என் மலர்tooltip icon

    விருதுநகர்

    ராஜபாளையம் - சத்திரப்பட்டி சாலையில் உள்ள நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை முன் கூட்டுறவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் முனியாண்டி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    ராஜபாளையம்:

    ராஜபாளையம் - சத்திரப்பட்டி சாலையில் உள்ள நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை முன் கூட்டுறவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் முனியாண்டி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ரேஷன் கடை ஊழியர்கள் மற்றும் கூட்டுறவு ஊழியர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

    இந்திய தொழிற்சங்க மையத்தின் மாவட்ட துணை தலைவர் கணேசன் முன்னிலை வகித்தார். கொரோனா காலத்தில் உயிரிழந்த ரேஷன் கடை ஊழியர்களுக்கு தகுந்த நிவாரணம் வழங்க வேண்டும். தமிழக அரசின் நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு சொந்தமான 750 கிடங்குகளை மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்கு கொண்டு செல்லும் முடிவை மாநில அரசு கை விட வேண்டும்.

    44 தொழிலாளர் நல சட்டங்களை மத்திய அரசு 4 தொகுப்பாக மாற்றியதை கண்டிப்பது, 3 வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு கொடி ஏந்தியவாறு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கூட்டுறவு சங்க பொருளாளர் சங்கரி, கன்வீனர் சுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    அருப்புக்கோட்டையில் நடைபெற்ற முகாம்களில் மொத்தம் 900 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
    அருப்புக்கோட்டை:

    அருப்புக்கோட்டை நகரில் நேற்று நகராட்சி ஆணையர் அசோக்குமார் உத்தரவின்படி நகர் நல மைய மருத்துவர் கோமதி ஏற்பாட்டில் சுகாதார ஆய்வாளர் ராஜபாண்டியன் ஒருங்கிணைப்புடன் வெள்ளக்கோட்டை செங்குந்தர் உயர்நிலைப்பள்ளி மற்றும் கே.கே.எஸ்.எஸ்.என். திருமண மண்டபம் ஆகிய இடங்களில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. 

    இந்த முகாமில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. ஒரு வாரத்திற்கு பின் தடுப்பூசி வந்ததால் ஏராளமான மக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். நேற்று நடைபெற்ற முகாம்களில் மொத்தம் 900 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
    சிவகாசி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 90 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
    சிவகாசி:

    திருத்தங்கல் போலீசார் ஆலமரத்துப்பட்டி ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த முருகன்காலனியை சேர்ந்த செந்தில்குமார் (வயது54) என்பவரிடம் போலீசார் விசாரித்த போது அவர் 100 கிராம் கஞ்சாவை விற்பனை செய்ய வைத்திருந்தது தெரியவந்தது. 

    அதனைத்தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதேபோல் சிவகாசி டவுன் போலீசார் விஸ்வநத்தம் பெரியார்காலனியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது அங்கு அதே பகுதியை சேர்ந்த சங்கர் (28) என்பவர் கஞ்சா விற்பனை செய்துள்ளார். அவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 90 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
    விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் உத்தரவின் பேரில் போலீசார் மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்:

    விருதுநகர் கிழக்கு போலீசார் ரோந்து சென்ற போது ஒரு வாலிபர் அவர்களை பார்த்து தப்பி ஓட முயன்றார். அவரை போலீசார் மடக்கிப் பிடித்தனர். அவரிடம் இருந்து நீளமான வாள் கைப்பற்றப்பட்டது.

    தனது தரப்பை சேர்ந்த சண்முகராஜாவை கொலை செய்ததற்காக எதிர் தரப்பை சேர்ந்த விக்கி என்ற விக்னேஷ் கோஷ்டியில் ஒருவரை தீர்த்துக்கட்ட வாளுடன் வந்ததாக தெரிவித்தார்.

    இதனை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். விசாரணையில் அவரது பெயர் சரவணக் குமார் என்ற பூச்சி (வயது 23). விருதை மாரி நகரைச் சேர்ந்தவர் என தெரிய வந்தது.

    இதேபோல் எம்.ரெட்டியபட்டி பகுதியில் ஆயுதங்களுடன் நின்ற வீரவிக்னேஷ் (28), பரமசிவம் என்ற அஜித் (19), செந்தில்குமார் (26) ஆகிய 3 ரவுடிகளை சாத்தூர் போலசார் கைது செய்தனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூரில் பூசாரியை தாக்கி கோவில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்:

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆராய்ச்சிப்பட்டியில் திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில் பூசாரி வழக்கம் போல் பூஜையை முடித்துவிட்டு அமர்ந்திருந்தார்.

    அப்போது அங்கு செண்பகதோப்பு பகுதியை சேர்ந்த முத்துக்குமார் ஆராய்ச்சிப்பட்டி ராமசாமி, ஏ.முத்துக்குமார், மம்சாபுரம் செந்தில், விக்டர் ஆகியோர் ஆயுதங்களுடன் வந்துள்ளனர். அவர்கள் பூசாரியை தாக்கிவிட்டு கோவிலுக்குள் சென்று அங்கிருந்த போத்திராஜா மற்றும் பூதத்தார், திரவுபதி அம்மன் பீடங்களை சேதப்படுத்தியதோடு, அவற்றின் அடியில் இருந்த நவரத்தினங்களையும் கொள்ளையடித்து சென்றுவிட்டதாக கோவில் பரம்பரை அறங்காவலர் செல்வராஜ் போலீசில் புகார் செய்தார்.

    இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புகையிலை பாக்கெட்டுகள் வைத்திருந்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விருதுநகர்:

    விருதுநகர் புறநகரில் போலீசார் ரோந்து சென்றபோது ரங்கநாதபுரம் பகுதியில் அப்பகுதியை சேர்ந்த விஜயராகவன் (வயது 50) என்பவர் டீக்கடை அருகே தடை செய்யப்பட்ட 68 புகையிலை பாக்கெட்டுகளை வைத்திருந்தார். போலீசார் அவற்றை பறிமுதல் செய்ததுடன் விஜயராகவனை கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    தளவாய்புரம் அருகே வாகனம் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தளவாய்புரம்:

    தளவாய்புரம் அருகே தேசிகாபுரம் விலக்கு சாலையில் நேற்று மாலை சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உடனே இதுபற்றி தளவாய்புரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு இவரது உடல் ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் லவகுசன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். வாகனம் மோதி பலியான முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    நரிக்குடி பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.
    காரியாபட்டி:

    நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உளுத்திமடை, என்.முக்குளம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தவர்கள் இறந்துவிட்டதால் தற்போது 9 மாவட்டங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள உள்ளாட்சி தேர்தலையொட்டி நரிக்குடி ஊராட்சி ஒன்றியம், உளுத்திமடை, என்.முக்குளம் ஆகிய ஊராட்சி மன்ற தலைவருக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த 2 ஊராட்சிகளிலும் உதவி தேர்தல் அலுவலர் நேரு ஹரிதாசிடம் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த 2 ஊராட்சிகளிலும் தேர்தல் நடைபெறுவதால் திருச்சுழி துணை தாசில்தார் சிவனாண்டி தலைமையில் தேர்தல் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த பறக்கும் படை அலுவலர்கள் நரிக்குடி பகுதிக்கு வரும் வாகனங்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்து வருகின்றனர். இந்த தேர்தல் பறக்கும் படை அலுவலர்களுக்கு 4 சக்கர வாகனம் கொடுக்கப்படாததால் இவர்கள் இருசக்கர வாகனங்களில் சென்று சோதனை செய்து வருகின்றனர். 2 ஊராட்சிகளிலும் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதால் பணப்பட்டுவாடாவை தடுக்கும் வண்ணம் தேர்தல் பறக்கும் படையினர் ஊராட்சிக்கு செல்லக்கூடிய பகுதிகளில் திடீர் வாகன சோதனை நடத்தி வருகிறார்கள். ரூ.50 ஆயிரத்துக்கு மேல் அல்லது பரிசு பொருட்கள் வாகனங்களில் எடுத்து செல்லப்படுகிறதா? என தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

    சிவகாசி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிவகாசி:

    சிவகாசி காரனேசன் பகுதியில் உள்ள நகராட்சி கழிப்பிடம் அருகில் முத்துமாரியம்மன் காலனியை சேர்ந்த கருப்பசாமி (வயது 45) என்பவர் நின்று கொண்டிருந்தார். அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த சிவகாசி டவுன் சப்-இன்ஸ்பெக்டர் செண்பகவேலன், கருப்பசாமியிடம் விசாரணை நடத்திய போது கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. 

    இதை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 90 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதே போல் சப்-இன்ஸ்பெக்டர் சிராஜூதீன் பராசக்தி காலனியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது அதே பகுதியை சேர்ந்த பால் என்கிற பால்ராஜ் (65) என்பவர் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 80 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    அருப்புக்கோட்டை அருகே பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் குறித்து போக்சோ சட்டத்தில் வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அருப்புக்கோட்டை:

    அருப்புக்கோட்டை அருகே உள்ள ஒரு கிராமத்தில் அரசு பள்ளியில் துப்புரவு பணி செய்து வரும் கணவரை இழந்த பெண்ணின் 17 வயது மகள், 12-ம் வகுப்பு படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த 20 வயது வாலிபர் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. 

    இது குறித்து மாணவியின் தாய் அருப்புக்கோட்டை மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி, வாலிபர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    சிவகாசி அருகே கஞ்சா விற்ற 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
    சிவகாசி:

    சிவகாசி காரனேசன் பகுதியில் உள்ள நகராட்சி கழிப்பிடம் அருகில் முத்துமாரியம்மன் காலனியை சேர்ந்த கருப்பசாமி (வயது 45) என்பவர் நின்று கொண்டிருந்தார். அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த சிவகாசி டவுன் சப்-இன்ஸ்பெக்டர் செண்பகவேலன், கருப்பசாமியிடம் விசாரணை நடத்திய போது கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 90 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    மற்றொரு சம்பவம்...

    இதே போல் சப்-இன்ஸ்பெக்டர் சிராஜூதீன் பராசக்தி காலனியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது அதே பகுதியை சேர்ந்த பால் என்கிற பால்ராஜ் (65) என்பவர் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 80 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே திருமணம் செய்துகொள்வதாக கூறி பிளஸ்-2 மாணவியை பலமுறை பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள புதுப்பட்டியைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவி தாயுடன் வசித்து வருகிறார்.

    இவர் பள்ளியில் படிக்கும் போது ஆத்திக்குளத்தைச் சேர்ந்த சரவணன் (வயது 20) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது.

    இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. காதலன் கேட்டுகொண்டதற்கிணங்க செல்போனில் தனது படங்களை மாணவி அனுப்பி உள்ளார்.

    இதுகுறித்து தெரியவந்ததும் மாணவியை தாய் கண்டித்தார். சரவணனை சந்திக்க வேண்டாம் என எச்சரித்தார். ஆனால் டைப் ரைட்டிங் வகுப்புக்கு சென்ற மாணவி சரவணனை சந்தித்து வந்துள்ளார்.

    கடந்த 19-ந்தேதி அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் டைப்ரைட்டிங் தேர்வு நடந்துள்ளது. இதில் மாணவி பங்கேற்றார்.

    அப்போது அங்கு சரவணன் வந்துள்ளார். அவர் மாணவியை ஆத்திக்குளத்தில் உள்ள தனது வீட்டுக்கு அழைத்து சென்றார்.

    அங்கு திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதன் பிறகு பலமுறை மாணவியை பலாத்காரம் செய்துள்ளார்.

    இந்த நிலையில் சரவணன் திடீரென மாயமாகி விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.

    தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்த சரவணன் திடீரென மாயமாகி விட்டதாக குறிப்பிட்டுள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×