search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சதுரகிரி கோவில்"

    • பக்தர்கள் மலைப்பகுதியில் இரவில் தங்குவதற்கு அனுமதி இல்லை.
    • மலையேறுவதற்கான அனுமதி ரத்து செய்யப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    வத்திராயிருப்பு:

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு பிரதோஷம் மற்றும் கார்த்திகை மாத அமாவாசையை முன்னிட்டு வருகிற 10-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை பக்தர்கள் கோவிலுக்குள் செல்ல வனத்துறை மற்றும் கோவில் நிர்வாகத்தின் சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    பக்தர்கள் மலைப்பகுதியில் இரவில் தங்குவதற்கு அனுமதி இல்லை. கோவிலுக்கு நடந்து செல்லும் மலைப்பாதைகளில் உள்ள ஆற்றுப்பகுதியில் இறங்கி குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அனுமதிக்கப்பட்ட நாட்களில் எதிர்பாராதவிதமாக மழை பெய்தாலோ, ஆற்றுப்பகுதிகளில் நீர்வரத்து அதிகமாக இருந்தாலும் பக்தர்களின் பாதுகாப்பை கருதி, மலையேறுவதற்கான அனுமதி ரத்து செய்யப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    • கார்த்திகை மாத பவுர்ணமியையொட்டி சதுரகிரி கோவிலுக்கு செல்ல 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
    • மழை பெய்தால் அனுமதி ரத்து செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள சதுரகிரி சந்தன மகாலிங்கம், சுந்தர மகாலிங்கம் கோவில் பவுர்ணமி, பிரதோஷ வழிபாட்டிற்கு பிரசித்தி பெற்றதாக உள்ளது.

    கார்த்திகை மாதம் தொடங்கியுள்ள நிலையில் பவுர்ணமியையொட்டி வருகிற 24-ந் தேதி முதல் 4 நாட்கள் பக்தர்கள் மலையேறிச் சென்று சாமி தரிசனம் செய்ய வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது. மழை பெய்தால் அனுமதி ரத்து செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்-மேக மலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட சாப்டூர் வனச் சரகத்தில் பிரசித்தி பெற்ற சதுரகிரி மலையில் சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோயில்கள் உள்ளது. கடல் மட்டத்தி லிருந்து 3500 அடி உயரத்தில் உள்ள இந்த கோவிலுக்கு கட்டாறுகள் மற்றும் நீரோடைகளை கடந்து கரடு முரடான மலைப்பாதை வழியாக 10 கி.மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டும்.

    இங்கு பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி ஆகிய நாட்களில் மட்டும் பக்தர்கள் வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. தொடர் மழை காரணமாக கடந்த மாதம் அமாவாசை வழிபாட்டிற்கு கோவிலுக்கு செல்வதற்கு பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    தற்போது வத்திராயிருப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் வழிபாடு செய்ய முடியுமா? என்பது உறுதியாக தெரியவில்லை. இந்த கோவிலுக்கு மலையேறிச் செல்வதற்கு காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். 10 வயதிற்குட்பட்ட சிறுவர்கள், 60 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கு அனுமதி இல்லை. எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்ல கூடாது உள்ளிட்ட கடும் கட்டுப்பாடுகளுடன் மட்டுமே வனத்துறை அனுமதி வழங்கி வருகிறது.

    • உரிய அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட கோவிலுக்கு பக்தர்கள் செல்ல எவ்வாறு உரிமை கோர முடியும்.
    • வேண்டுமென்றால் மனுதாரர் குறிப்பிட்ட நாளில் காலை 1 மணி நேரம் மாலை 1 மணி நேரம் தரிசனம் செய்ய அனுமதி வழங்கலாம்.

    மதுரை:

    விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சடையாண்டி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சுவாமி மலைக்கு மேல் உள்ள ஆனந்த வள்ளியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி திருவிழா நடைபெறும். நவராத்திரி திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்க மூன்று நாட்கள் அனுமதி வழங்க விருதுநகர் கலெக்டர், இந்து சமய அறநிலைத்துறை மற்றும் காவல்துறையிடம் அனுமதி கோரி மனு கொடுக்கப்பட்டது. ஆனால் அனுமதி மறுத்து விட்டனர்.

    எனவே மூன்று நாள் இரவு தங்கி நவராத்திரி விழா கொண்டாட அனுமதிக்க உத்தரவிட கோரிய மனுவில் கூறியுள்ளார். இந்த மனுவை நீதிபதி புகழேந்தி நேற்று விசாரித்து, அங்கு ஒருநாள் மட்டும் பக்தர்கள் தங்க அனுமதிக்கலாமா? என்பது குறித்து இந்து சமய அறநிலையத்துறை மற்றும் வனத்துறை சார்பாக பதில் அளிக்க உத்தரவிட்டு இருந்தார். 

    இந்நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை தரப்பு வக்கீல் ஆஜராகி, மலைக்கோவிலுக்கு செல்ல மூன்று பாதைகள் உள்ளன. மூன்று பாதைகளிலும் 3 போலீஸ் டி.எஸ்.பி.க்கள் தலைமையில் 350 காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவார்கள் என தெரிவித்தார்.

    இதனை பதிவு செய்த நீதிபதி, உரிய அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட கோவிலுக்கு பக்தர்கள் செல்ல எவ்வாறு உரிமை கோர முடியும். ஒரு பிரிவினருக்கு கோவிலில் தங்க அனுமதி கொடுத்தால் மற்றவர்களும் நீதிமன்றத்தை அணுகுவார்கள். இதை அனுமதிக்க முடியாது.

    வேண்டுமென்றால் மனுதாரர் குறிப்பிட்ட நாளில் காலை 1 மணி நேரம் மாலை 1 மணி நேரம் தரிசனம் செய்ய அனுமதி வழங்கலாம். அந்த முடிவை வனத்துறை தான் எடுக்க வேண்டும். இந்த வழக்கில் எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது. விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் எனக்கூறி வழக்கை ஒத்திவைத்தார்.

    • அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷ நாட்கள் வரும் போது சுந்தர மகாலிங்க சுவாமியை தரிசிக்க பக்தர்களுக்கு வனத்துறையினர் கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளித்து வருகின்றனர்.
    • மழை பெய்தாலோ, காட்டுத் தீ ஏற்பட்டாலோ பக்தர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்படும் என வனத்துறை தெரிவித்துள்ளது.

    திருமங்கலம்:

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள சதுரகிரி சந்தன மகாலிங்கம்-சுந்தர மகாலிங்கம் கோவில் பிரசித்தி பெற்றதாகும். இந்த கோவில் அடர் வனப்பகுதியில் உள்ளது.

    இதனால் அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷ நாட்கள் வரும் போது சுந்தர மகாலிங்க சுவாமியை தரிசிக்க பக்தர்களுக்கு வனத்துறையினர் கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நாளை 28-ந்தேதி பிரதோஷம் வருவதை முன்னிட்டு 4 நாட்கள் பக்தர்கள் தாணிப்பாறை கேட்டில் இருந்து மலையேறி சென்று தரிசிக்க வனத்துறை அனுமதி அளித்துள்ளது.

    காலை 7 மணி முதல் 12 மணி வரை மட்டுமே பயணிகள் மலையேறிச் செல்ல அனுமதிக்கப்படுவர். பக்தர்கள் எளிதில் தீப்பற்றக்கூடிய மற்றும் கத்தி போன்ற ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. மழை பெய்தாலோ, காட்டுத் தீ ஏற்பட்டாலோ பக்தர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்படும் என வனத்துறை தெரிவித்துள்ளது.

    • உப்புத்துறையில் இருந்து 18 கி.மீ தூரம் நடந்து சென்றால் சுந்தரமகாலிங்கம் கோவிலை அடைந்து விட முடியும். இதற்காக உப்புத்துறைக்கு 50க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் நேற்று முதல் இயக்கப்பட்டது
    • வனவிலங்குகள் நடமாட்டம் காரணமாக காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே பக்தர்கள் கோவி லுக்கு செல்ல அனுமதிக்க ப்படுகின்றனர்.

    வருசநாடு:

    விருதுநகர் மாவட்டம் வத்ராப் அருகில் அமைந்து ள்ள சதுரகிரி சுந்தரமகா லிங்கம் கோவிலுக்கு ஒவ்வொரு அமாவாசை, பவுர்ணமி நாட்களிலும் பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் வருகை தருவது வழக்கம். இந்த கோவிலுக்கு செல்ல தாணிப்பாறை வழியாகவும், தேனி மாவட்டம் உப்புத்துறை வழியாகவும் 2 பாதைகள் உள்ளது. உப்புத்துறை பகுதி மேகமலை வனச்சரணா லயத்துக்கு உட்பட்ட பகுதி என்பதால் இந்த பாதை வருடம் முழுவதும் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    ஆடி அமாவாசை அன்று மட்டும் பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். உப்புத்துறையில் இருந்து 18 கி.மீ தூரம் நடந்து சென்றால் சுந்தரமகாலிங்கம் கோவிலை அடைந்து விட முடியும். இதற்காக உப்புத்துறைக்கு 50க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் நேற்று முதல் இயக்கப்பட்டது.

    இந்நிலையில் இன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு சுவாமி தரிச னத்துக்காக நேற்று முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் உப்புத்துறை கிராமத்திற்கு வந்து மலைப்பாதை வழியாக கோவிலுக்கு செல்ல தொடங்கியுள்ளனர். மேகமலை வனப் பாதுகாப்பு வன சரகர் சாந்தினி தலை மையிலான வனத்துறையி னர் வருசநாடு, மேகமலை, கண்டமனூர் வனத்துறை யினர் யானைக்கஜம் பகுதியில் சோதனைச் சாவடி அமைத்து கோவி லுக்கு வரும் பக்தர்களிடம் இருந்து பிளாஸ்டிக், தீப்பெட்டி, பீடி, சிகரெட் உள்ளிட்ட தடை செய்யப்ப ட்ட பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

    உணவு மற்றும் குடிநீர் பாட்டில்களுக்கு மட்டுமே வனத்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர். மேலும் வனவிலங்குகள் நடமாட்டம் காரணமாக காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே பக்தர்கள் கோவி லுக்கு செல்ல அனுமதிக்க ப்படுகின்றனர். அதேபோல மயிலாடு ம்பாறை போலீ சாரும் தொடர்ந்து பாது காப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 10 வயதுக்கு உட்பட்டோர்களும், 60 வயதுக்கு மேற்பட்டோரும் மலையேற அனுமதி கிடையாது.
    • கடந்த 2 வாரங்களுக்கு முன்பு சதுரகிரியை ஒட்டியுள்ள ஊஞ்சிக்கல் மலைப்பகுதியில் காட்டுத்தீ பரவியது.

    திருமங்கலம்:

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில் உள்ள சதுரகிரி சுந்தர-சந்தன மகாலிங்கம் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.

    கடல் மட்டத்தில் இருந்து 3000 அடிக்கு மேல் உள்ள இந்த கோவிலுக்கு மாதந்தோறும் பவுர்ணமி, அமாவாசை ஆகிய நாட்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய தலா 4 நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. வனத்துறை கட்டுப்பாட்டில் இந்தப் பகுதி உள்ளதால் மலையேறும் பக்தர்களுக்கு கெடுபிடிகள் விதிக்கப்பட்டு வருகிறது.

    ஒவ்வொரு வருடமும் ஆடி, தை, மகாளய அமாவாசை நாட்களில் தமிழகம் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

    அதன்படி இந்த ஆண்டு வருகிற 16-ந்தேதி ஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரியில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய விரிவான ஏற்பாடுகள் மதுரை மற்றும் விருதுநகர் மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் செய்யப்பட்டு வருகின்றன. பக்தர்கள் அதிக அளவில் திரளுவார்கள் என்பதை கருத்தில் கொண்டு நாளை (12-ந்தேதி) முதல் 17-ந்தேதி வரை சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    10 வயதுக்கு உட்பட்டோர்களும், 60 வயதுக்கு மேற்பட்டோரும் மலையேற அனுமதி கிடையாது. காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவர். எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு செல்லக்கூடாது. மலைப்பாதைகளில் உள்ள நீரோடைகளில் குளிக்கக்கூடாது. இரவில் மலை கோவிலில் தங்க அனுமதி இல்லை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை வனத்துறை அறிவித்துள்ளது.

    ஆடி அமாவாசையை முன்னிட்டு மதுரை, விருதுநகர், திருமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

    நாளை முதல் பக்தர்கள் சதுரகிரிக்கு வரத்தொடங்குவார்கள் என்பதால் இந்தமுறை ஆடி அமாவாசைக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரியில் குவிவார்கள் என தெரிகிறது. இதையொட்டி வனத்துறை மற்றும் போலீசார் சார்பில் பாதுகாப்பு பணிகளும் பலப்படுத்தப்பட்டு வருகின்றன.

    கடந்த 2 வாரங்களுக்கு முன்பு சதுரகிரியை ஒட்டியுள்ள ஊஞ்சிக்கல் மலைப்பகுதியில் காட்டுத்தீ பரவியது. இதன் காரணமாக பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த முறை காட்டுத்தீ ஏற்பட வாய்ப்பில்லை என வனத்துறையினர் தெரிவித்தனர். இருப்பினும் சதுரகிரி மற்றும் அதனை ஒட்டியுள்ள வனப்பகுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்படும் என தெரிகிறது.

    • தமிழகத்தின் பல்வேறு மாட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் ஒவ்வொரு மாதமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்வார்கள்.
    • சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் கார்த்திகை தீப திருநாள் மற்றும் பவுர்ணமி பூஜைக்காக இன்று முதல் பக்தர்கள் மலையேறி செல்ல அனுமதி அளித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் பேரையூர் அருகே சாப்டூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில்.

    இந்த கோவில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு மாதந்தோறும் பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி நாட்கள் என மொத்தம் 8 நாட்கள் மட்டுமே பக்தர்கள் கோவிலுக்கு செல்ல வனத்துறை சார்பிலும், மாவட்ட நிர்வாகம் சார்பிலும் அனுமதி வழங்கப்படும்.

    தமிழகத்தின் பல்வேறு மாட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் ஒவ்வொரு மாதமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்வார்கள்.

    இந்தநிலையில் கடந்த சில வாரங்களாக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த தொடர்மழை காரணமாக சதுரகிரி கோவிலுக்கு செல்லும் மலைப்பாதைகளில் உள்ள நீரோடைகளில் தண்ணீர் அதிகரித்து காணப்பட்டதால் பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கடந்த மூன்று பிரதோஷங்கள் மற்றும் அமாவாசை, பவுர்ணமிக்கு பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் நேற்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் மலைப்பகுதியில் உள்ள நீர் ஓடைகளில் நீர்வரத்து அதிகமாக இருந்ததாலும் தொடர்மழை அறிவிப்பு காரணமாகவும், நேற்று பிரதோஷத்தை முன்னிட்டு பக்தர்களின் பாதுகாப்பு கருதி பக்தர்கள் மலையேறி சென்ற சாமி தரிசனம் செய்ய வனத்துறை தடை விதித்திருந்தனர்.

    இந்நிலையில் தற்போது சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் கார்த்திகை தீப திருநாள் மற்றும் பவுர்ணமி பூஜைக்காக இன்று முதல் பக்தர்கள் மலையேறி செல்ல அனுமதி அளித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது.

    • நாளை முதல் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
    • ஆற்றுப் பகுதிகளில் தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகமாக இருப்பதாலும், பக்தர்கள் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்படுகிறது.

    வத்திராயிருப்பு:

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் சென்று வழிபட பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி உள்ளிட்ட மாதத்தின் 8 நாள்கள் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

    நாளை (21-ந் தேதி) முதல் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருப்பதால் வருகிற 23-ந் தேதி கார்த்திகை மாத அமாவாசையையொட்டி பக்தர்கள் கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.

    இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறையினர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாளை (21-ந் தேதி) முதல் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. இதனாலும், தாணிப்பாறை, வழுக்குப்பாறை, சங்கிலிப்பாறை ஆகிய ஆற்றுப் பகுதிகளில் தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகமாக இருப்பதாலும், பக்தர்கள் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்படுகிறது.

    கார்த்திகை மாத அமாவாசையை முன்னிட்டு, நாளை முதல் வருகிற 24-ந் தேதி வரை மலை அடிவாரத்துக்கோ, கோவிலுக்கு தரிசனம் செய்யவோ பக்தர்கள் வர வேண்டாம். அதேநேரம் கோவிலில் பிரதோஷம், அமாவாசை பூஜைகள் வழக்கம் போல் பக்தர்கள் பங்கேற்பின்றி நடைபெறும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • விருதுநகர் அருகே சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • மலைப்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் பக்தர்களின் பாதுகாப்பு கருதி இன்று பிரதோஷத்திற்கு தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டது.

    வத்திராயிருப்பு

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் மலைப்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் பக்தர்களின் பாதுகாப்பு கருதி இன்று பிரதோஷத்திற்கு தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டது.

    கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படாததால் அடிவாரத்திலேயே சுவாமி தரிசனம் செய்துவிட்டு ஏமாற்றத்துடன் பக்தர்கள் வீடு திரும்பினர்.

    • வெள்ளிமலை வனப்பகுதிகளில் கடந்த 2 நாட்களாக விடிய விடிய கன மழை பெய்து வருகிறது.
    • ஆடி அமாவாசையை முன்னிட்டு வருசநாடு அருகே வனப்பகுதி வழியாக பக்தர்கள் சதுரகிரிக்கு நடந்து சென்றனர்.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் கடமலை-மயிலை ஒன்றிய கிராமங்களில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது.

    குறிப்பாக மூலவைகை ஆறு உற்பத்தியாகும் வெள்ளிமலை வனப்பகுதிகளில் கடந்த 2 நாட்களாக விடிய விடிய கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மூலவைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு படிப்படியாக அதிகரித்துக்கொண்டே வந்தது. தொடர்ந்து மழையால் இன்று காலை மூலவைகை ஆற்றில் அதிக அளவில் நீர்வரத்து ஏற்பட்டது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்

    இதனிடையே ஆடி அமாவாசையை முன்னிட்டு வருசநாடு அருகே வனப்பகுதி வழியாக ஏராளமான பக்தர்கள் கடந்த 2 நாட்களாக சதுரகிரிக்கு நடந்து சென்றனர். அவர்களை வனத்துறையினர் சோதனை செய்து எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தி வந்தனர்.

    கோவிலுக்கு சென்று பக்தர்கள் திரும்பி கொண்டிருந்த நிலையில் நேற்று நள்ளிரவு கனமழை பெய்தது. இதனால் யானைகஜம் பகுதியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இரவு நேரத்தில் எங்கும் செல்லமுடியாதபடி பக்தர்கள் தவித்தனர். செல்போன் தொடர்பும் கிடைக்கவில்லை.

    இதனைதொடர்ந்து வனத்துறையினர் அங்கு வந்த பக்தர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். கடமலைக்குண்டு போலீசார் மற்றும் மயிலாடும்பாறை தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் அதிகாலை 1.15 மணியளவில் பக்தர்கள் அனைவரையும் கயிறு கட்டி மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அனைத்து பக்தர்களும் மீட்கப்பட்டு விட்டார்களா என்பதை உறுதி செய்த பிறகு தீயணைப்புத்துறையினர் அங்கிருந்து சென்றனர்.

    நள்ளிரவில் சிக்கி தவித்த பக்தர்கள் அனைவரையும் மீட்ட தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீசாருக்கு அவர்கள் நன்றி தெரிவித்துகொண்டனர்.

    ×