search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலூர் ஜெயிலில் கைதிகள் பதுக்கிய கஞ்சா பறிமுதல்
    X

    வேலூர் ஜெயிலில் கைதிகள் பதுக்கிய கஞ்சா பறிமுதல்

    • திடீர் சோதனையில் சிக்கியது
    • கஞ்சா எப்படி கொண்டு செல்லப்பட்டது என்பது குறித்து விசாரணை

    வேலூர்:

    வேலூர் ஆண்கள் ஜெயிலில் கைதிகள் தடை செய்யப்பட்ட பொருட்கள் பயன்படுத்துவதை தடுக்க திடீர் சோதனைகள் நடத்தி வருகின்றனர்.

    நேற்று சிறை காவலர்கள் அடங்கிய சிறப்பு பிரிவினர் ஜெயில் வளாகம் முழுவதும் சோதனை நடத்தினர்.

    அப்போது ஜெயில் கழிவறைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.

    இதனை 2 விசாரணை கைதிகள் மற்றும் ஒரு தண்டனை கைதி பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்துள்ளது.

    இது தொடர்பாக பாகாயம் போலீஸ் நிலையத்தில் ஜெயில் அதிகாரிகள் புகார் அளித்தனர். போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்தனர்.

    ஜெயில் வளாகத்திற்குள் கஞ்சா எப்படி கொண்டு செல்லப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×