search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ganesha Procession"

    • தச்சம்பத்து கிராமத்தில் விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலம் நடந்தது.
    • உலக நன்மைக்காக திருவிளக்கு பூஜை நடந்தது.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே தச்சம்பத்து பாலகிருஷ்ணாபுரம் கிராமத்தில் விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் ஊர்வலம் நடந்தது. முதல் நாள் விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டு பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்தனர். உலக நன்மைக்காக திருவிளக்கு பூஜை நடந்தது. இதைத் தொடர்ந்து ஸ்ரீ ராமகிருஷ்ணா ஆசிரமம் செயலாளர் சுவாமி பரமானந்த சுவாமி பக்தி சொற்பொழிவாற்றினார். 2-ம் நாள் விநாயகருக்கு மஞ்சள் அபிஷேகம் கோமாதா பூஜை மற்றும் சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டி நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர்கள் தேனூர் விடி பாலு திருவேடகம் பழனியம்மாள் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 3-ம் நாள் அன்னதானம் வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் இந்து முன்னணி புறநகர் மாவட்ட தலைவர் குருஜி ராமச்சந்திரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வேல்முருகன், மாவட்டச் செயலாளர் ரமேஷ், ஒன்றிய தலைவர் முத்துப்பாண்டி, ஒன்றிய துணைத் தலைவர் ராஜா, நிர்வாகிகள் தனசேகரன், பொன்னையா, சுரேஷ்குமார், பாபு, காசி, சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தேனூர் கவுன்சிலர்கள் சவுத்ரி நல்ல மணி திருவிடம் கவுன்சிலர் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர். சிலை ஊர்வலம் கிராமத்தில் வலம் வந்தது. விழா ஏற்பாடுகளை பச்சமுத்து, பாலகிருஷ்ணாபுரம் இந்து முன்னணி மற்றும் விநாயகர் கமிட்டி குழுவினர் செய்திருந்தனர். சமயநல்லூர் ஏட்டு சிவபாலன் மற்றும் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்தனர்.

    • விநாயகர் சிலை ஊர்வலத்தில் திரளானோர் பங்கேற்றனர்.
    • 100க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தர்மாபுரம் ஸ்ரீ மாப்பிள்ளை விநாயகர் கோவில் நண்பர்கள் நற்பணி மன்ற தலைவரும், சமூக சேவகருமான ராமராஜ் பொதுமக்கள் பங்களிப்போடு கடந்த 35 ஆண்டுகளாக ராஜபாளையத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் ஊர்வலத்தை சிறப்பாக நடத்தி வருகிறார்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான விழா நேற்று நடந்தது. விநாயகர் சிலை ஊர்வலத்தை மதுரை ஆதீனம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    தொடக்க விழாவில் தொழில் அதிபர் குவைத் ராஜா மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். ஊர்வலம் நகரில் முக்கிய வீதி வழியாக சென்றது. இதில் வயல்வெளியில் விதை தூவும் விநாயகர் விவசாயி, புல்லட் பைக் ஓட்டும் விநாயகர், ஹெவி வெயிட் சாம்பியன் விநாயகர் என பல்வேறு விநாயகர் சிலைகள் இடம்பெற்றன.

    ஊர்வலத்தில் பிரமாண்ட சோபக்கிருது விநாயகர் முன்னே சென் றது. இந்த வாகனத்தில் சாரதியாக சமூக சேவகர் ராமராஜ் இருந்தார். அதனைத் தொடர்ந்து மற்ற விநாயகர் சிலைகள் ஊர்வலமாக வந்தன

    இறுதியில் ஆகம விதி முறைப்படி ஐ.என்.டி.யூ. சி. நகர் முன்புள்ள புதியா தியார் குளத்தில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.

    விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்கா ணிப்பாளர் சீனிவாச பெருமாள் உத்தரவின் படி ராஜபாளையம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ப்ரீத்தி தலைமையில் 3

    டி.எஸ்.பி.க்கள் 10 ஆய்வா ளர்கள் என 100க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    கடந்த 4 நாட்களாக மூன்று வேலை அன்ன தானம், பெண்களுக்கு இலவச தையல் எந்திரம், ஏழை எளியவர்களுக்கு சீர்வரிசைகளோடு இலவச திருமணங்கள், தொழிலாளி களுக்கு இலவச சைக்கிள் கள் வழங்கி பக்தர்கள் வியக்கும் வகையில் வீதி உலாவை நடத்திய மன்ற தலைவரும், சமூக சேவ கருமான ராமராஜூக்கும், மன்ற நிர்வாகிகளுக்கும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

    • மின் வயர்களை உயர்த்தி கட்ட வேண்டும்
    • ஆக்கிரமிப்புகளை அகற்ற உதவி கலெக்டர் உத்தரவு

    வேலூர்:

    விநாயகர் சதுர்த்தியையொட்டி வேலூர் மாநகர பகுதியில் ஆண்டுதோறும் 1500-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடைபெறும்.

    வழிபாடு முடிந்த பிறகு விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சதுப்பேரி ஏரியில் கரைக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு நடைபெறும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் அசம்பாவித சம்பவங்களை தடுக்க உதவி கலெக்டர் கவிதா, வேலூர் டவுன் டிஎஸ்பி திருநாவுக்கரசு, தாசில்தார் செந்தில் உள்ளிட்ட அதிகாரிகள் ஊர்வல பாதையை ஆய்வு செய்தனர்.

    வேலூர் சைதாப்பேட்டை முருகர் கோவிலில் மெயின் பஜார் லாங்கு பஜார் அண்ணா கலையரங்கம் கோட்டை சுற்றுச்சாலை மாங்காய் மண்டி பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலை மற்றும் சிலைகள் கரைக்கப்படும் சதுப்பேரி ஏரி ஆகிய இடங்களை ஆய்வு செய்தனர்.

    அப்போது விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உதவி கலெக்டர் கவிதா அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். சாலையோரங்களில் உள்ள தள்ளுவண்டிக் கடைகளை அகற்ற வேண்டும். ஊர்வல பாதையில் தாழ்வான நிலையில் செல்லும் மின் வயர்களை உயர்த்தி கட்ட வேண்டும் என உத்தரவிட்டார்.

    • ஏரியில் சிலைகளை கரைக்கப்பட்டது
    • 935 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்

    வாலாஜா:

    வாலாஜாபேட்டையில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பல்வேறு இடங்களில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை வைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று வாலாஜாபேட்டை இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தது.

    நிகழ்ச்சிக்கு வேலூர் கோட்டை அமைப்பாளர் ராஜேஷ் தலைமை தாங்கினார். வாலாஜா நகர தலைவர் பிரேம்குமார் முன்னிலையில் கல்வி நிறுவன தலைவர் மகேந்திரவர்மன் கொடியை சேர்த்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். மாவட்ட நிர்வாகி மோகன் வரவேற்றார்.

    ஊர்வலம் வாலாஜா வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் இருந்து தொடங்கி புஜனராவ் தெரு எம்.பி.டி சாலை, பஜார் வீதி, ட்ரங்க் ரோடு வழியாக விசி மோட்டூர் சென்று அங்குள்ள ஏரியில் சிலைகளை கரைக்கப்பட்டது.

    ஊர்வலத்தில் அனுமன் சிலம்பு மன்ற குழுவினர் சார்பில் சிலம்பாட்டம், கோலாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. ஊர்வலத்தில் இந்து முன்னணி சென்னை மாநகர செயலாளர் சீனிவாசன் கலந்து கொண்டு பிரிவினைவாதத்தை முறியடிப்போம் தேசிய சிந்தனை வளர்ப்போம் என்ற தலைப்பில் பேசினார்.

    இந்த ஊர்வலத்தில் இந்து முன்னணி நிர்வாகிகள் இந்து அமைப்புகள் என பலர் கலந்து கொண்டனர். ஊர்வலத்தில் 935 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    ×