என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்
    X

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்

    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது
    • சாலையில் காய்கறிகளை கொட்டினர்

    வேலூர்:

    வேலூர் தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் லதா தலைமையிலான நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    விலைவாசி உயர்வு, வேலையின்மை, உள்ளிட்டவற்றை கண்டித்தும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

    மேலும் விலைவாசி உயர்வை குறிக்கும் வகையில் திடீரென சாலையில் காய்கறிகளை கொட்டி மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×