என் மலர்
இந்தியா

டெல்லி கார் வெடிப்பு சம்பவம்- அமித்ஷா இன்று அவசர ஆலோசனை
- கார் வெடிப்பு சம்பவம் பயங்கரவாத சதிச்செயலாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை தீவிரப்பட்டுள்ளது.
- இச்சம்பவத்திற்கு பாகிஸ்தானின் பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பிற்கு தொடர்பா? எனவும் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
டெல்லி செங்கோட்டை அருகே நேற்று மாலை கார் வெடித்து சிதறி 10 பேர் பலியானார்கள். இதனையடுத்து நாடு முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கை உஷார்படுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தனது அமைச்சக அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபடுகிறார். இந்த ஆலோசனை கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.
நாடு முழுவதும் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனிடையே, கார் வெடிப்பு சம்பவம் பயங்கரவாத சதிச்செயலாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை தீவிரப்பட்டுள்ளது. மேலும் இச்சம்பவத்திற்கு பாகிஸ்தானின் பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பிற்கு தொடர்பா? எனவும் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Next Story






