என் மலர்tooltip icon

    திருவாரூர்

    • மானிய விலையில் அரசு கொடுக்கும் தோட்ட பொருள்களை வாங்கிக்கொள்ளலாம்.
    • தொழில் நுட்பத்தை பயன்படுத்தி குறைந்த செலவில் அதிக லாபம் பெறலாம்.

    முத்துப்பேட்டை;

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த கற்பகநாதர்குளம் கிராமத்தில் அட்மா திட்டத்தின் தோட்டக்கலை பயிர் வீட்டு தோட்டம், மாடி தோட்டம் அமைப்பது குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்க பயிற்சி வட்டார தொழில்நுட்ப மேலாளர் சுரேஷ்குமார், உதவி தொழில்நுட்ப மேலாளர் பன்னீர்செல்வம், உதவி வேளாண்மை அலுவலர் சத்தியமூர்த்தி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

    இது குறித்து வட்டார தொழில் நுட்ப மேலாளர் சுரேஷ்குமார் கூறுகையில்:-

    வீட்டில் தோட்டம் வைப்பவர்கள் இயற்கையான உரங்களை பயன்படுத்துவதன் மூலம் சத்தான காய்கறிகளை பெற முடியும். தோட்டக்கலை பயிரான காய்கறிகள், கீரை வகைகள், பழ வகைகள், மருத்துவ குணம் வாய்ந்த செடிகள் போன்ற பயிர்களை பயிரிடலாம். வீட்டில் கிடைக்கும் காய்கறி கழிவுகள், முட்டை ஓடுகளையே இயற்கை உரமாக பயன்படுத்தலாம். இது தவிர ஆட்டு சாணம், சாம்பல், மாட்டு சாணம், மண்புழு உரம் போன்றவற்றை பயன்படுத்தலாம்.

    வீட்டில் தோட்டம் அமைப்பதற்கு ஜூன், ஜூலை மாதங்கள் தான் விதைகள் நட சரியான காலம். சில செடிகளை அக்டோபர் மாதத்திலும் நடலாம் புதிதாக தோட்டம் அமைப்பவர்கள், மானிய விலையில் அரசு கொடுக்கும் தோட்ட பொருள்களை வாங்கிக்கொள்ளலாம்.

    தோட்டம் அமைப்பதற்கு பழைய குடங்கள், வாலிகள், மண் தொட்டி ஆகியவைகளை கொண்டு மண்புழு உரம், தென்னை நார் கழிவு, மணல் 2:2:1 என்ற விகிதத்தில் தொட்டிகளை நிரப்பி 2,3 விதைகள் இட்டு ஒரே வகையான செடிகளை விதைக்காமல் பல ரகங்களை கொண்டு விதைக்க வேண்டும்.

    இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தி குறைந்த செலவில் அதிக லாபம் பெறலாம் என்றார். இது மிகவும் பயனுள்ளதாக அமைந்ததாக விவசாயிகள் தெரிவித்தனர்.

    • கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் பிரச்சாரம் குறித்த கூட்டம்.
    • விவசாயிகளின் பார்வைக்கு இடு பொருட்கள் மற்றும் வேளாண் எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்தது.

    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டை அடுத்த வடகாடு கோவிலூர் கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் பிரச்சாரம் குறித்த விவசாயிகள் கூட்டம் நடைபெற்றது.

    இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் லதா ரவி தலைமை தாங்கினார். உதவி செயற்பொறியாளர் (வே.பொ) முருகதாஸ், தோட்டக்கலை உதவி இயக்குநர் இளவரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் கால்நடை மருத்துவர் மகேந்திரன், வேளாண்மை பொறியியல் துறை உதவி பொறியாளர் திவ்யா, வேளாண்மை அலுவலர் சு.திவ்யா, உதவி விதை அலுவலர்கள் விஜய் கதிரேசன் மற்றும் வேளாண்மைத்துறை அலுவலர்கள் தொழில்நுட்ப தகவல்களை தெரிவித்து பேசினர்.

    மேலும், இதில் உதவி தோட்டக்கலை அலுவலர்கள் இளங்கோவன், புலவேந்திரன், கலியமூர்த்தி மற்றும் பாரத பிரதமரின் பயிர் அறுவடை பரிசோதனை அலுவலர் கதிரவன் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு இடு பொருட்கள் வழங்கப்பட்டது. விவசாயிகளின் பார்வைக்கு இடு பொருட்கள் மற்றும் வேளாண் எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்தது.

    • ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வார்டுகளிலும் சிறப்பு துப்புரவு முகாம்.
    • குப்பைகளை சேகரித்து இயற்கை உரமாக மாற்றி விவசாயிகளுக்கு வழங்கும் பணி.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி பாலம் தொண்டு நிறுவனம் சார்பில் நகராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு அலுமினிய கூடை வழங்கும் நிகழ்ச்சி நகராட்சி வளாகத்தில் நடைபெற்றது.

    இதில் நகராட்சி பொறியாளர் பிரதான் பாபு தலைமை தாங்கினார். பாலம் தொண்டு நிறுவன செயலாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.

    நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் 38 துப்புரவு பணியாளர்களுக்கு அலுமினிய கூடை வழங்கி பேசுகையில், திருத்துறைப்பூண்டி நகராட்சியில் தூய்மை பணி சிறப்பாக நடைபெற்று வருகிறது, ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வார்டுகளிலும் சிறப்பு துப்புரவு முகாம் மக்களை இணைத்து உறுதிமொழி எடுக்கப்படுகிறது.

    மக்கும் குப்பைகளை தனியே சேகரித்து இயற்கை உரமாக மாற்றி விவசாயிகளுக்கு வழங்கும் பணி சிறப்பாக நடந்து வருகிறது. இப்பணி சிறப்பாக நடைபெற ஒத்துழைக்கும் பாலம் தொண்டு நிறுவனத்திற்கு நன்றி, என்றார். நிகழ்ச்சியில் பிரிவு அலுவலர் செந்தில்குமார், மேற்பார்வையாளர்கள் வீரையன், பெரமையன் ஈஸ்வரன், ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • தொடக்கப்பள்ளியில் புதிதாக கட்டப்பட்டுவரும் கழிவறையினை தரமாகவும், விரைவாகவும் முடிக்க உத்தரவிட்டார்.
    • மேலும் பல்வேறு பணிகளை குறித்து ஆய்வு செய்து நடடிக்கை மேற்கொண்டார்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி, திருவாரூர் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்ட பணிகளை மாவட்ட கணிப்பாய்வு அலுவலரும், தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை ஆணையருமான இல.நிர்மல்ராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இவ்ஆய்வில் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் உடனிருந்தார்.

    திருத்துறைப்பூண்டி ஒன்றியத்திற்குட்பட்ட, பாமணி ஊராட்சியில் ரூ.21.65 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் ஊராட்சி மன்ற அலுவலக கட்டடத்தினையும், பாமணி ஊராட்சிக்குட்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கட்டப்பட்டுவரும் கழிவறையினையும் மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் ஆய்வு செய்து பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    திருத்துறைப்பூண்டி ஒன்றியம், பாமணி ஊராட்சி, அம்பேத்கர் காலணியில் 150 மீட்டர் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்றுவருவதையும் ஆய்வு செய்து பணிகள் தொடர்பாக அலுவலர்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து பாமணி ஊராட்சியில், ரூ.7.16 லட்சம் மதிப்பீட்டில் நெல் உலர்த்தும் கலம் அமைக்கும் பணியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் பாமணி ஊராட்சியில் அங்கான்வாடி மையத்திலுள்ள குழந்தைகளுடைய எடை, உயரம் மற்றும் ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்படுவது குறித்து ஆய்வு செய்தார்.

    பாமணி ஊராட்சிக்குட்பட்ட செங்குந்தார் தெருவில் பாரத பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருவது குறித்து பயனாளிகளிடம் கலந்துரையாடினார்.

    அதனை தொடர்ந்து எடையூர் ஊராட்சிக்குட்பட்ட அரசினர் உயர்நிலைப்பள்ளியின் ஆதிதிராவிடர் மாணவியர் விடுதியில் ஆய்வு மேற்கொண்டு மாணவியர்களிடம் உணவு நல்ல முறையில் வழங்கப்படுகின்றனவா என்பதையும், அடிப்படை வசதிகள் முறையாக கிடைக்கின்றனவா என்பதையும் கேட்டறிந்தார்.

    எடையூர் ஊராட்சிக்குட்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம், சுகாதார நிலையத்தில் பராமரிக்கப்பட்டு வரும் நோயாளிகள் குறித்த பதிவேடுகளை மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் அவர்கள் ஆய்வு செய்தார்.

    திருவாரூர் வட்டம், கூடூர் ஊராட்சி, மொசக்குளம் கிராமத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பயன்பெற்று வரும் பயனாளிகளை சந்தித்து திட்டம் குறித்து ஆய்வு செய்தார். நன்னிலம் ஒன்றியம், முடிகொண்டான் சமத்துவபுரம் பகுதியில் பழுதடைந்த வீடுகளை புனரமைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இவ்ஆய்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ப.சிதம்பரம், ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் பி.சந்திரா, வருவாய் கோட்டாட்சியர்கள் கீர்த்தனா மணி, சங்கீதா உள்ளிட்ட அரசு அலுவல ர்கள் உடனிருந்தனர்.

    • தென்னையில் மரம் ஏறும் கருவி மற்றும் ஊட்டச்சத்து டானிக் பிற விவசாயிகள் மூலம் காண்பிக்கப்பட்டது.
    • கருவியை பயன்படுத்தும் போது விவசாயிகளுக்கு குறைந்த செலவில் ஆட்கள் தேவைப்படுகிறது.

    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டை அடுத்த பின்னத்தூரில் வட்டார குழு அமைப்பாளர் வேளாண்மை உதவி இயக்குனர் சாமிநாதன் உத்தரவுபடி, விவசாயிகளுக்கு அட்மா திட்டத்தின் தென்னை மரம் ஏறும் கருவி மற்றும் ஊட்டச்சத்து டானிக் குறித்து செயல்விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது.

    ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன் முன்னிலையில் வட்டார தொழில்நுட்ப மேலாளர் சுரேஷ் குமார் உதவி தொழில்நுட்ப மேலாளர் பன்னீர்செல்வம், உதவி வேளாண்மை அலுவலர் ஜெயசேரன் ஆகியோரின் தலைமையில் பயிற்சி அளிக்கப்பட்டது.

    இதில் தென்னை விவசாயிகள் ராஜேந்திரன், கண்ணன்சாமி ஆகியோரின் தென்னையில் மரம் ஏறும் கருவி மற்றும் ஊட்டச்சத்து டானிக் மூலம் பிற விவசாயிகளை கொண்டு செய்து காண்பிக்கப்பட்டது.

    தென்னை ஊட்டச்சத்து குறித்து வட்டார தொழில் நுட்ப மேலாளர் சுரேஷ்குமார் கூறுகையில்:-

    தென்னை சாகுபடி செய்யும் விவசாயிகள் தென்னையை கைவிடாமல் இருக்க மண்ணின் வளம் குறையும் வகையில் தென்னையில் அதிக சத்து பற்றாக்குறை குறைந்து வருகிறது.

    இதனால், தென்னை ஊட்டச்சத்து டானிக் தென்னை மர வேர் பகுதியில் 4 லிட்டர் தண்ணீரில் ஒரு லிட்டர் தென்னை டானிக்கை கலந்து 200 மில்லி பாலித்தீன் கவரில் ஒரு மரத்து வேரில் நுனியை சீவி விட்டு அதில் கட்டி வந்தால் மரத்திற்கு சத்து அதிகரித்து நல்ல காய்ப்பு தரும் என்றார்.

    தென்னையில் மரம் ஏறும் கருவி குறித்து உதவி தொழில் நுட்ப மேலாளர் பன்னீர்செல்வம் கூறுகையில்:-

    இந்த கருவியை பயன்படுத்தும் போது விவசாயிகளுக்கு குறைந்த செலவில் ஆட்கள் தேவைப்படுகிறது. தேங்காய் மேலிருந்து கீழே விழும் போது சேதம் ஏற்படாது, குறைந்த நேரத்தை பயன்படுத்தவும் மிக எளிய முறையில் இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தலாம் என்றார்.

    இந்த பயிற்சி மிகவும் பயனுள்ளதாக உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

    • வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர்.
    • அனைத்து குழந்தைகளும் கல்வி கற்பதை உறுதி செய்ய கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுகிறது.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட பேட்டை குடியிருப்பு பகுதியில் பள்ளி செல்லா இடைநின்ற குழந்தைகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது. வருகிற 11-ந் தேதி வரை இப்பணி நடைபெறும்.

    பள்ளி செல்லா குழந்தைகள் 6 முதல் 18 வயது வரையிலும், மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் 5 முதல் 18 வயது வரையிலும் கணக்கெடுப்பானது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் ஆசிரிய பயிற்றுநர்கள், ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் கொண்ட குழுவினர் வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கணக்கெடுப்பு பணியை வட்டார கல்வி அலுவலர்கள் சிவக்குமார், ராமசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர். பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் செந்தில் வேலன், ஆசிரிய பயிற்றுநர்கள் ஸ்ரீதரன், சுரேஷ், ஆசிரியர்கள் ரவிச்சந்திரன், சிங்காரவடிவேல் மற்றும் இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் தினேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இதுகுறித்து வட்டார வளமைய மேற்பார்வையாளர் இளையராஜா கூறுகையில்:-

    6 முதல் 18 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளும் கல்வி கற்பதை உறுதி செய்யும் வகையில் இக்கணக்கெடுப்பு பணி வீடு வீடாக சென்று மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

    • தமிழக அரசு கரும்பு கொள்முதல் செய்வது பற்றி எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.
    • விவசாயிகள் பலரும் நெல்லுக்கு மாற்று பயிராக பொங்கல் கரும்பை பயிரிட்டனர்.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியான பேரையூர், கருவாக்குறிச்சி, காஞ்சி குடிக்காடு, மேலவாசல், காரிகோட்டை, நெடுவாக்கோட்டை உள்ளிட்ட கிராமங்களில் பொங்கல் பண்டிகைக்காக கரும்பு பயிடப்பட்டிருந்தது.

    கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, வெள்ளம்,முழு கரும்பு ஒன்றும் வழங்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து தி.மு.க. ஆட்சியிலும் கடந்த ஆண்டும் பொங்கல் கரும்பு வழங்கப்பட்டது. இதனால் மன்னார்குடி சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் பலரும் நெல்லுக்கு மாற்று பயிராக பொங்கல் கரும்பை பயிரிட்டனர்.

    ஆனால் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு கரும்பு கொள்முதல் செய்வது பற்றி எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

    இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க தமிழக அரசு கரும்புகளை கொள்முதல் செய்ய வேண்டும் என வலியுறுத்தி மன்னார்குடி காலவாய் கரை பகுதியில் தஞ்சை - மன்னார்குடி சாலையில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

    இதனால் மன்னார்குடி- தஞ்சை சாலையில் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மன்னார்குடி போலீசார் பேச்சு வார்த்தையடுத்து விவசாயிகள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    • குடோனில் கடலை மூட்டையை இறக்கிவிட்டு பஸ் நிலையம் அருகில் கடலை கடைக்கு பணம் வாங்க வந்துள்ளார்.
    • சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    நன்னிலம்:

    கும்பகோணம் ஒட்டன் செட்டி தெருவை சேர்ந்தவர் சிவசங்கர் (வயது 35). இவர் கடலை கடையில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியில் உள்ள குடோனில் கடலை மூட்டையை இறக்கிவிட்டு நன்னிலம் பேருந்து நிலையம் அருகில் கடலைக் கடைக்கு பணம் வாங்க வந்துள்ளார்.

    அப்போது சரக்குவாகனத்தின் கதவை திறந்து இறங்கும் போது அந்த வழியாக வந்த அரசு பேருந்து சிவசங்கரன் மீது மோதியது.

    இதில் பலத்த காயம் அடைந்த அவர் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து நன்னிலம் போலீசார் அரசு பேருந்து ஓட்டுனர் சரவணன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வு கண்டித்து திருத்துறைப்பூண்டி காமராஜர் சிலை அருகில் ஆர்ப்பாட்டம்.
    • அ.தி.மு.க. கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி நகர அ.தி.மு.க சார்பில் சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை கண்டித்து திருத்துறைப்பூண்டி காமராஜர் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் அருணாச்சலம் தலைமை தாங்கினார்.

    மாவட்ட மகளிரணி செயலாளர் சுதா அன்புச்செல்வன்,தெற்கு ஒன்றிய செயலாளர் சிங்காரவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நகர செயலாளர் சண்முகசுந்தர் அனைவ ரையும் வரவேற்றார்.

    மேலும், வடக்கு ஒன்றிய செயலாளர் பாலகிருஷ்ணன், முன்னாள் நகர்மன்ற தலைவர் உமா மகேஸ்வரி கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் சுரேஷ் குமார், மாவட்ட மாணவரணி செயலாளர் சுரேந்தர்,முன்னாள் ஒன்றிய செயலாளர்கள் வெற்றிவேல், மதிவாணன், லதா ஆசைத்தம்பி, சீதாலட்சுமி, குகநாதன், கார்த்தி, கலைமணி, மின்னல் கொடி, பாலகிருஷ்ணன், பாலதண்டாயுதம், நுணக்காடு ஊராட்சி மன்ற தலைவர் சின்னையன், முருகதாஸ் மற்றும் பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    • தி.மு.க. அரசு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.
    • அ.தி.மு.க. தொண்டர்களால் ஓ.பி.எஸ். புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்.

    திருவாரூர்:

    தமிழக அரசு அண்மையில் உயர்த்தி உள்ள சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு காரணமாக மக்கள் மிகுந்த அல்லல்பட்டு வருவதாகவும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு அடைந்துள்ளதாகவும் கூறி அ.தி.மு.க. சார்பில் மன்னார்குடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு முன்னள் அமைச்சர் ஆர்.காமராஜ் எம்.எல்.ஏ. தலைமை வகித்து பேசியதாவது:-

    தி.மு.க. அரசு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, மாறாக அ.தி.மு.க. கொண்டு வந்த பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை நிறுத்திவிட்டனர்.

    மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வு போன்ற பல்வேறு சுமைகளை மக்கள் மீது வைத்துள்ள தி.மு.க. அரசுக்கு வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். சென்னையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் தி.மு.க. குறித்து ஒ.பி.எஸ் பேசாதது ஏன்? இவரை எப்படி அ.தி.மு.க.வினர் ஏற்றுகொள்வார்கள்.

    அ.தி.மு.க. தொண்டர்களால் ஓ.பி.எஸ். புறக்கணிக்கப்பட்டிருக்கிறார். ஓ.பி.எஸ். என்ன நாடகம் நடத்தினாலும் தொண்டர்களிடம் அது எடுபடாது.

    தே.மு.தி.க, பா.ம.க. கட்சிகளில் எம்.எல்.ஏ.க்களாக இருந்து எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவிற்கு துரோகம் செய்த பண்ருட்டி ராமச்சந்திரன் தற்போது ஒ.பி.எஸ் உடன் இணைந்து எம்.ஜி.ஆர். கட்சியை காப்பாற்ற போவதாக கூறி வருகிறார். இவர் ஒருவரே போதும் ஓபிஎஸ் அணியை கவிழ்ப்பதற்கு. நிலைப்பு தன்மை இல்லாத பண்ருட்டி ராமச்சந்திரன் அ.தி.மு.க.வை காப்பாற்றுவேன் என்று கூறுவது வேடிக்கையாக உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • மரங்கள் வளர்ப்பது, இயற்கை உரம் தயாரித்தல் மானிய மரக்கன்றுகள் வழங்குதல் போன்றவை குறித்து எடுத்துரைத்தார்.
    • பவர் பில்லர், குபேட்டா,மினி டிராக்டர்,விவசாய இயந்திரங்கள் விவசாயிகளின் பார்வைக்கு வைக்கப்பட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றியம் கட்டிமேடு ஊராட்சியில் தமிழக அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, வேளாண்மை பொறியியல் துறை மற்றும் கட்டிமேடு ஊராட்சி இணைந்து கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்ட பணிகள் வேளாண் இயந்திரங்கள் மானிய விலையில் பெறுவது எவ்வாறு என விவசாயிகளுக்கான சிறப்பு கூட்டம் விழிப்புணர்வு நடைப்பயணம் ஊராட்சி மன்ற தலைவர் மாலினி இரவிச்சந்திரன் தலைமையிலும், மாவட்ட குழு உறுப்பினர் சுஜாதா, ஒன்றிய குழு உறுப்பினர் இந்திரா வெள்ளைசாமி கிராம நிர்வாக அலுவலர் முகமது யூசுப், துணைத் தலைவர் பாக்யராஜ், ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

    முகாமில் உதவி வேளாண்மை அலுவலர் ரவி சிறப்புரையாற்றினார். தொடர்ந்து உழவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது. விவசாயிகள் பல்வேறு கருத்துக்களை எடுத்துரைத்தனர்.

    வேளாண்மை உதவி பொறியாளர் கௌசல்யா பேசும்போது,கிராம அளவில் வேளாண்மை வாடகை இயந்திரங்கள் வாடகை சேவை மையங்களில் மானியத்தில், அமைப்பது வேளாண்மை இயந்திரங்கள் வாடகை முன் பதிவிற்கு இ-வாடகைக்கு திட்டம் அமைப்பது பற்றி விரிவாக பேசினார் .

    உதவி தோட்டக்கலை அலுவலர் கார்த்திகேசன் வீட்டில் பின்புறம், மாடித்தோட்டம் பழ வகை மரங்கள் வளர்ப்பது, இயற்கை உரம் தயாரித்தல் மானிய விலையில் மரக்கன்றுகள் வழங்குதல் போன்றவை குறித்து எடுத்துரைத்தார். நிகழ்வில் வேளாண்மை உதவி ஆலுவலர்கள் ரமேஷ், சுவாமிநாதன் மற்றும் விவசாயி சங்க தலைவர் அப்துல் ரஹ்மான் செயலர் செந்தில்குமார், தீவிர விவசாயிகள் முகமது மஸ்கின், ஹலீல் ரஹ்மான்,அப்துல் சலீம் ,அப்துல் சலாம் , அப்துல் முனாப் ஆசிரியர் சாகுல் ஹமீது கல்வியாளர் ரவிச்சந்திரன் , தண்டபாணி ஊராட்சி உறுப்பினர்கள் இளம் விவசாயி பகுருதீன் மற்றும் பெருந்திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    நிகழ்வில் உழவு மெசின், பவர் பில்லர், குபேட்டா,மினி டிராக்டர்,விவசாய இயந்திரங்கள் விவசாயிகளின் பார்வைக்கு வைக்கப்பட்டது. முன்னதாக வேளாண்மை உதவி இயக்குனர் சுவாமிநாதன் விழிப்புணர்வு பிரச்சார நடைபெறும் இயக்கத்தை தொடங்கி வைத்து பேசினார். முடிவில் செயலாளர் புவனேஸ்வரன் நன்றி கூறினார்.

    • டிஎஸ்பி உரத்தினை கரைத்து தெளிந்த கரைசலை மேலாக வடிகட்டி கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும்.
    • விவசாயிகள் தங்கள் வரப்பு உளுந்து சாகுபடியில் கூடுதல் கவனம் வைத்து அதிக மகசூல் அடைய வேண்டும்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி வேளாண்மை உதவி இயக்குனர் சாமிநாதன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது :-

    திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் சம்பா தாளடி சாகுபடி செய்யப்பட்டுள்ள வயல் வரப்புகளில் பெருமளவில் உளுந்து சாகுபடி உள்ளது.

    இவ்வாண்டு குறிப்பிட்ட இடைவெளியில் சீராக வடகிழக்கு பருவமழை கிடைப்பதால் வரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ள உளுந்து நன்கு செழித்து வளர்ந்து உள்ளது. தற்போது பூக்கும் தருணத்தில் உள்ளது.

    ஆடுதுறை 5 வம்பன் 8 முதலிய இடங்களில் பயிரிடப்பட்டுள்ளன வரப்புகளில் உளுந்து சாகுபடி செய்வதால் கூடுதல் வருமானமும் இயற்கை முறையில் நெல் வயலில் தீமை செய்யும் பூச்சிகளை கட்டுப்படுத்த முடிகிறது.

    2 சதவீதம் டிஏபி கரைசல் 20 லிட்டர் தண்ணீரில் நாலு கிலோ டிஎஸ்பி உரத்தினை கரைத்து 24 மணி நேரம் ஊற வைத்து பிறகு தெளிந்த கரைசலை மேலாக வடிகட்டி எடுத்து அத்துடன் 180 லிட்டர் தண்ணீர் கலந்து மாலை நேரத்தில் கைதெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும்.

    பயிர் வகை நுண்ணுட்டம் இரண்டு கிலோ 100 லிட்டர் தண்ணீர் கலந்து மாலை நேரத்தில் தெளிக்க வேண்டும் பஞ்சகவ்யா பசு மாட்டின் சாணம் கோமியம் பால்,நெய் தயிர் முதலியவற்றை கொண்டு தயாரிக்கப்படும் நொதி கரைசல் பஞ்சகாவியம் ஆகும் .

    இப் பஞ்சகாவியத்தினை ஒரு டேங்க்கு 300 மில்லி வீதம் கலந்து தெளிக்க வேண்டும். உயிர் உரங்கள் ரைசோபியம், பாஸ்போ பாக்டீரியா, பொட்டாஸ் பாக்டீரியா மூன்றையும் தலா 250 மில்லி கலந்து இந்த கரைசலை டேங்குக்கு 100 மில்லி வீதம் கலந்து தெளிக்க வேண்டும்.

    உளுந்து சாகுபடிகள் மூலம் கூடுதல் வருமானம் புரதச்சத்து உள்ள உணவு கிடைப்பதுடன் கால்நடைகளுக்கு உளுந்து தட்டை தீவனமாக பயன்படுகிறது. எனவே விவசாயிகள் தங்கள் வரப்பு உளுந்து சாகுபடியில் கூடுதல் கவனம் வைத்து அதிக மகசூல் அடைய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×