என் மலர்
திருப்பத்தூர்
- தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது
- போலீசார் விசாரணை
திருப்பத்தூர்:
கந்திலி தி.மு.க. கிழக்கு ஒன்றியம் சார்பில் தெருமுனை பிரசார கூட்டம் வெங்களாபுரம் பகுதியில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் கே.எஸ்.கே. மோகன்ராஜ் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக நல்லதம்பி எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பேசினார்.
அப்போது கூட்டத்தில் புகுந்து வாலிபர் ஒருவர் நல்லதம்பி எம்.எல்.ஏ. வை பார்த்து வெங்களாபுரம் பகுதியில் இருந்து பொன்னேரி செல்லும் சாலை ஏன் சீரமைக்கப்பட வில்லை என தகாத வார்த்தை பேசியதாக கூறப்படுகிறது.
இது குறித்து நல்ல தம்பி எம்.எல்.ஏ. திருப்பத்தூர் தாலுகா போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கலெக்டர் திறந்து வைத்தார்
- ரேசன் அட்டை தாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள்
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் நாட்றம்பள்ளி முழு நேர ரேசன் கடையை பிரித்து பி.பந்தாரப்பள்ளி கிராமத்தில் பகுதி நேர ரேசன் கடை மற்றும் கத்தாரி முழு நேர ரேசன் கடையை பிரித்து பள்ளத்தூர் கிராமத்தில் பகுதி நேர ரேசன் கடை ஆகிய 2 ரேசன் கடையை மாவட்ட கலெக்டர் பாஸ்கரன் பாண்டியன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
ஜோலார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. தேவராஜ் முன்னிலை வகித்தார் அதன் பிறகு மாவட்ட கலெக்டர் மற்றும் எம்.எல்.ஏ. ஆகியோர் இணைந்து அத்தியாவசிய பொருட்களை ரேசன் அட்டை தாரர்களுக்கு வழங்கினர்.
இவ்விழாக்களில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முருகேசன், நாட்றம்பள்ளி பேரூராட்சி தலைவர் சசிகலா, ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் வெண்மதி முனுசாமி, வட்ட வழங்கல் அலுவலர் சுதாகர், கூட்டுறவு சார் பதிவாளர் பூவண்ணன், மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி அடுத்த வெலக்கல்நத்தம் குனிச்சூர் பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது 52). இவருக்கு திருமணமாகி மயில் என்கின்ற மனைவியும் ஒரு மகனும், 2 மகளும் உள்ளனர்.
இவர் அதே பகுதியில் பழம் வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில் இவர் வேலை சம்பந்தமாக சுண்ணாம்புகுட்டை பகுதியில் இருந்து வாணியம்பாடி கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையில் தனது மொபட்டில் சென்று கொண்டு இருந்தார்.
அப்போது பின்னால் வந்த கார் முன்னால் சென்று கொண்டிருந்த மொபட் மீது மோதியது. இதில் வியாபாரி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சேகர் உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து நாட்டறம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 6 மாதமாக தண்ணீர் பிரச்சினை இருப்பதாக புகார்
- போக்குவரத்து பாதிப்பு
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை சந்தைக்கோடியூர் திருப்பத்தூர் மெயின் ரோடு பகுதியில் பல வருடங்களாக கால்வாய் வசதி இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
கடந்த 6 மாதமாக குடி தண்ணீர் பிரச்சினை இருந்து வந்தது. இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தில் பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
சாலை மறியல்
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொது மக்கள் நேற்று காலி குடங்களுடன் திடீரென திருப்பத்தூர் வாணியம்பாடி செல்லும் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை போலீசார் மற்றும் திமுக நகர செயலாளர் அன்பழகன், நகர மன்ற உறுப்பினர் கே.எஸ்.ஏழுமலை ஆகியோர் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இன்னும் 2 நாட்களுக்குள் குடிநீர் வழங்குவதாகவும் மேலும் கால்வாய் வசதி ஏற்படுத்திக் தருவதாகவும் கூறியதன் பேரில் அங்கிருந்து பொது மக்கள் கலைந்து சென்றனர்.
இதனால் அப்பகுதியில் சிறுது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
- வாணியம்பாடி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்
- 100 லிட்டர் பறிமுதல்
வாணியம்பாடி:
வாணியம்பாடி திருமாஞ்சோலை பகுதியில் சாராயம் விற்ற (வயது 42), பிரபுதேவா (30), நியூடவுன் பகுதியில் ஜெயசீலன் சாராயம் விற்ற சரவணன் (29), ஆகிய 3 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து 52 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதேபோல் வாணியம்பாடி தாலுகா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சாராயம் மற்றும் மது பானங் களை விற்ற பள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்த தேவேந்திரன், தசரதன், சி.வி.பட்டறை பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணி, புருஷோத்தமகுப்பம் பகுதியை சேர்ந்த முனியம்மா, மேட் டுப்பாளையம் பகுதியை சேர்ந்த சுரேஷ் ஆகியோர் கைது . செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 25 மதுபாட்டில்கள், 60 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
திம்மாம்பேட்டை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சாராயம் விற்பனை செய்த அனுமுத்துராணி, பெருமாள், உஷா ஆகியோர் கைது அவர்களிடம் இருந்து 100 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். ஆலங்காயம் பகுதியில் சாராயம் விற்ற பெத்தூர் பகுதியை சேர்ந்த பார்த் திபன் என்பவர் கைது செய்யப்பட்டார்.
மொத்தம் 13 பேர் கைது செய்யப்பட்டு வாணியம்பாடி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.
- வட மாநிலத்தை சேர்ந்தவர்
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
பீகார் மாநிலம் நபிகஞ்சி பகுதியைச் சேர்ந்தவர் காமேஷ்வர் (வயது 55). இவர் திருப்பத்தூர் வாணியம்பாடி பால்னங்குப்பம் கூட்டு ரோடு அருகே இன்று அதிகாலை சாலையோரம் நடந்து சென்றார்.
அப்போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் இவர் மீது மோதியது. இதில் அவர் சம்பவம் இடத்திலேயே தலையில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று முதியவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய வாகனத்தை தேடி வருகின்றனர்.
- மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது
- 6 நாட்களாக அட்டகாசம் செய்து வந்தது
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டத் தில் 6 நாட்களாக சுற்றித் திரிந்து அட்டகாசம் செய்து வந்த 2 காட்டு யானைகள் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட் டது.
கிருஷ்ணகிரி மாவட் டம் மற்றும் தமிழக- ஆந்திர எல்லை பகுதிகளில் 6 பேரை கொன்ற 2 காட்டுயானைகள் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த தகரகுப்பம் மலைப்பகுதியில் முகா மிட்டன.
அதன் பின்னர் நாட்டறம்பள்ளி மற்றும் ஜோலார்பேட்டை, திருப்பத் தூர் சுற்றுவட்டார பகுதி களில் 6 நாட்களாக அட்டகாசம் செய்து வந்தன.
இதனால் மாவட்ட நிர்வா கம் சார்பில் கும்கி யானை களை வரவழைக்க நடவ டிக்கை மேற்கொண்டனர். அதன்படி நேற்று காலை பொள்ளாச்சி ஆனைமலை பகுதியில் இருந்து சின்னத்தம்பி.
முதுமலை பகுதியில் இருந்து உதயன் மற்றும் வில்சன் என மொத்தம் 3 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டன.
மயக்க ஊசி செலுத்தி...
இந்த நிலையில் ஆனை மலை காப்பகத்தின் மருத்து வக்குழுவினர் ராஜேஷ் தலைமையில் வந்தனர். மயக்க ஊசி செலுத்தியானை களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
திப்பச முத்திரம் ஏரி பகுதியில் முகா மிட்டிருந்த யானைகளுக்கு மயக்க ஊசி செலுத்தப்பட் டது.
சிறிது நேரத்தில் அதே இடத்தில் ஒருயானைபிடிபட் டது. அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் மற்றொரு யானை பிடிபட்டது. பிடி பட்ட யானையை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பார்வையிட்டார்.
2 யானைகளையும் லாரியில் ஏற்றினர். பின்னர் ஓசூர் அருகே உள்ள உரிகம் காட்டில் யானைகளை இறக்கி விட்டனர். 2 யானைகளும் காட்டுக்குள் சென்றன.
- ஆம்பூர் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து நடந்தது
- சாலை அமைக்கும் பணி மந்தமாக நடைபெறுவதாக புகார்
ஆம்பூர்:
ஆம்பூர் நகராட்சிக்குட்பட்ட ஏ.கஸ்பா மெயின் ரோடு அரசு உயர்நிலைப்பள்ளி முதல் காந்தி சிலை வரை ரூ.1.36 கோடியில் தார் சாலை அமைப்பதற்காக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பணிகள் தொடங்கப்பட்டன.
ஏற்கனவே இருந்த சாலை தோண்டி எடுக்கப்பட்டு புதிய சாலை அமைக்கும் பணி மந்தமாக நடைபெற்று வருகிறது. இதனால் அச்சாலையை பயன்படுத்தும் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு உள் ளாகி வருகின்றனர். சாலையில் ஜல்லி கற்கள் கொட்டப்பட் டுள்ளதால் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் பழுதாகின் றன. மேலும் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயம் அடை கின்றனர்.
சாலை அமைக்கும் பணி தரமில்லாமல் நடைபெறுவதால் சாலை அமைக்கப்பட்ட பிறகு வெகுவிரைவிலேயே சாலை சேதமடையும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாக கூறி முன்னாள் நகர மன்ற உறுப்பினர் சுரேஷ்பாபு நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து விரைவில் சாலையை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென நகராட்சி அலுவலகத்தில் சங்கு ஊதி நூதன போராட்டத்தில் ஈடுபட்டார். இச்சம்பவத்தால் நகராட்சியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- மனநல ஆலோசனை உள்ளிட்டவை தொடர்ந்து வழங்கப் பட்டு வந்தது
- கலெக்டர் அறிவுரை கூறி அனுப்பி வைத்தார்
திருப்பத்தூர்:
பீகார் மாநிலம் சுயா மாவட்டம், பெலகன்ஜ் தாலுகா, பெல் லாடி அடுத்த சங்கர்பூர் கிராமத்தை சேர்ந்தவர் விஸ்வநாத் விஸ்வகர்மா. இவரது மனைவி காயத்ரிதேவி (வயது 44). இவர் மனநலம் பாதிக்கப்பட்டு 20 ஆண்டுகளுக்கு முன்பு திடீரென காணாமல்போய்விட்டார். பலஇடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை.
கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு குடியாத்தம் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித்திரிந்த பெண்ணை பொது மக்கள் மீட்டு, திருப்பத்தூர் உதவும் உள்ளங்கள் பெண்கள் மனநல காப்பகத்தில் ஒப்படைத்தனர். ஊர், பெயர் சொல்லத் தெரியாதநிலையில் இருந்த அவருக்கு மருந்து, மாத்திரைகள், மனநல ஆலோசனை உள்ளிட்டவை தொடர்ந்து வழங்கப் பட்டு வந்தது.
பின்னர் பீகாரில் உள்ள சங்கர்பூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, காயத்ரி தேவியின் இருப்பிடத்தை கண்டறிய நடவடிக்கை எடுத்து அதன் விளைவாக காயத்ரி தேவியின் கணவர் விஸ்வநாத் விஸ்வகர்மா, மகன் சத்யாகுமார், சகோதரர் முகேஷ், மைத்துனர் மொகல் ரிங்கிதேவி, தம்பி பிண்டுவின் மனைவி ரஞ்சுதேவி ஆகியோர் மறுவாழ்வு இல்லத்திற்கு நேரில் வரவழைக்கப்பட்டனர்.
அங்கு காயத்ரிதேவியை நேரில் கண்டதும் அவரது கணவர் மற்றும் மகன் ஆனந்த கண்ணீர் வீட்டு கட்டி தழுவினர்.
அதைத்தொடர்ந்து அந்தப்பெண்ணை கலெக்டர் அலுவல கத்தில் அவரது உறவினர்களிடம் கலெக்டர் பாஸ்கரபாண் டியன் ஒப்படைத்து பத்திரமாக பார்த்துக்கொள்ளுமாறும், மருத்துவரிடம் காண்பித்து, மருத்துவரின் ஆலோசனையின் படி நடந்து கொள்ளுமாறு அறிவுரை கூறினார். மாவட்ட மனநல மருத்துவர் பிரபவராணி, உதவும் உள்ளங்கள் மனநல காப்பக நிர்வாகிரமேஷ் மற்றும் சமூகப் பணியாளர்கள் உடன் இருந்தனர்.
- தண்டவாளத்தை கடக்க முயன்ற போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
வாணியம்பாடி அடுத்த பழைய வாணியம்பாடி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 59). இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வந்தார்.
இன்று காலை கோவிந்தாபுரம் அருகே உள்ள தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த ரெயில் இவர் மீது மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார்.
அந்த வழியாக சென்றவர்கள் படுகாயம் அடைந்த கோவிந்தராஜை மீட்டு வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் வேலூருக்கு அழைத்துச் சென்றனர்.
அப்போது வழியிலேயே கோவிந்தராஜ் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- குரு ஜெயந்தி விழா முன்னிட்டு நடந்தது
- பக்தர்கள் தலையில் 25 கிலோமீட்டர் தூரம் சுமந்து வந்து சமர்ப்பணம் செய்தனர்
ஜோலார்பேட்டை:
ஏலகிரி மலையில் உள்ள ஸ்ரீஸத்ய ஆஷ்ரமத்தில் வருட ந்தோறும் உலக குரு மார்களின் புனித தினமாகவும் உலக குருமார்களை நினைவு கூறும் புனித நாளாகவும் கொண்டாடும் ஸ்ரீஸத்ய குரு ஜெயந்தி தரிசன த்திருவிழா நடைபெற்று வருகிறது.
இந்த வருடமும் முன்னிட்டு சத்ய வழி பக்தர்களால் ஏலகிரிமலையில் வெகு கோலாகலமாக கொண்டா டப்பட்டது.
அதை முன்னிட்டு பலவிதமான நிகழ்ச்சிகளும் பூஜைகளும் நடைபெற்றது.பொன்னேரி கூட்டு ரோடு மலையடிவாரத்தில் இருந்து ஏலகிரி மலைக்கு நூற்று கணக்கான பக்தர்கள் பாத யாத்திரையாகவே பால் குடம் ஏந்தி ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.
விழாவில் 108 தட்டுக்களில் குரு சீரை பக்தர்கள் தலையில் 25 கிலோமீட்டர் தூரம் சுமந்து வந்து சமர்ப்பணம் செய்தனர்.
கூடவே அலங்கார வாகனத்தில் கேரள செண்டை மேள வாத்தியங்கள் முழங்க பொன்னேரியிலிருந்து ஆஷ்ரம் பக்தர்கள் பாத யாத்திரையாக நடந்து சென்றனர்.
ஏலகிரி மலையில் பக்தர்கள் தங்கள் கைகளால் ஆகாயத்தில் தீபம் ஏற்றி பறக்க விடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பக்தர்கள் ஏற்றி பறக்க விட்ட தீபங்களால் வானமே தீபங்களால் நிறைந்து காணப்பட்டது. விழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு விருந்தினர்களும், பல மாநிலங்களில் இருந்து ஸத்ய பக்தர்களும் திரளாக வருகை தந்து இந்த ஸ்ரீசத்ய ஜெயந்தி தரிசன திருவிழவில் கலந்துகொண்டனர்.
விழா ஏற்பாடுகளை ஸ்ரீஸத்ய ஆஷ்ரம் சத்ய வழி பக்தர்கள் மற்றும் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.
- கடந்த 7-ந்தேதி நீட் தேர்வை பரமேஸ்வரன் எழுதினார். தேர்வை சரிவர எழுதவில்லை என்று தெரிகிறது.
- பரமேஸ்வரன் உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி ஜங்களாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் பரமேஸ்வரன் (வயது 17). இவர் பிளஸ்-2 வில் தேர்ச்சி பெற்றார்.
கடந்த 7-ந்தேதி நீட் தேர்வை பரமேஸ்வரன் எழுதினார். தேர்வை சரிவர எழுதவில்லை என்று தெரிகிறது. இதனால் பரமேஸ்வரன் மனமுடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று இரவு திடீரென வீட்டின் அறையில் தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் கிடந்தார்.
இதனைக் கண்ட பெற்றோர் அவரை மீட்டு நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் பரமேஸ்வரன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து செந்தில்குமார் நாட்டறம்பள்ளி போலீசில் புகார் அளித்தார்.
பரமேஸ்வரன் உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.






