என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாட்டை மிதித்து கொன்ற யானை
- வனப்பகுதியில் மேய்ச்சலுக்கு சென்ற போது பரிதாபம்
- வனத்துறையினர் விசாரணை
வேலூர்:
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த ராமாபுரம்மேடு கிரா மத்தை சேர்ந்தவர் தண்டபாணி, விவசாயி.
இவருக்கு சொந்தமான பசு மாட்டை நேற்று முன்தினம் காலை அருகே உள்ள வனப்பகுதிக்கு மேய்ச்ச லுக்கு ஓட்டிச்சென்று விட்டார். வழக்கமாக மாலையில் பசு கொட் டகைக்கு திரும்புவது வழக்கம். ஆனால் இரவு வரை திரும்ப வில்லை.
நேற்று காலை வரை மாடு வீட்டிற்கு வராததால் அதிர்ச்சி அடைந்த அவர் சந்தேகமடைந்து வனப்பகுதிக்குள் சென்று தேடி பார்த்தார்.
அப்போது, காட்டுயானை மிதித்து பசுமாடு இறந்து கிடந்தது தெரியவந்தது.
இதையடுத்து குடியாத் தம் வனத்துறையினருக்கு தகவல் அளித்தார். சம் பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் பசுமாட்டின் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக கல்லப்பாடி கால்நடை மருத்துவகுழு வினரிடம் ஒப்படைத்த னர்.
இதுகுறித்து வனத்து றையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். யானை மிதித்து பசுமாடு பலியான தகவல் அறிந்து ராமாபு ரம் கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.






