search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாடி தோட்டம் அமைப்பது குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம்
    X

    விவசாயிகளுக்கு மாடி தோட்டம் அமைப்பது குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. 

    மாடி தோட்டம் அமைப்பது குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம்

    • மானிய விலையில் அரசு கொடுக்கும் தோட்ட பொருள்களை வாங்கிக்கொள்ளலாம்.
    • தொழில் நுட்பத்தை பயன்படுத்தி குறைந்த செலவில் அதிக லாபம் பெறலாம்.

    முத்துப்பேட்டை;

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த கற்பகநாதர்குளம் கிராமத்தில் அட்மா திட்டத்தின் தோட்டக்கலை பயிர் வீட்டு தோட்டம், மாடி தோட்டம் அமைப்பது குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்க பயிற்சி வட்டார தொழில்நுட்ப மேலாளர் சுரேஷ்குமார், உதவி தொழில்நுட்ப மேலாளர் பன்னீர்செல்வம், உதவி வேளாண்மை அலுவலர் சத்தியமூர்த்தி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

    இது குறித்து வட்டார தொழில் நுட்ப மேலாளர் சுரேஷ்குமார் கூறுகையில்:-

    வீட்டில் தோட்டம் வைப்பவர்கள் இயற்கையான உரங்களை பயன்படுத்துவதன் மூலம் சத்தான காய்கறிகளை பெற முடியும். தோட்டக்கலை பயிரான காய்கறிகள், கீரை வகைகள், பழ வகைகள், மருத்துவ குணம் வாய்ந்த செடிகள் போன்ற பயிர்களை பயிரிடலாம். வீட்டில் கிடைக்கும் காய்கறி கழிவுகள், முட்டை ஓடுகளையே இயற்கை உரமாக பயன்படுத்தலாம். இது தவிர ஆட்டு சாணம், சாம்பல், மாட்டு சாணம், மண்புழு உரம் போன்றவற்றை பயன்படுத்தலாம்.

    வீட்டில் தோட்டம் அமைப்பதற்கு ஜூன், ஜூலை மாதங்கள் தான் விதைகள் நட சரியான காலம். சில செடிகளை அக்டோபர் மாதத்திலும் நடலாம் புதிதாக தோட்டம் அமைப்பவர்கள், மானிய விலையில் அரசு கொடுக்கும் தோட்ட பொருள்களை வாங்கிக்கொள்ளலாம்.

    தோட்டம் அமைப்பதற்கு பழைய குடங்கள், வாலிகள், மண் தொட்டி ஆகியவைகளை கொண்டு மண்புழு உரம், தென்னை நார் கழிவு, மணல் 2:2:1 என்ற விகிதத்தில் தொட்டிகளை நிரப்பி 2,3 விதைகள் இட்டு ஒரே வகையான செடிகளை விதைக்காமல் பல ரகங்களை கொண்டு விதைக்க வேண்டும்.

    இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தி குறைந்த செலவில் அதிக லாபம் பெறலாம் என்றார். இது மிகவும் பயனுள்ளதாக அமைந்ததாக விவசாயிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×