என் மலர்tooltip icon

    விருதுநகர்

    முக்கிய அரசியல் கட்சி பிரமுகர் துணையுடன் ராஜேந்திர பாலாஜி பதுங்கி இருப்பதாக கூறப்படும் தகவலின் அடிப்படையில் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விருதுநகர்:

    அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் கே.டி.ராஜேந்திர பாலாஜி. இவர் ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.3 கோடியே 10 லட்சம் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. மேலும் அ.தி.மு.க. முன்னாள் ஒன்றிய செயலாளர் விஜய  நல்லதம்பி உள்ளிட்ட சிலரும் இந்த மோசடியில் உடந்தையாக செயல்பட்டனர் என புகார் கூறப்பட்டது.

    இதுதொடர்பாக கடந்த ஆண்டு நவம்பர் 15-ந்தேதி விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் ராஜேந்திர பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்த வழக்கில் போலீசார் தன்னை கைது செய்யாமல் இருக்க முன் ஜாமீன் கேட்டு ராஜேந்திர பாலாஜி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை ஐகோர்ட்டு டிசம்பர் 17-ந்தேதி தள்ளுபடி செய்தது. இதனை தொடர்ந்து ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய போலீசார் திட்டமிட்டனர்.

    அன்றைய தினம் அ.தி.மு.க. சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ராஜேந்திர பாலாஜிக்கு இந்த தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து அவர் தலைமறைவாகி விட்டார்.

    போலீசார் விசாரணை


    அவர் எங்கு சென்றார்? என்ற விவரம் தெரியாததால் மாவட்டம் முழுவதும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை. அவரை பிடிக்க 5 தனிப்படைகளை அமைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் உத்தரவிட்டார். பின்னர் கூடுதலாக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தமிழகம் முழுவதும் தீவிரமாக தேடும் பணி நடைபெற்றது. இருப்பினும் ராஜேந்திர பாலாஜி எங்கு இருக்கிறார்? என்ற தகவல் கிடைக்கவில்லை.

    அவரது செல்போன்கள் மற்றும் அவருக்கு நெருக்கமான கட்சியினரின் செல்போன் உரையாடல்களை போலீசார் ரகசியமாக கண்காணித்தனர். இதன் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் அன்பழனின் கார் டிரைவர், உதவியாளர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர்கள் ஆகியோரை போலீசார் அழைத்து விசாரித்தனர்.

    இதில் ராஜேந்திர பாலாஜி வெளிமாநிலங்களுக்கு தப்பி சென்று இருக்கலாம் என்று போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் கேரளா, கர்நாடக மாநிலம் பெங்களூரு, புதுடெல்லி, ஆந்திரா போன்ற பகுதிகளுக்கு தனிப்படையினர் சென்று தேடுதல் வேட்டை நடத்தினர். ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை.

    இதற்கிடையில் மதுரை, ஸ்ரீவில்லிபுத்தூர், கடலூர், கும்பகோணம் என தமிழகம் முழுவதும் பலரிடம் வேலை வாங்கி தருவதாக கே.டி.ராஜேந்திர பாலாஜி மற்றும் சிலர் பணம் பெற்றதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. இதுவரை 9 புகார்கள் வந்துள்ளன. இதுகுறித்து விசாரணை நடத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் உத்தரவிட்டார்.

    புகார் கொடுத்தவர்களிடம் முதல் கட்டமாக போலீசார் நேரடியாக விசாரணை நடத்தினர். எந்த பணிக்காக யார் மூலம் பணம் கொடுக்கப்பட்டது என விசாரித்து வருகின்றனர்.

    இந்த சூழலில் சிவகாசி அண்ணா காலனியைச் சேர்ந்த சங்கர்கணேஷ் விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகரிடம் ஒரு புகார் கொடுத்துள்ளார்.

    அதில், ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட 8 அ.தி.மு.க. நிர்வாகிகள் தனது குடும்ப பூர்வீக சொத்தினை கடந்த 2019-ம் ஆண்டு போலி ஆவணம் தயாரித்து மோசடியாக தங்களது பெயரில் பதிவு செய்துள்ளதாகவும், இதுபற்றி கேட்டபோது தன்னையும், குடும்பத்தினரையும் மிரட்டியதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இருப்பினும் ராஜேந்திரபாலாஜி சிக்கினால் தான் பண மோசடி விவகாரத்தில் உண்மை நிலை தெரியவரும். ஆனால் அவர் எங்கு இருக்கிறார்? என்பதை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. 8 தனிப்படைகள் அமைத்தும் இன்னும் போலீசார் இந்த வழக்கில் திணறி கொண்டுதான் உள்ளனர்.

    முக்கிய அரசியல் கட்சி பிரமுகர் துணையுடன் கே.டி.ராஜேந்திரபாலாஜி பதுங்கி இருப்பதாக கூறப்படும் தகவலின் அடிப்படையில் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


    விருதுநகர் பட்டாசு தொழிற்சாலை வெடிவிபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து நிவாரண உதவி அறிவித்துள்ளார்.
    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு வட்டம் களத்தூர் கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசு தொழிற்சாலை வெடிவிபத்தில் நான்கு பேர் இறந்த துயரச் செய்தியினைக் கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன். இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இந்த வெடிவிபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு தலா மூன்று லட்சமும், காயமுற்றவர்களுக்கு தலா ஒரு லட்சமும் உடனடியாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு அவர்  கூறி  உள்ளார்.

    சிவகாசி வெடி விபத்தில் 4 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் வெடி விபத்து நடந்த பட்டாசு ஆலைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி தாலுகா புதுப்பட்டி அருகே உள்ள மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் வழிவிடுமுருகன் (வயது 42). இவர் வத்திராயிருப்பு அருகே களத்தூர் நாகலாபுரம் கிராமத்தில் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார்.

    இந்த ஆலையில் 23 அறைகள் உள்ளன. இங்கு சுமார் 500 பேர் பணியாற்றி வருகின்றனர்.நேற்று புத்தாண்டு என்பதால் 15 பேர் மட்டுமே வேலைக்கு வந்தனர். அவர்கள் ரசாயன மருந்து கலக்கும் கட்டிடத்தில் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது உராய்வு காரணமாக எதிர்பாராத விதமாக வெடி விபத்து ஏற்பட்டது. இதில் ஆலையில் உள்ள 7 அறைகள் இடிந்து தரைமட்டமாயின. அங்கு பணி செய்து கொண்டிருந்தவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டனர்.

    இதுகுறித்த தகவல் கிடைத்ததும் தீயணைப்பு படையினரும், போலீசாரும் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த குமார் (38), பெரியசாமி (55), வீரக்குமார் (40) ஆகியோரின் உடல்களை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.

    மேலும் காயம் அடைந்த முருகேசன் உள்பட 10 பேரை சிகிச்சைக்காக சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே முருகேசன் இறந்து விட்டார். மற்றவர்களுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இதில் முனியாண்டி, முத்துக்குமார், 8 வயது சிறுவன் மனோஅரவிந்த் ஆகியோர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சிறுவன் மனோஅரவிந்தின் தந்தை கோபாலகிருஷ்ணன் பட்டாசு ஆலையில் வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று விடுமுறை என்பதால் பட்டாசு ஆலையை பார்க்க வந்தபோது தான் மனோஅரவிந்த் விபத்தில் சிக்கி உள்ளார். அவரது தந்தை கோபாலகிருஷ்ணனும் காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

    வெடிவிபத்து தொடர்பாக களத்தூர் கிராம நிர்வாக அலுவலர் செந்தில்மாயன், நத்தம்பட்டி போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

    பட்டாசு ஆலை உரிமையாளர்  வழிவிடுமுருகன் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி பட்டாசு ஆலை உரிமையாளர் வழிவிடுமுருகன் மீது வெடிபொருட்களை அஜாக்கிரதையாக கையாளுதல் (286), மனித உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் செயல்படுவது (337), இறப்பு ஏற்படுத்துதல் 304 ஏ ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இதற்கிடையில் வெடி விபத்து நடந்த பட்டாசு ஆலைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

    விருதுநகர் மாவட்டத்தில் ரூ.6 லட்சம் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக புகையிலை  பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதனை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்பேரில் போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

    இதில் ஒரு பகுதியாக கடந்த ஒரு வாரமாக போலீசார் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சாத்தூர், விருதுநகர், சிவகாசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் சம்பவத்தன்று வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது தென்காசி மாவட்டம் சங்கரன் கோவிலை சேர்ந்த சங்கரநாராயணன் என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். 

    அவரை மறித்து போலீசார் சோதனை செய்தபோது ரூ.1 லட்சம் மதிப்புள்ள புகையிலை  பொருட்களை கடத்திச் செல்வது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் ராஜபாளையம் தெற்கு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஸ்ரீவில்லிபுத்தூர் கம்மாபட்டியை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரை சோதனை செய்தபோது அவரிடம் 4 கிலோ புகையிலை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது.

    இதையடுத்து போலீசார் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியபோது ராஜபாளையம் டீச்சர் காலனியில் உள்ள ஒரு வீட்டில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து போலீசார் குறிப்பிட்ட வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு மூடை மூடையாக புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்து. இதன் மதிப்பு ரூ 5. லட்சத்து 89 ஆயிரம் ஆகும்.

    போலீசார் அதனை பறிமுதல் செய்து கோவிந்தராஜை கைது செய்தனர். இதற்கு உடந்தையாக இருந்த தென்காசியை சேர்ந்த அய்யனார், ராஜபாளையத்தைச் சேர்ந்த பாண்டியராஜன் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.
    விருதுநகர் அருகே தம்பதியை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விருதுநகர்:

    விருதுநகர் அருகே உள்ள வலையப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சவுந்தர்யா (வயது 21). இவரது கணவர் முத்துக்கருப்பன். கட்டிட தொழிலாளி. இவரது மாமனார் வீரபத்திரனுக்கு கிராமத்தில் விவசாயநிலம் உள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று சவுந்தர்யா, முத்துக்கருப்பனுடன் மாமனார் வீட்டுக்கு சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தார். ஆடு மேய்ப்பதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக வலையபட்டியை சேர்ந்த சத்யராஜ் (29) முத்தையா (37) உள்பட 4 பேர் இருசக்கர வாகனத்தை வழிமறித்து சவுந்தர்யாவையும், முத்து கருப்பனையும் தாக்கி படுகாயப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனை தடுக்க வந்த முத்துக்கருப்பனின் சகோதரி சின்ன ஈஸ்வரியையும் தாக்கி காயப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுபற்றி சவுந்தர்யா கொடுத்த புகாரின் பேரில் வச்சக்காரப்பட்டி போலீசார் மேற்படி 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து சத்யராஜ், முத்தையா உள்பட 3 பேரையும் கைது செய்தனர். மற்றொருவரை தேடி வருகின்றனர்.
    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 3 பேர் பலியாகி உள்ளனர். தீயை முழுமையாக அணைத்து மீட்பு பணிகள் முடிந்த பிறகே பலியானவர்களின் எண்ணிக்கை தெரியவரும்.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ளது நத்தம்பட்டி. இங்கிருந்து சிவகாசி எம்.புதுப்பட்டி செல்லும் சாலையில் உள்ள களத் தூரில் ஆர்.கே.வி.எம். பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இதனை வழிவிடு முருகன் என்பவர் நடத்தி வருகிறார்.

    இந்த ஆலையில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான ஆண், பெண் தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

    இன்று காலையும் தொழிலாளர்கள் வழக்கம் போல் வேலைக்கு வந்தனர். அவர்கள் ஆர்வத்துடன் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு அறையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.

    இதனால் அங்கு தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ பக்கத்து அறைகளுக்கும் பரவியது. அங்கு இருந்த பட்டாசுகளும் வெடித்து சிதறின. இதனால் ஆலையில் பணியாற்றி கொண்டிருந்த தொழிலாளர்கள் அங்கும், இங்கும் சிதறி ஓடினர்.

    என்ன நடக்கிறது என்று தெரியாத அளவுக்கு கரும் புகையும் காணப்பட்டதால் யாரும் அருகில் செல்ல முடியவில்லை.

    இதுகுறித்து சிவகாசி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் பட்டாசுகள் வெடித்து கொண்டே இருந்ததால் அவர்களால் வேகமாக செயல்பட முடியவில்லை.

    இதற்கிடையே பக்கத்து ஊர்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணி மும்முரமாக நடந்தது.

    பட்டாசுகள் வெடித்ததில் ஆலையில் இருந்த 2 அறைகள் தரைமட்டமாகி விட்டன. அங்கு பணியில் இருந்தவர்கள் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டனர். தீயணைப்பு துறையினர் விரைந்து செயல்பட்டு கட்டிட இடிபாடுகளை அகற்றினர். அப்போது காயத்துடன் கதறி கொண்டிருந்த சிலரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்தில் ஆலையில் வேலை பார்த்த மங்களம்புதுபட்டியை சேர்ந்த குமார் (வயது 46), சேர்வைக்காரன்பட்டியை சேர்ந்த பெரியசாமி (55), செல்வம் (50) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானார்கள். மேலும் தீயில் கருகிய பலர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மீட்பு பணி நடந்து வருகிறது. இதன் முடிவில் தான் பலி எண்ணிக்கை மேலும் உயருமா? என்ற விவரம் தெரியவரும்.
    விருதுநகர் அருகே வி‌ஷம் குடித்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற இளம்பெண் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விருதுநகர்:

    விருதுநகர் அருகே உள்ள சத்திர ரெட்டியபட்டியை சேர்ந்தவர் குமார் (வயது 40). இவரது மனைவி 6 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களது மகள் சரண்யா (19). இவர் கல்லூரியில் படித்து வந்த நிலையில் குமாருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சரண்யா பாதியிலேயே கல்லூரி படிப்பை கைவிட்டார்.

    இந்தநிலையில் சரண்யா அடிக்கடி ஒருவரிடம் பேசி வந்துள்ளார். இதை அறிந்த குமார் மகளை கண்டித்துள்ளார். இதனால் விரக்தி அடைந்த சரண்யா சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பினாயில் குடித்து மயங்கி னார்.

    உயிருக்கு போராடிய அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் சிகிச்சையில் இருந்த சரண்யா ஆஸ்பத்திரியில் இருந்து திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்த புகாரின் பேரில் விருதுநகர் கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    விருதுநகர் அருகே தந்தை, மகனை தாக்கிய சிறுவன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    விருதுநகர்:

    விருதுநகர் அருகே உள்ள சத்திர ரெட்டிய பட்டியைச் சேர்ந்தவர் வீரபத்திரன். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இதனால் இவர்களுக்குள் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டது.

    சம்பவத்தன்று வீரபத்திரன் தனது மகன் முத்துக்கருப்பனுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது கிருஷ்ண மூர்த்தியின் 17 வயது மகன் மற்றும் சத்யராஜ் (29), முத்தையா (27), பாண்டி ஆகிய 4 பேர் வழிமறித்து வீரபத்திரனிடம் தகராறில் ஈடுபட்டனர். அப்போது ஆத்திரம் அடைந்த 4 பேரும் வீரபத்திரன், அவரது மகன் முத்துக்கருப்பனை சரமாரியாக தாக்கினர்.

    இதுகுறித்து வச்சகாரபட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து தந்தை, மகனை தாக்கிய 17 வயது சிறுவன் மற்றும் சத்யராஜ், முத்தையா ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமறைவுக்கு தர்மபுரி அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு தொடர்பு இருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.
    விருதுநகர்:

    கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி மீது வேலை வாங்கித்தருவதாக கூறி மோசடி செய்ததாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்த வழக்கில் கைது செய்யாமல் இருக்க ராஜேந்திர பாலாஜி ஐகோர்ட்டில் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். ஆனால் கைது நடவடிக்கையை தவிர்க்க ராஜேந்திர பாலாஜி தலைமறைவானார்.

    அவரை பிடிக்க 8 தனிப்படை அமைக்கப்பட்டது. ஆனால் இதுவரை ராஜேந்திர பாலாஜி பதுங்கி இருக்கும் இடம் குறித்து எந்த தகவலும் போலீசுக்கு கிடைக்கவில்லை. ஆனாலும் போலீசார் அவரை பிடிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    அதன்படி அவருடன் நெருக்கமாக இருந்த அ.தி.மு.க. நிர்வாகிகளிடம் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். நேற்று முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மனிடம் விருதுநகர் மாவட்ட போலீசார் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் ராஜேந்திர பாலாஜி தலைமறைவுக்கு தர்மபுரி அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு தொடர்பு இருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    அதன் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் அன்பழகனின் கார் டிரைவர் ஆறுமுகம், உதவியாளர் பொன்னுவேல் உள்பட 4 பேரை விசாரணைக்காக விருதுநகர் மாவட்டத்துக்கு போலீசார் அழைத்து வந்தனர். அவர்களை ரகசிய இடத்தில் வைத்து விடிய விடிய போலீசார் விசாரணை நடத்தினர். அந்த 4 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


    முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மனை போலீசார் விசாரணைக்கு அழைத்த விவகாரம் அ.தி.மு.க.வினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ராஜேந்திரபாலாஜி மீது பணம் மோசடி புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ 3 கோடி மோசடி புகாரில் அவர் உள்பட அ.தி.மு.க. பிரமுகர்கள் சிலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த வழக்கில் போலீசார் தன்னை கைது செய்யாமல் இருக்க ராஜேந்திரபாலாஜி முன் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனு ஐகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து அவர் தலைமறைவாகி விட்டார்.

    இந்த நிலையில் அவரை பிடித்து விசாரணை நடத்த விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் உத்தரவின் பேரில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. ஆனால் ராஜேந்திர பாலாஜி எங்கு இருக்கிறார் என்பதை இதுவரை தனிப்படை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இருப்பினும் மதுரை, திருப்பத்தூர், வேலூர், கோவை மற்றும் பிற மாநிலங்களான ஆந்திரா, கேரளா, டெல்லி பகுதிகளுக்கும் தனிப்படை போலீசார் சென்று ராஜேந்திரபாலாஜி அங்கு பதுங்கி இருக்கிறாரா? என தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

    மேலும் அ.தி.மு.க. பிரமுகர்களின் செல்போன் உரையாடல்களை போலீசார் ரகசியமாக கண்காணித்து வருகின்றனர். ராஜேந்திரபாலாஜியின் நெருங்கிய ஆதரவாளர்களின் செல்போன்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டது.

    அதன் அடிப்படையில் திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர்கள் ஏழுமலை, விக்னேஸ்வரன் ஆகியோர் மீது தனிப்படை போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில் விருதுநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான எம். எஸ்.ஆர். ராஜவர்மனை விசாரணைக்காக வரும்படி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் அழைத்தனர்.

    அதன்படி அவர் இன்று விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் டி.ஐ.ஜி. காமினி மற்றும் போலீசார் பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தினர்.

    முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மனை போலீசார் விசாரணைக்கு அழைத்த விவகாரம் அ.தி.மு.க.வினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகம் முன்பு திரண்டனர். இதனால் விருதுநகரில் பரபரப்பு ஏற்பட்டது.


    காலை 7 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதி அளிக்கப்படும் என்றும், அனுமதி நாட்களில் மழை பெய்தால் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
    வத்திராயிருப்பு :

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர்.

    இந்த கோவிலுக்கு செல்ல அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம் ஆகிய நாட்களையொட்டி மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. இந்தநிலையில் மார்கழி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு வருகிற 31-ந் தேதி முதல் 3-ந் தேதி வரை பக்தர்கள் கோவிலுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம், வனத்துறை மற்றும் கோவில் நிர்வாகத்தின் சார்பாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    காலை 7 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதி அளிக்கப்படும் என்றும், அனுமதி நாட்களில் மழை பெய்தால் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதேபோல பக்தர்கள் நீர் ஓடை பகுதிகளில் இறங்கி குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதாகவும், இரவு நேரங்களில் மலைப்பகுதியில் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் சமூக இடைவெளியை பின்பற்றவும், முக கவசம் அணிந்து கோவிலுக்கு வரவும், 10 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள், 50 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    பிரதோஷத்தையொட்டி சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
    வத்திராயிருப்பு:

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர்.

    இந்த கோவிலுக்கு செல்ல அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம் ஆகிய நாட்களையொட்டி மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. இந்தநிலையில் மார்கழி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு வருகிற 31-ந் தேதி முதல் 3-ந் தேதி வரை பக்தர்கள் கோவிலுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம், வனத்துறை மற்றும் கோவில் நிர்வாகத்தின் சார்பாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    காலை 7 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதி அளிக்கப்படும் என்றும், அனுமதி நாட்களில் மழை பெய்தால் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதேபோல பக்தர்கள் நீர் ஓடை பகுதிகளில் இறங்கி குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதாகவும், இரவு நேரங்களில் மலைப்பகுதியில் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் சமூக இடைவெளியை பின்பற்றவும், முக கவசம் அணிந்து கோவிலுக்கு வரவும், 10 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள், 50 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
    ×