என் மலர்
வேலூர்
- பவள விழாவுடன் கூடிய முப்பெரும் விழா நடக்கிறது
- முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
வேலூர்:
தி.மு.க.வின் பவள விழாவுடன் கூடிய முப்பெரும் விழா, வேலூர் அடுத்த கந்தனேரியில் வருகிற 17-ந் தேதி நடக்கிறது.
இதில், தி.மு.க. தலைவரும், முதல் அமைச்சருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். அன்று காலை முதல் மாலை வரை தொடர்ந்து பல நிகழ்ச்சிகள் நடக்க உள்ளது.
இதில் வேலூர் அடுத்த மேல்மொணவூரில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில், பயனாளிகளுக்கு வீடுகளை ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் முதல் - அமைச்சர் பங்கேற்று, வீடுகளை பயனாளிகளுக்கு வழங்க உள்ளார்.
கட்சி மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க முதல் - அமைச்சர் வேலூருக்கு வருகிற 16-ந் தேதியே வந்துவிடுகிறார்.
அதன்படி, சென்னையில் இருந்து 16-ந் தேதி மாலை ரெயிலில் புறப்பட்டு, அன்று இரவு 7.30 மணிக்கு காட்பாடி ரெயில் நிலையத்திற்கு முதல் அமைச்சர் வருகிறார். அவருக்கு தி.மு.க. கட்சியினர் பிரமாண்டமான முறையில் வரவேற்பு அளிக்க திட்டமிட்டுள்ளனர்.
தொடர்ந்து, அன்று இரவு, விருந்தினர் மாளிகை அல்லது தனியார் ஓட்டலில் முதல் அமைச்சர் தங்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்துவருகிறது.
மறுநாள் 17-ந் தேதி காலை 10.15 மணிக்கு, மேல்மொணவூரில் உள்ள இலங்கைத் தமிழர் மறு வாழ்வு முகாமுக்கு செல்கிறார். அங்கு நிகழ்ச்சிக்கான மேடை எதுவும் அமைக்கப்படவில்லை. சிறிய அளவிலான பிளாட்பாரம் மட்டும் அமைக்கப்படுகிறது. அங்கிருந்து மேல்மொணவூர் முகாம் மட்டுமின்றி, தமிழகத்தின் பிற இடங்களிலும் கட்டப்பட்டுள்ள வீடுகளை காணொளி மூலம் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
பின்னர், மேல்மொணவூர் முகாமில் உள்ள ஒரு சில வீடுகளை பார்வையிட்டு, பயனாளிகளுக்கு சாவியை ஒப்படைக்கிறார். தொடர்ந்து, தி.மு.க. முப்பெரும் விழா நடக்கும் கந்தனேரிக்கு செல்கிறார்.
அங்கு தி.மு.க. கொடியேற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்று, கொடியேற்றி வைத்த பின்னர் மீண்டும் வேலூர் வந்து ஓய்வெடுக்கிறார்.
அன்று மாலை விழா மேடைக்கு செல்லும்வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிடையே, வேலூர் வரும் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் களஆய்வு பணியிலும் ஈடுபடலாம் என கூறப்படுகிறது.
இதனால், வேலூர் மாவட்ட அதிகாரிகள் மட்டுமின்றி, தி.மு.க.வினரும் அதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகின்றனர்.
- பராமரிப்பு பணிகள் நடக்கறது
- அதிகாரி தகவல்
வேலூர்:
வேலூர் மின் பகிர்மான வட்டம், சத்துவாச்சாரி ,தொரப்பாடி ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர அத்தியாவசிய மின் பராமரிப்பு பணிகள் நடக்கறது.
இதனால் நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை சத்துவாச்சாரி பகுதி 1 முதல் பகுதி 5 வரை,அன்பு நகர், ஸ்ரீராம் நகர், டபுள் ரோடு, வள்ளலார், ரங்காபுரம், அலமேலுமங்காபுரம், சைதாப்பேட்டை, சி.எம்.சி.காலனி, எல்.ஐ.சி.காலனி, காகிதப்பட்டறை, இ.பி.நகர்,சித்தேரி, தென்றல் நகர், இடையஞ்சாத்து, பென்னாத்தூர், ஆவாரம்பாளையம், அரியூர், தொரப்பாடி, சிறை குடியிருப்பு, எழில்நகர், டோல்கேட், அண்ணா நகர், சங்கரன்பாளையம், சாயிநாதபுரம், பலவன்சாத்துகுப்பம், விருப்பாட்சிபுரம், ஒட்டேரி, பாகாயம், இடையம்பட்டி, சாஸ்திரி நகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும். இந்த தகவலை செயற்பொறியாளர் ஆரோக்கிய அற்புதராஜ் தெரிவித்துள்ளார்.
- வருகிற 17-ந் தேதி தொடங்குகிறது
- 9 மத்திய சிறைகளில் செயல்படுத்தப்படுகிறது
வேலூர்:
பள்ளிக்கல்வி துறையின் பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் இயக்கம் சார்பில் தமிழ்நாட்டில் உள்ள சிறைகளில் 'சிறப்பு எழுத்தறிவு திட்டம்' செயல்படுத்தப் பட்டு வருகிறது.
குறிப்பாக முற்றிலும் எழுத, படிக்க தெரியாத கைதிகளுக்கு அடிப்படை எழுத்தறிவு வழங்குவதற்கான நடவடிக்கைகளில் பள்ளி கல்வித்துறை மூலம் இத்திட்டம் செயல்படுகிறது. வேலூர், சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம், பாளையங்கோட்டை உள்ளிட்ட 9 மத்திய சிறைகள் மற்றும் கடலூர் மாவட்ட சிறையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
அதன்படி, வேலூர் மத்திய சிறையில் உள்ள கைதிகளுக்கு சிறப்பு எழுத்தறிவு திட்டம் வரும் 17-ந் தேதி தொடங்கப்பட உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் மற்றும் பயிற்சி அளிக்கும் முறைகள் குறித்த ஆலோசனை கூட்டம் காட்பாடி காந்தி நகரில் உள்ள ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவி திட்ட அலுவலகத்தில் நடந்தது.
வேலூர் மாவட்டத்தில் வேலூர், காட்பாடி, கே.வி. குப்பம், அணைக்கட்டு, குடியாத்தம், கணியம்பாடி. பேரணாம்பட்டு ஆகிய வட்டார கல்வி அலுவலகங்களில் பணியாற்றும் ஆசிரியர் பயிற்றுனர்கள். வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் ஆகியோர் பயிற்சியில் ஈடுபட உள்ளனர்.
- மின் வயர்களை உயர்த்தி கட்ட வேண்டும்
- ஆக்கிரமிப்புகளை அகற்ற உதவி கலெக்டர் உத்தரவு
வேலூர்:
விநாயகர் சதுர்த்தியையொட்டி வேலூர் மாநகர பகுதியில் ஆண்டுதோறும் 1500-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடைபெறும்.
வழிபாடு முடிந்த பிறகு விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சதுப்பேரி ஏரியில் கரைக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு நடைபெறும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் அசம்பாவித சம்பவங்களை தடுக்க உதவி கலெக்டர் கவிதா, வேலூர் டவுன் டிஎஸ்பி திருநாவுக்கரசு, தாசில்தார் செந்தில் உள்ளிட்ட அதிகாரிகள் ஊர்வல பாதையை ஆய்வு செய்தனர்.
வேலூர் சைதாப்பேட்டை முருகர் கோவிலில் மெயின் பஜார் லாங்கு பஜார் அண்ணா கலையரங்கம் கோட்டை சுற்றுச்சாலை மாங்காய் மண்டி பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலை மற்றும் சிலைகள் கரைக்கப்படும் சதுப்பேரி ஏரி ஆகிய இடங்களை ஆய்வு செய்தனர்.
அப்போது விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உதவி கலெக்டர் கவிதா அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். சாலையோரங்களில் உள்ள தள்ளுவண்டிக் கடைகளை அகற்ற வேண்டும். ஊர்வல பாதையில் தாழ்வான நிலையில் செல்லும் மின் வயர்களை உயர்த்தி கட்ட வேண்டும் என உத்தரவிட்டார்.
- வனப்பகுதியில் மேய்ச்சலுக்கு சென்ற போது பரிதாபம்
- வனத்துறையினர் விசாரணை
வேலூர்:
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த ராமாபுரம்மேடு கிரா மத்தை சேர்ந்தவர் தண்டபாணி, விவசாயி.
இவருக்கு சொந்தமான பசு மாட்டை நேற்று முன்தினம் காலை அருகே உள்ள வனப்பகுதிக்கு மேய்ச்ச லுக்கு ஓட்டிச்சென்று விட்டார். வழக்கமாக மாலையில் பசு கொட் டகைக்கு திரும்புவது வழக்கம். ஆனால் இரவு வரை திரும்ப வில்லை.
நேற்று காலை வரை மாடு வீட்டிற்கு வராததால் அதிர்ச்சி அடைந்த அவர் சந்தேகமடைந்து வனப்பகுதிக்குள் சென்று தேடி பார்த்தார்.
அப்போது, காட்டுயானை மிதித்து பசுமாடு இறந்து கிடந்தது தெரியவந்தது.
இதையடுத்து குடியாத் தம் வனத்துறையினருக்கு தகவல் அளித்தார். சம் பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் பசுமாட்டின் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக கல்லப்பாடி கால்நடை மருத்துவகுழு வினரிடம் ஒப்படைத்த னர்.
இதுகுறித்து வனத்து றையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். யானை மிதித்து பசுமாடு பலியான தகவல் அறிந்து ராமாபு ரம் கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
- வனத்துறையினர் 12 பேர் இரவு முழுவதும் ரோந்து
- கலெக்டர் குமாரவேல் பாண்டியன் அவசர அறிக்கை
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அருகே உள்ள ஊனை மோட்டூர் கிராமத்தில் ஒருவரின் வீட்டின் முன்பு பூனை இறந்து கிடந்தது.
அந்த பூனை எப்படி இறந்தது என்பதை அறிய, வீட்டின் உரிமையாளர் தனது வீட்டு வாசலில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தார்.
அதில் வீட்டின் வாசலில் இருந்த பூனையை ஏதோ பெரிய விலங்கு ஒன்று கடித்து குதறியது காட்சிகள் பதிவாகி இருந்தது. அந்த விலங்கு சிறுத்தை போல் உள்ளது.
அந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.
இது குறித்து தகவல் அறிந்த ஒடுகத்தூர் வனத்துறையினர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
பூனையை சிறுத்தை தான் கொன்றதா? இல்லை வேறு ஏதாவது விலங்கு கொன்றதா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தகவல் சுற்றுவட்டார கிராமங்களில் காட்டு தீ போல் பரவியது. இதனால் பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியே வராமல் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். மேலும் பொது மக்கள் பீதி அடைந்து அச்சத்தில் உள்ளனர்.
இது குறித்து கலெக்டர் குமாரவேல் பாண்டியன் அவசர அறிக்கை ஒன்று வெளியிட்டார். அதில் அவர் கூறியதாவது:-
ஊனை மோட்டூர் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியே வரவேண்டாம், வீட்டிலே உஷாராக இருக்க வேண்டும். மேலும் கிராமத்தில் ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்கப்படும். இவ்வாறு அவர் கூறியிருந்தார்.
இதனை தொடர்ந்து கிராமத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த அதிகாரிகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் மாவட்ட வன அலுவலர் கலாநிதி உத்தரவின் பேரில், ஒடுகத்தூர் மற்றும் வேலூர் வனச்சரகத்தினர் இணைந்து 12 பேர் கொண்ட குழு அந்த கிராமத்தில் இரவு முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில்:-
தற்போது கண்காணிப்பு கேமரா காட்சிகள் மட்டுமே கிடைத்துள்ளது. இந்த வீடியோவில் இருப்பது சிறுத்தை தானா என்பது முழுமையாக தெரியவில்லை. நாய் போன்ற உருவம் பதிவாகி உள்ளது.
பூனையை துரத்தி சென்று கடித்துக் குதறியது நாய் தான் என்பது 60 சதவீதம் உறுதியாகி உள்ளது.
எனவே இதனை ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் காப்பகத்திற்கு அனுப்பி வைத்துள்ளோம். அங்கு இருக்கும் அதிகாரிகள் ஆய்வு செய்து கூறிய பிறகே, அது என்ன விலங்கு என தெரியவரும்.
இருப்பினும் அது என்ன விலங்கு? என்பதை கண்டறிய 12 பேர் கொண்ட குழுவினர் கிராமத்தில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணித்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது
- சாலையில் காய்கறிகளை கொட்டினர்
வேலூர்:
வேலூர் தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் லதா தலைமையிலான நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விலைவாசி உயர்வு, வேலையின்மை, உள்ளிட்டவற்றை கண்டித்தும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
மேலும் விலைவாசி உயர்வை குறிக்கும் வகையில் திடீரென சாலையில் காய்கறிகளை கொட்டி மறியலில் ஈடுபட்டனர்.
இதனால அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது
- பார்க்கிங் வசதி குறித்து சோதனை செய்தார்
வேலூர்:
தி.மு.க பவள விழா உள்ளிட்ட முப்பெரும் விழா பள்ளிகொண்டா அருகே கந்தனேரியில் வருகிற 17-ந் தேதி நடைபெற உள்ளது.
இதில், தமிழக முதல் -அமைச்சரும் தி.மு.க தலைவருமான ஸ்டாலின் பங்கேற்கிறார்.இதை யொட்டி, பள்ளி கொண்டா கந்தனேரி பகுதியில் பிரம்மாண்டமான பந்தல் மற்றும் விழா மேடை அமைக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.
இப்பணிகளை கட்சியின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் ஆய்வு செய்தார்.
அப்போது, 6 வழிச்சாலையில் இருந்து விழா மேடைக்கு முதல் - அமைச்சர் செல்லும் பாதை குறித்து ஆலோசிக்கப்பட்டது. விழா ஏற்பாடுகள் குறித்து அமைச்சருக்கு, மாவட்ட செயலாளரும் அணைக்கட்டு எம்.எல்.ஏ வுமான நந்தகுமார் விரிவாக எடுத்துரைத்தார்.
இதைத்தொடர்ந்து அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:-
இந்த முப்பெரும் விழாவில் தி.மு.க வின் பவள விழா இருப்பதும், அந்த விழா வேலுாரில் நடப்பதும்சிறப்பு. இதில், கன்னியாகுமரி முதல் கும்மிடிப்பூண்டி வரை பரந்து கிடக்கும் கட்சியினர் கலந்து கொள்ள உள்ளனர் என்றார்.
இந்த ஆய்வின்போது, எம்.பி. க்கள் ஜெகத்ரட்சகன், கதிர் ஆனந்த், எம்.எல்.ஏ கார்த்திகேயன், அணைக்கட்டு ஒன்றியக்குழு தலைவர் மாநகராட்சி துணை மேயர் சுனில்குமார், பள்ளிகொண்டா டவுன் பஞ்சாயத்து தலைவர் சுபபிரியா, ஒன்றிய தி.மு.க செயலாளர்கள் வெங்கடேசன், சீதாராமன் ஆகியோர் உடன் இருந்தனர்.
விழா நடக்கும் மைதானத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் ஆய்வு செய்தார்.
அப்போது, 6 வழிச்சாலையின் இருபுறங்க ளிலும், விழாவுக்கு வருகை தரும் கட்சியினரின் வாக னங்களுக்கு ஏற்படுத்தப்படும் பார்க்கிங் வசதி குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
இதேபோன்று, மேல் மொணவூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் புதியதாக கட்டப்பட்ட வீடுகளையும், முதல்வர் திறந்து வைக்க உள்ளார். அப்பகுதியிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது, டி.எஸ்.பி. திருநாவுக்கரசு மற்றும் போலீசார் இருந்தனர்.
- முறையாக பில்கள் போடவில்லை என புகார்
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த கந்தனேரி பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் அரசு மணல் குவாரி செயல்பட்டு வருகிறது. இங்கு அளவுக்கு அதிகமாக மணல் எடுக்கப்பட்டு வருவதாகவும், முறையாக பில்கள் போடவில்லை என புகார்கள் எழுந்தவந்தது.
இந்த நிலையில் இன்று காலை 6 பேர் கொண்ட அமலாக்கத் துறையினர் திடீரென கந்தனேரி மணல் குவாரிக்கு வந்தனர்.
மணல் குவாரியில் மணல் அள்ளப்பட்ட இடங்கள், ஊழியர்கள் உள்ளிட்ட வர்களிடம் விசாரணை நடத்தினர்.சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக அமலாக்கத் துறை யினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
மேலும் மணல் அள்ளும் பணியும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- ரத்த வெள்ளத்தில் பிணமாக மீட்பு
- போலீசார் விசாரணை
வேலூர்:
காட்பாடி அடுத்த லத்தேரி அருகே உள்ள கோரப்பட்டரை பகுதியியை சேர்ந்தவர் ராமலிங்கம் என்பவரின் மகன் குணசேகரன் (வயது 23). இவர் தனியார் தொழிற்சாலையில் வெல்டராக பணியாற்றி வந்தார்.
நேற்று காலை வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து அக்கம்பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இன்று காலை அவரது பெற்றோர் குணசேகரனை தேடி சென்றனர். அப்போது அவர் கோரப்பட்டரை பகுதி சாலை ஓரத்தில் தலையில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.
இதனை பார்த்த அவரது பெற்றோர் குணசேகரன் உடலை பார்த்து கதறி அழுதனர். இது குறித்து அந்த பகுதி மக்கள் லத்தேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று, குணசேகரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவ இடத்தில் வேலூர் போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
இது குறித்து லத்தேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசார் முதல் கட்ட விசாரணையில், நேற்று இரவு குணசேகரன், சம்பவ இடத்தில் தனது நண்பர்களுடன் அமர்ந்து மது அருந்தியது தெரிய வந்துள்ளது. அவரை அடித்து கொலை செய்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- இன்று முதல் 15-ந்தேதி வரை நடக்கிறது
- நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது.
இந்தநிலையில் வேலூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆலோசனை கூட்டம் நடந்தது. உதவி கலெக்டர் கவிதா தலைமை தாங்கினார். தாசில்தார் செந்தில் முன்னிலை வகித்தார்.
இதில் இந்து முன்னணி கோட்ட தலைவர் மகேஷ் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அவர்கள் கூறுகையில்:-
விநாயகர் சதுர்த்தி அன்று பலர் சிலைகளை வைத்து வழிபடுவார்கள்.
இதற்காக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அனுமதி பெறுவதில் சிக்கல்கள் உள்ளது. எனவே அதை எளிமைப்படுத்த வேண்டும்.
மேலும் சிலை ஊர்வல பாதைகளை சீரமைக்க வேண்டும். சிலைகளை கரைக்கும் பகுதியில் அனைத்து வசதிகளும் செய்யப்பட வேண்டும் என்றனர்.
சிறப்பு முகாம்
பின்னர் உதவி கலெக்டர் கவிதா கூறுகையில், சிலைகள் வைக்க அனுமதி பெற அனைத்து துறை களையும் ஒருங்கிணைந்த வேலூர் உட் கோட்டத்து க்குட்பட்ட தாலுகா அலுவலகங்களில் இன்று முதல் வருகிற 15-ந் தேதி வரை சிறப்புமுகாம் நடைபெறும்.
அதில் சிலை வைக்க விரும்புபவர்கள் கலந்து கொண்டு விண்ண ப்பங்களை அளித்து அனுமதி பெறலாம் என்றார்.
- மணல் குவாரியில் மணல் அள்ளப்பட்ட இடங்கள், ஊழியர்கள் உள்ளிட்ட வர்களிடம் விசாரணை நடத்தினர்.
- மணல் அள்ளும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த கந்தனேரி பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் அரசு மணல் குவாரி செயல்பட்டு வருகிறது. இங்கு அளவுக்கு அதிகமாக மணல் எடுக்கப்பட்டு வருவதாகவும், முறையாக பில்கள் போடவில்லை என புகார்கள் எழுந்தவந்தது.
இந்த நிலையில் இன்று காலை 6 பேர் கொண்ட அமலாக்கத் துறையினர் திடீரென கந்தனேரி மணல் குவாரிக்கு வந்தனர்.
மணல் குவாரியில் மணல் அள்ளப்பட்ட இடங்கள், ஊழியர்கள் உள்ளிட்ட வர்களிடம் விசாரணை நடத்தினர். சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
மேலும் மணல் அள்ளும் பணியும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.






