பெண்கள் உட்பட 1,302 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். வாக்குகள் வருகிற 14-ந்தேதி எண்ணப்படுகிறது. 

    • இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். 24 பேர் வரை சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • மக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.

    டெல்லி செங்கோட்டை அருகே உள்ள சாந்தினி சவுக் மெட்ரோ நிலையம் அருகே நேற்று மாலை கார் ஒன்று திடீரென வெடித்து விபத்துக்குள்ளானது.

    இதில் அருகில் இருந்த வாகனங்களுக்கும் தீ பரவியது. இந்த சமபவத்தில் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். 24 பேர் வரை தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த விபத்து பயங்கரவாத தாக்குதலா? என்ற சந்தேகம் வலுத்து வருகிறது.

    இந்நிலையில் டெல்லி முதல்வர் ரேகா குப்தா காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வரும் லோக் நாயக் மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்டார். அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களிடம் நலம் விசாரித்து ஆறுதல் கூறியுள்ளார்.

    பின்னர், மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளின் குழுவுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். முன்னதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா மருத்துவமனைக்கு வந்து பார்வையிட்டுச் சென்ற நிலையில் ரேகா குப்தா வருகை தந்துள்ளார்.

    இதற்கிடையே ரேகா குப்தா வெளியிட்ட இரங்கல் எக்ஸ் பதிவில், உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்ததுடன் மக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.

    • இந்த கார் அரியானவை சேர்ந்த நதீம் கான் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.
    • காஷ்மீர் மருத்துவர் ஒருவரிடம் இருந்து 2,900 கிலோ வெடிபொருள் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது.

    டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவு வாயில் அருகே காரில் மாலை 6.50 மணியளவில் வெடிப்பு நடந்தது.

    அங்கிருந்த சில வாகனங்கள் இந்த வெடிப்பால் தீப்பிடித்துள்ளன. இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 24 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    காவல் உயரதிகாரிகள், NIA அதிகாரிகளும் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

    சம்பவ இடத்தில் குண்டுவெடிப்புக்கான குழிகளோ அடையாளங்களோ இல்லையென்று கூறப்பட்டாலும், சிறிய கார் வெடித்து இந்தளவுக்கான பாதிப்பு ஏற்படுவதற்கு சாத்தியமில்லை என்றும் கூறப்படுகிறது. எனவே இது பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    இந்நிலையில் டெல்லியில் திங்கள்கிழமை மாலை நடந்த கார் குண்டுவெடிப்பு தொடர்பான காவல்துறை விசாரணையில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

    குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட காரின் பதிவு எண் அடிப்படையில் விசாரணை நடத்திய அதிகாரிகள், அதன் உரிமையாளரையும், காரின் முந்தைய உரிமையாளரையும் கைது செய்துள்ளனர்.

    இந்த கார் அரியானவை சேர்ந்த நதீம் கான் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசார் அவரை கைது செய்துள்ளனர். காரின் முன்னாள் உரிமையாளர் முகமது சல்மானையும் குருகிராம் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    முன்னதாக சம்பவம் நேற்று அரியானாவில் காஷ்மீர் மருத்துவர் ஒருவரிடம் இருந்து 2,900 கிலோ வெடிபொருள் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது. எனவே இந்த இரண்டு சம்பவத்திற்கும் தொடர்பு உள்ளதா என்ற சந்தேகம் வலுத்துள்ளது. 

    • இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
    • இந்த விபத்து பயங்கரவாத தாக்குதலா? என்ற சந்தேகம் வலுத்து வருகிறது.

    டெல்லி செங்கோட்டை அருகே உள்ள சாந்தினி சவுக் மெட்ரோ நிலையம் அருகே நேற்று மாலை கார் ஒன்று திடீரென வெடித்து விபத்துக்குள்ளானது. இதில் அருகில் இருந்த வாகனங்களுக்கும் தீ பரவியது. இந்த சமபவத்தில் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். 24 பேர் வரை தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த விபத்து பயங்கரவாத தாக்குதலா? என்ற சந்தேகம் வலுத்து வருகிறது.

    இந்நிலையில் டெல்லி முதல்வர் ரேகா குப்தா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்பு மிகவும் வேதனையானது. இந்த துயர விபத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.

    பாதிக்கப்பட்டவர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. டெல்லி காவல்துறை, என்எஸ்ஜி, என்ஐஏ மற்றும் எஃப்எஸ்எல் ஆகியவற்றின் குழுக்கள் கூட்டாக முழு சம்பவத்தையும் விசாரித்து வருகின்றன.

    டெல்லி மக்கள் அனைவரும் வதந்திகளைத் தவிர்த்து அமைதியைப் பேணுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். காவல்துறை மற்றும் நிர்வாகத்தால் வெளியிடப்படும் அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே நம்புங்கள்" என்று தெரிவித்துள்ளார்.

    மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வெளியிட்ட எக்ஸ் பதிவில், டெல்லியில் நடந்த துயரமான குண்டுவெடிப்புச் சம்பவத்தைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியடைந்தேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு என் இதயம் இரங்குகிறது. காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடையவும், வலிமை பெறவும் பிரார்த்திக்கிறேன" என்று தெரிவித்துள்ளார். 

    • காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.
    • மேலும் அவர்கள் அனைத்து விசாரணைகளையும் துரிதமாக நடத்தி வருகின்றனர்.

    டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவு வாயில் அருகே காரில் மாலை 6.50 மணியளவில் வெடிப்பு நடந்தது.

    அங்கிருந்த சில வாகனங்கள் இந்த வெடிப்பால் தீப்பிடித்துள்ளன. இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 24 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதற்கிடையில் சம்பவம் குறித்து பிரதமர் மோடி உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் கேட்டறிந்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தினார்.

    இதன் பின் காயமடைந்தர்வகளை நேரில் விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்வையிட்டார். அடுத்ததாக விபத்து நடந்த இடத்துக்கு நேரில் சென்று அமித் ஷா ஆய்வு செய்து வருகிறார்.

    இதற்கிடையில் செய்தியாளர்களை சந்தித்த அமித் ஷா, இன்று மாலை சுமார் 7 மணியளவில், டெல்லியில் உள்ள செங்கோட்டை அருகே ஒரு ஹூண்டாய் ஐ20 காரில் வெடிப்பு ஏற்பட்டது.

    இந்த வெடிப்பின் காரணமாக, 3-4 வாகனங்கள் சேதமடைந்தன. இந்த சம்பவத்தில் பொதுமக்கள் மக்கள் காயமடைந்தனர். மருத்துவமனை வட்டாரங்களின்படி, இதுவரை எட்டு பேர் இறந்துள்ளனர். காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    நாங்கள் அனைத்து கோணங்களிலும், முழுமையான விசாரணையைத் தொடங்கியுள்ளோம். வெடிப்புச் சம்பவம் குறித்து தகவல் கிடைத்தவுடன், டெல்லி காவல்துறை சிறப்புப் பிரிவு, குற்றப் பிரிவு , தேசிய புலனாய்வு முகமை குழு, சிறப்புப் பாதுகாப்புப் குழு, மற்றும் தடயவியல் அறிவியல் ஆய்வக குழு ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். மேலும் அவர்கள் அனைத்து விசாரணைகளையும் துரிதமாக நடத்தி வருகின்றனர்.

    எங்கள் முகமைகள் குறுகிய காலத்திற்குள் வெடிப்புக்கான காரணத்தை ஒரு முடிவுக்குக் கொண்டுவரும் என்று நான் நம்புகிறேன்.

    வெடிப்புச் செய்தி கிடைத்தவுடன் உடனடியாக எனக்கு பிரதமரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. முதற்கட்ட தகவல்களைப் பெற்ற பிறகு, நான் பிரதமருக்கும் விளக்கமளித்தேன்.

    நான் இங்கிருந்து சம்பவ இடத்தைப் பார்வையிடச் செல்கிறேன், மேலும் நாளை காலை, உள்துறை அமைச்சகத்தில் மூத்த அதிகாரிகள் குழுவுடன் ஒரு கூட்டம் நடத்தப்படும். இந்த சம்பவத்தில் மக்களிடம் முழு உண்மையை சொல்வோம்" என்று விளக்கம் அளித்தார். 

    • 24 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • நேரில் பார்வையிட்ட பின் பேசிய டெல்லி காவல் ஆணையர் சதீஷ் கோல்சா பேட்டியளித்தார்.

    டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவு வாயில் அருகே காரில் மாலை 6.50 மணியளவில் வெடிப்பு நடந்துள்ளது.

    அங்கிருந்த சில வாகனங்கள் இந்த வெடிப்பால் தீப்பிடித்துள்ளன. இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 24 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    காவல் உயரதிகாரிகள், NIA அதிகாரிகளும் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்நிலையில் விபத்து நடந்த இடத்தை நேரில் பார்வையிட்ட பின் பேசிய டெல்லி காவல் ஆணையர் சதீஷ் கோல்சா,

    மெட்ரோ நிலையத்தின் முதலாம் வாயில் அருகே மாருதி ஈகோ கார் முதலில் வெடித்தது. அதில் பல நபர்கள் பயணித்ததாக முதல்கட்டத் தகவலில் தெரியவந்துள்ளது. கார் மெதுவாக சென்றுகொண்டிருந்தபோது வெடித்துள்ளது. எனவே அருகில் இருந்த மற்ற கார்கள், ஆட்டோக்களிலும் தீ பரவியுள்ளது.

    மாலை 6.52 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. விபத்து நடந்த இடத்தில் புலனாய்வு அதிகாரிகளும் தடயவியல் துறை நிபுணர்களும் ஆய்வு செய்து வருகின்றனர்.

    சிசிடிவி காட்சிகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. முழுமையான விசாரணைக்க்குப் பின் உண்மை தெரியவரும்" என்று தெரிவித்தார்.  

    • உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் கேட்டறிந்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தினார்.
    • அமித் ஷா ஜி மற்றும் பிற அதிகாரிகளுடன் நிலைமை குறித்து கேட்டறித்தேன்

    டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவு வாயில் அருகே காரில் மாலை 6.50 மணியளவில் வெடிப்பு நடந்துள்ளது.

    அங்கிருந்த சில வாகனங்கள் இந்த வெடிப்பால் தீப்பிடித்துள்ளன. இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 24 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    காவல் உயரதிகாரிகள், NIA அதிகாரிகளும் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

    இதற்கிடையில் சம்பவம் குறித்து பிரதமர் மோடி உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் கேட்டறிந்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தினார்.

    இந்நிலையில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதவில், இன்று மாலை டெல்லியில் நடந்த குண்டுவெடிப்பில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல்கள்.

    காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகாரிகள் உதவி செய்து வருகின்றனர். உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜி மற்றும் பிற அதிகாரிகளுடன் நிலைமை குறித்து கேட்டறித்தேன்" என்று தெரிவித்துள்ளார். 

    குடியரசு தலைவர் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், டெல்லியில் நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது மனம்கனிந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார். 

    ×