என் மலர்tooltip icon

    வேலூர்

    • மாவட்டம் வாரியாக அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது
    • பள்ளி திறக்கும் நாளில் மாணவர்களுக்கு வழங்க ஆசிரியர்களுக்கு அறிவுரை

    வேலுார்:

    கோடை விடுமுறை முடிந்து, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 6 முதல் பிளஸ் 2 வரை ஜூன் 1-ந் தேதியும், ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை ஜூன் 5-ந் தேதியும் வகுப்பு கள் தொடங்க உள்ளன.

    இதையொட்டி, அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், 2023-24ம் ஆண்டில் 1 முதல் பிளஸ்-2 வரையிலான பாடப்புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள் உள்ளிட்ட இலவச நலத்திட்ட உபகரணங்கள் எல்லாம், பள்ளிக்கல்வித்துறை மூலமாக மாவட்டம் வாரியாக அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

    வேலுார் மாவட்டத்தில் 157 அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 6 முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்களுக்கு தேவையான பாடப் புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள், அந்தந்த பள்ளிகளுக்கு வினியோகம் செய்யும் பணி, காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று தொடங்கியது.

    முதல்கட்டமாக, வேலுார், அணைக்கட்டு, கே.வி.குப்பம், காட்பாடி ஆகிய ஒன்றியங்களை சேர்ந்த பள்ளிகளுக்கு புத்தகங்கள் நேற்று வழங்கப்பட்டன. தொடர்ந்து, குடியாத்தம், பேரணாம்பட்டு, கணியம்பாடி ஒன்றியங்களை சேர்ந்த பள்ளி களுக்கு ஓரிரு நாட்களில் புத்தகங்கள் வழங்கப்படும்.

    அதோடு, மாணவர் களுக்கு வழங்கப்பட்ட புத்தகங்களை எல்லாம், பள்ளிகளில் பாதுகாப்பாக வைத்து, பள்ளி திறக்கும் நாளில் மாணவர்களுக்கு வழங்கவேண்டும் என்றும் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதுதவிர, மாவட்டத்தில் இயங் கும் 779 அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான பாடப்புத்தகங்கள் வழங்கும் பணி, ஓரிரு நாளில் தொடங்கப்படும் என கல்வித்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

    • தம்பியிடம் வாழ்வதற்கு பிடிக்கவில்லை என்று கூறிவிட்டு போனை துண்டித்தார்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் கஸ்பா அப்பாதுரை செட்டித்தெருவை சேர்ந்தவர் அத்தாவுல்லா (வயது 23). இவர் கோழி ஏற்றிச்செல்லும் வண் டியில் உதவியாளராக வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி ஆப்ரின் (20), இவர்களுக்கு திருமணமாகி ஓராண்டு ஆகிறது. ஆப்ரின் புதிய பஸ்நிலையம் அருகே உள்ள வணிக வளாகத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    இந்த நிலையில் கடந்த 17-ந் தேதி மதியம் வேலை முடிந்து வீடு திரும்பிய அத்தாவுல்லா அவருடைய தம்பியை செல் போனில் தொடர்பு கொண்டு வாழ்வதற்கு பிடிக்கவில்லை என்று கூறிவிட்டு போனை துண்டித்தார். அதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக வீட்டிற்கு சென்று பார்த்தார்.

    வீட்டின் உள்பக்கம் பூட்டப்பட்டிருந்தது. ஜன்னல் வழியாக அறையை பார்த்தார். அப்போது அங்குள்ள மின்விசிறியில் அத்தாவுல்லா தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் கிடந்தார். உடனடியாக அவருடைய தம்பி அக்கம்பக்கத்தினர் உதவியு டன் அவரை மீட்டு சிகிச்சைக்காக வேலூர் பென்ட்லேன்ட் அரசு மருத்துவமனையில் சேர்த்தார்.

    முதலுதவிக்கு பின்னர் அவர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டார். அங்கு அத்தாவுல்லாவிற்கு தீவிர சிகிச்சை அளிக் கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று காலை அவர் சிகிச்சை

    பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாகவேலூர் தெற்கு போலீஸ்சப்-இன்ஸ்பெக் டர் சேகரன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • ஹெல்மெட் அணிந்து மர்ம கும்பல் கைவரிசை
    • போலீசார் விசாரணை

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த கீழ்ஆலத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கஜேந்திரன். அச்சகம் நடத்தி வருகிறார்.

    இவரது மனைவி சுதா (வயது 38) குடியாத்தம் அரசு மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வருகிறார்.

    நேற்று இரவு சுமார் 9 மணி அளவில் சுதா தனது கணவர் கஜேந்திரனுடன் அருகே உள்ள பகுதிக்கு நடந்து சென்றார்.

    அப்போது மகளிர் கல்லூரி அருகே வரும்போது ஹெல்மேட் அணிந்தபடி பைக்கில் 2 பேர் வந்தனர். அதில் ஒருவர் கீழே இறங்கி கண்ணிமைக்கும் நேரத்தில் சுதாவின் கழுத்தில் இருந்த 5 பவுன் தாலி செயினை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். சுதா கூச்சலிட்டார்.

    சத்தம் கேட்டு கிராம மக்கள் ஓடி வந்தனர். அதற்குள் மர்ம கும்பல் தப்பி சென்றனர்.

    இது குறித்து சுதா குடியாத்தம் டவுன் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திடீர் சோதனையில் சிக்கியது
    • கஞ்சா எப்படி கொண்டு செல்லப்பட்டது என்பது குறித்து விசாரணை

    வேலூர்:

    வேலூர் ஆண்கள் ஜெயிலில் கைதிகள் தடை செய்யப்பட்ட பொருட்கள் பயன்படுத்துவதை தடுக்க திடீர் சோதனைகள் நடத்தி வருகின்றனர்.

    நேற்று சிறை காவலர்கள் அடங்கிய சிறப்பு பிரிவினர் ஜெயில் வளாகம் முழுவதும் சோதனை நடத்தினர்.

    அப்போது ஜெயில் கழிவறைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.

    இதனை 2 விசாரணை கைதிகள் மற்றும் ஒரு தண்டனை கைதி பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்துள்ளது.

    இது தொடர்பாக பாகாயம் போலீஸ் நிலையத்தில் ஜெயில் அதிகாரிகள் புகார் அளித்தனர். போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்தனர்.

    ஜெயில் வளாகத்திற்குள் கஞ்சா எப்படி கொண்டு செல்லப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 457 மதிப்பெண்கள் பெற்று முதலிடம்
    • பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்து

    குடியாத்தம்:

    நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது.

    இதில் குடியாத்தம் பகுதியில் உள்ள அரசு பள்ளி மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.

    குடியாத்தம் நடுப்பேட்டை அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 143 மாணவிகள் தேர்வு எழுதினர். 123 மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி 86 சதவீதமாகும்.

    இப்பள்ளி மாணவி ஏ.சாராபாத்திமா 457 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும், டி.ஆர்.சுமேராதாஜ் 445 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் 2-ம் இடமும், வி.தனா 431 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் 3-ம் இடம் பெற்றனர்.

    தேர்ச்சி பெற்ற மாணவர்களை பள்ளி தலைமைஆசிரியர் ஜெயசீலிகிறிஸ்டி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் எம்.எஸ்.அமர்நாத், துணைத்தலைவர் நவீன்சங்கர், உறுப்பினர் உறுப்பினர் எம்.என்.ஜோதிகுமார், நகர்மன்ற உறுப்பினர் ஜாவித்அகமது உள்ளிட்டோர் பாராட்டினர்.

    நெல்லூர்பேட்டை அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 66 மாணவிகள் தேர்வு எழுதினர்.

    இதில் 62 மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி 94 சதவீதமாகும் இப்பள்ளிமாணவி வி.கோபிகா 437 மதிப்பெண் பெற்று முதலிடமும், ஒய்.ஸ்ரீமதி 414 மதிப்பெண் பெற்று 2-ம் இடமும், ஆர். தானுஸ்ரீ 408 மதிப்பெண்கள் பெற்று 3-ம் பெற்றனர்.

    தேர்ச்சி பெற்ற மாணவிகளை பள்ளி தலைமை ஆசிரியர் லட்சுமி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் டி.கோபி, துணைத்தலைவர் ஜவஹர்பார்த்திபன் உள்ளிட்டோர் வாழ்த்தினர்.

    அரசினர் நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் 36 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் 33 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். 92 சதவீதம் தேர்ச்சி ஆகும்.

    இப்பள்ளி மாணவி ஆர்.ரித்திகா 444 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடமும், எஸ்.பி.லாசிகா 399 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் 2-ம் இடமும் கே.சுஜிதா 391 மதிப்பெண் பெற்று பள்ளியில் 3-ம் இடமும் பெற்றனர். தேர்ச்சி பெற்ற மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் எம்.கீதா, உதவி தலைமைஆசிரியர் என்.எஸ்.பாலசுப்ரமணியம், பெற்றோர் ஆசிரியர் கழக துணைத்தலைவர் ம.மனோஜ் உள்ளிட்டோர் பாராட்டினர்.

    நெல்லூர்பேட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 85 மாணவர்கள் தேர்வு எழுதினர்.49 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர் 58 சதவீதம் தேர்ச்சியாகும்.

    இப்பள்ளி மாணவன் கே. சந்தோஷ் 399 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடமும், எம்.லட்சுமி பிரியன் 384 மதிப்பெண் பெற்று 2-ம் இடமும், எம்.மனோபாலா 372 மதிப்பெண் பெற்று 3-ம் இடமும் பெற்றனர்.

    தேர்ச்சி பெற்ற மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் எஸ்.டி.திருநாவுக்கரசு, உதவிதலைமை ஆசிரியர் எம்.அருள்பிரகாசம், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஜி.எஸ்.அரசு உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

    • மாடு விடும் விழா நடந்தது
    • 200-க்கும் மேற்ப்பட்ட காளைகள் சீறிப்பாய்ந்து ஓடின

    அணைக்கட்டு:

    அணைக்கட்டு அடுத்த பொய்கை மோட்டூர் கிராமத்தில் எருது விடும் விழா நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் போட்டிக்காக காளைகள் கொண்டு வரப்பட்டன.

    சுமார் 200-க்கும் மேற்ப்பட்ட காளைகள் பங்கேற்ற ஓடின.

    காளைகளுக்கு அதன் உரிமையாளர்கள் வித விதமான அலங்காரங்கள் செய்து இருந்தனர். போட்டியில் பெற்றி பெற்ற காளைகளுக்கு பரிவுகள் வழங்கப்பட்டது.

    போட்டியின் போது தீயணைப்பு மீட்பு பணித் துறையினர் மற்றும் விரிஞ்சிபுரம் 100க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    விழாவில் காளைகள் முட்டியதில் சுமார் 10 பேர் காயமடைந்தனர்.

    இதில் 2 பேர் மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    • வேலூர் நீதிமன்றம் மற்றொரு வழக்கிலும் விடுவித்து உள்ளது.
    • வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லை என கூறி முருகனை விடுதலை செய்து உள்ளது.

    வேலூர்:

    ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட முருகனை, வேலூர் நீதிமன்றம் மற்றொரு வழக்கிலும் விடுவித்து உள்ளது.

    ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட முருகன் மீது, 2020ம் ஆண்டு பெண் சிறை அதிகாரியிடம் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லை என கூறி முருகனை விடுதலை செய்து வேலூர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

    • முதியோர் இல்லத்தில் சேர்ப்பு
    • பயணிகளுக்கு இடையூறு ஏற்படுவதாக புகார்

    வேலூர்:

    காட்பாடி ரெயில் நிலையத்தில் உள்ள பிளாட்பாரங்களில் ஆதரவற்ற முதியவர்கள் சுற்றித் திரிகின்றனர்.

    மேலும் சிலர் அங்கேயே படுத்து தூங்குகின்றனர். இதனால் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. ஆதரவற்ற முதியவர்களை ரெயில் நிலைய பகுதிகளில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என பயணிகள் வலியுறுத்தினர்.

    இதனை தொடர்ந்து இன்று காலை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா தலைமையிலான போலீசார் பிளாட்பாரங்களில் சுற்றித்திரிந்த முதியோர்களை பிடித்தனர்.

    விரிஞ்சிபுரத்தைச் சேர்ந்த குப்பம்மாள் (வயது 65)திருவண்ணாமலை சேர்ந்த குப்புசாமி (70) ராஜேந்திரன்(58)ஆரணி மீனா (50) பெரம்பலூர் மணிகண்டன் (40) காஞ்சிபுரம் ரேகா (50) செங்கல்பட்டு பொன்னம்மாள் (70)சரஸ்வதி (45) ஆகியோரை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர்.

    விசாரணையில் முதியவர்களுக்கு யாரும் ஆதரவு இல்லை என தெரிய வந்தது. வேலூர் முதியோர் இல்லத்தில் அவர்களை சேர்த்தனர்.

    • 17 இடங்கள் முன்னேறி 21-வது இடத்தை பிடித்தது
    • கல்வித்துறை அறிவிப்பிற்கு பிறகு மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் 9,319 மாணவர்கள், 8,968 மாணவிகள் என மொத்தம் 18,287 பேர் 10-ம் வகுப்பு பொது தேர்வு எழுதினார். தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டன.

    இதில் 8,163 மாணவர்கள், 8,541 மாணவிகள் என மொத்தம் 16,704 பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவர்கள் 87.60 சதவீதம் பேரும், மாணவிகள் 95.24 சதவீதம் பேரும் என மொத்தம் 91.34 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    வேலூர் மாவட்டத்தில் 59 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றன. இதில் 23 அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்று உள்ளனர்.

    கடந்த ஆண்டு வேலூர் மாவட்டம் 79.80 சதவீதம் தேர்ச்சி பெற்று 38-வது இடத்தில் இருந்தது. இந்த ஆண்டு தேர்வு முடிவில் 91. 34 சதவீதம் தேர்ச்சி பெற்று 17 இடங்கள் முன்னேறி 21-வது இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    10-ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் அளிப்பது குறித்து அறிவிப்பு வரவில்லை.

    கல்வித்துறை அறிவிப்பிற்கு பிறகு மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி தெரிவித்தார்.

    • கொலை வழக்கில் கைது
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    சேலம் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்தவர் லட்சுமி (வயது 77). கொலை வழக்கில் கைதான இவர் தண்டனை பெற்றார்.

    இதையடுத்து லட்சுமி வேலூர் பெண்கள் தனி சிறையில் அடைக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு லட்சுமிக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. சிறைத்துறை அதிகாரிகள் லட்சுமிக்கு வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்து வந்தனர். நேற்று இரவு லட்சுமியின் உடல்நிலை மோசமடைந்தது.

    டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து சிறைத்துறை சார்பில் பாகாயம் போலீசில் புகார் செய்யப்பட்டது.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மண் எண்ணெய் ஊற்றி தீ வைத்தார்
    • பெண்ணை ஜெயிலில் அடைத்தனர்

    வேலூர்:

    வேலூர் அடுத்த இலவம்பாடி கிராமம் கருநிகர் தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 30), கட்டிட மேஸ்திரி. இவருடைய மனைவி லதா (29). இவர்களுக்கு 9 மற்றும் 7 வயதில் 2 மகள்கள், 5 வயதில் ஒரு மகன் உள்ளனர்.

    சுரே சுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்தாக கூறப்படுகிறது. இதனால் கண வன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    கடந்த 14-ந் தேதி இரவு மீண்டும் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது சுரேஷ் மனை வியை சரமாரியாக தாக்கினார்.

    ஆத்திரம் அடைந்த லதா வீட்டில் இருந்த மண் எண்ணெய் கேனை எடுத்து வந்து சுரேஷ் மீது ஊற்றி தீ வைத்தார்.

    இதில் உடல் முழுவதும் தீப் பற்றியது. இதனால் சுரேஷ் அலறிதுடித்தார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்குவந்த சுரேஷ் உடலில் பற்றி எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர்.

    சிகிச்சைக்காக ஆம்புலன்சில் அடுக்கம்பாறை அரசு மருத் துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி சுரேஷ் நேற்று பரிதாபமாக இறந்தார்.

    இச்சம்பவம் தொடர்பாக விரிஞ்சிபுரம் போலீசார் லதா மீது கொலை வழக்கு பதிவு செய்தனர். பின்னர் அவரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    • காட்பாடி ரெயில் நிலையத்தில் மடக்கி பிடித்தனர்
    • 4 வாகனங்கள் பறிமுதல்

    வேலூர்:

    காட்பாடி அடுத்த சோழாமூரை சேர்ந்தவர் வைரமுத்து (வயது 36).

    இவர் காட்பாடி திருவலம் கே வி குப்பம் லத்தேரி குடியாத்தம் உள்ளிட்ட பகுதிகளில் பைக் திருடி வந்தார்.

    இவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது.

    இந்த நிலையில் நேற்று மாலை வைரமுத்து காட்பாடி ரெயில் நிலையத்தில் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் ரெயில் நிலையத்திற்கு சென்ற போலீசார் அங்கு பதுங்கி இருந்த வைரமுத்துவை மடக்கி பிடித்தனர்.

    அவரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில் அவர் பல்வேறு இடங்களில் பைக் திருடியதை ஒப்புக்கொண்டார்.

    அவர் கொடுத்த தகவலின் அவரிடமிருந்த 4 பைக்குகளை பறிமுதல் செய்தனர். வைரமுத்துவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×