search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தி.மு.க பவள விழா மேடையை அமைச்சர் துரைமுருகன் ஆய்வு
    X

    தி.மு.க பவள விழா மேடையை அமைச்சர் துரைமுருகன் ஆய்வு

    • பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது
    • பார்க்கிங் வசதி குறித்து சோதனை செய்தார்

    வேலூர்:

    தி.மு.க பவள விழா உள்ளிட்ட முப்பெரும் விழா பள்ளிகொண்டா அருகே கந்தனேரியில் வருகிற 17-ந் தேதி நடைபெற உள்ளது.

    இதில், தமிழக முதல் -அமைச்சரும் தி.மு.க தலைவருமான ஸ்டாலின் பங்கேற்கிறார்.இதை யொட்டி, பள்ளி கொண்டா கந்தனேரி பகுதியில் பிரம்மாண்டமான பந்தல் மற்றும் விழா மேடை அமைக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.

    இப்பணிகளை கட்சியின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் ஆய்வு செய்தார்.

    அப்போது, 6 வழிச்சாலையில் இருந்து விழா மேடைக்கு முதல் - அமைச்சர் செல்லும் பாதை குறித்து ஆலோசிக்கப்பட்டது. விழா ஏற்பாடுகள் குறித்து அமைச்சருக்கு, மாவட்ட செயலாளரும் அணைக்கட்டு எம்.எல்.ஏ வுமான நந்தகுமார் விரிவாக எடுத்துரைத்தார்.

    இதைத்தொடர்ந்து அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:-

    இந்த முப்பெரும் விழாவில் தி.மு.க வின் பவள விழா இருப்பதும், அந்த விழா வேலுாரில் நடப்பதும்சிறப்பு. இதில், கன்னியாகுமரி முதல் கும்மிடிப்பூண்டி வரை பரந்து கிடக்கும் கட்சியினர் கலந்து கொள்ள உள்ளனர் என்றார்.

    இந்த ஆய்வின்போது, எம்.பி. க்கள் ஜெகத்ரட்சகன், கதிர் ஆனந்த், எம்.எல்.ஏ கார்த்திகேயன், அணைக்கட்டு ஒன்றியக்குழு தலைவர் மாநகராட்சி துணை மேயர் சுனில்குமார், பள்ளிகொண்டா டவுன் பஞ்சாயத்து தலைவர் சுபபிரியா, ஒன்றிய தி.மு.க செயலாளர்கள் வெங்கடேசன், சீதாராமன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    விழா நடக்கும் மைதானத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் ஆய்வு செய்தார்.

    அப்போது, 6 வழிச்சாலையின் இருபுறங்க ளிலும், விழாவுக்கு வருகை தரும் கட்சியினரின் வாக னங்களுக்கு ஏற்படுத்தப்படும் பார்க்கிங் வசதி குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

    இதேபோன்று, மேல் மொணவூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் புதியதாக கட்டப்பட்ட வீடுகளையும், முதல்வர் திறந்து வைக்க உள்ளார். அப்பகுதியிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின்போது, டி.எஸ்.பி. திருநாவுக்கரசு மற்றும் போலீசார் இருந்தனர்.

    Next Story
    ×