search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொய்கை மோட்டூர் கிராமத்தில் காளைகள் முட்டி 2 பேர் படுகாயம்
    X

    பொய்கை மோட்டூர் கிராமத்தில் காளைகள் முட்டி 2 பேர் படுகாயம்

    • மாடு விடும் விழா நடந்தது
    • 200-க்கும் மேற்ப்பட்ட காளைகள் சீறிப்பாய்ந்து ஓடின

    அணைக்கட்டு:

    அணைக்கட்டு அடுத்த பொய்கை மோட்டூர் கிராமத்தில் எருது விடும் விழா நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் போட்டிக்காக காளைகள் கொண்டு வரப்பட்டன.

    சுமார் 200-க்கும் மேற்ப்பட்ட காளைகள் பங்கேற்ற ஓடின.

    காளைகளுக்கு அதன் உரிமையாளர்கள் வித விதமான அலங்காரங்கள் செய்து இருந்தனர். போட்டியில் பெற்றி பெற்ற காளைகளுக்கு பரிவுகள் வழங்கப்பட்டது.

    போட்டியின் போது தீயணைப்பு மீட்பு பணித் துறையினர் மற்றும் விரிஞ்சிபுரம் 100க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    விழாவில் காளைகள் முட்டியதில் சுமார் 10 பேர் காயமடைந்தனர்.

    இதில் 2 பேர் மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    Next Story
    ×