search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலூர் ஜெயிலில் பெண் கைதி திடீர் சாவு
    X

    வேலூர் ஜெயிலில் பெண் கைதி திடீர் சாவு

    • கொலை வழக்கில் கைது
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    சேலம் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்தவர் லட்சுமி (வயது 77). கொலை வழக்கில் கைதான இவர் தண்டனை பெற்றார்.

    இதையடுத்து லட்சுமி வேலூர் பெண்கள் தனி சிறையில் அடைக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு லட்சுமிக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. சிறைத்துறை அதிகாரிகள் லட்சுமிக்கு வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்து வந்தனர். நேற்று இரவு லட்சுமியின் உடல்நிலை மோசமடைந்தது.

    டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து சிறைத்துறை சார்பில் பாகாயம் போலீசில் புகார் செய்யப்பட்டது.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×