என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாலாஜாவில் விநாயகர் சிலை ஊர்வலம்
    X

    வாலாஜாவில் நேற்று மாலை விநாயகர் ஊர்வலம் நடந்த போது எடுத்த படம்.

    வாலாஜாவில் விநாயகர் சிலை ஊர்வலம்

    • ஏரியில் சிலைகளை கரைக்கப்பட்டது
    • 935 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்

    வாலாஜா:

    வாலாஜாபேட்டையில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பல்வேறு இடங்களில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை வைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று வாலாஜாபேட்டை இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தது.

    நிகழ்ச்சிக்கு வேலூர் கோட்டை அமைப்பாளர் ராஜேஷ் தலைமை தாங்கினார். வாலாஜா நகர தலைவர் பிரேம்குமார் முன்னிலையில் கல்வி நிறுவன தலைவர் மகேந்திரவர்மன் கொடியை சேர்த்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். மாவட்ட நிர்வாகி மோகன் வரவேற்றார்.

    ஊர்வலம் வாலாஜா வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் இருந்து தொடங்கி புஜனராவ் தெரு எம்.பி.டி சாலை, பஜார் வீதி, ட்ரங்க் ரோடு வழியாக விசி மோட்டூர் சென்று அங்குள்ள ஏரியில் சிலைகளை கரைக்கப்பட்டது.

    ஊர்வலத்தில் அனுமன் சிலம்பு மன்ற குழுவினர் சார்பில் சிலம்பாட்டம், கோலாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. ஊர்வலத்தில் இந்து முன்னணி சென்னை மாநகர செயலாளர் சீனிவாசன் கலந்து கொண்டு பிரிவினைவாதத்தை முறியடிப்போம் தேசிய சிந்தனை வளர்ப்போம் என்ற தலைப்பில் பேசினார்.

    இந்த ஊர்வலத்தில் இந்து முன்னணி நிர்வாகிகள் இந்து அமைப்புகள் என பலர் கலந்து கொண்டனர். ஊர்வலத்தில் 935 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    Next Story
    ×