என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
விநாயகர் சிலை வைக்க அனுமதி பெற சிறப்பு முகாம்
- இன்று முதல் 15-ந்தேதி வரை நடக்கிறது
- நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது.
இந்தநிலையில் வேலூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆலோசனை கூட்டம் நடந்தது. உதவி கலெக்டர் கவிதா தலைமை தாங்கினார். தாசில்தார் செந்தில் முன்னிலை வகித்தார்.
இதில் இந்து முன்னணி கோட்ட தலைவர் மகேஷ் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அவர்கள் கூறுகையில்:-
விநாயகர் சதுர்த்தி அன்று பலர் சிலைகளை வைத்து வழிபடுவார்கள்.
இதற்காக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அனுமதி பெறுவதில் சிக்கல்கள் உள்ளது. எனவே அதை எளிமைப்படுத்த வேண்டும்.
மேலும் சிலை ஊர்வல பாதைகளை சீரமைக்க வேண்டும். சிலைகளை கரைக்கும் பகுதியில் அனைத்து வசதிகளும் செய்யப்பட வேண்டும் என்றனர்.
சிறப்பு முகாம்
பின்னர் உதவி கலெக்டர் கவிதா கூறுகையில், சிலைகள் வைக்க அனுமதி பெற அனைத்து துறை களையும் ஒருங்கிணைந்த வேலூர் உட் கோட்டத்து க்குட்பட்ட தாலுகா அலுவலகங்களில் இன்று முதல் வருகிற 15-ந் தேதி வரை சிறப்புமுகாம் நடைபெறும்.
அதில் சிலை வைக்க விரும்புபவர்கள் கலந்து கொண்டு விண்ண ப்பங்களை அளித்து அனுமதி பெறலாம் என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்