search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    விருதுநகரில் ஆயுதங்களுடன் ரவுடிகள் கைது

    விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் உத்தரவின் பேரில் போலீசார் மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்:

    விருதுநகர் கிழக்கு போலீசார் ரோந்து சென்ற போது ஒரு வாலிபர் அவர்களை பார்த்து தப்பி ஓட முயன்றார். அவரை போலீசார் மடக்கிப் பிடித்தனர். அவரிடம் இருந்து நீளமான வாள் கைப்பற்றப்பட்டது.

    தனது தரப்பை சேர்ந்த சண்முகராஜாவை கொலை செய்ததற்காக எதிர் தரப்பை சேர்ந்த விக்கி என்ற விக்னேஷ் கோஷ்டியில் ஒருவரை தீர்த்துக்கட்ட வாளுடன் வந்ததாக தெரிவித்தார்.

    இதனை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். விசாரணையில் அவரது பெயர் சரவணக் குமார் என்ற பூச்சி (வயது 23). விருதை மாரி நகரைச் சேர்ந்தவர் என தெரிய வந்தது.

    இதேபோல் எம்.ரெட்டியபட்டி பகுதியில் ஆயுதங்களுடன் நின்ற வீரவிக்னேஷ் (28), பரமசிவம் என்ற அஜித் (19), செந்தில்குமார் (26) ஆகிய 3 ரவுடிகளை சாத்தூர் போலசார் கைது செய்தனர்.

    Next Story
    ×