என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராஜபாளையம் அருகே ரேஷன் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்25 Sep 2021 2:17 PM GMT (Updated: 25 Sep 2021 2:17 PM GMT)
ராஜபாளையம் - சத்திரப்பட்டி சாலையில் உள்ள நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை முன் கூட்டுறவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் முனியாண்டி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ராஜபாளையம்:
ராஜபாளையம் - சத்திரப்பட்டி சாலையில் உள்ள நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை முன் கூட்டுறவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் முனியாண்டி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ரேஷன் கடை ஊழியர்கள் மற்றும் கூட்டுறவு ஊழியர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
இந்திய தொழிற்சங்க மையத்தின் மாவட்ட துணை தலைவர் கணேசன் முன்னிலை வகித்தார். கொரோனா காலத்தில் உயிரிழந்த ரேஷன் கடை ஊழியர்களுக்கு தகுந்த நிவாரணம் வழங்க வேண்டும். தமிழக அரசின் நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு சொந்தமான 750 கிடங்குகளை மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்கு கொண்டு செல்லும் முடிவை மாநில அரசு கை விட வேண்டும்.
44 தொழிலாளர் நல சட்டங்களை மத்திய அரசு 4 தொகுப்பாக மாற்றியதை கண்டிப்பது, 3 வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு கொடி ஏந்தியவாறு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கூட்டுறவு சங்க பொருளாளர் சங்கரி, கன்வீனர் சுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X