search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விநாயகர் சிலை ஊர்வலம்
    X

    விநாயகர் ஊர்வலம் நடந்தபோது எடுத்த படம்.

    விநாயகர் சிலை ஊர்வலம்

    • விநாயகர் சிலை ஊர்வலத்தில் திரளானோர் பங்கேற்றனர்.
    • 100க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தர்மாபுரம் ஸ்ரீ மாப்பிள்ளை விநாயகர் கோவில் நண்பர்கள் நற்பணி மன்ற தலைவரும், சமூக சேவகருமான ராமராஜ் பொதுமக்கள் பங்களிப்போடு கடந்த 35 ஆண்டுகளாக ராஜபாளையத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் ஊர்வலத்தை சிறப்பாக நடத்தி வருகிறார்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான விழா நேற்று நடந்தது. விநாயகர் சிலை ஊர்வலத்தை மதுரை ஆதீனம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    தொடக்க விழாவில் தொழில் அதிபர் குவைத் ராஜா மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். ஊர்வலம் நகரில் முக்கிய வீதி வழியாக சென்றது. இதில் வயல்வெளியில் விதை தூவும் விநாயகர் விவசாயி, புல்லட் பைக் ஓட்டும் விநாயகர், ஹெவி வெயிட் சாம்பியன் விநாயகர் என பல்வேறு விநாயகர் சிலைகள் இடம்பெற்றன.

    ஊர்வலத்தில் பிரமாண்ட சோபக்கிருது விநாயகர் முன்னே சென் றது. இந்த வாகனத்தில் சாரதியாக சமூக சேவகர் ராமராஜ் இருந்தார். அதனைத் தொடர்ந்து மற்ற விநாயகர் சிலைகள் ஊர்வலமாக வந்தன

    இறுதியில் ஆகம விதி முறைப்படி ஐ.என்.டி.யூ. சி. நகர் முன்புள்ள புதியா தியார் குளத்தில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.

    விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்கா ணிப்பாளர் சீனிவாச பெருமாள் உத்தரவின் படி ராஜபாளையம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ப்ரீத்தி தலைமையில் 3

    டி.எஸ்.பி.க்கள் 10 ஆய்வா ளர்கள் என 100க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    கடந்த 4 நாட்களாக மூன்று வேலை அன்ன தானம், பெண்களுக்கு இலவச தையல் எந்திரம், ஏழை எளியவர்களுக்கு சீர்வரிசைகளோடு இலவச திருமணங்கள், தொழிலாளி களுக்கு இலவச சைக்கிள் கள் வழங்கி பக்தர்கள் வியக்கும் வகையில் வீதி உலாவை நடத்திய மன்ற தலைவரும், சமூக சேவ கருமான ராமராஜூக்கும், மன்ற நிர்வாகிகளுக்கும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

    Next Story
    ×